Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகின்றன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகின்றன?

[21 - March - 2007]

அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியால் நடத்தப்பட்ட பேரணியின் போது இன்னும் 90 நாட்களுக்குள் ஐ.தே.கட்சி அரசை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அல்லது புரட்சிச் சதி ஒன்றின் மூலம் மட்டுமே ஐ.தே.கட்சி அரசை அமைக்க முடியும்.

ஐ.தே.கட்சியின் புனரமைப்பு மற்றும் அவர்களது நடவடிக்கைகள், அறிக்கைகள் ஆகியனவற்றை அவதானிக்கும் போது ஐ.தே.கட்சி ஒரு புரட்சிச் சதி மூலம் அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராகி வருவதாகத் தெரியவில்லை. இருப்பினும் அக்கட்சியினர் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

மங்கள சமரவீர மற்றும் ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசுக்கு எதிராக உருவாக்கிவரும் அரசியல் சூழ்நிலையில் ஐ.தே.கட்சியின் தலைவரும் அதன் உறுப்பினர்களும் புதிய அரசியல் தோற்றத்துடன் முன்னோக்கி நகர்வதைக் காண முடிகிறது.

ஐ.தே.கட்சி மாத்திரமன்றி எதிரணியிலுள்ள முக்கிய அரசியல் கட்சியான ஜே.வி.பி.யும் பொதுத் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது. அக்கட்சியினர் சில வாரங்களுக்கு முன்னராகவே நாடெங்கும் கூட்டங்களை ஒழுங்கு செய்து நடத்திவருகின்றனர். அரசாங்கம் தற்போது "மகிந்த சிந்தனை" மற்றும் மக்கள் வழங்கிய ஆணை ஆகியவற்றை மறந்து கைவிட்டுக் செயற்பட்டு வருகிறது என்பதே ஜே.வி.பி.யினர் அரசு மீது சுமத்தும் குற்றச்சாட்டாகும். மேலும், அரசாங்கம் சர்வகட்சிக் குழு ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை முன்வைக்கத் தயாராகி வருகிறது எனவும் சர்வதேசத்தின் தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் ஜே.வி.பி.யினர் அரசு மீது குற்றஞ்சுமத்துகின்றனர்.

"சகோதரர்களின் நிறுவனத்தின்" (ராஜபக்ஷ & சகோதரர்கள் Co.) தேவைகளை நிறைவேற்றும் விதத்திலேயே அரசு செயற்பட்டு வருவதாக மங்கள சமரவீர மற்றும் ஷ்ரீபதி சூரியாராச்சியைச் போலவே ஐ.தே.கட்சியும் அரசு மீது குற்றஞ்சுமத்துகிறது.

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது "மதமுலன வளவைப் பாதுகாப்பதே ஜனாதிபதியின் நடவடிக்கையாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்பாடு ஒன்றுள்ளது என கூறிய மங்கள சமரவீர மற்றும் ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் விமானக் கொள்வனவில் 600 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது வாராவாரம் மங்களவும் ஷ்ரீபதியும் புதிய புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் கடந்தவாரம் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி பேசும்போது "ஒரு சிலர் மன்னர்களாகவும் வேறுசிலர் மகாராணியாகவும் முயற்சித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார். இவர்கள் குறிப்பிடும் வேடிக்கையான விடயங்களின் பின்னணியில் பயங்கரமான சதிகள் உள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒருபுறத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மறுபுறத்தில் கடந்த வாரம் தேர்தல் தொடர்பான கதைகள் தேர்தல் ஆணையாளர் பணிமனையில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் தொடர்பாக உத்தியோகபூர்வமாகத் தகவல்கள் எவையும் வெளிவராத போதிலும் இந்தக் கதைகள் உருவானதற்கு ஏதோ அடிப்படை இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசு மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க மனித உரிமைகள் தொடர்பான ஜெனீவா மகாநாட்டிற்குச் சென்று இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து ஷ்ரீலங்கா அரசை விடுவிக்க பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் நினைத்த அளவிற்குச் சாதகமான நிலைமையைத் தோற்றுவிக்கவில்லை என்பதைப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற அரசு மீதான குற்றச்சாட்டுகளில் ஜே.வி.பி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், அரசையும் பாதுகாக்கும் விதத்திலேயே செயற்படுகிறது. ஷ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டால் அவை குறித்து இந்நாட்டிலேயே பரிகாரம் காணப்பட வேண்டுமெனவும் இதில் சர்வதேசத்தின் தலையீடுகள் தேவையற்றன என்பதும் ஜே.வி.பி.யின் வாதமாகும். ஷ்ரீலங்காவில் பாரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டபோது, மௌனம் சாதித்த வெளிநாடுகள் தற்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குரலெழுப்புவது தேவையற்றது என்பதே ஜே.வி.பி.யின் கருத்தாகும். ஜே.வி.பி.யினர் இவ்வாறு கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் சற்று மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது. ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்படும் சம்பவங்களின் பின்னணியில் அரசுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும் சதி வேலைகள் இடம்பெற்று வருகின்றன என அரசு தெரிவித்துள்ளது.

ஷ்ரீலங்காவில் மனித உரிமைகள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட 1988 - 1989 காலகட்டத்தில் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழு முன் சென்று ஷ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது எனத் தான் கோரியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்தவாரம் தெரிவித்தார்.

சில இடங்களில் இடம்பெற்றுவரும் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை அரசு நிராகரிக்கும் நிலையில் ஷ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறப்படுவதை நாங்கள் கவனிக்கிறோம் (பார்க்கிறோம்) என ஜே.வி.பி. கூறுவதானது எவ்வளவு தூரம் ஜனநாயக வழிமுறையில் அமைந்தது என்பது குறித்து நாம் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கும் ஜே.வி.பி. இவ்வாறான படுகொலைக் கலாசாரத்தை ஏற்று பொதுத் தேர்தலைச் சந்திக்க முன்வந்தால் ஜனநாயகத்தை விரும்பும் - மதிக்கும் பொதுமக்களின் உணர்வலைகள் எவ்வாறு அமையும் என்பதை விளக்கத் தேவையில்லை.

பொதுத் தேர்தல் ஒன்றைச் சந்திக்கவுள்ளதாக இதுவரை அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அது தொடர்பான ஆயத்தங்கள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் அதற்குத் தயாராகி வருவதாகத் தெரியவில்லை.

தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லுமாயின் அது யுத்தத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும். அரசாங்கம் யுத்தத்தை உரிய முறையில் நடத்திவருகிறது எனவும் இதே அரசைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் மக்கள் கருத்து உருவாகியுள்ளது என்பதே அரச தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில ஆய்வாளர்களின் கருத்தாகும். இருப்பினும், இந்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றியையோ அல்லது தோல்வியையோ அறுதியாக அடையாத நிலையில் மேற்படி கருத்து எவ்வளவு தூரம் வலுவானது என்ற கேள்வி எழுகிறது.

ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு ஜனாதிபதிப் பதவியை வகித்த டி.பி. விஜேதுங்கவின் காலத்திலிருந்து அரசாங்கங்களின் வெற்றிகளுக்கு அல்லது தோல்விகளுக்கு யுத்தம் ஒரு காரணமாக அமைந்தது எனத் தோன்றவில்லை.

டி.பி. விஜேதுங்க ஜனாதிபதிப் பதவியை ஏற்ற பின்னர் கிழக்கில் யுத்தத்தில் வெற்றிகளைப் பெற்றதுடன் வடக்கிலும் அவ்வாறான வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை (மக்கள் ஆணையை) வழங்குமாறு கோரினார். ஆனால், 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மக்கள் அவரது கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்திருந்தார். வடக்கில் யுத்தத்தில் வெற்றிபெற்று விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அழிப்பதற்கான மக்கள் ஆணையை வழங்குமாறு அவர் பொதுத் தேர்தலின் போது கோரினார். அரச படைகள் குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர் (1996) நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் (2000) சந்திரிகாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அரசாங்கத்தை அமைப்பதே பெரும்பாடாக இருந்தது. அமைக்கப்பட்ட அந்த அரசும் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை.

2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது இன்று நிலவும் நிலைமையே நிலவியது.

2001 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின்போது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே சந்திரிகாவின் தொனிப் பொருளாக அமைந்தது. இருப்பினும், சந்திரிகாவின் அந்த வேண்டுகோளை இந்நாட்டு மக்கள் கணக்கெடுக்கவில்லை. தேர்தலில் அரசு தோல்வியைத் தழுவியது.

இவ்வேளையில், இன்று யுத்தத்தைத் தொடரும் அரசுக்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை என்ன? என்ற வினா எழுகிறது. ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த கட்சிகளின் ஆதரவும் அரசுக்குக் கிடைத்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது, பாராளுமன்றத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் கட்சிவாரியாக அவதானிக்கும் போது ஜே.வி.பி.க்கு பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஷ்ரீ.ல.சு. கட்சிக்குப் பாதகமான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை உருவாகும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரத்தால் (ஜனாதிபதியால்) பாராளுமன்றத்திற்கு பிரபல அச்சுறுத்தல்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படாவிடினும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் குறித்துக் குறைத்து மதிப்பிடவும் முடியாது.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் விதிமுறைகளின்படி எந்தவொரு கட்சியும் தனித்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற வாய்ப்புகள் அரிது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள முயல்வதாகவும் தெரியவில்லை. காரணம் தற்போது பாராளுமன்றத்திலுள்ள நிலைமைகள் எதிர்க்கட்சிகளுக்கே சாதகமாக உள்ளன.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை உருவாக்குவது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளார். அரசாங்கத்திற்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் யுத்தத்தை உரிய விதத்தில் வழிநடத்தாவிடின் வலுவான அரசு ஒன்றை அமைக்கப் பொதுத் தேர்தலைக் சந்திப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.