Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை

மருத்துவர் போதினி சமரதுங்க

'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant).

யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன்.

ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது.

படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கனவின் நிதர்சனத்தினை, நிபுணர் முதல் நாளன்றே சொன்ன மேலே குறிப்பிட்ட  வார்த்தைகள், உணர்த்தின.

98% எனக்கு பரீடசையமில்லாத மொழி ஒன்றை பேசும் மக்களுக்கு சேவை செய்ய வந்துளேன். நாட்டின் இன்னுமொரு மொழியினை அறிந்து கொள்ளாதது குறித்து கவலை கொண்டேன்.

உரையாடல் என்பது எமது வேலையின் மிக முக்கியமான அம்சம். நோயாளிகளின், வரலாறு, அறிகுறிகள் போன்றவைகளை சரியாக புரியாவிடில், சரியான மருத்துவ சேவைகளை வழங்க முடியாது. எனது அன்றாட வேலைகளை புரிந்து, அதற்கு உரிய வகையில் நடந்து கொள்வது ஒரு போராட்டமாக இருந்தது. 

வார்டு ரவுண்டு செல்லும் போது, மொழிபெயர்ப்புக்கு உதவ பலர் முன்வந்தாலும், அவர்களது வேலைச்சுமைகள், பொறுப்புகள் காரணமாக எப்போதும் உதவிகளை எதிர்பார்ப்பது சரியாக படவில்லை.

தமிழ் மொழியினை மிக, மிக விரைவாக கற்றுக் கொள்வது தான் ஒரே வழி என முடிவு செய்தேன். ஊரில் இருந்து, அம்மா அனுப்பி வைத்த, 'சிங்களமொழி  மூலம் தமிழ் மொழி' புத்தகம், ஒரு பெரிய வேடிக்கை. 24 மணி நேர கடும் வேலை, சாப்பிடவே நேரம் இல்லா நிலையில் அது பெரிதாக உதவவில்லை.

நாட்டின் பிரச்சனைகளுக்கு மிகப் பெரிய காரணமாக நான் கருதியது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத மொழித்தடையே என புரிந்தது. 

ஆரம்பத்தில் எனக்கும், என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. அவர்களுடன் நல்ல தொடர்பினைப் பேணி, அவர்களது குடும்ப பின்னணிகளை அறிந்து, தினந்தோறும், வார்டு ரவுண்டு முடிந்ததும், கிசு, கிசு கதைகள் மூலம் சில முக்கியமான சொற்களை அறிந்து, ஒரு டையரியில் குறிப்பு எடுத்துக் கொண்டேன். 

நூற்றுக் கணக்கான நோயாளிகளுடன் பேசும் போது.... அவர்கள் பேசும் விதத்தினை உன்னிப்பாக கவனித்தேன். பின்னர் இலக்கணம், முக்கியமான சொற்களை வசனக் கோர்வைகளாக்கும் விதத்தை அறிந்து கொண்டேன்.

அம்மா, தம்பி, தங்கச்சி, அண்ணா போன்ற உறவு முறை சொற்களை அதிகமாக பாவித்து, எனது தமிழ் மொழிப பேச்சினை அதிகரித்துக் கொண்டேன்.

கர்பிணிப் பெண் ஒருவரை, அம்மா இருமுகிறதா (காகின) என கேட்பதாக நினைத்து, அம்மா  கடிக்கிறதா (ககன) , என கேட்க, அவரை குழப்பி விட்டேன். எனது தமிங்கிலீஷ் மூலம் உண்டாக்கிய குழப்பத்தினை திருத்திய போது, பெரும் சிரிப்பைனை உண்டாக்கி இருந்தேன். 

ஒரு வாரத்தில் ஒரு தமிழ் பெண்ணாக தமிழ் மொழி பேச தொடங்கி விட்டேன். நோயாளிகளுடன் தமிழ் மொழியில் பேசி, மருந்துகளை எவ்வித உதவியும் இன்றி கொடுக்க தொடங்கி இருந்தேன்.

புதிதாக வந்திருந்த தமிழ் மருத்துவ நிபுணர், நான் எவ்வித உதவிகளும் இன்றி, சுயமாக தமிழ் பேசுவதை அறிந்து ஆச்சரியம் தெரிவித்தார். சக தமிழ் மருத்துவர்களுக்கு, எனது ஆர்வத்தினை குறிப்பிட்டு, அவர்களை சிங்கள மொழியினை  கற்று கொள்ள முயல வேண்டும் என ஆலோசனை சொன்னார். அது பிறிதொரு நேரத்தில் உதவும் என சொன்னார்.

நான் தமிழ்  கற்று கொள்ள  முயலுகையில், அங்கிருந்த சக மருத்துவர்களில் சிலர் என்னுடன் பேசி, சிங்களத்தினை கற்று கொள்ள முயன்றது வேடிக்கையாக இருந்தது.

ஒருமுறை ஒரு கடும் சுகவீனமான ஒரு கர்பிணிப் பெண்ணை ஆம்புலன்ஸ் வண்டியில் பெரிய வைத்திய சாலைக்கு அனுப்ப வேண்டி இருந்தது. ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள், அந்த நோயாளியின் நிலைமை தெரியாது, வேறு ஒரு வேலை முடித்த பின் தான், இந்த நோயாளியை கொண்டு சொல்ல முடியும் என சொன்னார்கள். மிகவும் சத்தமாக அவர்களுடன் வாதாடி, அந்த ஒரு கர்பிணிப் பெண்ணை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கண்டிப்புடன் சொன்னேன். 

அவர்கள் அவ்வாறு செய்து பயணியை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏத்தும் போது, வண்டியின் ஓட்டுனரான தமிழர், பெரு விரலை காட்டி, 'மிக நன்றாக தமிழ் பேசுறீங்க, ஆனால், உங்கள் பெயர் நீங்கள் இந்த பகுதியை சேர்ந்தவராக சொல்லவில்லையே' என வியந்தார்.

மிக முக்கியமாக, எனது நோயாளிகள், வைத்தியசாலைக்கு பக்கத்தில் இருக்கும் ஊர்களை குறிப்பிட்டு, நான் அந்த ஊர் ஒன்றில் இருந்து வந்தவரா என வினவுவார்கள். காரணம் எனது வட்டார தமிழ் உச்சரிப்பாக இருக்கலாம்.

தென் இலங்கைக்கு சென்றபின்னர், எனது சிங்கள உச்சரிப்பில், தமிழ் வாடை அடிப்பதால், நான் தமிழ் பெண்ணோ என்றல்லவா கேட்க்கின்றனர்.

By Dr. Bodhini Samaratunga

http://dbsjeyaraj.com/dbsj/archives/58089#more-58089

மனமுண்டானால் இடம் உண்டு. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரிலிருந்து...கொழும்புக் கடைகளில் வேலை செய்யப் பல இளைஞர்கள் அந்தக் காலத்தில் செல்வதுண்டு!

மருத்துவர் போதினியைப் போன்று...அவர்களுக்கு அதிக படிப்பறிவு இல்லாத போதும்....இரண்டு மாதங்களில் அவர்களில் பலர்....சிங்களம் சரளமாகப் பேசும் நிலைக்கு வந்து விடுவார்கள்!

ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்...தமிழுக்கும்...சிங்களத்துக்கும்... பொதுவான சொற்கள் நிறையவே உள்ளது!

அத்துடன் வினைச்சொல்களின் இறுதி விகுதிகள் சேர்க்கும் விதமும்....தமிழுக்கும் சிங்களத்துக்கும் ஒன்றே!

எனவே சிங்களவன்...தமிழ் கற்றுக்கொள்வதோ..அல்லது தமிழன் சிங்களம் கற்றுக் கொள்வதோ..கடினமான ஒன்று அல்ல!

என்ன....சுவியர்...நான் சொல்லிறது...சரி தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

எமது ஊரிலிருந்து...கொழும்புக் கடைகளில் வேலை செய்யப் பல இளைஞர்கள் அந்தக் காலத்தில் செல்வதுண்டு!

மருத்துவர் போதினியைப் போன்று...அவர்களுக்கு அதிக படிப்பறிவு இல்லாத போதும்....இரண்டு மாதங்களில் அவர்களில் பலர்....சிங்களம் சரளமாகப் பேசும் நிலைக்கு வந்து விடுவார்கள்!

ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்...தமிழுக்கும்...சிங்களத்துக்கும்... பொதுவான சொற்கள் நிறையவே உள்ளது!

அத்துடன் வினைச்சொல்களின் இறுதி விகுதிகள் சேர்க்கும் விதமும்....தமிழுக்கும் சிங்களத்துக்கும் ஒன்றே!

எனவே சிங்களவன்...தமிழ் கற்றுக்கொள்வதோ..அல்லது தமிழன் சிங்களம் கற்றுக் கொள்வதோ..கடினமான ஒன்று அல்ல!

என்ன....சுவியர்...நான் சொல்லிறது...சரி தானே?

எனது பொது மருத்துவர் (GP) யூதர். நீண்ட, இலங்கையரான உங்கள் பெயர் M அல்லது N ல் முடிந்தால் தமிழர்கள், A யில் முடிந்தால் சிங்களவர் என்று சொல்லி அதிர வைத்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.