Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் ஏ-9 பாதையைத் திறக்க வழிசெய்யவும் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு மனு.

Featured Replies

ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் ஏ-9 பாதையைத் திறக்க வழிசெய்யவும் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு மனு.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான விடுதலைப் புலிகள் ஏ9 தரைவழிப் பாதையைத் திறப்பதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ள நிலையில்

ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் அந்தப் பாதையைத் திறப்பதற்கு வழி செய்யுமாறு வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளது.

அந்தக் கடிதத்தில் இலங்கைத்தீவின் சமாதான நடவடிக்கைகள் பல காரணங்களுக்காகத் தடைப்பட்டுள்ளமையால் எழுந்துள்ள அவல நிலை குறித்து எமது செயலகம் தனது ஆழ்ந்த கரிசனையைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது.

இச்சந்தர்ப்பத்தில் யுத்த நிறத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கும் அவசியம் பற்றி பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயர் தெரிவித்த கருத்துக்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கிறோம். பிரித்தானிய பிரதமர் தெரிவித்த கருத்துக்களை வரவேற்றும் அதேவேளை நீங்களும் அவரது கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் ஐ.நா சபையின் அர்த்தமுள்ள ஈடுபாட்டை ஆரம்பிக்க வேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் விதந்துரைக் கப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளை இரு தரப்பினரும் மீளத்தொடங்கவேண்டு மென்ற பிரித்தானியப் பிரதமரின் கருத்தை நாங்கள் முற்றாக ஏற்றுக்கொள்கின்றோம். நோர்வே அரசின் அனுசரணையுடன் சர்வதேச சமூகத்தின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட யுத்த நிறத்த ஒப்பந்தம் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிணக்கை நீக்கி நிலைத்து நிற்கும் தீர்வைக் கொண்டு வருவதற்கான சகல அம்சங்களை யும் தன்னுள் கொண்டுள்ளது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.

இந்த யுத்த நிறத்த ஒப்பந்தம், தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான பாதையைத் திறப்பதைச் சாத்தியப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் முதன்மைப் பெறுபேற்றைப் பெற்றுக்கொடுத்தது. இதன் மூலம் யாழ்.குடாநாட்டு மக்களின் நடமாட்டச் சுதந்திரத்தையும் பெருநிலப்பரப்பிலுள்ள அவர்களது இனத்தவருடனான சமூக, பொருளாதார உறவுகளையும் மீளப் பேணிக்கட்டியெழுப்ப முடிந்தது. தற்போது இந்த ஒன்றிலொன்று தங்கியிருக்கும் உறவுமுறை மாத் திரமின்றி இலங்கையின் ஏனைய பகுதி மக்களுடனானதும், வெளிநாடுகளிலுள்ள மக்களுடனாதுமான உறவு யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் இரு தரப்பின ரும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை விடுத்து பொறுப்புணர்வுடனும் அரசியல் விவேகத்துடனும் செயற்பட்டு, தற்போது இறுக்கி மூடப்பட்டிருக்கும் யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையை மீளத் திறப்பதற்கு ஆவன செய்வது சாலச் சிறந்தது. தரைவழிப்பாதை மக்களின் அடிப்படை உரிமை என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

தரைவழிப்பாதைக்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் கடல் வழிச் சுற்றுப்பாதை மக்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. மாறாக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மனித அவலத்திற்குள் செல்வம் சேர்ப்பதற்காக புதிய கப்பல்களை வாங்கிய நிறுவனங்களுக்கே உதவும்.

மனித உரிமைகள் பேணப்படுவதையும் தேசிய பிணக்கிற்குத் தீர்வு காணப்படுவதையும் அர்ப்பணிப்புடன் இலக்காகக் கொண்ட மனித உரிமை அமைப்பு என்றவகையில் நாம் இலங்கை அரசியல் பிணக் கில் ஐ.நா. சபையின் அர்த்தமுள்ள ஈடுபாட்டை வலுவாக வலியுறுத்த விரும்புகின்றோம். இந்த வகையில் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை தங்குதடையற்றதாக அமைவதை உறுதிப்படுத்தும் ஓர் ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தை சாத்தியமாக்குவது பற்றி நீங்கள் தீவிர கரிசனை கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான விடுதலைப் புலிகள் தரைவழிப்பாதையைத் திறப்பதற்கு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ள இந்த நிலையில் இலங்கை அரசும் பொறுப்புணர்வுடன் நடந்து இதைச் சாத்தியமாக்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாதிருத்தலும் அதற்கும் மேலாக மக்கள் தொடர் பறுந்த நிலையில் இரு கூறாகப் பிரிந்திருப்பதும் மனிதாபிமானப் பேரழிவிற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. இனிமேலும் தாமதிக்காது இருதரப்பினரும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசியல் விவேகத்துடன் சமாதான நடவடிக்கையை மீளத் தொடங்குவது அவசியம்.

வகை தொகையின்றி அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைக் கருத்திற்கொண்டு காத்திரமான ஐ.நா ஈடுபாட்டை உங்களிடம் வினையமாக வேண்டி நிற்கிறோம். இந்த அவலமான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக்கொண்டு இயல்பு நிலையையும் சமாதானத்தையும் அவாவி நிற்கும் மக்களுக்கு ஒரு வழியைத் திறந்து ஐ.நாவின் உன்னத இலட்சியமான உலக சமாதானத்தில் இந்த மக்களையும் பங்காளிகளாக்கவேண்டுமென்பதே எங்கள் அபிலாசை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Uthayan-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.