Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத் தொடர் யாருக்கு சாதகம்

Featured Replies

ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத் தொடர் யாருக்கு சாதகம்

 

ஐ.நா. வின் 37 ஆம் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை என்ன? ஐ.நா. வின் இணை அனு­ச­ர­ணை­யோடு இலங்கை செயற்­ப­டு­வதை நாம் வர­வேற்­ற­போதும் பொறுப்­புக்­கூ­றலைத் தாம­தப்­ப­டுத்­து­வது கவ­லையைத் தரு­கி­றது. இதனால் 2019 ஆம் ஆண்­டுக்குள் பிரே­ர­ணையை இலங்கை முழு­தாக அமுல்­படுத்தும் என்­பது சந்­தே­க­மாகும். ஏனெனில் காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான சட்டமூலம் நிறை­வேற்­றப்­பட்டு 20 மாதங்­க­ளுக்குப் பின்­புதான் அதற்­கான அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டது. இதைப்­பற்றி நாம் அதி­ருப்தி அடை­கிறோம்.

காணி­களைக் கைய­ளிப்­ப­திலும் தாம­த­மாகி­றது. காணி தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­மாயின் நம்­பிக்­கையை வளர்ப்­பது சிர­ம­மா­கி­விடும். காணி­க­ளுக்­கு­ரிய நஷ்­ட­ஈ­டு­களும் கூட சுயா­தீன பொறி­மு­றைகள் மூலம் வழங்­கப்­பட வேண்டும்.

சர்­வ­தேச மனித உரிமை மீறல்­க­ளுக்­கும் மனி­தா­பி­மான மீறல்­க­ளுக்கும் எதி­ராகத் தண்­டனை வழங்­கா­தி­ருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும். சர்­வ­தேச பங்­க­ளிப்­போடு விசேட நீதி­மன்­றத்தை நிறுவி இவை ஆரா­யப்­பட வேண்டும். இன்றேல் சர்­வ­தேச நியா­யா­திக்கம் எனும் மாற்­று­வழி பற்றி ஆரா­யு­மாறு உறுப்­பு ­நா­டு­களைக் கோருவோம். இலங்­கையில் அண்­மையில் நிகழ்ந்த சிறு­பான்­மையினர் மீதான இன ரீதித் தாக்­கு­தல்கள் பற்­றியும் நாம் கவ­லைப்­ப­டு­கிறோம்.

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டதால் 12 நாட்­க­ளுக்கு அவ­ச­ர­காலச் சட்டம் அமு­லா­னது. சித்­தி­ர­வ­தைகள் தொட­ரு­வ­தா­கவும் மனித உரி­மைக்­காப்­பா­ளர்கள் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அறிக்­கைகள் கிடைக்­கின்­றன. எனவே, இலங்­கையின் இந்த நிலைமை பற்­றியும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் பற்­றியும் ஐ.நா. வின் மனித உரிமைப் பேரவை அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்­கிறோம் என நிகழ்ந்து முடிந்த ஐ.நா. வின் 37 ஆம் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணை­யாளர் செய்யத் அல் ஹுசைன் அறிக்கை விட்­டி­ருக்­கிறார். மஹிந்த அரசு போர்க்­குற்­றத்தை மறுத்­தி­ருந்­தது. மைத்­திரி அரசு போர்க் குற்­றத்தை ஏற்றுக் கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றி­ருந்­தது.

அந்த வகையில் மைத்­திரி அரசைப் பாராட்­டு­வது ஐ.நா. வின் கட­மை­யா­கி­றது. அத­னால்தான் இணை அனு­ச­ர­ணையை இலங்கை பெற்­றி­ருப்­பதை அது வர­வேற்­றி­ருக்­கி­றது. எனினும் பொறுப்புக் கூறலைத் தாம­தப்­ப­டுத்­து­வது கவ­லையைத் தரு­வ­தா­கவும் அது கூறிக்­கொள்­கி­றது. இதன் மூலம் இலங்கை பொறுப்புக் கூறும் எனும் நம்­பிக்கை ஐ.நா. வுக்கு இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. இல்­லா­விட்டால் இலங்கை பொறுப்பு கூறாது எனும் ஒரே முடி­வுக்கு அது வந்­து­வி­டுமே மாறாக, இலங்கை பொறுப்புக் கூறலைத் தாம­தப்­ப­டுத்­து­வ­தாக மட்­டுமே ஐ.நா. கவலை கொள்­கி­றது. அப்­ப­டி­யானால் இது­வரை அதற்­கான எந்த செயற்­பா­டு­களும் நிக­ழ­வில்லை என்­பதும் தெளி­வா­கி­றது. இத்­த­கைய தாம­த­மா­னது இலங்கை 2019 ஆம் ஆண்­டுக்குள் நிறை­வேற்­றி­யா­க­வேண்டும் என விதிக்­கப்­பட்­டி­ருக்கும் பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துமா எனும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது எனவும் குறிப்­பி­டு­கி­றது.

அதா­வது ஐ.நா. இரு வருட காலக்­கெடு வழங்கிக் கொடுத்த செயற்­பாட்டு நிகழ்ச்சி நிரல் அப்­ப­டியே கிடப்பில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது­வரை நிக­ழ­வில்லை என ஐ.நா. கவலை கொள்­வ­தோடு எதிர்­கா­லத்­தில் முழு­மை­யாக நிறை­வே­றுமா என்று சந்­தே­கமும் கொள்­கி­றது. இதற்­கான கார­ண­மாக காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்டு 20 மாதங்கள் கழிந்தே அதற்­கான அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டதை ஐ.நா. முன்­வைக்­கி­றது. அது இதில் அதி­ருப்தி கொண்­டி­ருக்­கி­றது.

அத்­தோடு காணிகள் கைய­ளிக்­கப்­படு­வ­திலும் தாமதம் என்­கி­றது. காணி தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­மாயின் நம்­பிக்­கையை வளர்ப்­பது சிரமம் எனவும் ஐ.நா. கூறு­கி­றதே. இவ்­வாறு நிக­ழு­கி­றதா? அப்­ப­டி­யானால் ஐ.நா. வின் நம்­பிக்­கையை இழக்கும் நிலை ஏற்­பட்டு விடுமே. காணி­க­ளுக்­கான நஷ்­ட­ஈட்டை சுயா­தீன பொறி­முறைப்­படி வழங்க வேண்டும் எனவும் கூறு­கி­றதே! இதற்கு மாற்­ற­மா­கவா இப்­போது நிக­ழு­கி­றது? காணி விட­யத்தில் தாமதம், அப­க­ரிப்பு, சுயா­தீனப் பொறி­மு­றை­யற்ற நஷ்­ட­ஈடு ஆகி­யவை காணப்­ப­டு­கின்­றனவா? தாம­த­மாகும் பொறுப்புக் கூறலை மட்­டுமே 37 ஆம் கூட்டத்தொடரில் ஐ.நா. கூற­வில்லை.

சர்­வ­தேச மனித உரிமை மீறல்­க­ளுக்கும் மனி­தா­பி­மான மீறல்­க­ளுக்கும் எதி­ராகத் தண்­டனை வழங்­கா­தி­ருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் கூறு­கி­றது. சுமத்­தப்­பட்­டி­ருப்­பது போர்க்­குற்றம். அரசின் இருப்பு போர் வீரர்­களில் இருக்­கையில் போர் வீரர்­களே இறை­மையைத் தக்­க­வைத்­த­வர்கள் என அரசு நம்­பு­கையில் போர் வீரர்­களைத் தண்­டிக்­கு­மாறு அர­சிடம் கோரு­வது அரசே அரசைத் தண்­டிக்க வேண்டும் எனக் கோரு­வ­துபோல் ஆகாதா?

சர்­வ­தேச மனித உரிமை மீறல் என்­பன பற்­றி­யெல்லாம் இலங்­கைக்குப் போதிய தெளிவு இல்லை. அதனால், தண்­டனை பற்­றிய கேள்வி எழ­வில்லை. எனவே இதை இலங்­கையின் கலா­சாரம் எனக் கூற­மு­டி­யாது.

இது­வரை காலமும் சர்­வ­தேச மனித உரிமை மீறல் விட­யத்­திலும் மனி­தா­பி­மான மீறல் விட­யத்­திலும் தெளிவு இல்­லா­தி­ருந்­ததால் தான் இலங்கை இப்­போது சர்­வ­தே­சத்­திடம் தனி­மைப்­பட்­டிருக்கிறது. இப்­போ­தேனும் இலங்கை தெளி­வு­பெற்று மனித உரிமை விட­யத்தில் நன்­ம­திப்பைப் பெற்­றாக வேண்டும். எனினும் தெளி­வின்­மையின் செயற்­பா­டுகள் தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. தவ­று­களை உணர்ந்து கொள்­ளவும் படிப்­பினை பெறவும் உலகின் நிலைப்­பாட்டைப் புரிந்து கொள்­ளவும் இய­லா­ததால் மனித உரிமை மீறல் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மல்ல எனும் நிலைப்­பாடே காணப்­ப­டு­கி­றது. இந்த நிலை மாறா­த­தால்தான் இதை இலங்­கையின் கலா­சாரம் என ஐ.நா. வின் மனித உரிமை ஆணை­யாளர் குறிப்­பி­டு­கிறார். இவர் சர்­வ­தேசப் பங்­க­ளிப்­போடு விசேட நீதி­மன்­றத்தை நிறுவி இவை ஆரா­யப்­பட­வேண்டும். இன்றேல் சர்­வ­தேச நியா­யா­திக்கம் எனும் மாற்று வழி­பற்றி ஆரா­யு­மாறு உறுப்பு நாடு­களைக் கோருவோம் என்­கி­றாரே? என்ன அர்த்தம்? மைத்­திரி அரசு போர்க் குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­ட­திலும் பொறுப்புக் கூறலை ஒப்புக் கொண்­ட­திலும் இணை­அ­னு­ச­ர­ணையைப் பெற்­றுக்­கொண்­ட­திலும் 30/1 பிரே­ர­ணைக்கு உட்­பட்­ட­திலும் இரு தவ­ணை­களை ஏற்­றுக்­கொண்­ட­திலும் அறவே நம்­பிக்கை இழந்­த­தாலா? இலங்­கையின் இணை அனு­ச­ரணை என்றால் ஐ.நா.வே முத­லிடம் வகித்­தி­ருக்க வேண்டும். அதற்கு இணை­யா­கவே இலங்­கையின் பங்கு இருந்­தி­ருக்க வேண்டும். இலங்­கை­யி­டமே எல்­லா­வற்­றையும் ஒப்­ப­டைத்­து­விட்டு ஐ.நா. விசா­ரிக்க மட்டும் செய்­கி­றதே? போர்க் குற்­றத்தை ஏற்றுக் கொள்ளல் என்­பது வெறு­மனே ஏற்­றுக்­கொள்­வது மட்டும் தானா? பொறுப்புக் கூறல் என்­பது வாயால் மட்டும் ஒப்­புக்­கொள்­வது தானா? இணை அனு­ச­ரணை என்­பது என்ன விசா­ரிப்­பது மட்­டும்­தானா? ஐ.நா. இலங்­கைக்கு இரு­வ­ருட தவ­ணையைக் கொடுத்­த­தி­லி­ருந்தும் கவ­லைப்­ப­டு­வ­தி­லி­ருந்தும் சந்­தேகம் தெரி­விப்­ப­தி­லி­ருந்தும் இலங்கை மீது நம்­பிக்கை குறை­கி­றது எனக் கூறி­ய­தி­லி­ருந்தும் சர்­வ­தேச விசா­ரணை என எச்­ச­ரிப்­ப­தி­லி­ருந்தும் தீர்­வுக்­கான முழுப்­பொறுப்­பையும் அது இலங்­கை­யி­டமே வழங்­கி­யி­ருப்­பது தெளி­வா­கி­றது என்­றெல்லாம் நீங்கள் நினைக்­கலாம்.

இலங்­கையே போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்­புக்­கொண்டு 30/1 தீர்­மா­னத்­தையும் பெற்றுக் கொண்­டபின் இரு வருட தவ­ணைக்கும் உட்­பட்ட பின் இணை அனு­ச­ர­ணையைத் தனது ஏக­போ­க­மாக்கிக் கொண்டால் என்ன செய்­வது? ஐ.நா. வோடு இணைந்து செயற்­பட்டால் பெரும்­பான்மைச் சிங்­கள மக்கள் எதிர்ப்­பார்கள் என்­ப­தற்­கா­கவே அரசு தனித்து செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.

ஐ.நா. வின் தலை­யீட்­டையும் நிகழ்ச்சி நிர­லையும் பெரும்­பான்மைச் சிங்­கள மக்கள் இறை­மை­மீறல் என்றே கரு­து­கி­றார்கள். இந்­நிலை இருக்­கும்­வரை மைத்­திரி அரசால் ஐ.நா. வுக்கு முழு­மை­யான இணை­அ­னு­ச­ர­ணையை வழங்க முடி­யாது. இதன் வெளிப்­பா­டா­கத்தான் 37 ஆம் கூட்­டத்­தொ­டரில் அரசு ஐ.நா. வில் கடும் எதிர்ப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. மனித உரிமை மீறல், மனி­தா­பி­மான மீறல் மற்றும் போர்க்­குற்ற விட­ய­மாக சர்­வ­தேச பங்­க­ளிப்­போடு விசேட நீதி­மன்­றத்தை நிறுவி ஆரா­யப்­பட வேண்டும். இன்றேல் சர்­வ­தேச நியா­யா­திக்கம் எனும் மாற்­று­வழி பற்றி ஆரா­யு­மாறு உறுப்­பு­நா­டு­களைக் கோருவோம் என மனித உரிமை ஆணை­யாளர் எச்­ச­ரித்­தி­ருக்­கிறார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுற்­றதும் ஆரம்­பத்தில் சர்­வ­தேச விசா­ரணை எனக் கூறிய ஐ.நா. பின்பு கலப்பு விசா­ரணை என்­றது. எனினும் மைத்­திரி உள்­நாட்டு விசா­ர­ணையே என்றார். பின்னர் அவர் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ போர் வீரர்­களை விசா­ரிக்­கவோ தண்­டிக்­கவோ விட­மாட்டேன் என்றார். இப்­போது மனித உரிமை ஆணை­யாளர் கலப்பு நீதி­மன்றம் பற்­றியும் சர்­வ­தேச நீதி­மன்றம் பற்­றியும் பேசு­கிறார். ஆக போர்க்­குற்­றத்­தி­லி­ருந்து அரசு விலக்­குப்­பெற ஐ.நா. வின் நிகழ்ச்சி நிரலைப் பூர்த்­தி­யாக்க வேண்டும் என்­றா­கி­றது.

இரண்டு வருட தவணை முடி­வுறும் 2019 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுற்று 10 வரு­டங்­க­ளா­கி­விடும். இப்­போது மைத்­திரி அரசின் மூன்றில் இரண்டு பங்­குகள் கழிந்­து­விட்­டன. 2015 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. வில் ஏற்­றுக்­கொண்ட எவற்­றையும் நிறை­வேற்­று­வ­தற்­கான வாய்ப்பு முழு­மை­யாக இவ­ருக்குக் கிடைக்­க­வே­யில்லை. மைத்­திரி போர் வீரர்­களைக் கைய­ளித்து விசா­ரித்துத் தண்­டனை பெற­வைக்கப் போகிறார், நாட்டைப் பிரித்து தமி­ழர்­க­ளிடம் கொடுக்கப் போகிறார். உயிர்த்­ தி­யாகம் செய்து போர் வீரர்கள் மீட்­டெ­டுத்த நிலத்தைத் தமி­ழ­ரி­டமே தாரை­வார்த்துக் கொடுக்கப் போகிறார். அத­னால்தான் வலிந்து போய் போர்க்­குற்றம் செய்­த­தாக ஐ.நா. விடம் ஒப்­புக்­கொண்டு பொறுப்­புக்­கூ­றலை ஏற்று குற்­ற­வா­ளி­யாகி ஐ.நா. வுக்கு உத­வு­வ­தாக இணை அனு­ச­ர­ணையைப் பெற்­றி­ருக்­கிறார். 30/1 எனும் தீர்­மா­னத்தின் படி­யுள்ள நிபந்­த­னை­க­ளையும் ஏற்­றுக்­கொண்டு இரு­வ­ருட தவ­ணை­யையும் பெற்­றி­ருக்­கிறார் என சிங்­களப் பெரும்­பான்மை மக்கள் எதிர்க்­கி­றார்கள். அவர்­களின் முழு ஆத­ரவும் யுத்தம் மூலம் சிங்­கள சமூ­கத்தை வெல்ல வைத்து தமி­ழரைத் தோற்­க­டித்துத் தமி­ழரின் தனி ஈழக்­கோ­ரிக்­கையை மழுங்­க­டித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்­கமே இருக்­கின்­றது.

100 க்கு 74 வீதம் சிங்­கள மக்­களே இந்­நாட்டில் வாழ்­வதால் இலங்கை சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே உரித்­தான நாடு. தமி­ழ­ருக்கு எதுவும் இல்லை. இது புத்­தரின் நாடு. நாமே பூமி புத்­தி­ரர்கள். பௌத்த மதமும், சாச­னமும், சிங்­கள மொழியும் முதன்மை பெற­வேண்டும் எனும் தீவிர பேரின மத, மொழி, கலா­சார, பூர்­வீக ஆதிக்கம் இவர்­க­ளிடம் இருப்­பதால் இவற்றை அடிப்­படை­யாக வைக்­காத மைத்­திரி ஐ.நா. வுக்கு எதையும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யாத நிலையில் இருக்­கிறார். இவ­ரது அரச இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கிறது.

அரச கட்­ட­மைப்பில் ஸ்திரப்­பாடு இல்­லா­ம­லேயே இவர் ஆட்­சி­யேற்று இற்­றை­வரை மூன்று வரு­டங்கள் கழிந்­தி­ருக்­கின்­றன. இரு பெருங்­கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்தால் அறுதிப் பெரும்­பான்­மை­யோடு அரச கட்­ட­மைப்பை ஸ்திரப்­ப­டுத்தி ஐ.நா. வையும் சமா­ளிக்­கலாம் என்றே எண்­ணி­யி­ருந்­தன. எனினும் மைத்­திரி அர­சுக்கு 70 வீத சிங்­களப் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­குகள் கிடைக்­க­வில்லை. சிறு­பான்­மைகள் 100 வீதம் அவ­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தன. இதனால் மைத்­திரி சிறு­பான்­மை­களால் வென்ற ஜனா­தி­பதி என்றே அடை­யா­ளப்­படுத்­தப்­பட்டார். இதன் அர்த்தம் சிங்­கள சமூ­கத்­துக்கு எதி­ரா­னவர் என்­ப­தே­யாகும்.

இதனால் தனக்கு ஆத­ர­வ­ளித்துத் தெரி­வு­ செய்த சிறு­பான்­மை­க­ளுக்குத் துணிந்து எதையும் செய்ய முடி­யாத நிலைக்கு மைத்­திரி ஆளானார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரா­கவும் செயற்­பட முடி­யாமற் போனார். மஹிந்­த­வி­ட­மி­ருந்து அரசின் ஸ்திரப்­பாட்டைக் காத்­துக்­கொள்ள பாது­காப்புத் துறை­யிடம் கூடி­ய­ளவு தங்கும் நிலைக்கும் உள்­ளானார்.

ஆக மைத்­தி­ரியின் உள்­நாட்டு அர­சியல் பல­வீ­னமும் அதற்குக் கார­ண­மான மஹிந்த ராஜபக் ஷவின் இடை­யூ­று­களும் ஐ.நா. வில் தமிழ் மக்கள் எழுப்பும் கோரிக்­கை­க­ளுக்கு நல்ல வாய்ப்பை வழங்­கு­கின்­றன. அண்­மையில் நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் முடிவில் பேரி­ன­வா­தத்தைக் கிளப்பி மஹிந்த ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் 80 வீத வாக்­கு­களைப் பெற்­ற­போது அவ­ரைப்­பார்த்து சம்­பந்தன் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு சுயாட்சி கிடைக்­கு­மாயின் அது உங்­களால் தான் கிடைக்கும் என்றார் அல்­லவா? இதன் அர்த்தம் என்ன? என்­ப­தை­யா­வது சிங்­கள மக்கள் புரிந்து கொண்­டி­ருக்க வேண்டும். தக்க நிலைப்­பா­டின்றி சம்­பந்தன் இதைக் கூறி­யி­ருக்­க­மாட்டார்.

இப்­போ­தைக்கு ஆட்­சியை அவ­ச­ர­மாகப் பெற மஹிந்த ராஜபக் ஷ கடும் முயற்­சியில் இறங்கப் போவ­தில்லை. காரணம் இப்­போதே ஆட்­சி­யு­ரி­மையைப் பெற்றுக் கொண்டால் ஐ.நா. வுக்கு அவரே முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­படும். அதனால் ஏற்­படும் விளைவை முன்பு தெரிந்­தி­ருந்­ததால் தான் போர்க்­குற்­றத்தை மறுத்து ஐ.நா. வுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. ரஷ்­யா­வையும் சீனா­வையும் இன்னும் சில நாடு­க­ளையும் சேர்த்­துக்­கொண்டு ஐ.நா.வோடு மல்­லுக்கு நின்றார்.

இந்­நி­லையில் சீனா­வோடு இலங்கை சேர்ந்­ததால் இந்­தியா அமெ­ரிக்­கா­வோடு சேர்ந்து உடன்­பாடு கண்­ட­தா­லேயே இலங்­கைக்குள் அமெ­ரிக்­காவின் பிடி இறு­கி­யது. அது­வரை அடக்கி வாசித்த ஐ.நா. அதன் பிறகே தூக்கி வாசித்­தது. அப்­போ­தேனும் மஹிந்த ராஜபக் ஷ இதைப் புரிந்­து­கொண்டு இந்­தி­யா­வுக்கு நெருக்­க­மா­கி­யி­ருந்தால் ஐ.நா. வின் பிடியில் சிக்­காமல் இருந்­தி­ருப்பார். எனினும் இந்­தியா வடக்கு– கிழக்கு தமி­ழர்­க­ளுக்குச் சார்­பா­னது எனக் கரு­திய சிங்­களப் பேரி­ன­வா­திகள் இந்­தி­யா­வுக்கு எதி­ராக அவரை சீனாவின் பக்­கமே சேர்த்­து­விட்­டனர்.

ஆக இந்­தி­யாவின் பாது­காப்­புக்குப் பாதிப்பு இல்­லாத வகையில் இலங்கை தனது வடக்கு, கிழக்கு தமி­ழ­ருக்­கான அதி­காரப் பர­வலை வழங்­கி­யி­ருந்தால் இந்­தி­யாவின் உத­வியும் நட்பும் பாது­காப்பும் இலங்­கைக்கு பல­மாகக் கிடைத்­தி­ருக்கும். ஐ.நா. விடமும் சிக்கி இப்­படி உலகில் தனி­மைப்­பட்டுத் தவிக்க வேண்­டி­யி­ருந்­தி­ருக்­காது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக எந்த நாடும் இலங்­கைக்கு உதவப் போவ­தில்லை. 1987 ஆம் ஆண்டு இந்­தி­யா­வுடன் முரண்­பட்ட ஜே. ஆருக்கு அமெ­ரிக்கா உத­வ­வில்லை என்­பதை மறந்து விடக்­கூ­டாது. ஆக வெளி­நாட்டு உள்­நாட்டு விட­யங்­களில் இலங்கை செய்த பாரிய தவ­று­க­ளா­லேயே இன முரண்­பாடு ஏற்­பட்டு 30 வருட யுத்தம் நிகழ்ந்து இலட்சக்கணக்கான உயிர்களும் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிவுற்றன. அண்மையில் பௌத்த மக்களின் புனித நகரான கண்டியிலேயே நிராயுத பாணிகளான முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சமூகத்தினரால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டனர். பள்ளிவாசல்களும் மத்ரஸாக்களும் எரியூட்டவும், தாக்கவும்பட்டன. குர்ஆனும் எரியூட்டப்பட்டது. கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டன. 5 வருடங்களாகவே இது தொடருகிறது. எனினும் அரசியல் தலைவர்கள் அதிகாரப் போட்டியிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

எனினும் 37 ஆம் கூட்டத் தொடரில் ஐ.நா. வில் சகலதிலும் நாமே வெற்றி பெற்றிருக்கிறோம். அரசு சகலவற்றிலும் தோல்வியுற்றது. எனவே, குறுகிய தவணை அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என சுமந்திரன் கூறியிருக்கிறார். இது ஐ.நா. வின் கடும் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு அரசின் கோரிக்கையின் பேரில் அவர் சொன்னதா? அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமுன் வழங்கப்பட்ட அவகாசமா? 2019 ஆம் ஆண்டுக்குப் பின் தவணை கிடைக்காது எனக் கூறப்படும் முன்னறிவித்தலா?

நிறைய விடயங்கள் கிடப்பில் இருக்கையில் குறுகிய காலத்துக்குள் எதைத்தான் செய்வது? மூன்று வருடங்களில் எதுவும் முழுதாக நிறைவேற்றப்படவில்லை என்றால் குறுகிய காலத்துக்குள் எல்லாவற்றையும் நிறைவேற்றும் அளவுக்கு இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைப்பாடு இருக்கின்றதா? இது பதில் நடவடிக்கை எடுப்பதற்காக ஐ.நா.வே எடுத்துக்கொள்ளும் கால அவகாசமாகவும் இருக்கலாம் அல்லவா?

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-31#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.