Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பின் மே தின பிர­க­ட­னமும் மேற்­கொள்ளவேண்­டிய நட­வ­டிக்­கையும்

Featured Replies

கூட்­ட­மைப்பின் மே தின பிர­க­ட­னமும் மேற்­கொள்ளவேண்­டிய நட­வ­டிக்­கையும்

 

தமிழ் மக்­களின் இறை­யாண்மை, சுய­நிர்­ணய உரிமை என்ற அடிப்­ப­டையில் சமஷ்டி கட்­ட­மைப்பில் தேசிய இனங்­களின் தன்­னாட்சி உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­யல்­யாப்பு அமை­ய­வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ள­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு இவ்­வாண்­டுக்குள் காணப்­ப­ட­வேண்டும் என்று அர­சாங்­கத்­தி­டமும் அர­சியல் கட்­சி­க­ளி­டமும் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது வடக்கில் யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி ஆகி­ய­ ப­கு­தி­க­ளிலும் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை பகு­தி­க­ளிலும் மே தினப் பேர­ணி­க­ளையும் கூட்­டங்­க­ளையும் நேற்று முன்­தினம் நடத்­தி­யி­ருந்­தது. இந்த மே தின பிர­க­ட­னத்­தி­லேயே தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பா­னது இந்­தக் ­கோ­ரிக்­கை­யினை முன்­வைத்­தி­ருக்­கின்­றது.

இந்தப் பிர­க­ட­னத்தில் அர­சியல் தீர்வு உட்­பட தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள கூட்­ட­மைப்­பா­னது இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அர­சியல் தீர்வு தொடர்பில் கூட்­ட­மைப்­பா­னது தனது நிலைப்­பாட்டை பிர­க­ட­னத்தில் விளக்­கி­யுள்­ளது. அதில் இலங்கை நாட்டில் கடந்த 60 ஆண்­டு­க­ளுக்கு மேலாக தமிழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு ஏற்­ப­டாத கார­ணத்­தினால் இடம்­பெற்று வரும் ஜன­நா­யக வழிப்­போ­ராட்­டங்­க­ளி­னாலும் ஆயு­தப்­போரின் விளை­வு­க­ளி­னாலும் 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை­யான ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்­மா­னங்­க­ளி­னாலும் சர்­வ­தேச சமூ­கத்தின் தலை­யீ­டு­க­ளி­னாலும் இலங்கை இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு ஏற்­ப­ட­வேண்டும் என்ற அடிப்­ப­டையில் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

இருந்­த­போ­திலும் தமி­ழினப் பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தர தீர்வு ஏற்­ப­ட­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு ஒன்றை மிக­வி­ரைவில் இவ்­வாண்­டுக்குள் ஏற்­ப­டுத்த வேண்­டு­மென அர­சி­டமும் அர­சியல் கட்­சி­க­ளி­டமும் அனைத்து சமூ­கங்­க­ளி­டமும் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் இந்த மே நாள் மாநாடு வேண்­டுகோள் விடுக்­கின்­றது. அந்த அர­சியல் தீர்­வா­னது ஒரு­மித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்­களின் இறை­யாண்மை, சுய­நிர்­ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் சமஷ்டிக் கட்­ட­மைப்பில் பிராந்­தி­யங்­க­ளி­னதும் தேசிய இனங்­க­ளி­னதும் தன்­னாட்சி உரித்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமை­ய­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­து­கின்றோம் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் வர­லாற்றில் தோல்வி கண்­டுள்­ளன. தமிழ் மக்கள் தமது உரி­மை­களைப் பெறு­வ­தற்­காக மூன்று தசாப்­த­கா­ல­மாக ஜன­நா­யக ரீதி­யிலும் மூன்று தசாப்­த­கா­லமாக ஆயு­தப்­போ­ராட்­டத்தின் மூலமும் முயற்­சித்­தனர். இத்­த­கைய முயற்­சிகள் பல­ன­ளித்­தி­ருக்­க­வில்லை. மூன்று தசாப்­த­ கா­ல­மாக இடம்­பெற்ற யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த போதிலும் அந்த போராட்­டத்தின் தாக்­க­மா­னது நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அழுத்­தத்தை முன்­கொண்­டு­வந்­தி­ருந்­தது. யுத்­தத்தின் கார­ண­மாக ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து சர்­வ­தேசம் வலி­யு­றுத்தும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. மொத்­தத்தில் இந்தப் போராட்­ட­மா­னது இலங்கை விவ­கா­ரத்தில் சர்­வ­தே­சத்தின் தலை­யீட்­டுக்கு வழி­வ­குத்­தி­ருந்­தது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக 2012 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரே­ர­ணைகள் நிறை­வே­று­வ­தற்கும் சர்­வ­தேச அழுத்­த­மா­னது இலங்கை மீது திணிக்­கப்­ப­டு­வ­தற்கும் யுத்­தமே கார­ண­மாக அமைந்­தது. இவ்­வா­றான சர்­வ­தேச அழுத்தம் ஏற்­பட்­டி­ருந்த நிலை­யில்தான் 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பத­வி­யேற்­றி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம்­ தி­கதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தமிழ் மக்கள் தமது பூரண ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தனர். இந்த தேர்­த­லின்­போது பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­ற­துடன் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­தற்­கான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­வுடன் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர்.

தமிழ் மக்­களைப் போன்றே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை உட­ன­டி­யாக காண முடியும் என்று நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். 2016 ஆம் ஆண்டு இறு­திக்குள் அர­சியல் தீர்வு காணப்­படும் என்று அவர் பகி­ரங்­க­மா­கவே நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், அவ­ரது நம்­பிக்கை தற்­போது வீண்­போ­யுள்­ளது. ஆனாலும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான செயற்­பா­டுகள் நடை­பெற்­றுள்­ளன. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்டு உப­குழுக்­களும் அமைக்­கப்­பட்­ட­துடன் அதி­காரப் பகிர்வு குறித்தும் ஆரா­யப்­பட்­டது.

இந்த அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­களைச் சேர்ந்த 21 உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இதில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனும் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான எம்.ஏ. சுமந்­தி­ரனும் அங்கம் வகிக்­கின்­றனர். வழி­ந­டத்தல் குழுவில் அதி­காரப் பகிர்வு குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதன்­போது தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய திட்ட வரைவு­களை கூட்­ட­மைப்­பினர் முன்­வைக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு மாற்றுத் தரப்­பி­னரால் எழுப்­பப்­ப­டு­கின்­றது.

தற்­போது வெளி­யா­கி­யுள்ள புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தை பகிரும் வகை­யி­லான யோச­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் சமஷ்டி தீர்வு தொடர்­பிலோ அல்­லது வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்தோ எந்த அம்­சங்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. ஆனாலும் அதி­காரப் பகிர்வு யோச­னைக்குள் சமஷ்டி என்ற சொல் பாவிக்­கப்­ப­ட­வில்­லையே தவிர, சமஷ்­டியை ஒத்த அம்­சங்கள் அதில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் மத்­தி­யிலும் மாநி­லத்­திலும் அதி­கா­ரத்தைப் பகிரும் யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்­பினர் விளக்­க­ம­ளித்து வரு­கின்­றனர்.

இத­னை­விட பிராந்­தி­யங்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்­தினால் மீளப்­பெற முடி­யாத வகையில் யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்­பினர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். ஆனால், மாற்­றுத்­த­ரப்­பினர் கூட்­ட­மைப்­பி­னரின் இத்­த­கைய விளக்­கங்­களை நிரா­க­ரித்து வரு­கின்­றனர்.

இத்­த­கைய நிலை­யில்தான் தற்­போது தமிழ் மக்­களின் இறை­யாண்மை, சுய­நிர்­ணய உரிமை என்ற அடிப்­ப­டையில் சமஷ்டி கட்­ட­மைப்பில் தேசிய இனங்­களின் தன்­னாட்சி உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சியல் யாப்பு உரு­வா­க­வேண்டும் என்றும் இந்த வரு­டத்­திற்குள் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்றும் கூட்­ட­மைப்பு தனது மேதினப் பிர­க­ட­னத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றது.

கூட்டமைப்பானது தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இத்தகைய கோரிக்கைகளையே முன்வைத்து வந்திருக்கின்றது. வடமாகாண சபைத் தேர்தலின்போதும் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டிருந்தன.

ஆனால், புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுக் கூட்டங்களின்போது இவ்வாறான வலியுறுத்தல்களை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கின்றது.

எனவே, தமிழ் மக்களுக்கான உரிய தீர்வைப்பெறுவதற்கு கோரிக்கைகளை மட்டும் முன்வைக்காது அதனைப் பெறு­வதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது இதயசுத்தி­யுடன் செயற்படவேண்டும். அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். சர்வதேசத்தின் ஆதரவுடன் தீர்வைக் காண்பதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் இனியாவது கூட்டமைப்பின் தலைமை அக்கறையுடன் செயற்படுவது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.