Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் அலட்சியப்போக்கு - விடுதலைப் புலிகள் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 21-03-2007 01:27 மணி தமிழீழம் [தாயகன்]

கிழக்கு மக்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் அலட்சியப்போக்கு - விடுதலைப் புலிகள் கண்டனம்

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மனித அவலம் தொடர்பாக அனைத்துலக சமூகம் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதாக, தமிழீழ சமாதானச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக ஒரு இலட்சம் வரையிலான மக்கள் படுவான்கரையில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை சம்பூர், மூதூர், மட்டக்களப்பு வாகரைப் பிரதேசங்களில் இருந்து ஏற்கனவே 60 ஆயிரம் பேர் மட்டக்களப்பு நகர் நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர்.

இவ்வாறு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், சில மனித நேய அமைப்புகள் மக்களின் அவலம் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன.

இருப்பினும் மனித அவலத்தைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என, தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலத்தை அலட்சியம் செய்துள்ள அனைத்துலக நாடுகள், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை அமைப்பதாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நாடகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிழக்;கைச் சேர்ந்த முக்கிய ஊடகர்களான தர்மரட்ணம் சிவராம், ஐயாத்துரை நடேசன், சுகிர்தராஜ் போன்றவர்கள் ஒட்டுக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் ஏனைய ஊடகர்களும் அச்சம் காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் இந்த மாவட்டங்களில் இடம்பெறும் மனித அவலங்கள் வெளியே தெரியாதவாறு மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும், மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.