Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரிசல்களுக்கு வழிவகுத்த உள்ளூராட்சித் தேர்தல்

Featured Replies

விரிசல்களுக்கு வழிவகுத்த உள்ளூராட்சித் தேர்தல்

2-e5aacec4ee1e1900760f8ea3b19f2d0e6212ccbb.jpg

 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வுகள் பல பாடங்­களை கற்­பித்­தி­ருக்­கின்­றன. தேசிய அர­சி­யலில் பல மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்­துள்­ள­தோடு ஆட்­சி­யா­ளர்கள் மீளவும் தமது சேவை­களை திரும்பிப் பார்ப்­ப­தற்கும் தேர்தல் முடி­வுகள் வழி­வ­குத்­தி­ருக்­கின்­றன. மேலும் அர­சி­யல்­வா­திகள் தேர்தல் காலங்­களில் வழங்­கு­கின்ற வாக்­கு­று­தி­களை உரி­ய­வாறு நிறை­வேற்ற வேண்டும். மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்­களை மக்­களே தூக்­கி­யெ­றிவர் என்­கிற சிந்­த­னை­யையும் தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்­டு­மென்று அர­சியல் கட்­சிகள் அர­சாங்­கத்தின் குரல் வளையை நெருக்கிக் கொண்­டி­ருந்­தன. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் ஏற்­க­னவே முடி­வ­டைந்­துள்ள நிலையில், தேர்­தலை பிற்­போ­டு­கின்ற அரசின் நட­வ­டிக்­கை­யானது ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான செயல் என்றும் இக்­கட்­சிகள் மேலும் வலி­யு­றுத்தி வந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். பல்­வேறு கோஷங்­க­ளுக்கும் கோரிக்­கை­களுக்கும் மத்­தியில் கடந்த பத்தாம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இடம்­பெற்­றது. இத் தேர்தல் முடி­வுகள் “மாற்றம் ஒன்றே மாறா­தது” என்­ப­தனை வலி­யு­றுத்தி இருக்­கின்­றது. 65 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் உணர்­வு­பூர்­வ­மாக இத் தேர்­தலில் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். பாரா­ளு­மன்றத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்­ப­வற்றில் மக்கள் ஈடு­பாட்­டுடன் வாக்­க­ளிப்­ப­தனைப் போன்றே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் மக்­களின் ஈடு­பாடு மேலோங்கி காணப்­பட்­டது.

மக்கள் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­தது ஒரு­பு­ற­மி­ருக்க தனது வெளிப்­பாட்டின் ஊடாக நல்­லாட்­சிக்கு அபாய அறி­விப்­பையும் விடுத்­தி­ருக்­கின்­றனர். தேசிய அர­சாங்கம் என்­பது எமது நாட்­டுக்கு புதி­ய­தாக காணப்­ப­டு­கின்­றது. தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்ட காலம் முதற்­கொண்டே பல்­வேறு விமர்­ச­னங்­களும் தொடர்ச்­சி­யா­கவே இருந்து வரு­கின்­றமை நன்கறிந்த விடயம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியும், சுதந்­திரக் கட்­சியும் நல்­லாட்­சியில் இருந்­து­கொண்டே ஒரு­வ­ருக்கு ஒருவர் சேறு பூசிக் கொண்­டி­ருந்­த­மையும் புதிய விட­ய­மல்ல. போதாக்­குறைக்கு அமைச்­சர்­களே ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் விமர்­சிக்­கின்ற அள­வுக்­குக்­கூட நிலை­மைகள் மேலோங்கிக் காணப்­பட்­டன. இன்னும் ஒரு­வ­கையில் கூறு­வ­தென்றால் நிலை­மைகள் மோச­ம­டைந்து காணப்­பட்­டன என்றே கூறுதல் வேண்டும். இந்த நிலையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஐ.தே.க. மற்றும் சு.க.விற்கு இடை­யி­லான விரி­சல்­களை மேலும் விரி­வு­ப­டுத்தி இருக்­கின்­றது. தேசிய அர­சாங்கம் தனது வாழ்­நாளை நீடித்துக் கொள்­வ­தற்கு பகீ­ரத பிர­யத்­த­னத்தில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் தனித்து அர­சாங்­கத்­தினை அமைக்­கின்ற நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐ.தே.க. உறுப்­பி­னர்­களை இழுத்­தெ­டுக்கும் முயற்­சியில் சுதந்­திரக் கட்­சியும், சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­களை இழுத்­தெ­டுக்கும் முயற்­சியில் ஐ.தே.க.வும் காய்­ந­கர்த்­தல்­களை மறைமுகமாக மேற்­கொண்டு வரு­கின்­றன. ஐ.தே.க.வின் பின்­வ­ரிசை எம்.பி.க்கள் தனித்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என்ற கோரிக்­கையை அழுத்­த­மாக அண்­மையில் ரணி­லிடம் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளூ­ராட்சி தேர்­தலின் பின்னர் புதிய அவ­தாரம் எடுத்­தி­ருக்­கின்றார். நாட்டு மக்கள் தன்­னுடன் இருக்­கின்­றார்­களா? என்று உள்­ளூ­ராட்சி தேர்­தலில் உர­சிப்­பார்த்த மஹிந்த அதில் வெற்­றியும் கண்­டி­ருக்­கின்றார். சிங்­கள மக்கள் தன் மீதும் தன் கொள்­கை­களின் மீதும் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர் என்­ப­தனை மீண்டும் ஒரு தடவை மஹிந்த நிரூ­பித்­தி­ருக்­கின்றார். கட்­சியால் மஹிந்­த­விற்கு பெருமை என்­ப­தனை விட மஹிந்­தவால் கட்­சிக்குப் பெருமை என்ற ஒரு நிலை­யினை அவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். எந்­தக்­கட்­சியில் எந்த சின்­னத்தில் வாக்கு கேட்­டாலும் தனக்­கென்று ஒரு தனிக்­கூட்டம் இருக்­கின்­றது என்­ப­தனை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களின் ஊடாக மஹிந்த நாட்­டுக்கு எடுத்­துக்­காட்டி இருக்­கின்றார். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மஹிந்­தவின் கை ஓங்­கி­யுள்ள நிலையில் அவ­ரது ஆளுமை தேசத்தை ஆட்டம் காண செய்­தி­ருக்­கின்­றது.

மக்கள் வழங்­கி­யுள்ள ஆணையை கருத்தில் கொண்டு பொதுத்­தேர்­தலை உடன் நடத்­து­மாறு மஹிந்த, அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கின்றார். அத்­த­கைய பொதுத்­தேர்தல் முடி­வு­களை மையப்­ப­டுத்­தியே தாம் ஆட்­சி­ய­மைக்க உள்­ள­தா­கவும் மஹிந்த தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஐக்­கிய தேசிய கட்­சி­யையும், சுதந்­திரக் கட்­சி­யையும் திண­ற­டிக்க செய்­துள்ள மஹிந்த தனக்குப் பிர­த­ம­ராகும் எண்ணம் கிடை­யாது என்­ப­த­னையும் தெளி­வு­படுத்தி இருக்­கின்றார். இதற்­கி­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தொடர்பு கொண்டு “பிர­தமர் பத­வியில் இருந்து வில­க­வேண்டாம்” என்று மஹிந்த ரணி­லிடம் கேட்டுக் கொண்­ட­தாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். ஒரு சிரேஷ்ட அமைச்சர் என்ற ரீதியில் ராஜித இது போன்ற பொய்­களைக் கூறு­வ­தையும் பொறுப்­பற்ற அறிக்­கை­களை வெளி­யி­டு­வ­தையும் உடன் நிறுத்த வேண்டும் என்றும் மஹிந்த கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். ரணிலின் பிர­தமர் பதவி இப்­போது ஆட்டம் கண்டு வரு­கின்­றது. அவரை பிர­தமர் பத­வியில் இருந்து வில­கு­மாறு கோரிக்­கைகள் வலு­வ­டைந்து வரு­கின்­றமை புதிய விட­ய­மல்ல. இதற்­கி­டையில் முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷ, பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை என்று தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் பலரும் பல்­வே­று­வி­த­மான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். சர்­வ­தேச நாடுகள் ஜெனிவா தீர்­மா­னத்தை உரி­ய­வாறு நடை­மு­றைப்­ப­டுத்தக் கோரி இலங்­கைக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன. மேலும் பல மனித உரி­மைகள் அமைப்­பு­க­ளு­டைய அழுத்­தமும் அதி­க­மாக உள்­ளது. இலங்­கையின் கடன் தொகை அதி­க­ரித்­துள்ள நிலையில் இவற்­றுக்கு அதிக வட்­டியை செலுத்­த­வேண்­டிய ஒரு நிலை­யிலும் இலங்கை காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களும் மேலோங்கி வரு­கின்­றன. எனவே, இந்த நிலையில் மஹிந்த பிர­த­ம­ரா­கு­மி­டத்து பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய ஒரு நிலை ஏற்­படும். மஹிந்­தவின் செல்­வாக்கு வீழ்ச்­சி­ய­டை­வ­தற்கும் இந்­நி­லை­மைகள் ஏது­வா­கலாம். இத­னா­லேயே மஹிந்த பிர­த­ம­ரா­வ­தற்கு அஞ்­சு­கின்றார் என்றும் விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்­நி­லையில் எதிர்க்­க­ட்சித் தலைவர் பத­வியில் இரா.சம்­பந்தன் இருப்­பதும் இப்­போது கேள்­விகள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. கூட்டு எதி­ரணி இவ்­வி­ட­யத்தில் அதி­க­மாகவே மூக்கை நுழைத்து வரு­கின்­றது.

மக்கள் ஆணையை இழந்­துள்ள அர­சாங்­கத்­தினால் தொடர்ந்தும் ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்­கான தார்­மீகம் இல்லை. எனினும் சூழ்ச்சி மூலம் தொடர்ந்தும் ஆட்­சியை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு பிர­யத்­தனம் காட்டி வரு­கின்­றது என்று கூட்டு எதி­ரணி கண்­டித்­தி­ருக்­கின்­றது. மேலும் ஐ.தே.க.வுடன் ஸ்ரீல.சு. கட்சி ஒட்டிக் கொண்­டி­ருப்­பது குறித்து ஆரம்பம் முதலே கூட்டு எதி­ரணி எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரும் நிலையில் இப்­போதும் இந்­நி­லைப்­பாட்டில் மாற்றம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. ஐ.தே.க.வை விட்டு சு.க. வெளி­யே­றி­னாலே தமது ஆத­ரவு கிடைக்கும் என்று கூட்டு எதி­ரணி மீண்டும் ஒரு தடவை திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்தி இருக்­கின்­ற­மை­யையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராகக் கொண்ட அர­சாங்­கத்­திற்கு சுதந்­தி­ரக்­கட்சி இனியும் ஆத­ரவு வழங்­காது என்று அமைச்சர் சுசில் பிரேம்­ஜயந்த அழுத்­த­மாகக் கூறி இருக்­கின்றார்.

இந்­நி­லையில் சுதந்­தி­ரக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்து ஆராயும் பொருட்டு அமைச்சர் சுசில் பிரேம்­ஜயந்த் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன ஆகி­யோரின் தலை­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முக்­கிய குழு­வொன்­றினை நிய­மித்­தி­ருந்தார். இக்­கு­ழு­வா­னது இவ்­விரு கட்­சி­க­ளி­னதும் இணைவு குறித்து ஆராய்ந்து அதற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்ள உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவும் ஏனைய கட்­சி­க­ளுடன் பல­மட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்றார். ரணில் மற்றும் ஏனைய கட்­சி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

பல்­வேறு இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸை ஜனா­தி­பதி அர­வ­ணைத்துக் கொண்­டி­ருக்­கின்றார். சிறிய மற்றும் ஆரம்ப கைத்­தொழில் பிர­தி­ய­மைச்­ச­ராக இ.தொ.கா.வின் தலைவர் முத்து சிவ­லிங்கம் நிய­மிக்­கப்­பட்­டதில் இருந்து இது புல­னா­கின்­றது. இவற்­றுடன் ஆறு­முகன் தொண்­ட­மா­னுக்கும் விரைவில் முக்­கிய அமைச்சு பத­வி­யொன்று வழங்­கப்­பட உள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினை பாது­காக்கும் ஜனா­தி­ப­தியின் முன்­னெ­டுப்­பு­களில் இது ஒரு முக்­கிய கட்­ட­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

தனித்து அர­சாங்கம் அமைக்கும் நட­வ­டிக்­கை­களில் கட்­சிகள் தீவி­ர­மாக கள­மி­றங்­கி­யுள்ள நிலையில் தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் இருக்கும் என்றும் ஆனால் சில தினங்­களில் அமைச்­ச­ர­வையில் மாற்றங்கள் ஏற்­படும் என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார். எனினும் இதன் சாத்­தி­யப்­பா­டுகள் மிகவும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மி­டத்து மேலும் மேலும் பிரச்­சி­னைகள் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­முள்ளன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆதிக்கம் குறை­வ­டைந்­து­வரும் நிலையில் அவர் அர­சி­யலில் ராசி­யில்லா ராஜா­வாக இப்­போது உரு­வெ­டுத்து வரு­கின்றார். ஏற்­க­னவே இந்நாட்டின் ஜனாதிபதியாகும் ரணிலின் கனவு சாத்தியமாகவில்லை. பிரதமரானபோதும் அவரது காலத்தில் அரசியல் நெருக்கீடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தல்கள் இப்போது அதிகமாகவே இடம்பெற்று வருகின்றன. அரசியலில் சாணக்கியமிக்க தலைவர் என்று பெயர் பெற்ற ரணில் இப்போது பல்வேறு சறுக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் பதவியில் தொடர்ந்தும் தாக்குப் பிடிப்பாரா? என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் உள்ளூராட்சித் தேர்தல் இப்போது உலகையே இலங்கை பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது. பல நாடுகள் இலங்கையின் அரசியல் இழுபறி நிலைக்கு முடிவுகட்ட ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அரசியலில் ஏற்படுத்தியுள்ள மாற்றமானது குஞ்சு மிதித்து கோழி நிலை தடுமாறிய நிலைக்கு ஒப்பானதாக உள்ளது. இலங்கையின் அரசியல் கொந்தளிப்பு நிலையானது சிறுபான்மையினருக்கும் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. முடிவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.