Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி

Featured Replies

21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு  இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

31961544_10209502571355895_6103413737551

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுகளும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி உத்தியோகபூர்வ சபை அமர்வை ஆரம்பித்து விட்டு ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையும் ஆற்றினார். 

32089900_10209502571235892_4052497532939

அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்துக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வினை ஒத்திவைத்தார். இதன்பிரகாரம்  இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. 

32207265_10209502570835882_2462285724091

இரண்டாவது அமர்வினை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ், இராணுவம மற்றும் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

32130381_10209502570555875_6816064007275

இந்த  அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இராணுவ மரியாதையுடன் பாராளுமன்றத்திற்கு 1.31 மணிக்கு  வருகை தந்தார். இவரை பாராளுமன்றத்தின் செயலாளர் தம்பிக்க தஸநாயக்க வரவேற்றார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1.40 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இவரை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். 

32116427_10209502570755880_9192705085598

அத்துடன் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய நேரத்தில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததுடன்  பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவிந்திர விஜேகுணவர்தன, இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர உட்பட முப்படைகளின் பிரதானிகள் கலந்து கொண்டு சபாபீடத்தின் பார்வையாளர் களரியில் அமர்ந்திருந்தனர். அதுமாத்திரமின்றி சர்வமத தலைவர்களும் பார்வையாளர் களரி அமர்ந்திருந்தனர். மேலும் வெளிநாட்டு தூதுவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. 

32083151_10209502570115864_2832515555729

எனினும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வருகை தரவில்லை என்பது விசேட அம்சமாகும்.

http://www.virakesari.lk/article/33246

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.