Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரி‍‍கேடியர் உருவாக்கிய சர்ச்சை

Featured Replies

பிரி‍‍கேடியர் உருவாக்கிய சர்ச்சை

Final-1-10a2c7b635b61b6aeeac769b5fb5216198f8b4f2.jpg

 

லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்­துக்கு வெளியே, சுதந்­திர தினத்­தன்று, எதிர்ப்புக் கோசம் எழுப்­பிய புலம்­பெயர் தமி­ழர்­களை அச்­சு­றுத்தும் வகையில், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ நடந்து கொண்ட விவ­காரம், பெரும் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது.

லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியில், கடந்த ஆண்டு மே மாதம் நிய­மிக்­கப்­பட்ட பிரி­யங்க பெர்­னாண்டோ, போராட்டம் நடத்­தி­ய­வர்­களை நோக்கி, தன் கழுத்தில் கைவி­ரல்­களால் அழுத்தி, அறுத்து விடுவேன் என்­பது போன்று எச்­ச­ரித்­தி­ருந்தார்.

இந்தக் காட்சி ஊட­கங்­களில் பர­வி­ய­துடன், பிரி­கே­டியர் பிரி­யங்­கவை லண்­டனில் இருந்து வெளி­யேற்ற வேண்டும், அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மற்றும் மனித உரிமை அமைப்­பு­க­ளிடம் இருந்து கோரிக்­கைகள் எழத் தொடங்­கின.

இந்­த­நி­லையில் கடந்த 6ஆம் திகதி, வெளி­வி­வ­கார அமைச்சு, ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டது.

இந்த விவ­கா­ரத்தை அர­சாங்கம் தீவி­ர­மாக எடுத்துக் கொண்­டுள்­ளது என்றும், பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியில் இருந்து உட­ன­டி­யாக பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ இடை­நி­றுத்­தப்­பட்டு, இந்தச் சம்­பவம் குறித்து உட­ன­டி­யாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

சர்­வ­தேச அளவில் இந்த விவ­காரம் சர்ச்­சை­யாக மாறு­வதைத் தடுக்கும் நோக்­கி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சு இந்த நட­வ­டிக்­கையை எடுத்­தது. ஆனால் மறுநாள் எல்­லாமே தலை­கீ­ழாக மாறி­யது.

பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியில் இருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவை, உட­ன­டி­யாக பணியில் இணைத்துக் கொள்­ளு­மாறும், அதே­வேளை, அவ­ருக்கு எதி­ராகச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் குறித்த விசா­ர­ணை­களை விரை­வாக முன்­னெ­டுக்­கு­மாறும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்த நட­வ­டிக்கை சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்­புகள் மத்­தியில் கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. லண்­டனில் பகி­ரங்­க­மா­கவே அச்­சு­றுத்தல் விடுத்த பிரி­கே­டி­யரின் செயற்­பாட்­டுக்கு எழுந்த விமர்­ச­னங்­களைப் போலவே, ஜனா­தி­ப­தியின் இந்த உத்­த­ரவும், கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவின் அச்­சு­றுத்தும் செயற்­பாடு, அதனைத் தொடர்ந்து நடந்த சம்­ப­வங்கள் எல்­லாமே, அர­சாங்­கத்­துக்குள் நிலவும் முரண்­பா­டு­க­ளையும் குழப்­பங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

வெளி­வி­வ­கார அமைச்சின் உத்­த­ரவை ஜனா­தி­பதி ரத்துச் செய்­தது, வெளி­வி­வ­கார அமைச்­சுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லுள்ள இடை­வெ­ளியைக் காட்­டு­கி­றது.

அதே­வேளை, பகி­ரங்­க­மாக அச்­சு­றுத்தும் செயற்­பாட்டில் ஈடு­பட்ட இரா­ஜ­தந்­திரி நிலையில் உள்ள ஒருவர் மீது நட­வ­டிக்கை எடுக்­காமல் இருந்தால் கூட பர­வா­யில்லை.

எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையை ரத்துச் செய்து மீண்டும் அதே பத­வியில் அமர்த்­து­வது இது­போன்ற சம்­ப­வங்­களை ஊக்­கு­விப்­ப­தா­கவும், படை­யி­னரைக் காப்­பாற்றும் அப்­பட்­ட­மான நோக்­கத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் உள்­ளது.

இந்த விவ­கா­ரத்தை மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி தமக்கு எதி­ரான ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்தி விடுமோ என்ற அச்சம், ஜனா­தி­ப­தியின் இந்த உத்­த­ர­வுக்கு ஒரு காரணம்.

ஏற்­க­னவே, படை­யி­னரைக் காட்டிக் கொடுப்­ப­தாக மஹிந்த அணி­யினர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் மீது குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் கருத்­துக்­க­ணிப்­புகள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதால், இந்தச் சம்­ப­வத்­தினால் தமது கட்­சிக்கு மேலும் பாதிப்பு ஏற்­படும் என்று அவர் கரு­தி­யி­ருக்­கலாம்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் நேரத்தில் ஒரு தற்­கா­லிக ஏற்­பா­டாக இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியில் இருந்து நீக்­கு­வதால், லண்­டனில் பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ, ஒரு சாதா­ரண நப­ராக மாறி விடுவார். அதா­வது அவ­ருக்­கான இரா­ஜ­தந்­திர சிறப்­பு­ரி­மை­களை இல்­லாமல் போய் விடும். பிரித்­தா­னிய பொலிஸார் அவர் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அது வச­தி­யாகி விடும் என்ற கார­ணத்­தையும் ஜனா­தி­பதி முன்­வைத்­தி­ருப்­ப­தாக ஒரு தகவல் உள்­ளது. அதற்­காக, பிரி­கே­டியர் பிரி­யங்­கவின் இரா­ஜ­தந்­திர சிறப்­பு­ரி­மை­களை மீள வழங்கி அவரைப் பாது­காக்க முனைந்­தி­ருக்­கிறார் ஜனாதிபதி.

 ஜனா­தி­பதி. ஏற்­க­னவே ஜனா­தி­பதி ஒரு முறை­யல்ல, கிடைக்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் எல்­லாமே, எந்­த­வொரு படை­வீ­ர­ரையும், வெளி­நாட்டு நீதி­மன்றில் நிறுத்த விட­மாட்டேன் என்ற வாக்­கு­று­தியைக் கொடுத்­தி­ருக்­கிறார். 

பிரி­கே­டியர் பிரி­யங்­கவின் செயல், பிரித்­தா­னிய சட்­டப்­படி குற்றம் என்று கலம் மக்ரே போன்­ற­வர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள். அப்­ப­டி­யான நிலையில், பிரி­கே­டியர் பிரி­யங்க மீது பிரித்­தா­னிய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்தால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிக்­கலைச் சந்­திக்க நேரிடும்.

எனவே, மீண்டும் இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரி­மையை கொடுத்து அவரைக் காப்­பாற்­றி­யி­ருக்­கலாம்.

எது எவ்­வா­றா­யினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்த நட­வ­டிக்கை மனித உரிமை ஆர்­வ­லர்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யையும் ஏமாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

போர்க்­குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்கும் கடப்­பாட்­டுக்கு ஜெனீ­வாவில் இணங்­கிய அர­சாங்­கத்­துக்குத் தலைமை தாங்­கு­பவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. அவரே, குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வரைப் பாது­காக்கும் வகையில் செயற்­பட்­டி­ருப்­பதை அவர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது.

முறை­யான விசா­ரணை நடத்­தியே முடிவு எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும், என்றும், ஒரு வீடியோ ஆதா­ரத்தை வைத்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது தவறு என்றும் ஜனா­தி­பதி தரப்பில் நியாயம் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த வீடியோ ஆதாரம் ஒன்றும் சோடிக்­கப்­பட்­டது அல்ல. முன்னர் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான வீடியோ ஆதா­ரங்கள் வெளி­யி­டப்­பட்ட போது அதனை சோடிக்­கப்­பட்­டது, திரி­பு­ப­டுத்­தப்­பட்­டது என்று அர­சாங்­கமும், இரா­ணு­வமும் கூறி­யது.

ஆனால், இது அவ்­வா­றான ஒன்று அல்ல. பகி­ரங்­க­மாக நிகழ்ந்­தது. அது­பற்றி விசா­ரணை நடத்­தி­னாலும் கூட, பிரி­கே­டியர் பிரி­யங்­கவின் செயலை எவரும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.

ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் ஆத்­தி­ர­மூட்டும் செயற்­பா­டு­களை மேற்­கொண்­ட­னரா- இல்­லையா என்­ப­தல்ல விடயம். அவர்­களை எந்­த­ள­வுக்கு ஆத்­தி­ர­மூட்டும் கோசங்­களை எழுப்­பி­யி­ருந்­தாலும், அதனை இவர் அணு­கிய முறை தவ­றா­னது.

அந்த இடத்தில் ஒரு கட்­டுப்­பாடு மிக்க இரா­ணுவ அதி­கா­ரி­யா­கவும் நடந்து கொள்­ள­வில்லை. தான் வகித்து வந்த பத­விக்குப் பொருத்­த­மான -பொறுப்­பு­வாய்ந்த இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவும் இருக்­க­வில்லை.

கொழும்பில், ஜனா­தி­பதி அல்­லது அர­சாங்கப் பிர­மு­கர்கள், எவ­ரை­யா­வது பார்த்து யாரேனும் இதே­போன்­ற­தொரு செயலைச் செய்­தி­ருந்தால் அவர்­களை அர­சாங்கம் சும்மா விட்­டி­ருக்­குமா?

நிச்­ச­ய­மாக அவர் இப்­போது சிறைக்குள் தள்­ளப்­பட்­டி­ருப்பார். பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் கூட பாய்ந்­தி­ருக்கும்.

ஆனால், புலம்­பெயர் தமி­ழர்­களைப் பார்த்து, அவர் இதனைச் செய்­தி­ருப்­பதால், அவ­ரது இரா­ணுவ சேவையைக் காரணம் காட்டி பாது­காக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ விவ­கா­ரத்தில், இரா­ணுவத் தள­பதி, இரா­ணுவப் பேச்­சாளர் போன்றோர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­களும், அவரைக் காப்­பாற்றும் வகை­யி­லேயே இருக்­கின்­றன.

அவர் ஒழுக்­க­மா­னவர் என்றும், அவ­ருக்கு எதி­ராக இரா­ணுவ ரீதி­யான எந்த விசா­ர­ணை­களும் நடத்­தப்­பட வேண்­டி­ய­தில்லை என்றும் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சின் விசா­ர­ணைக்கு பிரி­கே­டியர் பிரி­யங்க ஒத்­து­ழைப்பார் என்று இரா­ணுவப் பேச்­சாளர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இரா­ணுவத் தள­ப­தியின் கருத்­துப்­படி, பிரி­கே­டியர் பிரி­யங்­க­வுக்கு எதி­ராக துறைசார் விசா­ர­ணைகள் எதையும் இரா­ணுவம் முன்­னெ­டுக்கப் போவ­தில்லை என்­பது உறு­தி­யா­கி­றது.

பிரி­கே­டியர் பிரி­யங்­கவின் ஒழுக்கம், வீடி­யோக்­க­ளாக வெளி­யாகி விட்ட நிலை­யிலும், அவ­ரது ஒழுக்­கத்தைப் பற்றி இரா­ணுவத் தள­பதி புகழ்ந்­தி­ருப்­பது, ஒட்­டு­மொத்த இலங்கை இரா­ணு­வத்­தி­னதும் ஒழுக்கம் பற்­றிய கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

போரின்­போது, இரா­ணு­வத்தின் ஒழுக்கம் கடு­மை­யான கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்­டது. அதுவே, இன்று வரை ஜெனீ­வாவில் அர­சாங்கம் நெருக்­க­டி­களைச் சந்­திக்­கவும் கார­ண­மாக இருக்­கி­றது.

இலங்கை இரா­ணு­வத்தின் நற்­பெ­யரை மீள நிலைப்­ப­டுத்­து­வ­தற்கு அரச மற்றும் இரா­ணுவ மட்­டங்­களில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நிலையில், இது­போன்ற சம்­ப­வங்­களும், அதற்கு வக்­கா­லத்து வாங்கும் கருத்­துக்­களும், வெளி­யா­வது, அத்­த­கைய முயற்­சி­க­ளையே பின்­ன­டை­வுக்கு உள்­ளாக்கும்.

ஆக, பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவைப் பாது­காக்­கிறோம் என்று, அரச மற்றும் இரா­ணுவ மட்­டத்தில் உள்­ள­வர்கள், இலங்கை இரா­ணு­வத்தின் பெயரை மேலும் களங்­கப்­ப­டுத்திக் கொள்­கி­றார்கள் என்றே கூற வேண்டும்.

அதற்­காக, அரச மற்றும் இரா­ணுவத் தலை­மைகள் யாரும் வருந்­து­வ­தா­கவோ, கூச்­சப்­ப­டு­வ­தா­கவோ தெரி­ய­வில்லை.

 யார் இவர்? –

பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னான்டோ

இலங்கை இரா­ணு­வத்தில் 32 ஆண்­டுகள் பணி­யாற்­றிய ஒரு மூத்த அதி­காரி.

2008ஆம் ஆண்டு முல்­லைத்­தீவைக் கைப்­பற்ற,கொக்­குத்­தொ­டுவாய் பகு­தியில் இருந்து முன்­ன­கர்ந்த 59-3 ஆவது பிரி­கேட்டில் இடம்­பெற்­றி­ருந்த 11 ஆவது கெமு­னுவோச் பற்­றா­லி­யனின் கட்­டளை அதி­கா­ரி­யாக பணி­யாற்­றி­யவர். அப்­போது லெப்.கேணல் பத­வியில் இருந்தார் பிரி­யங்க பெர்­னாண்டோ.

இறு­திக்­கட்டப் போரில் இவ­ரது தலை­மை­யி­லான படைப்­பி­ரிவு, நாயாறு, செம்­மலை, அலம்பில், குமு­ழ­முனை போன்ற பகு­தி­களைக் கைப்­பற்றி, முல்­லைத்­தீவில் ஏனைய படைப்­பி­ரி­வு­க­ளுடன் இணைப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பெரு­ம­ள­வி­லான போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்ற இறு­திக்­கட்டப் போரில், ஈடுபட்ட 59 ஆவது டிவிசனும், அதில் இருந்த படைப்பிரிவுகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தி படுகொலைகளை செய்ததாக ஐ.நா. அறிக்கையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இறுதிப் போருக்குப் பின்னர், கேணலாக பதவி உயர்த்தப்பட்டு பிரிகேட் தளபதியாக நியமிக்கப்பட்டார். கிளிநொச்சியிலும் பின்னர், யாழ்ப்பாணத்தில் 51-1 ஆவது பிரிகேட் தளபதியாகவும் பதவி வகித்தவர்.

2007 மே மாதம் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கப்படும் போதும், வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள், கருத்தரங்கிற்கு அனுமதிக்கப்படும் போதும், இராணுவத்தினரை மனித உரிமைகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தி வருகிறது.

இந்த நடைமுறையை அரசாங்கம் பின்பற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதையும் மீறி, இறுதிக்கட்டப் போரில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, பிரித்தானியாவில் இராஜதந்திரப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளமை இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சமாகியிருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.