Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா?

Featured Replies

 
 

மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா?

‘‘ஐ. தே. கட்­சி­யின் புன­ர­மைப்பு ஏப்­ரல் 30ஆம் திக­திக்­குப் பிற்­போ­டப்­பட்­டுள் ளது’’ எனத் தெரி­விக்­கின்­றன அச்சு ஊட­கங்­கள். ‘‘சுதந்­தி­ரக் கட்சி, இந்­தக் கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­விட வேண்­டும். அது குறித்த இறுதி முடிவு மேற்­கொள்ள கட்­சி­யின் மத்­திய செயற்­குழு மீண்­டும் கூட­வுள்­ளது.’’ என்­பது ஒரு சில பத்­தி­ரி­கை­க­ளது தலைப்­புச் செய்தி. இவற்­றை­விட, ‘ சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிப்­பர்.’ என்ற தலைப்­புச் செய்­தி­யும் சில பத்­தி­ரி­கை­க­ளில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்தது.

இவை­யெல்­லா­வற்­றை­யும் விட சமூக வலைத்­த­ளங்­க­ளில், ‘‘ இணங்­கிக் கொள்­ளப்­பட்ட விதத்­தில் ஐ. தே. கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தில் மாற்­றம் செய்­யப்­ப­டாது விடின், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக ஐ. தே. கட்­சி­யா­லேயே நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­டத்­தக்க ஆபத்து நில­வு­கி­றது ’’ என்ற செய்தி பகி­ரப்­பட்டு வந்­த­தை­யும் அவ­தா­னிக்க முடிந்­தது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்பார்ப்பை
நிறைவேற்றியதா?

மேற்­கண்ட செய்தித் தலை­யங்­கங்­கள் சக­ல­வற்­றி­லி­ருந்­தும் எம்­மால் எத­னைக் கிர­கிக்க முடி­கி­றது? மகிந்­த­வின் தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி, நாடா­ளு­மன்­றுக்­குள் பற்ற வைத்த ‘நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம்’ என்ற குண்­டால், அவர்­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்ட விளை­வு­களை ஏற்­ப­டுத்த முடிந்­ததா? அல்­லா­து வி­டில் அத­னால் எத்­த­கைய பலா­ப­லன் கிட்­டி­யது என்­ப­தையே அவை வௌிப்­ப­டுத்தி நிற்­கின்றன.

கடந்த பெப்­ர­வரி மாதம் 10ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில், தமது எதிர்த்­த­ரப்­பி­னரை மூக்­கின் மேல் விரல் வைத்து ஆச்­ச­ரி­யப்­ப­ட­வைத்து, மகிந்­த­வின் ‘ தாம­ரை­மொட்டு ’ பெரு வெற்­றியை ஈட்­டிக் கொண்­டது. தொகுதி ரீதி­யில் 70 வீதத்­துக்­கும் அதி­க­மான வெற்­றியை மகிந்த அலை­யின் எழுச்­சியை உறு­திப்­ப­டுத்தி தாமரை மொட்­டுத் தரப்பு கைப்­பற்­றிக் கொண்­டது.

அது அந்­தத் தரப்­பின் பரப்­பு­ரைக்­குக் கிடைத்த வெற்றி என்­ப­தை­விட, மகிந்த என்ற அர­சி­யல் பாத்­தி­ரத்தை சுற்­றிச் சூழ்ந்து கைகோர்த்­துச் செயற்­பட்ட பொது­மக்­கள் ஆத­ர­வின் பலா­ப­லன் எனக் கொள்­வதே பொருத்­தம்.

உண்­மை­யில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் பெறு­பே­று­கள் வெளி­யான பின்­னர், ஐ. தே. கட்­சிக்கு இப்­போ­தைய தலை­வ­ருக்­குப் பதி­லாக வேறு தலை­வ­ரொ­ரு­வரே தேவைப்­பட்­டார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் தரப்­பி­லி­ருந்து சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­க­ளில் பலர் தாம் அர­சி­னின்­றும் வெளி­யே­றி­விட்­டால் தமது அர­சி­யல் எதிர்­கா­லம் நிச்­ச­ய­ மற்­ற­தாக ஆகி­வி­டு­மென்­பதை உணர்ந்து கொண்­ட­னர். மகிந்த தரப்­பின் 45 வீத வாக்­கு­க­ளை­யும், மைத்­திரி தரப்­பின் 13வீத வாக்­கு­க­ளை­யும் ஒன்று சேர்த்­தால் சிறு தேசி­யக் கட்­சி­க­ளது அழுத்­தங்­கள் எது­வு­மின்றி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற இய­லும் என்­பதை உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­ய­போது சம்­பந்­தன் தரப்பு மட்­டு­மன்றி, ஹக்­கீம் மற்­றும் றிசாட் பதி­யு­தீன் தரப்­புக்­க­ளும் குழம்­பிப்­போ­யின.

உள்­ளூ­ராட்­சி முடிவுகளால் பெரும்பாலானோர் ஏமாற்றம்

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமது கட்­சிக்கு பத்து வீதம் வரை­யான வாக்­கு­கள் கிட்­டு­மென்ற எதிர்­பார்ப்­பில் ‘கிரா­மப்­புற ஆத­ரவு ஜே. வி.பிக்கே’ எனக் கூறி­வந்த அனுர திஸ­நா­யக்க, வெறும் 6வீத வாக்­கு­களே கிட்­டி­யமை கண்டு அர­சி­யல் காற்று திசை­மாறி வீசி­யி­ருப்­பதை உணர்ந்து கொண்­டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் முன்­னைய தட­வை­க­ளை­விட இம்­முறை குறைந்த வீத வாக்­கு­களே கிட்­டி­யி­ருந்­தன.

மகிந்­த­வின் தரப்­புத் தவிர்ந்த ஏனைய அர­சி­யல் தரப்­புக்­க­ளுக்­கும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் பார­தூ­ர­மான காயங்­களோ, சிறு காயங்­களோ ஏற்­ப­டுத்­தின என்­பதே யதார்த்­தம்.

மத்­திய அர­சுக்கு எந்த விதத்­தி­ லும் அழுத்­தம் ஏற்­ப­டுத்த இய­லாத உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இத்­த­கைய பெரும் வெற்­றியை பதிவு செய்த மகிந்த, ஏனைய தரப்­புக்­க­ளது அத்­த­கைய பின்­ன­டைவை நாடா­ளு­மன்­றத்­துள் வெளிப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னார். அதன் பலா­ப­லனே தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை.

கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னைச் சேர்ந்த சிலர் மத்­தி­யில், ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெறுமா என்­பது தொடர்­பில் நம்­பிக்­கை­யி­ருக்­க­வில்லை. ரணில் தொடர்ந்­தும் முத­ல­மைச்­சர் பத­வி­யில் தொடர்­வது எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் தமக்கு இலா­ப­க­ர­மாக அமை­யும் என்­பது அந்­தக் குழு­வி­ன­ரது நம்­பிக்­கை­யா­கும்.

ரணிலை நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­னால், எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் ரணி­லைத் தோற்­க­டிப்­பது சிர­ம­மா­ன­தாக ஆகி­வி­டும் என்­பது அவர்களது நம்­பிக்­கை­யா­கும்.

ரணில் அவ­ரது தலைமை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மூலம் வெளி­யேற்­றப்­பட்­டால், ஐ.தே. கட்­சிக்­கான மக்­கள் அனு­தா­பம் உயர்­வ­டை­யுமா? என்­ப­தற்கு இன்­றைய அர­சி­யல் போக்­குக் குறித்த தெளி­வான பார்­வை­யில்­லா­தவர்கள் ‘ஆம்’ என்றே பதில் அளிப்பர். ஆனால் உண்­மை­யில் ரணில் தமது பத­வியை இழக்க நேர்ந்­தால், ஐ. தே. கட்சி ஆபத்­தில் சிக்­கிக் கொள்­ளும். கட்­சி­யின் தலை­மைத்­து­வம் தொடர்­பான போட்டி உச்­ச­ம­டை­யும்.

ரவி­க­ருணா நாயக, சஜித் பிரே­ம­தாச, நவீன் திஸ­நா­யக ஆகி­யோர் ஐ.தே. கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­துக்­காக வெவ்­வேறு தரப்­புக்­க­ளாகப் பிரிந்து தம்­மி­டையே மோதிக் கொள்­வர். இதில் எந்த வித சந்­தே­க­மும் கிடை­யாது. அத்­த­கைய உட்­கட்­சிப் பூச­லொன்றை உரு­வாக்­கவே மகிந்த, ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை முன்­னெ­டுக்கத் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டார்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தமது பக்­கம் இணைக்க முடிந்­தமை மகிந்­த­வின் வெற்­றியே

தற்­போது ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்டு சில நாள்­கள் கடந்து விட்­டுள்­ளன. 54 உறுப்­பி­னர்­கள் என்ற எண்­ணிக்­கை­யு­டன் இயங்கி வந்த கூட்டு எதி­ர­ணித்­த­ரப்­பில் மேலும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16 பேரை இணைத்­துக்­கொள்ள முடிந்­தமை மகிந்த, ரணி­லுக்கு எதி­ரான தமது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் திட்­டத் தின் மூலம் ஈட்­டிக் கொண்ட முத­ லா­வது வெற்­றி­யா­கும்.

அது 16 பேரை உள்­ளீர்த்­துக் கொண்­ட­து­டன் முடி­வுக்கு வரப்­போ­கும் ஒன்­றல்ல. தற்­போது கூட்டு அர­சி­னின்­றும் சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­று­வது தொடர்­பான பேச்­சுக்­கள் சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வில் முன்­னெ­டுக்­கப் பட்டு வரு­கின்­றன. அத்­து­டன் அமைச்­சர்­க­ளில் ஒரு தரப்­பி­னர் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிக்க ஆரம்­பித்து விட்­டுள்­ள­னர்.

ரணி­லுக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் கூட்டு அரசு குலை­யு­மா­னால், அது மகிந்த தரப்­புக்கு பெறு­ம­தி­யா­ன­தொரு வெற்­றி­யல்­லவா? அவ்­வி­தம் ஆகு­மா­னால், அதை­ய­டுத்து நிறு­வப்­ப­டும் ஐ. தே. கட்சி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இணைந்த அர­சில் 30க்கும் குறை­வான அமைச்­சர்­க­ளையே நிய­மிக்க இய­லும். அத்­த­கைய நிலை­யில் அமைச்­சுப் பத­வி­களை எதிர்­பார்த்­தி­ருந்து.

அவை கிட்­டா­த­தால் விரக்தி­யு­ றும் ஐ.தே. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு தரப்­பி­னர், அதி­ருப்தி நிலை அடை­யக் கூடும். அதே சம­யம், த. தே. கூட்­ட­மைப்பு கோரி­வ­ரும் உள்­ளக சுய­நிர்­ணய நிர்­வா­ கத்தை உள்­ள­டக்­கிய அர­ச­மைப்­புத் திருத்­தத்தை சமர்ப்­பித்து நிறை­வேற்ற ஐ.தே. கட்சி அர­சால் இய­லாது போய்­வி­டும்.

அதே­வேளை மேற்­கு­லக நாடு­கள் மற்­றும் இந்­தி­யா­வின் தூத­ரக வட்­டா­ரங்­கள் எவ்­வா­றா­யி­னும் தேசிய அர­சாங்­கத்­தைத் தொடர்ந் தும் செயற்­பட வைக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரிக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் அழுத்­தம் கொடுத்து வரு­ வது தத்­த­மது நாடு­க­ளது பூகோள அர­சி­யல் நலன் சார் தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­ளும் நோக்கிலேயே ஆகும்.

சுதந்­தி­ரக் கட்­சித் தரப்­பி­னர் பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன்
இணை­வ­தன் மூலம் நாடா­ளு­மன்­றில் எதிர்க்­கட்சி அந்­தஸ்­து­டன்
செயற்­பட முடி­யும்

சுதந்­தி­ரக் கட்சி, நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட வேண்­டு­மா­னால், அரச தலை­வர் அர­சில் தனித்­துப் போக நேர்ந்து விடும். ஆனால், அவர் அனா­த­­­ர­வா­ன­வ­ராக, தலைமை அமைச்­ச­ருக்கு அடங்கி நடக்­கும் அரச தலை­வர் பாத்­தி­ரத்­தைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­குப் பதி­லாக, தற்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் தாம் நடத்தி வரும் அர­சின் பனிப்­போ­ரைத் தீவி­ரப்­ப­டுத்­து­ வார் என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­ப­டு­வ­தென்­ப­தன் அர்த்­தம், அது மகிந்­த­வின் தலை­மை­யி­லான பொது மக்­கள் முன்­ன­ணி­யு­டன் அர­சி­யல் ரீதி­யில் இணைந்து கொள்­வ­தா­கும். அது உட­ன­டி­யாக இடம் பெறாது விட்­டா­லும், காலப் போக்­கில் அவ்­வி­தம் நடந்­தே­யா­கும்.

மைத்­தி­ரி­பால தரப்­பின் 13வீதம் மற்­றும் மகிந்த தரப்­பின் 45 வீதம் என்­ப­வற்றை ஒன்­றி­ணைப்­ப­தன் மூலம் சிறு இன­வா­தக் கட்­சி­க­ளது நியா­ய­மற்ற அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டா­மல், புதிய அர­சொன்றை மேற்­கு­றித்த தரப்­பால் உரு­வாக்க வாய்ப்­ப­மை­யும்.

அதே சம­யம் மகிந்­த­வின் ‘தாமரை மொட்டு’ தரப்­பி­ன­ரில் ஒரு சிலர், இத்­த­கைய இணைவை விரும்­பு­வ­தா­கத்­தோன்­ற­வில்லை. சிறு இன­வாத அர­சி­யல் கட்­சி­க­ளது நியா­ய­மற்ற அழுத்­தங்­க­ளுக்கு வளைந்து கொடுத்துச் செயற்படும் ஒரு அரச நிர்­வா­கமே அவர்­க­ளது எதிர்­பார்ப்­பா­கும். இலங்­கை­யின் அர­சி­யலை ஆட்­டம் காண­வைத்து, நலி­வு­ப­ட­வைக்க இலக்கு வைத்­துள்ள வெளி­நா­டு­க­ளது தூத­ரங்­க­ளது விருப்­ப­மும் அதுவே.

பெப்­ர­வரி 10ஆம் நாளின் மக்­கள் எழுச்­சி­யின் பலா­ப­ல­னாக தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரும் மகிந்த தரப்­பின் முடிவு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதில் மகிந்த தோல்­வி­யுற்ற போதி­லும், அர­சி­யல் ரீதி­யில் அது அவ­ருக்கு வெற்­றியே. அந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கார­ண­மா­கவே சுதந்­தி­ரக்­கட்­சி­ யி­லி­ருந்து 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தமது தரப்­புக்கு மகிந்­த­வால் இழுத்­துக்­கொள்ள முடிந்­தது.

தற்­போது மகிந்­த­வின் இந்­தக் கூட்டு எதி­ரணி மேலும் ஒரு­படி முன்­னேறி சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் தமது தரப்­புக்கு இழுத்­துக் கொள்­ளும் முயற்­சி ­யில் தீவிர கவ­னம் செலுத்திச் செயற்­பட வேண்­டும். அதுவே இன்­றைய தமது முக்­கிய முயற்­சி­யா­கக் கொண்டு மகிந்த தரப்பு செயற்­பட வேண்­டும்.

http://newuthayan.com/story/86096.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.