Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளின் தாக்குதலிலும் அரசியல் லாபம் தேடும் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகளின் தாக்குதலிலும்

அரசியல் லாபம் தேடும் முயற்சி `

கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல், தென்னிலங்கையில் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக் கும் அதேசமயம், பெரும் வாதப் பிரதிவாதங்களை யும் தோற்றுவிக்கத் தவறவில்லை.

தென்னிலங்கைத் தேசமே பெரும் அச்சுறுத் தலை எதிர்கொண்டிருக்கும் இச்சமயத்தில், குறு கிய அரசியல் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு, "பயங்கரவாதத்திற்கு' எதிராக ஒன்றுசேர்ந்து எழுமாறு சகல அரசியல் கட்சிகளையும் மக்களை யும் பகிரங்க அறிக்கை மூலம் அரசு ஒருபுறம் கோருகின்றது.

ஆனால், மறுபுறத்திலோ, இந்த நெருக்கடி விவகாரத்தை கையாளும்படி அரசினால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்களே, இந்த விடயத்திலும் தமது குறுகிய அரசியல் வேறுபாடுகளை சாதித்துக்காட்ட விடாப்பிடியாக நிற்கின்றார்கள்.

முழுத்தேசமுமே இந்த விவகாரத்தில் பெரும் நெருக்கடியையும், அச்சுறுத்தலையும் எதிர்கொண் டிருப்பதாக அரசுத் தலைமை கூறினாலும், அத் தகைய விவகாரத்தில் கூட தமது அரசியல் குளறு படித் தனத்தைக் காட்டுவதற்கு அமைச்சர்கள் பின்நிற்கவில்லை.

தங்களது குறுகிய அரசியல் சுயலாபங்களுக் காக தேசிய இனப்பிரச்சினையையே மிக மோச மாகக் கையாண்டமைதான் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் வரலாறு.

அதனால்தான் இந்த இலங்கைத்தீவு இன்று எதிர்கொள்ளும் அவலநிலைமை இவ்வளவு மோச நிலையை அடைந்தது. அத்தகைய பட்டறி வின் பின்னரும் அந்தப் புத்தியிலிருந்து அந்தப் போக்கிலிருந்து தென்னிலங்கை அரசி யல்வாதிகள் திருந்தவேயில்லை, திருந்தப்போவதே யில்லை என்பதை அவர்களது தற்போதைய நட வடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர் பதவிகளி லிருந்து இரண்டு மூத்த அரசியல் பிரமுகர்கள் அண்மையில் கழற்றிவிடப்பட்டனர். அரசுத் தலைமையோடு அவர்கள் இருவருக்கும் ஏற் பட்ட கருத்து முரண்பாடு பெரும் அரசியல் பிணக் காக வெளிப்பட்டது.

அதையடுத்து, அரசின் உள்வீட்டு விவகாரங் கள் மற்றும் ஊழல், மோசடி பற்றிய தகவல்களை இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் மெல்ல மெல்ல அவிழ்த்து விடத் தொடங்கினர்; அம்பலப் படுத்த ஆரம்பித்தனர்.

அவற்றின் ஒரு கட்டமாக, அரசு அண்மையில் மேற்கொண்ட "மிக்' விமானக் கொள்வனவில் பெரும்தொகைப் பணம் பல நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதாக அந்த இரு வரும் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாடு பற் றிய விவரங்கள் பரபரப்புச் செய்திகளாகின. இந்த ஊழலில் பிரதான குற்றச்சாட்டு விரல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜ பக்ஷவை நோக்கியே நீண்டது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தின் மீதான வான் புலி களின் தாக்குதல் இடம்பெற்றதும் அந்தத் தேசி யப் பாதிப்பிலும் அரசியல் லாபம் எனும் குளிர்காயப் புறப்பட்டு விட்டார்கள் அரசின் அமைச்சர்கள்.

"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது' போல அமைந்தது அவர்களது குற்றச்சாட்டு.

அரசின் "மிக்' விமானக் கொள்வனவு தொடர் பாக முன்னாள் அமைச்சர்கள் வழங்கிய தகவல் களே மேற்படி கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலுக்கு உதவின என்ற சாரப்பட அரசியல் குற்றச்சாட்டு அரசின் மூத்த அமைச்சர் ஒருவரினால் பகிரங்கமாகச் சுமத்தப்பட்டது.

தங்களுடைய தவறான அரசியல் அணுகு முறையினாலும், செயற்றிறனின்மையாலும், கையாலாகத்தனத்தாலும் தேசத்துக்கு ஏற்படும் இழப்புகளையும் பாதிப்புகளையும் இவ்வாறு எதிரணி அரசியல்வாதிகள் மீதும் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதும் குற்றம் சுமத்தி, அதன்மூலம் அப்பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்வது தென்னிலங்கை ஆட்சியாளரின் வழிவழி வந்த பண்பு.

இப்படி முன்னாள் அமைச்சர்கள் மீது பொறுப் பற்ற முறையில் குற்றம் சுமத்தி, பொறுப்பிலிருந்து தங்களைத் தவிர்த்துக்கொண்டு, "இவ்வாறான தேசிய அச்சுறுத்தலுக்கு எதிராகக் குறுகிய அரசி யல் லாபங்களைத் துறந்துவிட்டு ஒன்றுபட்டு எழுக!' என்று அரசு மக்களைப் பார்த்து அறிவிப் பது அபத்தமானது.

அதுவும் புலிகளின் வான் தாக்குதலை அடுத்து, அரசின் கருத்தைத் தெரிவிப்பதற்குக் கூட்டப்பட்ட முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டி லேயே இவ்வாறு குறுகிய அரசியல் லாப நோக் கில் அரசுத் தலைவர்கள் நடந்துகொண்டு, மறு புறத்தில் குறுகிய அரசியல் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு ஒன்றுபடுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதில் அர்த்தமேயில்லை.

அர்த்தமேயில்லாத இத்தகைய குற்றச்சாட்டு கள் சுமத்தப்படும்போது, அவற்றுக்கு முக்கியத்து வம் கொடுத்து, அவற்றை உள்வாங்கும் "அரசி யல் பாமரத்தனம்' தென்னிலங்கையில் நிலவும் வரை சரியான அரசியல் விழிப்புணர்வு தென் னிலங்கைக்கு ஏற்படாதவரை (அது ஏற்படுமா என்பது சந்தேகமே) இத்தகைய வாய்வீச்சு அர சியல் உளறல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வரவேற்பும், அவர்களது அர்த்தமற்ற அலட்டல் களுக்கு குறுகிய அரசியல் லாபங்களும் கிடைப் பதும் தவிர்க்க முடியாததாகும்.

உதயன்

Edited by கறுப்பி

இது பயங்கரவாதமில்லை சார். உரிமைக்கான ஒரு இனத்தின் போராட்டம் சார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சாட்டர்ல எங்கேயாவது சின்ன எழுத்திலை போட்டிருப்பாங்களே.

அடக்கப்பட்ட மனிதன் தனது இழந்த உரிமையை மீட்டெடுக்க தன்னால் இயன்ற அனைத்து வழியையும் பயன்படுத்திப் போராடும் உரிமை உண்டு என்று. அதைத் இப்ப தூக்கிப்புட்டாங்களா சார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி சொல்லுங்கோ நொர்வேயியன் இது உரிமைக்காகவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.