Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?

Featured Replies

  •  
  • தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?
 
 

தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?

கடந்த 28 வரு­டங்­க­ளுக்கு மேலாக, வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வசப்­ப­டுத்­தி­யி­ருந்த பொது­மக்­க­ளின் 683ஏக்­கர் நிலப்­ப­ரப்பு, கடந்த வாரம் பொது­மக்­க­ளிடமே மீள­வும் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் உரை­யாற்­றும்­போது ஒரு விட­யத்தை அழுத்­திக் கூறி­யி­ருந்­தார்.

‘‘காணி­கள் விடு­விக்­கப்­ப­டு­வது அல்ல முக்­கிய விட­யம். விடு­விக்­கப்­பட்ட காணி­க­ளில் காணி­யின் சொந்­தக்­கா­ரர்­கள் உட­ன­டி­யா­கக் குடி­யே­றி­னால்தான் ஏனைய காணி­க­ளை­யும் விடு­விக்க வாய்ப்­பாக அமை­யும்’’. இது அவர் மக்­களை வின­ய­மா­கக் கேட்­டுக்­கொண்­ட­தா­கக் கரு­திக்­கொள்­ள­வேண்­டும். அத்­து­டன் இந்த விட­யத்­தில் நாம் மிக­வும் மேம்­பட வேண்­டி­யு­மி­ருக்­கி­றது…! இந்த நிலை தமி­ழர்­களை எங்கு கொண்­டு­போய் விடும்…?

ஈழப்­போ­ராட்­டம் கார­ண­மாக நிலங்­க­ளைப் பறி­கொ­டுத்த நாம் அவற்றை மீட்­டெ­டுப்­ப­தற்­கான தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கி­றோம். அவற்­றில் வெற்­றி­யும் கண்­டி­ருக்­கி­றோம். இன்­னும் நீள்கின்ற போராட்­டங்­க­ளும் இருக்­கின்­றன. எமக்­கு­ரிய காணி­களை, பரம்­பரை முது­சங்­களை உரி­மைப்­ப­டுத்­திக் கொள்­ளும் எமது போராட்­டங்­கள் வர­வேற்­கத்­தக்­கவை.

அதே­நே­ரம் எமது நிலம் சார்ந்த இறுக்­க­மும் பிணைப்­பும்­கூட அத்­தி­ய­வ­சி­ய­மா­னதே. வலி. வடக்­கில் ஏற்­க­னவே விடு­விக்­கப்­பட்ட தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­க­ளில் இன்­று­வ­ரை­கூட பலர் குடி­யே­றாத நிலை காணப்­ப­டு­கி­றது. சில இடங்­க­ளில் பற்றை மண்­டிக் கிடப்­ப­தை­யும் கவ­னிக்­க­லாம். இப்­ப­டி­யாக எமது காணி­யில் குடி­யே­றப் பின்­நிற்­கும் எம்­மால் புதி­தாக ஒரு குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்?

தற்­போது முல்­லைத்­தீவு மாவட்­டம் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் பறி­போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. வட­மா­காண சபை­யி­னர் கிளர்ந்­தெ­ழுந்து முல்­லைத்­தீ­வுக்கு எந்த வாக­னத்­தில் எப்­ப­டிச் செல்­வது? எவ்­வ­ளவு நேரம் அங்கு நின்று பார்­வை­யி­டு­வது? எனப் பல மணி­நே­ரம் ஆராய்­வார்­கள்! அந்த இடத்­துக்கு ஒரு தட­வை­போய் எட்­டிப்­பார்த்­து­விட்டு விரை­வில் திரும்­பி­விட வேண்­டும் என்­பதே அவர்­க­ளின் வேலை­யாக இருக்­கி­றது!

மாறா­கத் தமி­ழர்­க­ளுக்­கு­ரிய நிலங்­க­ளில் அவர்­கள், வாழ்­வ­தற்­கு­ரிய வசதி வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தி, அதில் அவர்­க­ளைக் குடி­ய­மர்த்­து­ வது பற்­றிச் சிந்­திப்­ப­தான அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை. அப்­ப­டி­யான செயற்­பா­டு­கள் நிகழ்­வது உண்­மை­யா­னால், சிங்­க­ள­வர்­கள் குடி­யே­று­ வ­தற்கு நில­மில்­லாது இருக்­குமே தவிர, அத்­து­மீ­று­கின்ற பிரச்­சி­னை­கள் எழா.

வச­தி­வாய்ப்­புக்­க­ளு­டன் குடி­யே­றும்
பெரும்­பான்­மை­யி­னர்

2008ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு­வர் ‘‘புலி­க­ளின் பலம் காடும், கட­லும் தான். அவை இரண்­டும் படிப்­ப­டி­யாக பறி­போய்க்­கொண்­டி­ருக்­கின்­றன. இவை இரண்­டும் முழு­மை­யாக இலங்கை இரா­ணு­வத்­தி­ன­தும், கடற்­ப­டை­யி­ன­தும் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டால், போராட்­டம் முடி­வுக்கு வந்­து­வி­டும்’’ என்­றார்.

அவர் குறிப்­பிட்ட அதே­வி­ட­யம் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திக­திக்­குள் நடந்து முடிந்­தது. ஆழ ஊடு­ரு­வும் படைப்­பி­ரி­வி­னர் புலி­கள் ஒளித்­தி­ருக்­கக்­கூ­டிய காடு­க­ளுக்­குள் நிலை எடுத்­தி­ருந்­தார்­கள். கடற்­ப­டை­யி­னர் வன்­னி­யி­லி­ருந்து வெளி­யே­று­ப­வர்­க­ளைத் தடுப்­ப­தி­லும் பன்­னாட்­டுக் கடல் எல்­லைக்­குள் இருந்து வன்­னியை நோக்கி வரு­கின்ற கப்­பல்­க­ளைத் தடுப்­ப­தி­லும் பல வரிசை கடற் கண்­கா­ணிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி, அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தி­னர்.

இந்­தப் பின்­ன­ணி ­யு­டன் பார்த்­தால் மட்­டுமே முல்­லைத்­தீ­வில் தற்­போது என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­பது புரி­யும். போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­து­டன் இதற்­கான முனைப்­புக்­க­ளில் இலங்­கை­யின் அரச பொறி­மு­றையை வழி­ந­டத்­தும் குழு மற்­றும் இரா­ணு­வம், கடற்­படை என்­ப­ன­ தீவி­ர­மாக இறங்­கி­விட்­டன. சம­நே­ரத்­தில் எமது அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு அந்த விட­யம் புரிந்­தி­ருக்­க­வில்லை.

நெடுங்­கேணி ஒதி­ய­ம­லைக்கு அப்­பால் கைவி­டப்­பட்­டி­ருந்த கென்­பாம், டொலர்­பாம் பகு­தி­கள் இதன் முதற்­கட்­ட­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன. அந்த வரி­சை­யில் வரும் பட்­டிக்­கு­டி­யி­ருப்­புக்கு அடுத்­த­தாக சம்­பத்­நு­வர பிர­தேச செய­ல­கம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டது. இங்கு பாட­சா­லை­கள், வைத்­தி­ய­சாலை, தபாற் கந்­தோர் போன்ற முக்­கிய தேவை­கள் நிறை­வு­செய்­யப்­பட்­டன.

இந்­தப் பிர­தேச செய­ல­கத்­தில் 7சிங்­கள கிரா­ம­சே­வை ­யா­ளர்­கள் பிரி­வு­கள் உரு­வாக்­கப்­பட்­டன. முல்­லைத்­தீ­வி­லி ­ருந்து சம்­பத்­நு­வர பிர­தே­சம் அண்­ண­ள­வாக 50 கிலோ­மீற்­றர்­கள் தூரத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது.

ஆனால், நெடுங்­கேணி நக­ருக்கு 26கிலோ­மீற்­றர்­களே. எனவே சம்­பத்­நு­வர – நெடுங்­கேணி வீதி காப்­பெட் போடப்­பட்டு சம்­பத்­நு­வர பகு­தி­யி­லி­ருந்து சிங்­கள மக்­கள் தமக்­குத் தேவை­யான பொருள்க­ளைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு நெடுங்­கேணி நோக்­கிச் செல்­கின்ற வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இது வழ­மை­யாக்­கப்­பட்­டுப் பல வரு­டங்­கள் கழிந்­து­விட்­டன. நெடுங்­கே­ணி­யி­லி­ருந்து சம்­பத்­நு­வர வரை பார்த்­தால் நெடுங்­கேணி, 2ஆம் கட்டை, பெரி­ய­பு­ரம், ஒதி­ய­மலை, தனிக்­கல்லு, கல்­யா­ண­புர, சம்­பத்­நு­வர என விரிந்து செல்­லும். இதில் சிங்­க­ளக் கிரா­மங்­க­ளுக்கு எல்­லைப்­ப­கு­தி­யில் அமைந்­தி­ருந்த தமிழ்க் கிரா­மம் தனிக்­கல்லு என்­ப­தா­கும். இந்­தக் கிரா­மத்­தில் காரை­ந­க­ரைச் சேர்ந்த 5 குடும்­பங்­கள் குடி­யேறி இருந்­தன. தற்­போது அந்­தக் குடும்­பங்­கள் அங்­கில்லை.

இரா­ணு­வத்­தி­னர் வச­மா­கி­விட்ட
கவ­னிக்­கப்­ப­டாத பகுதி!

சம்­பத்­நு­வர பகு­திக்கு மகா­வலி நீரைக்­கொண்­டு­வ­ரு­கிற திட்­ட­மும் காணப்­ப­டு­கி­றது. இந்­தப் பகு­தி­யில் முஸ்­லிம்­களோ, தமி­ழர்­களோ குடி­யே­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்­பது தெளி­வா­கி­றது. இந்­திய இரா­ணு­வம் இலங்­கை­யில் நிலை­கொண்­டி­ருந்­த­போது புலி­கள் நிலை­கொண்­டி­ருந்த மண­லாறு, அளம்­பில், நித்­தி­கைக்­கு­ளம் காட்­டுப்­ப­கு­தி­கள் மிக­வும் அடர்ந்த காட்­டுப்­ப­கு­தி­க­ளா­கும்.

இந்­தப் பகு­தி­யில் உள்ள ‘உடங்கா’ எனும் காட்­டுப்­ப­குதி அதி­லும் மிக­வும் அடர்ந்த காட்­டுப்­ப­கு­தி­யா­கும். இந்­தக் காட்­டுக்­குள் சூரிய ஒளி­ப­டாத அள­வுக்கு இறுக்­க­மா­ன­தும், உய­ர­மா­ன­து­மான மரங்­கள் இருந்­தன. ஒட்­டு­சுட்­டானை அண்­மித்த காடு­க­ளில் கூட 100அடிக்கு மேற்­பட்ட உய­ர­மான வீர மரங்­கள் காணப்­பட்­டன. இந்த இயற்­கைக் காடு­க­ளில் கள­வாக மரம் தறிப்­ப­வர்­க­ளுக்­குப் புலி­கள் கடும் தண்­டனை வழங்­கி­னர்.

கள­வாக மரம் வெட்டி ஏற்­று­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட வாக­னங்­களை கொழுத்­தும் உத்­த­ர­வைக்­கூ­டப் பிர­பா­க­ரன் பிறப்­பித்­தி­ருந்­த­தை­ அறி­ய­மு­டி­கி­றது. மண­லாற்றை அண்­மித்த காட்­டுப் பகு­தி­யு­டன் கிழக்கு மாகா­ணக் காடு­கள் தொடர்­புற்று இருந்­தன. இவ்­விரு காடு­க­ளுக்­கும் இடை­யி­லான பாதையை ‘‘பேய்­றூட்’’ (பேய்ப்­பாதை) எனப் புலி­கள் அழைத்­த­னர்.

விடு­த­லைப் புலி­க­ளின் படைப்­பி­ரி­வில் வன்­னிக் காடு­கள் பற்­றிய முழு­மை­யான அனு­ப­வம் மாத்­தையா, தள­பதி பால்­ராஜ் ஆகி­யோ­ருக்கு இருந்­த­தாக அறி­ய­ மு­டி­கி­றது. ஆனால் வன்­னிக் காடு­கள் தொடக்­கம் கதிர்­கா­மம் காடு­கள் வரை முழு­மை­யா­கத் தெரிந்த ஒரே­யொரு தள­ப­தி­யாக ராம் மட்­டுமே இருந்­தார் என்­பது பல­ருக்­குத் தெரி­யாது. 1990 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து தமிழ் மக்­கள் வெளி­யேறி வந்­த­போது, அந்த மக்­களை ‘பேய்­றூட்’ ஊடாக முல்­லைத்­தீவு வரை அழைத்து வந்­தது பல­ருக்­கும் தெரிந்த செய்தி.

அதே­வேளை, புலி­கள் வச­மி­ருந்த ‘உடங்கா’ பகு­தி­யை­யும் நித்­தை­கைக்­கு­ளம் காட்­டுப் பகு­தி­யை­யும் இணைக்­கும் பகுதி ‘சிங்­கப்­பூர் வெட்டை’ என அழைக்­கப்­பட்­டது. ‘உடங்க’ காட்­டுப்­ப­குதி முத­லிப்­ப­ழம் (முர­ளிப்­ப­ழம்)பெயர் பெற்­றது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

அளம்­பில் கடற்­க­ரை­யூ­டா­கத் தமிழ்­நாட்­டு­டன் தொடர்பு கொள்­ளக்­கூ­டிய கடற்­தொ­டர்­பு­ண்டு. இத்­த­கைய பெரும் காட்­டுப்­ப­குதி தற்­போது இரா­ணு­வத்­தால் இர­க­சி­ய­மாக அழிக்­கப்­பட்டு வரு­கி­றது. அங்கு இரா­ணு­வத்­தின் நிர்­வா­கத்­தின் கீழ் மகா­வலி நீரின் உத­வி­யு­டன் பொரிய பண்­ணை­யொன்று அமைக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் செய்­தி­கள் கூறு­கின்­றன. இந்த இடங்­க­ளுக்கு வட­மா­காண சபை­யி­னரோ தமிழ் அர­சி­யல் வாதி­களோ செல்­ல­மு­டி­யாது.

இது முற்­று­மு­ழு­தாக இரா­ணுவ நோக்­கத்­து­டன் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஓர் எச்­ச­ரிக்கை ஏற்­பா­டா­கும். இனி எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் புலி­கள் போன்­ற­தொரு போராட்ட அமைப்பு காட்­டுக்­குள் பின்­த­ள­ மொன்றை வைத்­தி­ருக்­கா­த­வாறு தடுப்­பதே இதன் நோக்­க­மா­கும். அத்­து­டன் நிலமும் இரா­ணுவ உட­மை­யா­கி­வி­டும்.

தமி­ழர்­க­ளின் புறக்­க­ணிப்பு நிலை

முல்­லைத்­தீ­வி­லி­ருந்து திரு­கோ­ண­மலை வரை­யான கடற்­கரை ஓரங்­க­ளான அளம்­பில், கொக்­குத்­தொ­டு­வாய், கொக்­கி­ளாய், புல்­மோட்டை, திரி­யாய், புட­வைக்­கட்டு, குச்­ச­வெளி, கும்­பு­றுப்­பிட்டி, இறக்­கக் கண்டி, நிலா­ வெளி, உப்­பு­வெளி ஆகிய கரை­யோ­ரப் பகு­தி­களை கடற்­ப­டை­யின் கண்­கா­ணிப்­பில் வைத்­தி­ருக்க முனை­வ­தைப் போருக்­குப் பின்­பான காலங்­க­ளில் அவ­தா­னிக்­க­லாம்.

இதன் ஒரு கட்­ட­மா­கவே கொக்­கி­ளாய்ப் பகு­தி­யில் 300 சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைக் குடி­யேற்­றும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இதன் மூலம் காடும் கட­லும் இலங்கை அர­சின் கண்­கா­ணிப்­புக்­குள் உட்­பட்டு விட்­டது என்றே கொள்­ள­மு­டி­யும்.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்­குக் கிழக்கை எடுத்­துக்­கொண்­டால், 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இருந்து வடக்­கில் காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்­தும் மேற்­காக இர­ணை­தீ­வி­லி­ருந்­தும் தென்­கி­ழக்­கில் கஞ்­சி­கு­டிச்­சாறு பகு­தி­யி­லி­ருந்­தும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­கள் கார­ண­மா­க ஒதுங்­கிக்­கொண்டே வந்­த­னர். அவ்­வி­டங்­க­ளில் இரா­ணு­வம் நிலை­கொண்­டது. அதன் இறு­திப் புள்­ளி­யாக அல்­லது இறு­தித் தமிழ்க் கிரா­ம­மாக முள்­ளி­வாய்க்­கால் 2009 மே 19இல் இலங்கை இரா­ணு­வத்­தின் வச­மா­னது.

போராட்­டம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னர் தான் வன­வ­ளத் திணைக்­க­ளம், நில அள­வைத் திணைக்­க­ளம், தொல்­லி­யல் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம் போன்­றன தமது 30வருட கால நித்­தி­ரை­யைக் கலைத்­துத் துரித பணி­யில் இறங்­கின.
நிலமை இப்­ப­டி­யி­ருக்க, தமது இனப்­பெ­ருக்­கத்தை மிக மோச­மா­கக் குறுக்­கிக் கொண்­டுள்ள உள்­நாட்டுத் தமி­ழர்­கள், நாட்­டை­விட்டு வெளி­யே­றிக்­கொண்­டி­ருக்­கும் தமி­ழர்­கள் ஆகிய இரண்டு தரப்­பி­ன­ரா­லும் புதி­தாக ஒரு குடி­யி­ ருப்பை உரு­வாக்­கும் நிலை ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

தவிர, தமது நிலங்­க­ளில் இருப்­ப­து கூ­டக் கேள்­விக்­குள்­ளா­கின்­றது. இந்­த­வி­டத்­தில்­தான் யாழ்ப்­பாண மாவட்ட செய­ல­ரின் மேற் கூ­றிய கூற்­றைச் செய­லூக்­கப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

குறைந்த பட்­சம் தமக்­கெ­னப் பதி­வி­லுள்ள நிலத்­தி­லா­வது தமி­ழர்­கள் குடி­ய­ம­ர­ வேண்­டும். வெளி­நா­டு­க­ளில் இருந்து நிலங்­களை ஆட்­சி­செய்­வ­தற்­கும், பரம்­பரை நிலங்­க­ளைத் தரி­சா­கத் திறந்து கவ­னிப்­பா­ரற்­றுக் கிடக்­கச் செய்­வ­தற்­கும் முற்­றுப்­புள்ளி தேவை.

இத்­த­கைய நிலங்­கள் எதிர்­கா­லத்­தில் தமி­ழ­ரின் கைக­ளில் இருப்­பது சந்­தே­கமே. மக்­க­ளும் மக்­கள் பிர­தி­நி­தி­ க­ளும் தமது நிலத்­தில் நிலை­கொள்­வ­தைப் பற்­றி­யும் நிலை­ கொள்­வ­தற்கு ஏற்ப வசதி வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வதை, பெற்­றுக்­கொ­டுப்­ப­தைப் பற்­றி­யும் இனியும் சிந்­தித்துக் கொண்டிருக்க முடியாது. செயற்­ப­டுத்­து­வ­தற்கு விரை­தல் வேண்­டும்.

http://newuthayan.com/story/86788.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.