Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தம்புள்ள வர்த்தக மத்திய நிலையம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தம்புள்ள வர்த்தக மத்திய நிலையம்

[22 - March - 2007]

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்படும் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வர்த்தக சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுடனான வர்த்தகத்தைச் செய்து வந்த இரண்டு முக்கிய நிலையங்களாக கந்தளாயும் கிளிநொச்சியும் இருந்தன. வடக்கில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர் இந்த இரண்டு நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த வடக்கு, கிழக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகச் செயற்பாடுகள் தம்புள்ளவுக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தம்புள்ள பிரதான வர்த்தக நகரமாக மாறியது.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்பட்ட இந்த நிலையம் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிலைய அறைகளைக் கொண்டதாகும். இவை தம்புள்ளவைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கான காய்கறி வகை அனைத்து பலசரக்குப் பண்டங்கள் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் தம்புள்ள வர்த்தக மத்திய நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டு வந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் தம்புள்ள வர்த்தகர்களே காய்கறிவகை உட்பட அனைத்து பலசரக்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தம்புள்ள வர்த்தக நிலையங்களுடன் அந்தப் பிரதேசத்தில் முக்கிய அரசியல் வாதிகளுக்கு நெருங்கிய வர்த்தக தொடர்புகள் இருந்தன.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட குறிப்பிட்ட ஒரு பிரபல அரசியல் வாதிக்கு தம்புள்ள மத்திய நிலையத்திலுள்ள சுமார் நூறு கடைகளிலிருந்தும் தலா ஒரு இலட்சம் வீதம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரபல அரசியல் வாதிகளின் தொடர்பு காரணமாக தம்புள்ள வர்த்தக மத்திய நிலையமும் தம்புள்ள பிரதேசமும் மிகவும் பாதுகாப்பான இடங்களாயின. இதனால், புலிகள் இயக்கத்தினரும் அவர்களுக்கு ஆதரவான வர்த்தகர்களும் மிகவும் பாதுகாப்பாக அங்கிருந்து செயற்பட முடிந்தது. அத்துடன் இந்த தம்புள்ள வர்த்தகப் பகுதியில் பொருட்களை ஏற்றி இறக்கும் நாட்டாமை தொழில் செய்பவர்களும் வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் முக்கியமானவர்களாகும். இவர்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மத்திய தோட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களாகவே இருந்தனர். இவ்வாறு நிரந்தரமாகத் தொழில் செய்யும் 220 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு இருந்தனர். அவர்களுக்கு "நாட்டாமை" வர்த்தக சங்கமும் இருந்தது. இந்த சங்கத்தின் தலைவராக தாசடர் அல்லது நாதன் எனப்படும் நபர் இருந்தார். நாதன் நாட்டாமைத் தொழிலாளி என்றாலும் அவரிடம் பணம் பெருந்தொகையில் இருந்தது. டபிள் கப் வாகனம், சில சபாரி ஜீப் வண்டிகளும் நாதனிடம் இருந்தன. இவ்வாறு நாதன் நடத்தும் செல்வந்த வாழ்க்கை பற்றி ஒரு சிலர் பாதுகாப்புத் துறை புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கொடுத்திருந்தனர். ஆயினும் அவற்றால் பயன் எதுவும் கிடைக்கவில்லை.

வேறு ஏதேனும் உத்தியோகத்திலோ, தொழிலிலோ இருந்து கொண்டு புலிகள் இயக்கத்துக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்கும் நபர்களை புலனாய்வுத் துறையினர் "சிலிப்பேர்ஸ்" அதாவது "தூங்குவோர்" என்று குறிப்பிடுவது வழக்கம். மேற்படி நபர்கள் இவ்வாறு நடமாடிக்கொண்டே பல்வேறு கொலை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளைச் செய்துள்ளனர். இந்த வகையில் நாதனைப் பற்றியும் அவருடைய சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள், செயற்பாடுகள் பற்றி பல தகவல்களை புலனாய்வுத் துறையினர் பெற்றிருந்தனர்.

இந்த தகவல்களுக்கேற்ப நாதனுடன் மிகவும் நெருக்கமானதும் சந்தேகத்துக்கிடமானதுமான தொடர்புகளையுடைய மற்றுமொரு நபரின் பெயர் ராஜ் பிரகாஷ் எனவும் இவருக்கு கந்தாளையிலும் தம்புள்ளவிலும் சில கடைகள் சொந்தமாக இருந்தன எனவும் நாதனுக்காக ராஜ் பிரகாஷ் பெருந்தொகையில் செலவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது. அத்துடன் நாதனின் நாட்டாமை வர்த்தக சங்கத்தை நிர்வகிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் குறித்த ராஜ் பிரகாஷ் வழங்கி வந்தார் என்பதும் இவருக்கு தெற்கிலுள்ள பிரபல அரசியல்வாதிகளின் ஆதரவும் பாதுகாப்பும் உள்ளதெனவும் மேலும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிய வந்தது.

இவ்வாறே ராஜ் பிரகாஷ், பிரபல சிங்களப் புலிகளில் ஒருவரும் புலிகள் அமைப்புக்காக ஒப்பந்தக் கொலைகளை செய்பவருமான ஐஸ் மஞ்சுவுடனும் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்துள்ளார். ஐஸ் மஞ்சுவே கேணல் துவான் மீடினை சுட்டுக் கொலை செய்த புலிகள் இயக்கத்தின் கைக்கூலியாகும். முன்னர் ஐஸ் மஞ்சு சம்பூர் மற்றும் திருகோணமலையில் மீன் வர்த்தக நிலையங்களிலும் பிரபல வர்த்தகர்களிடமும் புலிகள் இயக்கத்துக்காக வன்முறையில் கப்பம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன், அப்பகுதிகளில் புலிகள் அமைப்பின் உத்தரவின்படி பல கொலைகளையும் செய்தார். பின்னர் ஐஸ் மஞ்சு புலிகள் இயக்கத்தினருடன் சேர்ந்து சம்பூரிலிருந்து தப்பியோடி தற்போது தம்புள்ள பிரதேசத்தில் நடமாடுகிறார். இவ்வாறு திருகோணமலை, கந்தளாய், தம்புள்ள பகுதிகளில் சுதந்திரமாக நடமாடி வரும் ஐஸ் மஞ்சுவை இதுவரை புலனாய்வுத்துறையினரால் கைது செய்ய முடியாமலே உள்ளது.

தற்போது புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்திருக்கும் தவல்களுக்கேற்ப ஐஸ் மஞ்சு மாதம் ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் தம்புள்ளவுக்கு வந்து போவதாகவும் அதற்கான பாதுகாப்பு போக்குவரத்து வசதிகளை மேற்படி ராஜ் பிரகாஷ் எனப்படும் நபரே செய்து கொடுப்பதாகவும் தம்புள்ள பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்திலேயே ஐஸ் மஞ்சு தங்கிச் செல்வதாகவும் தெரிய வந்துள்ளது. தம்புள்ளவில் வர்த்தக நிலையங்களில் செயற்படும் பாதாளக் கோஷ்டியினருடன் ஐஸ் மஞ்சுவுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. மேலும் ஐஸ் மஞ்சுவுக்கு ராஜ் பிரகாஷைப் போலவே பாதுகாப்பும் இடமும் கொடுத்து வரும் "ஜம்போ" எனப்படும் நபர் பற்றியும் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த "ஜம்போ" வேறுயாருமல்ல. தம்புள்ள நாட்டாமை சங்கத் தலைவர் நாதனின் சகோதரரே ஆவார். இவருக்குச் சொந்தமாக தம்புள்ளவில் பெரிய உணவு விடுதியொன்று இருந்தது. அத்துடன், கோழிப் பண்ணையும் இவர் நடத்தி வந்தார்.

மேற்படி நபர்களின் ஆதரவுடனேயே புலிகள் இருக்கத்தினரும் அவர்களுக்கு ஆதரவான வர்த்தகர்கள் பிரமுகர்களும் தம்புள்ளவில் வசித்து வந்தனர். "நாட்டாமை"களுக்கிடையேயும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருந்தனர். தம்புள்ள வர்த்தக நிலையங்களுக்காக அனைத்துப் பண்டங்களையும் ஏற்றி இறக்குவது மேற்படி "நாட்டாமை" களே ஆகும். இவ்வாறு ஏற்றப்படும் அத்தியாவசியப் பொருட்களிடையே புலிகள் இயக்கத்தினரின் ஆயுதங்களும் வெடி மருந்துப் பொருட்களையும் மறைத்து வைத்து புலிகள் அமைப்புக்குத் தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் அனுப்பி வந்தனர்.

தம்புள்ளவில் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக இருப்போர் அமைப்பு வழங்கிய பணத்தில் பல கடைகளை எடுத்து முஸ்லிம் பெயர்களில் நடத்தி வந்துள்ளனர். இவ்வாறான 14 கடைகளையும் உரிமையாளர்களையும் புலனாய்வுத்துறையினர் பிடித்துள்ளனர். இந்தக் கடைகளிலிருந்து பெறப்படும் இலாபம் புலிகள் அமைப்புக்கே அனுப்பப்பட்டு வந்துள்ளது.

தினமும் தம்புள்ளவிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும் காய்கறி வகைகளையும் ஏற்றிக்கொண்டு ஐந்து லொறிகள் வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் சென்றுள்ளன. இதன் மூலம் குறித்த வர்த்தகர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு சுமார் 40 இலட்சம் ரூபா புலிகள் அமைப்புக்கு கிடைத்து வந்துள்ளது. இவ்வாறான லொறிகளுக்கு சொந்தக்காரரும் ஏறாவூர் பிரதேசவாசியுமான "ஏறாவூர் பேபி" என அழைக்கப்படும் நபர் தம்புள்ள பகுதியிலேயே பெரிய வீடு ஒன்றை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துள்ளார்.

தற்போது "ஏறாவூர் பேபி" தலைமறைவாகிவிட்டார். ராஜ் பிரகாஷின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அவரும் எங்கோ தப்பிவிட்டார். 20 க்கும் மேற்பட்ட தம்புள்ள "நாட்டாமை" களும் தலைமறைவாகிவிட்டனர். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

-திவயின விமர்சனப் பகுதி: 18.03.2007-

தினக்குரல்

திவயினவும் புலநாய் ஒண்டு வளக்குது போல கிடக்கே

நல்ல கற்பனை. பேசாமல் கோடம்பாக்கம போனால நல்ல பணம் காணலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

தம்புள்ளையில் இருக்கும் தமிழர்களின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக அல்லது சிங்களகிராமமாக்க ரத்தம் சிந்தாமல் தீட்டப்பட்ட திட்டம் தான் இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.