Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவசேனை அடிப்படைவாத இயக்கம்: பௌத்தர்களும் இந்துக்களும் எதிர்கொண்டுள்ள சவால்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ffd.png

தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
(லக்மல் ஹரிஸ்சந்திர, Colombo Telegraph)

‘வெறுப்புணர்ச்சி என்பது நாம் தாங்கிக் கொண்டு திரிகின்ற வீண் சுமை. அது வெறுக்கப்படுபவரை விட வெறுப்பவருக்கே அதிக இன்னல் தரும்’ என்பது மேற்கத்தேய தத்துவவியலாளர் ஸ்கொட்கிங் என்பவற்றின் பிரபலமான கூற்றாகும்.


 ஏலவே முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்கள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தறிகெட்டுத் தலைவிரித்தாடுகின்ற சமகால இலங்கை சமூகத்தில், புதிதாக முளை விட்டிருக்கின்ற இந்து அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம், இந்து சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வை மேலும் தூண்டி விடும் நோக்கத்தை உட்கிடக்கையாகக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதற்கு ஒருவர் ஏவுகணைத் தொழில்நுட்பம் அறிந்திருக்க வேண்டியதில்லை.


அண்மையில் திருகோணமலை இந்துப் பாடசாலை ஒன்றில் முஸ்லிம் ஆசிரியை அபாயா ஆடை அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக எழுந்த போராட்டங்களால் ஏலவே முறுகலில் இருந்த இன உறவுகளில் மேலும் கசப்புணர்வுகளைத் தோற்றுவித்தன. இதன் பின்னணியில் சிவசேனை அமைப்பும் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. 


அதனையடுத்து, சாவகச்சேரி பிரதேசத்தில் மாடறுப்பு தொடர்பில் எதிர்ப்பு வாதம் ஒன்றை சிவசேனை இயக்கத் தலைவர் முன்வைத்துள்ளமை நிலைமையை மேலும் விகாரமாக்கியுள்ளது. பெரிதும் பரிச்சயமில்லாத தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் முன்வைத்துள்ள கருத்துக்கள் காட்டுமிராண்டித்தனமானவை.


அவர் குறிப்பிடுகையில், பெரும்பான்மையான சிங்களவர்கள், இந்துக்கள் பின்பற்றும் நடைமுறைகளை அனுசரித்துப் போக முஸ்லிம்கள் மாட்டார்களானால் அவர்கள் நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் எனும் குறைமதிக் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.


முஸ்லிம்கள் என்பவர்கள் இந்நாட்டில் பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக எமது நாட்டுப் பிரஜைகளாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் சுதேசிகள் என்பதை ஒருகணம் அவர் மறந்துவிட்டார் போலும். முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள பௌத்த அடிப்படைவாத குழுக்களின் பேச்சுக்களில் மாத்திரமே இவ்வகையான இஸ்லாமோபோபிய கருத்துக்களைக் கேட்டு வந்த எமக்கு இவர்களது எதிர்ப்பு வாதம் புதுமையாகவே உள்ளது.


திகன இனவாத நடவடிக்கையைத் தொடர்ந்து எழுந்துள்ள இவ்விரண்டு கசப்பான நிகழ்வுகளும் முன்னையதற்கு முற்றிலும் தொடர்புபடாத இயற்கையானதொன்றாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. பொதுபலசேனா மற்றும் சிங்ஹ லே போன்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத இயக்கங்கள் கூறும் முஸ்லிம் வெறுப்புக் கருத்துக்களும் சிவசேனை அமைப்பின் கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்ற வகையில், சிவசேனையுடன் சிங்கள பௌத்த அடிப்படைவாத குழுக்கள் சில கைகோர்த்து ஒருங்கிணைப்புடன் இயங்குவது தெளிவாகின்றது.   


மும்பாயின் இனவாத கிளர்ச்சிக் குழுவான ‘சிவசேனா’ அமைப்பு இலங்கையின் இனவாத கிளர்ச்சி இயக்கமான சிவசேனை அமைப்புக்கு தமது ஆதரவை விஸ்தரிப்பதாக 2016 இல் பகிரங்க அறிவிப்பு விடுத்தது.
அத்துடன் பிரிவினைவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து,  தமது செல்வாக்குகளை பிரயோகித்து ஏலவே உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய காயங்களில் இருந்து இன்னும் ஆறாத இலங்கை மக்களிடம் மேலும் குழப்பங்களையும் பிரிவினைகளையும் தோற்றுவிக்க முயன்றது.


போராளி இயக்கங்களின் குணவியல்புகளைக் கொண்ட சிவசேனை அமைப்பானது, யுத்த வெற்றிக்கு பின்னர் வடக்கில் நிலவி வரும் சுமுக நிலையை தலைகீழாக மாற்றிவிடுவதோடு தமிழர்களுக்கு மத்தியிலும் பிரிவினைகளை ஏற்படுத்தி விடும் என்பதில் அப்போதே வடக்கு வாழ் பொதுமக்கள் விழிப்புடன் கரிசனைகளை முன்வைத்தனர். 


வடக்கில் இயங்கும் சிவசேனை அமைப்பின்  தலைவர் சச்சிதானந்தன் முன்னர் ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவிக்கையில், தமக்கு இந்தியாவிலிருந்து பாரிய ஆதரவுகள் கிடைத்திருப்பதாகவும் குறிப்பாக BJP (பாரதீய ஜனதா கட்சி), VHP (விஷ்வ இந்து பரிசத் தேசியவாத அமைப்பு), RSS இந்துத்துவா அமைப்புக்கள் கரம் நீட்டியுள்ளதாக கூறியிருந்தார்.
அத்துடன் முஸ்லிம்களுக்கெதிராக போராடுவதில் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட போவதாக சிவசேனை இயக்கத்தின் தலைவர் சச்சிதானந்தன் அண்மையில் கூறியிருந்தார்.


எனினும்,  இந்தியாவின் பிரிவினைவாத இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவு பெற்ற சிவசேனை போன்ற இயக்கங்கள் உண்மையில் பௌத்த மதத்திற்கும் எதிரானவையே. சிங்கள  பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களுடன் இணைந்து பலம் பெற்று பின்னர் பிற்காலத்தில் பௌத்த மதத்தையும் எதிர்த்துப் போராடுவதே இவ்வாறான இயக்கங்களின் உள்நோக்கமாகும். 
மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்தின் ரணங்கள் இன்னும் ஆறா வடுக்களாக வீழ்ந்து படிந்திருக்கும் இந்நிலையில் இனிமேலும் அவ்வாறானதோர் அழிவை ஏற்படுத்த முனையும் எந்தவோர் அறிகுறி தொடர்பிலும் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணமிது.


சென்ற  ஆட்சிக் காலத்தின்போது சில உயர்மட்ட அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் முஸ்லிம்களுக்கெதிரான பிரசாரங்களை ஆரம்பித்து, வெறுப்புப் பேச்சுக்களை கக்கிய வகையில் முஸ்லிகளுக்கு எதிராக மத ரீதியான எதிர்ப்புப் போக்குக்கு வித்திட்டது பொதுபலசேனா இயக்கம் என்பது நிதர்சனம்.


அதன் விளைவு முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகளுக்கும் அதன் மூலம் பாரிய அழிவு, பொருட்சேதங்களுக்கும் இட்டுச் சென்றது என்பதையும் நாம் அறிவோம். இவ்வாறான இன முறுகல்கள் மேலும் எமது நாட்டின் ஐக்கியத்தையும் அமைதியையும் சிதறடிக்கக் கூடாது என்பதில் நாம் உன்னிப்பாக இருக்க வேண்டும்.


சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபலசேனா இந்நாட்டுக்கு எவ்வாறு வேண்டாமோ அதேபோல மத அடிப்படையிலான சிவசேனை இயக்கமும் இந்நாட்டுக்கு தேவையற்றது என்பதில் இன, மத வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.


 தேசிய நல்லிணக்கம் எனும் சுலோகத்தில் கட்டியெழுப்பப்பட்ட நடப்பு ஆட்சியிலும் கூட சிங்ஹ லே இனவாத அமைப்பு மற்றும் அமித், பிரசாத் போன்ற தனிநபர்களின் வெறுப்புப் பேச்சுக்கள் முஸ்லிம்களுக்கெதிரான திகன இனவாத நடவடிக்கைக்கு வழிகோலியது.
 

www.madawalaenews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.