Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக நடப்போருக்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக நடப்போருக்கு எச்சரிக்கை-வேலவன்-

அரச வாகனம் ஒன்றைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் அதிருப்தியாளர்களில் மிகவும் முக்கியமானவருமான சிறீபதி சூரியாராய்ச்சி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு உயர் பதவி வகித்த ஒருவர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது என்பது நிச்சயமாக அரசியல் ரீதியானது என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

இதன்பொருள் சிறீபதி சூரியாராய்ச்சி குற்றமேயற்ற நேர்மையான அரசியல்வாதி என்பதல்ல இவ்வாறான குற்றங்களைப் புரிபவர்கள் மீது மட்டுமல்ல இதனைவிடப் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் மீதும் கூட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதனாலேயே இது அரசியல் ரீதியானது எனக் குறிப்பிடக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை சிறீபதி சூரியாராய்ச்சி கூட இதனைவிடவெல்லாம் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்ஃ ஈடுபட்டு வருபவர் என்றே கூறப்படுகிறது.

சிறிலங்காக் கடற்படையில் லெப். தர அதிகாரியாக இருந்த இவர், 1990-1991 காலப் பகுதியில் கடற்படை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விசாரணையின் போது குற்றவாளியாகக் காணப்பட்டு கடற்படையிலிருந்து நீக்கப்பட்டவர்.

அவ்வேளையில் அவர் ஊர்காவற்றுறை மற்றும் தீவகப்பகுதிகளில் கடமை புரிந்து வந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவெனில், பொதுமகன் ஒருவரின் வர்த்தக நிலையத்திலிருந்து பொருட்களைச் சூறையாடினார் என்பதாகும். அதாவது பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடினார் என்பதற்காகவே இவர் கடற்படையிலிருந்து நீக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

இதுகூட ஓர் ஆச்சரியமளிக்கும் விடயமாகும். ஏனெனில் சிறிலங்காவின் கடற்படை நீதிமன்றம் பொதுமக்கள் விடயத்தில் இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுத்திருப்பின் அது ஆச்சரியமளிப்பது மட்டுமல்ல அதன் பின்னணி குறித்தும் சிந்திக்கவேண்டியதே.

பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்து பொருட்களைச் சூறையாடுவதும், மக்களின் சொத்துக்களைச் சூறையாடுவதற்காகவே பல படுகொலைகளைப் புரிந்து வருவதுமான ஒரு படையில் இத்தகையதொரு நடவடிக்கையா? என்பது ஆச்சரியமளிக்கத்தக்கதுதான்.

ஆனால் விடயம் இத்துடன் முடிந்து விட்டது எனக் கொள்வதற்குமில்லை. ஏனெனில் ஜே.வி.பியினருடன் இணைந்து சிறீபதி சூரியாராய்ச்சி சந்திரிகா அம்மையாருக்குச் சில தொல்லைகளைக் கொடுத்தபோது இக்கடற்படை நீதிமன்ற விசாரணை குறித்து சந்திரிகா அம்மையார் சிறீபதி சூரியாராய்ச்சிக்கு ஞாபகமூட்டினாராம். அதாவது விசாரணை அறிக்கை தம்மிடமிருக்கிறது. அதிகம் வாலாட்ட வேண்டாம் என சந்திரிகா எச்சரிக்கை செய்ததாகத் தென்னிலங்கைத் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் சிறிலங்காவின் கடற்படைத் தளபதிகள் மீதே பாரிய குற்றச்சாட்டுகள் இருக்கையில் ஒரு லெப்டினன் தர அதிகாரி மீது நடவடிக்கை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அதாவது அன்றும் இவர் யாருக்கோ தொல்லையாக இருந்திருக்கிறார் என்பதை ஊகிக்கலாம்.

எவ்வாறாயினும் பின்னர் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்து வந்தவர் இவர். பொதுசன ஐக்கிய முன்னணியின் முக்கிய ஆலோசகராக, செய்தித் தணிக்கை அதிகாரியாக, சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினராக, ரூபவாகினி பணிப்பாளர் சபை அங்கத்தவராக, லேக்ஹவுஸ் ஊழியர்கள் குறைகேள் விசாரணைக்குழுவின் உறுப்பினராக எனப் பல பதவிவகித்து வந்தவர் இவர்.

2003 ஆம் ஆண்டு இவர் பொதுசன ஐக்கிய முன்னணியின் களனித் தொகுதிப் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது இவருக்கு விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு வழங்கப்பட்டது. அவ்வேளையில்தான் ஜே.வி.பி.யினருடன் இணைந்து சந்திரிகாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார்.

கொழும்பில் இயங்கும் பாதாள உலகக் குழு ஒன்றுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தென்பகுதிச் செய்திகள் கூறுகின்றன. இவருடன் தொடர்புடைய 'ஆமி ஷெரான்" என்னும் பாதாள உலகக்குழுத்தலைவர் ஒருவர் இவரது அலுவலக வாசலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவரது வாகனத் தொடரணி 2004 ஜுன் மாதம் தாக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு அவர் ஜாதிக ஹெல உறுமய மீது குற்றம் சுமத்தினார்.

இவ்வாறான நிலையில் 2005 நவம்பரில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவை வெளிப்படையாக ஆதரிக்கத்துணிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காரரில் ஒருவர் சிறீபதி சூரியாராய்ச்சி. மங்கள சமரவீரவுடன் இணைந்து அவர் தீவிரமாகச் செயற்பட்டார்.

ஆனால் மகிந்தவின் அமைச்சரவையில் அவருக்கு கிடைத்தது அமைச்சரவை அந்தஸ்தற்ற வேலை வாய்ப்பு அமைச்சாகும். இதனை அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட 2 மணிநேரத்தில் இராஜினாமாச் செய்தார். பின்னர் மேலும் இரண்டு பிரதி அமைச்சுப் பதவிகளுடன் பதவி ஏற்றபின்னர் சிறிது காலத்தில் பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தார்.

அப்போது இவரின் கோமாளித் தனங்களையெல்லாம் சிறிது காலத்திற்குப் பொறுத்துக் கொள்வதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது அமைச்சரவை நியமனத்தில் முற்றாக அதிருப்தியடைந்த சிறீபதி சூரியாராய்ச்சி மங்களவுடன் அணி சேர்ந்த வேளையில் அநுரா, மங்கள, சிறீபதி மூவரும் அமைச்சரவையிலிருந்து மகிந்த ராஜபக்சவினால் நீக்கப்பட்டனர்.

இவர்கள் எல்லாம் தமது அமைச்சுக்கள் பலமற்றவை என்பதால் மட்டும் மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக்கொள்ளவில்லை. இவர்களின் பொறுப்புக்களைக்கூட ராஜபக்ச சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டதே இவர்களின் சீற்றத்திற்குக் காரணமாகும்.

இவர்களுடைய பொறுப்புக்களில் மட்டுமல்ல, மேலும் பல சிரேஷ்ட அமைச்சர்களின் பொறுப்புக்களிலும் ராஜபக்ச சகோதரர்களின் வரண்முறையற்ற தலையீடு காணப்பட்டே வருகின்றது.

'எல்லா அமைச்சுக்களையும் பசிலே நடத்துவதால் தனது அமைச்சை தான் எவ்வாறு நடத்துவது?" என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஒருமுறை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததே அநுரா, மங்கள, சிறீபதி ஆகியோரின் வெளியேற்றத்திற்குக் காரணமாகும்.

ஆனால் இவர்களை ஏனையோருக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வெளியேற்றிய போதும் மங்கள சமரவீர வெளியிற் சென்று ஏதாவது நரித்தந்திரம் புரிந்துவிடுவாரோ என்ற அச்சம் மகிந்தவுக்கு உள்ளது.

எனவே மூவரணியை உடைக்க அநுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சமாளித்து மீண்டும் அமைச்சரவையில் மகிந்த இணைத்துக்கொண்டுவிட்டார்.

மகிந்த எதிர்பார்த்தது போலவே மங்கள சமரவீர எதிரணியொன்றை அமைப்பதில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அவரை எச்சரிக்கை செய்யும் வகையிலேயே சிறீபதி சூரியாராய்ச்சி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புதிய கட்சியொன்றை மங்கள ஆரம்பித்தால் அதன் விளைவு உடனடியாக மகிந்தவைப் பெருமளவில் பாதிக்காது. ஆனால் கூட இருந்த அவர்கள் மகிந்த மீதும் அவரது சகோதரர்கள் மீதும் குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மகிந்தவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் எதிர்பார்க்கலாம்.

அதாவது தேர்தல் வேளையில் புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டதாக மகிந்த மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து அவர்கள் மறுத்துவிடலாம்.

ஆனால் மிக் விமானக் கொள்வனவில் 600 மில்லியன் ரூபா மோசடி செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டில் நிரபராதித் தன்மையை நிரூபிப்பது கடினமாகும். இதன் காரணமாக மங்கள சமரவீரவின் வாயை விரைந்து மூடுவதற்காகவே மகிந்த இவ்வாறு ஒரு கைது நடவடிக்கைகளுக்கு உத்தர விட்டிருக்கிறார்.

கடந்த வெசாக் தினத்திற்கு முதல் தினம் 710 படையினருடன் சென்ற கடற்படைத் தொடரணி ஒன்று தாக்குதலுக்குள்ளான போது 'படையினருக்கு ஏதாவது நடந்திருந்தால் விளைவு என்னவாக இருந்திருக்கும்? 1983 ஜூலையை தமிழருக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்" என சிறீபதி சூரியராய்ச்சி கூறியிருந்தார்.

அப்போது அவரது தேசப்பற்றை மெச்சியோர் இன்று அவர் அதே தேசப்பற்றுடன் மகிந்த மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை ஏற்கத் தயாராக இல்லை.

எவ்வாறாயினும் சிறீபதி சூரியாராய்ச்சி குற்றம் செய்தாரா இல்லையா? என்பதற்கு மேலாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையும் நீதித்துறையும் அரசியல் காரணங்களுக்காக செயற்படுத்தப்பட்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.