Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.கவின் கட்சிக் கூட்டத்தில் கட்சி தாவியவர்கள் தோற்கடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.கவின் கட்சிக் கூட்டத்தில் கட்சி தாவியவர்கள் தோற்கடிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 13:20 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான ஆதரவுப் பிரேரணை கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை தடுப்பதற்கு முயன்ற கட்சி தாவிய உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தலைமை தாங்கப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட அதன் உறுப்பினர்கள் 15 பேரும் முதன் முதலாக கலந்து கொண்டனர்.

பொது அமைப்புக்கள் சபையின் பரிந்துரையை போல அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல்களை விசாரணை செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட குழுவை நியமிப்பது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினரான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசாங்க பக்கம் தாவியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட 2 அமைச்சர்களும் இந்த ஊழல் விவகாரங்களில் தொடர்புபட்டு உள்ளதால் இந்த பிரேரணையை அவர்கள் தடுக்க முனைந்துள்ளனர். அவர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஊழல்களை மறைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. எனவே தான் விசாரணைக் குழு அமைக்கும் திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்கியுள்ளோம். அரசாங்கத்தின் பக்கம் உள்ளபோதும் ஐக்கிய தேசியக் கட்சியினர் என தம்மை அழைத்துக் கொள்வதற்கு ஒரு சட்டபூர்வமான பாதுகாப்பு அவர்களுக்கு தேவைப்படுகின்றது என தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்துள்ளன. இக்குழுவிற்கான திட்டம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஏற்கனவே நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விசாரணைக்குழு தேவையற்றது என நாம் எண்ணுகின்றோம். எனவே தான் அதற்கு எதிராக வாக்களித்தோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சிதாவிய உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சருமான ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

பொது அமைப்புக்கள் சபையானது அரசாங்க நிர்வாகங்களில் இடம்பெற்று வரும் ஊழல்களையும், முறைகேடுகளையும் விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளதுடன், சிலரை அழைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனவே ஒரே நோக்கங்களைக் கொண்ட தெரிவு செய்யப்பட்ட விசாரணைக் குழுவானது தேவையற்றது.

நாம், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள். எனவே தான் அதன் நாடாளுமன்றக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் பங்குபற்ற முடிவெடுத்துள்ளோம். நீதிமன்றம் கூட எமது உரிமைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.

அமைச்சர்களான மகிந்த விஜயசேகர, லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனா, பிரதி அமைச்சர் சூரியாராச்சி ஆகிய உறுப்பினர்கள் இந்த கூட்டத்திற்கு சமூகம் அளிக்கவில்லை.

இதனிடையே ஊழல்களை விசாரணை செய்வதற்கு ஒரு தெரிவு செய்யப்பட்ட குழுவை நியமிக்க வேண்டும் என்ற தமது தீர்மானத்தை கரு ஜெயசூர்யவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக பின்னர் நடைபெற்ற கட்சியின் அரசியல் விவகார குழுக் கூட்டத்தில் ரணில் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.