Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள்

Featured Replies

 
m2-589x430.jpg

விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள்

 

 

தேசிய இனங்­க­ளின் பண்­பாட்­டுக் கூறு­கள், பழக்க வழக்­கங்­கள், விளை­யாட்­டுக்­கள், வழி­பாட்டு முறை­க­ளின் பின்னணியிலே, அந்த இனக் குழு­மங்­க­ளின் தொன்­ம­மும், மர­பும் தொடர்ந்து பேணப் ப­டு­வது மட்­டு­மல்லாமல், இன அழிப்­புக்கு எதி­ரான தொடர் பொறி­மு­றை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டும் கொண்­டி­ருக்­கும்.

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின் முக்­கிய ஆய்வு,தமி­ழர் அவ­லங்­கள் என்ற வகை­யிலே ஆயி­ரக்­க­ணக்­கான அவ­லங்­க­ளை­யும் இன்­னல்­க­ளை­யும் தமி­ழர்­கள் பல்­வே­று­பட்ட ரீதி­யல் அனு­ப­வித்து வரு­வதை வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. இலங்கை சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­ன­ரும், சுதந்­தி­ர­ம­டைந்த பின்­ன­ரும், தமி­ழன் ஏதோ­வொரு வகை­யில் அவ­லங்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கின்­றான்.

அது இறந்­த­கா­லம் தொட்டு, நிகழ்­கா­லம் வரை­யும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக 1983ஆம் ஆண்டு மற்­றும் அதன் பின்­னர் தமி­ழர் அவ­லங்­கள் என்று வரையறை செய்து நோக்கி னால் தமி­ழர் அவ­லங்­க­ளை­யும் அதன் காரணகார­ணி­க­ளை­யும் சரி­வ­ரப்­பார்க்க முடி­யாது போய்­வி­டும்.

அந்த வகை­யிலே, தமி­ழர் அவ­லங்­கள் என்று பார்க்­கின்ற போது இலங்கை சுதந்­தி­ரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை­யும் தமி­ழர் எந்­த­வ­கை­யான சிக்­கல்­களை, சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றார்­கள், எவற்­றில் வெற்றி கண்­டுள்­ளார்­கள், இன்­னும் எதில் கவ­னம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது என ஆராய வேண்­டி­யுள்­ளது.

 

தமி­ழர் அவ­லங்­கள் என்ற வகை­யிலே கடந்த 35 ஆண்­டு­க­ளுக்கு மேலாக நடை­பெ­று­கின்ற அர­சி­யல் நெருக்­க­டி­களே முக்­கிய கார­ணங்­கள் என­லாம். ஈழத்­தி­ல் இ­ருந்து கடந்த 35 ஆண்­டு­க­ளாக தமி­ழர் வெளி­யேற்­றங்­கள், இனக்­க­ல­வ­ரங்­கள், இரா­ணுவ நெருக்­க­டி­கள், கல்­வித்­த­ரப்­ப­டுத்­தல்­கள், போன்­றவை முக்­கிய வர­லாற்று அம்­ச­ங்களாக தமி­ழர் அவ­லங்­க­ளில் இடம்­பெற்­றுக்­கொண்டு இருக்­கின்­றன.

1972ஆம் ஆண்­டில் இலங்கை அர­சி­யல் மாற்­றங்­க­ளால் கொண்­டு­வ­ரப்­பட்ட தரப்­ப­டுத்­தல் முறை­யும், 1983 ஆம் ஆண்டில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளும், இரா­ணு­வக் கெடு­பி­டி­க­ளும் தமி­ழர் அவ­லங்­க­ளில் முக்­கி­ய­மா­னவை.
தமி­ழர் பிர­தே­சத்­தில் குடி­யேற்­றத் திட்­டங்­கள், சட்­டங்­கள் மற்­றும் பேச்­சு­க்கள், தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­யும் அதன் பின்­ன­ணி­யும், கல்வி ஒடுக்­கு­முறை, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டங்­கள், இன்­றைய நில­வ­ரம், இனம் மற்­றும் அடை­யா­ளம், அழிப்பு போன்­ற­வற்றை இதில் முக்­கி­ய­மாகக் குறிப்­பி­ட­லாம். இவற்­றை­விட ஆண்­டு­கள், வீதங்­கள், கணக்­கெ­டுப்­புக்­கள், ஆட்­சிக்­கால அர­சுகள், இடப்­பெ­யர் மாற்­றங்­கள் போன்ற முக்­கி­ய­மா­ன­வை இந்­தக் கட்­டு­ரை­யில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுதந்­திர நாடா­க அறிவிக்கப்பட்ட போதி­லும், தமி­ழர்­கள் பல்­வேறு வித­மான தாக்கங்­களை பெரும்­பான்­மை­யின அர­சுகளிட மிருந்து எதிர்­நோக்­கும் நிலை காணப்­பட்­டது. சுதந்­தி­ரம் கிடைப்ப தற்கு ஒரு வரு­டத்­தின் முன்­னரே தமி­ழர்­கள் பல பாதிப்­புக்­க­ளைச் சந்­தித்­த­னர்.

தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­க­ளில்
சிங்­களக் குடி­யேற்­றத் திட்­டங்­கள்

சுதந்­திர இலங்­கை­யில் முதல்­மு­த­லில் கூடிய நாடா­ளு­மன்­றம், ஒரு லட்­சம் தோட்­டத் தொ­ழி­லா­ளரை நாடற்­ற­வர்­க­ளாக்­கும் சட்­டத்­தைக் கொண்டு வந்­தது. அது­மட்­டு­மின்றி, தமிழ்ப்­பி­ர­தே­சங்­க­ளில் குடி­யேற்­றங்­களை நடை­
மு­றைப்­ப­டுத்­தும் திட்­டத்­தை­யும் கொண்டு வந்­தது. இந்­தக் குடி­யேற்­றங்­க­ளால் தென்­மேற்குப் பகு­தி­யின் சனச்­செ­றிவு கூடிய பகு­தி­க­ளில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட மக்­கள் வடக்­கி­லும் கிழக்­கி­லும் குடி­யேற்­றப்­பட்­ட­னர். 1948ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் இரண்டு முக்­கி­ய­மான குடி­யேற்­றத்­தி­ட்டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கல்­லோ­யாத்­திட்­டம், துரித மகா­வலி அபி­வி­ருத்­தித்­திட்­டம் என 1949ஆம் ஆண்­டில் தலைமை அமைச்சர் டி. எஸ். சேன­நா­யக்­கா­வால் ‘கல்­லோயா ஆற்­றுப்­பள்­ளத்­தாக்கு அபி­வி­ருத்­தித்­திட்­டம்’ ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. பட்­டி­னப்­பாளை என்ற பாரம்­ப­ரி­யத் தமிழ்ப்­பெ­யரே “கல்­லோயா” என மாற்­றப்­பட்­டது.

இந்­தப் பிர­தே­சத்­தில் 44 குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவற்றில் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­திட்­டங்­கள் 38 ஆகும். மீதி 6 தமிழ்க் குடி­யேற்­றத் திட்­டங்­க­ளா­கும். குடி யேற்றப்பட்ட தமிழர்கள் விவ­சா­யத்­துக்­கான நீர்ப்­பா­சன வச­தி­யற்­ற­வர்­க­ளாக இருந்­த­னர். சிங்­க­ளப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து நீர்ப்­பா­சன வச­தியை நம்­பி­யி­ருக்க வேண்­டிய நிலை­யில் அவர்கள் குடி­யேற்­றப்­பட்­ட­னர். இவர்­க­ளில் பெரும்­பா­லோர் 1956 மற்­றும் 1958ஆம் ஆண்­டு­க­ளில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளால் விரட்­டி­ ய­டிக்­கப்­பட்­டும், எஞ்­சி­யோர் கொல்­லப்­பட்­ட­தன் பின்­னர் இந்­தப் பிர­தே­சம் சிங்­க­ள­ ம­ய­மாக்­கப்­பட்­டது.

இத­னைப்­போல வடக்­கில் சிங்­க­ளக் குடி­யேற் றங்­கள் முதன்­மு­த­லில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இடம் வவு­னி­யா­வா­கும். வவு­னியா, வன்னி மாவட்­டத்­தின் தென்­ப­கு­தி­யி­லி­ருந்த பரந்த பிரதேசமா ­கும். இங்கு பாவற்­கு­ளம் என்ற சிறு கிரா­மத்­தின் குடி­யேற்­றத்­திட்­டம் முக்­கி­ய­மா­ன­தா­கும். 1956ஆம் ஆண்­டில் 595 சிங்­க­ளக் குடும்­பங்­க­ளும் 463 தமிழ்க் குடும்­பங்­க­ளும் குடி அமர்த்­தப்­பட்­டன. இதன் பின்­னர் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளால் தமிழ்க்­கு­டும்­பங்­கள் விரட்­டி­யடிக்­கப் பட்டு இந்­தப் பிர­தே­ச­மும் சிங்­க­ள­ம­ய­மாக்­கப்­பட்­டது.

கிழக்­கில் 1956ஆம் ஆண்­டில் அம்­பாறை என்ற தேர்­தல் தொகுதி உரு­வாக்­கப்­பட்­டது. இது 1961ஆம் ஆண்­டில் விரி­வாக்­கப்­பட்டு, பின்­னர் அம்­பாறை மாவட்­டம் என மாற்­றம் செய்­யப்­பட்­டது. அம்­பாறை மாவட்­டத்­தின் முழுப்­ப­ரப்­ப­ளவு 4ஆயிரத்து 318 சது­ர­கி­லோ­மீற்­றர்­கள்.

மேற்­கு­றித்த பிர­தே­சங்­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளால் 1994ஆம் ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட குடி­ச­னக் கணக்­கெ­டுப்­பின்­போது, இந்த மாவட்­டம் சிங்­க­ளப் பெரும்­பான்­மை­யி­னத்­தைக் கொண்டு காணப்­பட்­டது எனக் கணக்­கெ­டுக்­கப்­பட்­டது. இப்­போது இந்­தப் பிர­தே­சம், தமிழ் மாவட்­டம் என்ற அடை­யா­ளத்தை இழந்­து­விட்­டது. இந்தப் பி­ர­தே­சத்­தின் அடை­யாள இழப்­புக்கு முக்­கிய கார­ணி­யாக மகா­ஓயா, பத்­தி­யத் தலாவை, தெஹி­யக்­கிண்­டிய பகு­தி­கள் இணைக்­கப்­பட்­ட­மை­யைக் கொள்­ள­லாம். இவை தமி­ழர்­கள் எவ­ரும் வாழாத பிர­தே­சங்­க­ளா­கும்.

இவற்­றை­விட, தமி­ழர் பிர­தே­சங்­கள் “புனித பிர­தே­சம்” என்ற பெய­ரி­னால் அர­சாங்­கத்­தி­னால் அப­க­ரிக்­கப்­பட்­டன. அப்பிரதேசங்க ளில் வாழ்ந்த பல தமிழ்க் குடும்­பங்­கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டன.
பெரிய நீலா­வணை, கல்­முனை, காரை­தீவு, நிந்த­வூர், திரைக்­கேணி, சம்­மாந்­துறை, அக்­க­றைப்­பற்று, பொத்­து­வில், பாண்­டி­ருப்பு போன்ற பிர­தே­சங்­கள் முன்­னர் முற்­று­மு­ழு­தாக தமி­ழர்­கள் வாழும் பிர­தே­சங்­க­ளாக இருந்­துள்­ளன.

தமி­ழர் அவ­லங்­கள் என்­ற­வ­கை­யில் முக்­கி­ய­மா­ன­தா­கக் கொள்­ளத்­தக்­கவை சிங்களக் குடி­யேற்­றங்களும், கல­வ­ரங்­கள் மூலம் தமிழர்கள் துரத்­தப்­பட்­ட­ மை­ யும், கொலை செய்­யப்­பட்­ட­மை­யு­மா­கும். இவற்­றை­விட முக்­கி­ய­மாகக் காணப்­பட்­டது, இடங்­க­ளின் பெயர் மாற்­ற­மா­கும். இந்த வகை­யிலே தமிழ்க் கிரா­மங்­கள் பல சிங்­க­ளப் பெ­யர்­க­ளாக மாற்­றப்­பட்­டன.

பார்­வதி கிரா­மம், – பத­வியா என­வும், முத­லிக்­கு­ளம், மொற­வேவா என­வும், பட்­டி­னப்­பாளை, – கல்­லோயா என­வும், பெரி­ய­கு­ளம் – நமல்­வத்த என­வும், புது­வைக்­கு­ளம் – சங்­க­ர­புர என­வும், அம்­பாள் ஏரி, – அம்­பாறை என­வும், மணல் ஆறு, – வெலி ஓயா என­வும், பெரிய விளான்­கு­ளம், மகா­தி­வுல்­ஓயா என­வும், பனக்­கட்­டி­மு­றிப்பு, – பென்­னி­க­கெற்­யாவ என­வும் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டன.1977இல் வவு­னியா மாவட்ட எல்­லைப்­பி­ர­தே­சப் பகு­தி­யில் இரண்டு குடி­யேற்­றங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. அவற்­றில் சிங்­க­ள­ வர்­க­ளான முன்­னை­நாள் சிறைக் கைதிகள் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.

1987இல் இலங்­கை­யின் வடக்கு கிழக்­கில் உரு­வாக்­கப்­பட்ட குடி­யேற்­றத் திட்­டங் க­ளில் ‘துரித மகா­வலி அபி­வி­ருத்­தித்­திட்­டம்’ முக்­கிய­
மான­தா­கும். இதற்கு உலக வங்­கி­யி­ட­மி­ருந்து நிதி­யு­தவி பெறப்­பட்டமை குறிப்­பி­ டத்­தக்­கது. 1987ஆம் ஆண்டில் இலங்கை – – இந்­திய ஒப்­பந்­தம், வட­மா­கா­ணம் கிழக்கு மாகா­ணம் இணைக்­கப்­பட வேண்­டும் எனக்­கூ­றி­யது. இவ்­வொப்­பந்­தம் நடைமு­றைக்கு வர­முன்­னர், 1988ஆம் ஆண் டில் மணல் ஆறுப்­பி­ர­தே­சம் அபி­வி­ருத்­திக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அங்கு சிங்­க­ள­ மக்­கள் குடி­ய­மர்த்­தப் பட்­ட­னர்.

1988ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் அரசு விடுத்த அறிக்­கை­யின்­படி முல்­லைத்­தீ­வுப் பகு­தி­யில் இருந்த மணல்­ஆறு என்ற இடம் வெலி­ஓயா எனப்­பெ­யர் மாற்­றப்­பட்டு அது இலங்­கை­யின் 26ஆவது மாவட்­ட­மா­க அறிவிக்கப்பட்டது.

இந்­தக் காலத்­தில் காணி அமைச்­ச­ராக காமினி திஸா­நா­யக்கா இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தப் பிர­தே­சத்­தில் அவ­சர அவ­ச­ர­மாக 3ஆயிரத்து 364 சிங்­க­ ளக்­கு­டும்­பங்­கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டன.

இத­னைப்­போன்றே தண்­ணி­மு­றிப்­புப் பகு­தி­யில் வாழ்ந்த 3ஆயிரம் தமிழ்க் குடும்­பங் களை அரசு பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யது. அவ்­வாறு வெளி­யேற மறுத்த 29 குடி­மக்­கள் பாது­காப்பு படை­யி­ன­ரால் கொல்­லப்­பட்­ட­னர். இதன் பின்­னர் 25 ஆயிரத்துக்கும் மேலான சிங்­க­ளக் குடி­மக்­கள் குடி­ய­மர்த் தப்­பட்­ட­னர். தண்­ணி­மு­றிப்பு என்ற தமிழ்ப்­பெ­யர் ஐன­க­புர என மாற்­றப்­பட்­டது. இந்­தக் குடி­யேற்­றத்­திற்­குப் பொறுப்­பாக இருந்த படைத்­த­ள­பதி ஐனக பெரேரா என்­ப­வ­ரின் பெயர் சூட்­டப்­பட்­டது.

1987ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் அர­சாங்­கத்­தி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட,அர­ச­மைப்­புக்­கான 13வது சட்­டம்­தி­ருத்­தம், முடிக்­கு­ரிய காணி­களை மாகாண அர­சு­க­ளின் பொறுப்­பில் விடுத்து, மகா­வலி அபி­வி­ருத்­தித்­திட்­டம் மட்­டும் மத்­திய அர­சி­டமே இருக்க வழி செய்தது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அர­சுக்­கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் இடை­யே­யான போர் வேளை­யில் தமி­ழர் நிலங்­கள் இரா­ணு­வ­மு­காம் அமைப்­ப­தற்­கும், பாது­காப்பு வல­யம் என்ற பெய­ரி­லும் அப­க­ரிக்­கப்­பட்டு அப்­ப­கு­தியை அண்­டி­யி­ருந்த மக்­கள் அகற்­றப்­பட்­ட­னர். இவ்­வாறு அகற்­றப்­பட்ட இடங்­க­ளாக பலாலி, லிங்­க­ந­கர் போன்­றவை அமைந்­தன.

தமி­ழர்­க­ளின் நிலம் பல வழி­யி­லும் அப­க­ரிக்­கப்­பட்­டதை விட­வும், மோச­மான நிலையாக 1995 ஒக்­டோ­ப­ரில் யாழ்ப்­பா­ணத்தை விட்டு ஒட்டு மொத்த மக்களும் மொத்­த­மாக வெளி­யே­றிய இடப்­பெ­யர்வு அமைந்­தது.

சட்­டங்­கள் மற்­றும் பேச்­சு­கள்

இலங்கை, தமி­ழர், சிங்­க­ள­வர் என்ற இரு தேசிய இனங்­க­ளைக் கொண்ட ஒரு நாடா­கும். 1948ஆம் ஆண்­டில் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரம் சிறு­பான்­மைத் தமி­ழர்­க­ளின் சுதந்­தி­ரத்­திற்கு முற்­றுப் புள்ளி வைத்­தது. நாடா­ளு­மன்­றத்­தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மைப் பலம் இருந்­த­தால் அர­சி­யல் சட்­டத்­தையே தமது வச­திக்­கும், விருப்­பத்துக்கும் ஏற்­ற­வாறு மாற்­றி­ய­மைக்­கும் அதி­கா­ரம் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு வாய்த்­தது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் பத­விக்கு வந்த டி.எஸ். சேன­நா­யக்­கா­வின் அரசு, முத­லில் எடுத்த நட­வ­டிக்­கையே தமி­ழர்­க­ளி­னது வாக்­குப்­ப­லத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி­ய­மை­யா­கும்.

1949ஆம் ஆண்­டில் முதல்­மு­த­லில் கொண்­டு­வ­ரப்­பட்ட “இலங்­கைக் குடி­யு­ரி­மைச் சட்­டம்” ஒரே இர­வி­லேயே மலை­ய­கத் தமி­ழர்­கள் ஒரு இலட்­சம் பேரை நடுத்­தெ­ரு­வுக்­குக் கொண்டு வந்­தது. எஸ்.ஜே.வி செல்­வ­நா­ய­கம் 1949ஆம் ஆண்­டில் கொள்­கையை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கட்­சி­யாக “தமி­ழ­ ர­சுக்­கட்சி” யை ஆரம்­பித்­தார்.

“தமி­ழர்­க­ளின் சுய­நிர்­ணய உரிமை பேணப்­பட்டு, அவர்­கள் சமத்­து­வ­மான பிர­ஜை­க­ளாக மதிக்­கப்­ப­டக் கூடிய தன்­னாட்சி முறையே தமி­ழர்­க­ளுக்கு ஏற்­றது.” எ ன அவர் தெரி­வித்து வந்­தார்.

1956ல் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க­வின் தலை­மை­யி­லான அரசு, “சிங்­க­ளம் மட்­டும் அர­ச­க­ரு­ம­மொழி” என்ற சட்­டத்தை நிறை­வேற்­றி­யது.
இவ்­வா­றான பின்­ன­ணி­யில் சிறு­பான்­மைத் தமிழ் மக்­க­ளது தலை­வர்­க­ளுடன் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் பல­வ­கை­யான ஒப்­பந்­தங்­கள் செய்­யப்­பட்டு, பின்­னர் அவை கைவி­டப்­பட்­டன. அவ்­வாறு கைச்சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தங்­க­ளில் முக்­கி­ய­மா­னது 1958 யூலை 26ஆம் திகதி தலைமை அமைச்சராக விருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்கவுக்­கும், தமி­ழ் அரசுக்­கட்­சி­யின் தலை­வ­ரா­க­வி­ருந்த எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கத்­திற்­கும் இடை­யி­லான பண்டா – செல்வா ஒப்­பந்­தமாகும்.

அடுத்து 1985 யூலை­யில் தமிழ்ப் போராளி அமைப்­புக்­களும் இலங்கை அர­ச பி­ர­தி­நி­தி­ க­ளும் வட­இந்­தி­யா­வில் பூட்­டா­னின் தலை­ந­கர் திம்­பு­வில் கூடிய மாநாட்­டில் முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளாக, தமி­ழர்­கள் ஒரு தேசிய இன­மென அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் தமி­ழர்­கள் தாய­கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும். தமி­ழர்­க­ளது சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் மற்­றும் எல்­லாத்­த­மி­ழர்­க­ளி­ன­தும் குடி­யு­ரி­மை­ யும் அடிப்­ப­டை­ உரி­மை­க­ளும் பேணப்­ப­ட­வேண்­டும் என்ற கோரிக்­கை­கள் முன்­வைக்­கப் பட்­டன.

1987 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி இலங்கை அர­சும் இந்­திய அர­சும் செய்து கொண்ட ராஜீவ் -– ஜே.ஆர். உடன்­ப­டிக்கை பல அழி­வு­க­ளுக்கு வழி வகுத்­தது. இக்­கா­ல­கட்­டத்­தில் தமி­ழீ­ழப்­ப­கு­தி­க­ளுக்கு வந்த இந்திய அமை­திப்­படை தனது நோக்­கத்­தி­லி­ருந்து விலகி பல அழி­வு­க­ளைச் செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 1989 ஆண்டு செப்­ரெம்­பர் 13ஆம் திகதி பிரே­ம­தாச அர­சி­னால் சர்­வ­கட்­சி­க­ளின் மாநாடு ஒன்று ஆரம்­பிக்­கப்ட்­டது. இதில் விடு­த­லைப் புலி­கள் தவிர்ந்த 21 அர­சி­யல் கட்­சி­கள் பங்கு பற்றி, இழுத்­த­டிக்­கப்­பட்ட நிலை­யில் எந்­த­மு­டி­வும் அற்ற நிலை­யில் மாநாடு முடி­வ­டைந்­தது.

1994ஆம் ஆண்­டில் நாட்­டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக் கூறிக்­கொண்டு வந்த சந்­தி­ரிகா அர­சா­னது, கடி­தம் மூல­மான பரி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால் பிரச்­சி­னைக்கு எது­வித தீர்­வும் கிட்­ட­வில்லை. 2002ஆம் ஆண்­டில் டிெசம்­பர் மாதம் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்சி அரசு பத­விக்கு வந்­தது. நாட்­டின் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் 2002 ஏப்­ர­லில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை அர­சுக்கும் ஏற்­பட்ட போர் நிறுத்­தத்­தைத் தொடர்ந்து நோர்வே நாட்­டின் மத்­தி­யஸ்­தத்­து­டன் பேச்­சு­க்கள் ஆரம்­பிக்கப் பட்டன. இது­வும் எந்­த­வித பயனும் அளிக்­க­வில்லை. 2005ஆம் ஆண்டு டிெசம்­பர் பத­விக்கு வந்த ராஜ­பக்ச அர­சு­டன் 2006ல் இரு சுற்­றுப் பேச்­சு­ ஜெனி­வா­வில் நடை­பெற்­றது. இலங்கை அரசு தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத நிலை­யில் பேச்­சு­ முறி­ வுற்­றது.

வடக்கு கிழக்கு மாகா­ணம் பிரிப்பு –

ஏற்­க­னவே இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்­குக் கிழக்கு மாகா­ணங்கள், 2007ஆம் ஆண் டில் மகிந்த அரசினால் பிரிக்­கப்­பட்­டன. பின்­னர் இந்த உடன்­ப­டிக்­கையை நிறை­வேற்­று­ வ­தில் ஏற்­பட்ட விரி­சல் கார­ண­மாக விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை அர­சுக்­கு­மி­டையே 2002 ஆம் ஆண்டில் கைச்­சாத்­தி­டப்­பட்ட போர் நிறுத்த உடன்­ப­டிக்­கை­யில் இருந்து வெளி­யே­று­வ­தாக இலங்கை அரசு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அன்று அறி­வித்­தது.

மகிந்த அர­சின் போர் அறிவிப்பு

2008 ஜன­வரி 03ஆம் திகதி மகிந்த அர சால், விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை அர­சுக்­கு­மி­டை­யில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் ஒரு­த­லைப்­பட்­ச­மாக முறிக்­கப் பட்­டது. மகிந்த அரசு இன­வா­தத்தை வெளிப் ப­டுத்தி போரை அறிவித்து தமி­ழர் தாய­கத் தின் மீது முழு அள­வி­லான போரை முன்­னெ­டுத்தது.

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின்
முக்­கிய ஆய்வு

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின் அவ­லங்­கள் என்ற வகை­யிலே, பல கசப்­பான அனு­ப­வங்­க­ளும், ஏமாற்­றங்­க­ளும், பெரிய இழப்­புக்­க­ளும், இன­வொ­டுக்­கு­முறைப் போர் போன்­ற­வையே முக்­கி­ய­மா­ ன­வை­யா­கும்.

http://newuthayan.com/story/74932.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.