Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறையின் குறிக்கோள்

Featured Replies

வன்முறையின் குறிக்கோள்

 

இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் தொட­ரு­மா­க­வி­ருந்தால் நாங்கள் ஆயு­த­மேந்தி போரா­ட­வும்­த­யங்க மாட்டோம் என்ற ஆவே­ச­மான கருத்தை பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன். கண்­டி­ நிர்­வாக மாவட்­டத்தில் தெல்­தெ­னிய திக­னவில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கொடூர தாக்­குதல் மற்றும் வன்­மு­றைச்­சம்­ப­வங்­களைக் கண்­டித்து அவரால் மேற்­கண்ட காட்­ட­மான வாக்­கி­யங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பாராளுமன்றில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­ன­ணி, ஆளுங்­க­ட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் மேற்­படி சம்­ப­வங்­களை வன்­மை­யாக கண்­டித்­தி­ருந்­தனர்.

அமைச்சர் ரவூப் ­ஹ­க்கீம் அம்­பாறை மற்றும் திக­னவில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மித்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­ வேண்­டு­மெ­னவும் பாரா­ளு­மன்றில் கோரி­யி­ருந்­தார். நாட்டின் பல ­ப­கு­தி­களில் நிலவும் திருப்­தி­யற்ற பாது­காப்பு நிலை­மை­களை கவ­னத்தில் கொண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் ஒரு­வார காலத்­துக்கு நாடு முழு­வதும் அமு­லுக்கு வரும்­வ­கையில் ஜனா­தி­ப­தியால் அவ­சரகால நிலைமை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வார கால­மாக நாட்டின் சில பகு­தி­களில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் குற்றச்செயல்கள், வன்­மு­றைகள், உயி­ரி­ழப்­புக்கள், உட­மைச்­சே­தங்கள், வணக்கஸ்தலங்கள் மீது ஏற்­ப­டுத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள், இனங்­க­­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட முறுகல் நிலைகள், போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் பாதிப்பு ஆகி­ய­வற்­றையும் கவ­னத்தில்கொண்டு ஜனா­தி­ப­தி­யினால் அவ­சரகால நிலைமை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த அவ­சரகால நிலைமை தொடர்பில் ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு வெளியிட்­டுள்ள அறிக்­கையில் நாட்டில் நடை­பெற்ற சம்­ப­வங்கள் எதிர்­பா­ராத சம்­ப­வங்­க­ளாக இருந்­தாலும் இத்­த­கைய இனக்­கு­ரோத சம்­ப­வங்­களை திட்­ட­மிட்ட வகையில் சில குழுக்­களும் நபர்­களும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவ்­வகை இன­வாத கெடு­பி­டி­க­ளினால் வன்­மு­றை­களை தூண்டி விடு­வ­தனால் அது நாட்­டுக்கே அவப்­பெ­யரை உண்­டாக்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாட்டின் அவப்­பெ­ய­ருக்கு உள்ள களங்கம் கரைந்து வரு­கிற சூழ்­நி­லையில் மீண்டும் அதை இல்­லாது ஆக்கும் சதி முயற்­சி­க­ளுக்கு இட­ம­ளிக்­க­மாட்டேன் என ஜனா­தி­பதி கங்­கணம் கட்­டி­யி­ருந்தார். இந்த அபத்த நிலை தொடர்பில் கருத்து வெளியிட்­டி­ருந்த எதிர்க்­க­ட­்சித்­த­லைவர் இரா. சம்­பந்தன் அவர்கள், தொடர்ச்­சி­யாக சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ராக விடுக்­கப்­படும் வன்­மு­றைக்­கட்­ட­விழ்ப்­புக்கள்

சர்­வ­தேச ரீதியில் அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும். சட்­டத்தை கையி­லெ­டுத்­துக்கொண்டு மிலேச்­சத்­தனம் பண்ணும் வன்­மு­றை­யா­ளர்களை தடுக்கும் வகையில் சட்­டமும் ஒழுங்கும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை. சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் ஏன் தவறு இழைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் இதற்கு என்ன பதில்­ கூ­றப்­போ­கிறார் என எதிர்க்­கட்­சித்­த­லைவர் சாடி­யுள்ளார்.

அம்­பா­றையில் உண­வ­கத்­தினால் ஏற்­பட்ட வதந்­திகள் கார­ண­மாக அங்கு ஏற்­பட்ட இன­மு­றுகல் நிலைமைகள் அம்­பா­றைப்­ பி­ர­தே­சத்­தையே கதி­க­லங்க வைத்­தது. அம்­பா­றை­யி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன (26.2.2018 நள்­ளி­ரவு). முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­துடன் முஸ்லிம் மக்­க­ளுக்கு உட­மை­யான வாக­னங்­களும் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, இலங்­கை­யி­லுள்ள அனைத்து முஸ்லிம் மக்கள் மத்­தியில் பயத்­தையும் பீதி­யையும் உண்­டாக்­கி­ய­தென்­பது நாட­றிந்தவுண்மை. அம்­பாறை நக­ரி­லுள்ள

ஜ-ும்ஆப் பள்­ளி­வாசல் காரி­யா­லயம் உடைக்­கப்­பட்­ட­துடன் அங்­கி­ருந்த புனித அல்­குர்ஆன் பிர­திகள் உட்­பட சமய நூல்­களும் தீயிட்டு எரிக்­கப்­பட்ட சாத்தான் தன­மான கொடு­மைகள் இடம்­பெற்று­ ஒரு வாரத்­துக்­குள்­ளேயே (5.3.2018) கண்டி திகன சம்­பவம் நடை­பெற்­றுள்­ளது. தெல்­தெ­னிய, திகன பகு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வத்தின் கார­ண­மாக இரண்டு முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள், வீடு வாசல்கள், அகோ­ரத்­த­ன­மாக பெரும்­பான்மை மூர்க்­கர்­களால் தாக்­கப்­பட்­ட­துடன் அழிக்­கவும் பட்­டுள்­ளன. அம்­பா­றையில் நடந்த அகோ­ரத்தில் நள்­ளி­ரவு 12 மணி­ய­ளவில் மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் பஸ் வண்­டி­யிலும் வந்த 250 க்கும் மேற்­பட்ட நாச­கார ­கும்­பல்கள் நடத்­திய கொடூர வெறி­யாட்டம் பற்றி நாடே நன்­க­றியும். இச்சம்­ப­வத்­துக்கு உட­ன­டி­யான பரி­காரம் காணப்­பட்­டி­ருக்­கு­மா­க­வி­ருந்தால் அடுத்த சம்­ப­வ­மான தெல்­தெ­னிய கொடூ­ரமும் அதன் கூட்டு விளை­வு­க­ளாக நடந்­த­வை­க­ளைத்­த­டுத்­தி­ருக்க முடியும்.

மஹிந்த ஆட­்சிக்­கா­லத்தில் நடந்த கொடு­மை­களின் விளை­வா­கவே நல்­லாட்­சிக்­கு வித்­தி­டப்­பட்­டது. ஆனால் நடந்­த­தென்ன-? நல்­லாட்­சிக்­கா­லத்­திலும் அந்த இன­வாத நாடகம் தொடர் மெ­கா­ நா­ட­க­மா­க­வும் ­மே­டை­யேற்­றப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.அளுத்­கமை, கிந்­தொட்டை அடுத்து அம்­பாறை. இவ்­வாரம் கண்­டி­ தெல்­தெ­னிய. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு கிந்­தோட்­டைப்­ ப­கு­தியில் முஸ்லிம் மக்கள் மீது வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்டு வீடுகள், வர்த்­தக நிலை­யங்­கள்­ மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் கிறீஸ் மனிதன் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள், முஸ்லிம் கிரா­மங்கள், பாட­சா­லைகள், குடி­யி­ருப்­புக்கள், வர்த்­தக நிலை­யங்­க­ளென ஏகப்­பட்ட கேந்­திர நிலை­யங்­கள் ­மீது திட்­ட­மிட்டு தாக்­கு­தல்கள், வெறி­யாட்­டங்கள் நடாத்­தப்­பட்டு வந்­தமை அறி­யப்­ப­டா­த­ வி­ட­ய­மல்ல.

முஸ்லிம் மக்கள் வர­லாற்­றுக்­கா­லந்­தொட்டு இந்த நாட்டில் வாழ்ந்து வரு­வது மட்­டு­மல்ல தேசிய சுதந்­திரம், பொரு­ளா­தாரம், ஒற்­றுமை, கலா­சா­ரப்­பா­ரம்­ப­ரி­யங்கள், அர­சியல் மற்றும் சமூக வாழ்­வு ­மு­றை­களில் அதி­க­ளவு பங்­க­ளிப்பை நாட்­டுக்கும் உடன் வாழ் சமூ­கத்­துக்கும் ஆற்­றி­வந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது வர­லாற்றுபூர்­வ­மா­ன­உண்மை. அவ்­வாறிருக்­கும்­போது அந்த இனத்­தின் ­மீது பெரும்­பான்­மை ­ச­மூ­கத்­த­வர்கள் ஏற்­ப­டுத்­தி­வரும் கொடூ­ரத்­த­ன­மான சம்­ப­வங்கள் அவர்­களை அந்நி­ய­ம­யப்­ப­டுத்தும் நிலைக்­குத்தான் கொண்­டு­ போ­கி­றது.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்­த­வர்கள் மூன்று வகை­யான சமூகப்­ப­லத்­துடன் வாழு­கின்­றார்கள். ஒன்று அவர்­கள் நாட்டின் எப்­ப­கு­தியில் வாழ்ந்­தாலும் ஏனைய இனக்­கு­ழு­மங்­க­ளுடன் ஒன்றி வாழ்­வது. மற்­றையது தமது மதம், கலா­சா­ரப் பாரம்­ப­ரி­யங்­களை உச்­ச­மாக மதிப்­பதும் பேணுவதும். இன்­னொன்று தமது வாழ்­வியல் முறை­களில் பொரு­ளா­தார பலத்தை வளர்ப்­பது. இதில் ஆரம்­பத்தில் குறிப்­பிட்­ட­துபோல் முஸ்லிம் மக்­க­ளு­டைய வாழ்­வியல் தளங்கள் தெற்கில் சிங்­க­ளப்­பெ­ரும்­பான்­மை­ய­ினருடன் குறிப்­பாக அச்­ச­மூகம் சூழ்ந்த கிரா­மங்­களில் வாழு­கி­றார்கள் என்­ப­தற்கு உதா­ர­ணந்தான் கண்டி மாவட்­டத்தில் தெல்­தெ­னிய, அக்­குறணை, வத்­தே­கம, கட்­டுக்கஸ்தோட்டை. அதே­வேளை வட­கி­ழக்கில் புட்டும் தேங்­காய்ப்பூவும் போல் என்று வர்ணிப்­ப­துபோல் கலந்து வாழ்­கி­றார்கள்.

  இக்­க­லந்து வாழும் ­முறைக்கு அப்பால் இவர்­களின் வணக்கஸ்தலங்­க­ளான பள்ளிவாசல்கள் மீது மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்­களின் சூத்­திர நிலை­மைகள் காழ்ப்­பு­ணர்ச்­சியும் வெறுப்­பு­மே­யாகும். முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் நடந்த அட்­டூ­ழி­யங்­க­ளின்­பெ­ரு­வி­ளை­வு­ பள்­ளி­வா­சல்­க­ளா­க­வே­யி­ருந்­துள்­ளன.

 2012 ஆம் ஆண்டு மாத்­தளை மாவட்ட தம்­புள்ள பள்­ளி­வாசல் உடைப்பு தொடக்கம் (2014. 2012) இன்­றைய தெல்­தெ­னிய சம்­பவம்வரை பள்­ளி­வா­சல்­களே குறி­வைத்து தாக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றின் நடுவில் அவர்களின் கலா­சா­ரப்­பாரம்பரி­யங்­க­ளையும் வாழ்வு முறையையும் அவ­மா­னப்­ப­டுத்தும் வகையில் அபாயா அணி­ய­த்­தடை, மாட்­டி­றைச்சி விற்­கத்­தடை, முஸ்­லிம்­பா­ட­சா­லையில் புத்தர் சிலை, ஹலா­லுக்­கெ­தி­ரான போராட்­டங்கள், முஸ்லிம் ஹோட்­டல்­களில் உணவு அருந்­து­வதை நிறுத்­து­மாறு பிர­சாரம், ஹாஜிகள் தீவி­ர­வா­தத்­தைப்­ப­ரப்­பு­கின்­றனர் என்ற பொய்ப்­பி­ரசா­ரங்கள் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான சுவ­ரொட்­டிகள், உல­மாக்­களை புலி­க­ளோடு ஒப்­பிட்டு கருத்­துப்­ப­ரப்பல், ஹலால் சான்­றிதழ், ஷரீ ஆ சட்டம், இஸ்­லா­மிய வங்­கி­முறை, காதி நீதி மன்றம் ஆகி­ய­வற்­றுக்கு எதிர்ப்பு என 2012 ஆண்­டுக்­குப்பின் 2015 ஆம் ஆண்­டு­வரை ஏகப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான எதிர்ப்­புக்கள், கொடு­மைகள், அட்­டூ­ழி­யங்கள் மலிந்த ஆட்­சிக்­கா­ல­மாக முன்­னைய ஆட்சி அமைந்­தி­ருந்­தது.

இக்­கொ­டுங்கோல் ஆட்­சிக்கு முடி­வு­க­ட்டி சிறு­பான்­மை­யினர் மூச்சுவிட்­ட­தாக கரு­தப்­படும் நல்­லா­ட்­சியில்தான் பழை­ய­ப­டி­ வே­தாளம் முருங்கை மரத்­தில்­ ஏ­றி­ய­துபோல் இத்­த­கைய சம்­ப­வங்கள் நடை­பெ­றத்­தொ­டங்­கி­யுள்­ள­தாக பயங்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் மக்­க­ளு­டைய பொரு­ளா­தார தளங்­க­ளையும் அடிப்­ப­டை­க­ளையும் குலைத்துவிட­ வேண்­டு­மென்­பதில் பேரி­ன­வா­திகள் கவ­ன­மாக இருக்­கி­றார்கள் என்­பதன் அடிப்­படை புரள்­வுதான் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் நிறு­வ­னங்கள் மீதான தாக்­கு­தல்­க­ளாகும். விரும்­பியோ விரும்­பா­மலோ இந்த நாட்டின் வர்த்­தக மற்றும் ஏற்­று­மதி இறக்­கு­ம­தி ­பொ­ரு­ளா­த­ாரத்தில் கணி­ச­மான பங்­க­ளிப்பு செய்­து ­வ­ரு­கி­ற­வர்கள் முஸ்லிம் வியா­பா­ரி­களும் வர்த்­த­கர்­க­ளு­மாவர். இலங்­கை­யி­லுள்ள பிர­தான நக­ரங்­களில் மாத்­தி­ர­மன்றி கிரா­மிய வர்த்­தகம், பொரு­ளா­தா­ரத்­திலும் கணி­ச­மான பங்­க­ளிப்பை செய்து வரு­கி­றார்கள். தலை­நகர் கொழும்பு வியா­பார தளங்­களில் அதிக பங்­க­ளிப்பு இவர்­க­ளா­லேயே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இந்த அடிப்­ப­டை­களை இல்­லாமல் செய்­யவும் துவம்ஷம் செய்யும் நோக்­கி­லேயே திட்­ட­மிட்ட முறையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான வியா­பார தலங்கள் மீது அடிக்­கடி தாக்­கு­தல்கள் நடாத்­தப்­ப­டு­வதை அவ­தா­னிக்­க முடி­கி­றது. அண்­மையில் இடம்­பெற்ற கிந்­தோட்டை, அம்­பாறை, தெல்­தெ­னிய அனைத்து தாக்­கு­தல்­க­ளிலும் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான கடைகள், பாரிய வியா­பா­ர­த­லங்கள் அடித்து நொருக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் கோடிக்­க­ணக்­கான சொத்­துக்கள் பரி­நாசம் செய்­யப்­பட்­டுள்­ளன.

சிறு­பான்மை சமூ­கத்­துக்­கெ­தி­ராக கடந்த காலங்­களில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இன­வாத அமைப்­புக்கள், தேரர்­களின் அணி­வ­குப்­புக்கள், ஒன்றுகூடல்கள் இவற்­றுக்கு பின்­ன­ணி­யாக அமைந்­துள்­ள­தென முஸ்லிம் மக்கள் தங்கள் கவ­லையை அடிக்­கடி தெரி­வித்து வரு­கி­றார்கள். இது பௌத்த நாடு, அடித்தால் திருப்­பி­ய­டிப்போம், கொலை செய்தால் நாமும் கொலை­செய்வோம் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞானசா­ர­தேரர் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­பது இன­வா­தத்தின் கொடுந்­தன்­மை­யைக்­காட்­டு­கி­றது. கடந்த இரு சகாப்த காலத்­துக்குள் எத்­த­னையோ இன­வாத அமைப்­புக்கள் நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டுள்ளன. இவற்­றின்­பின்­ன­ணியில் அடிப்­படைவாதி­களும் அர­சியல்வாதி­களும் தேரர்­களும் இருந்­து­ வ­ரு­கி­றார்கள் என்­ற­வுண்மை அர­சாங்­கத்­துக்கும் ஏன் ­பொ­லிஸா­ருக்கும் தெரிந்­தி­ருந்­துங்­கூட அதை இல்­லாது ஆக்­கு­வ­தற்கோ தடுப்­ப­தற்கோ எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்­ற­வுண்­மையை யாருமே மறு­த­லிக்­க ­மு­டி­யாது.

 இந்­நாட்டில் சுதந்­தி­ரத்­துக்கு முன்­னைய காலப்­ப­கு­தி­யி­லி­ருந்­தே ­இ­ன­வாத கொடூரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதற்கு 1915 ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வரலாற்றிலிருந்து யாரும் அழித்துவிடமுடியாது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே 1958 ஆம் ஆண்டுக்குப்பிறகு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பற்றி உலகம் தெரிந்துகொண்ட விடயம். போர் என்றால் போர் சமாதானமென்றால் சமாதானம் எனப்போர்ப்பிரகடனம் செய்து 1983 ஆம் ஆண்டுக்குப்பின் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள், ஈவிரக்கமற்ற படுகொலைகள், கண்மூடித்தனமான அழிப்புக்கள் பற்றி உலகமே அறிந்திருந்தது. அதற்கான நீதி வழங்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால், நந்திக்கடலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டபோது தேசியக்கொடியேற்றி ஆரவாரம் செய்தவர்களும் பட்டாசு கொளுத்தி வெற்றிவிழாக்கொண்டாடியவர்களும் இந்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 எந்தவொரு சிறுபான்மைச்சமூகத்துக்கும் அட்டூழியங்கள் நடக்கின்றபோது அதையின்னொரு சிறுபான்மைச்சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் வாழாதிருப்பதும் மனிதாபிமானத்தை குழிதோண்டிப்புதைக்கும் மனப்பாங்காகும்.இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது கட்ட விழ்த்துவிடப்பட்டிருக்கும் அடாவடித் தனங்களுக்கும் அட்டூழியங்களுக்கு மெதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. 

 வெறுமனே நல்லாட்சியென்ற பதாகையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு அரசாங்கம் வாழாதிருப்பதும் மூர்க்கர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பதும் நல்லாட்சியாகவிருக்கமுடியாது?

திருமலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-10#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.