Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சென்னை, மார்ச்.29-: இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் அன்றாடம் விமானத் தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது இலங்கைக்கு மட்டுமின்றி தெற்காசியப் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் என்று அலறத் தொடங்கியிருக்கின்றன.

இலங்கை அரசும், சிங்கள அரசியல் இயக்கங்களும் கூறி வருவதைப் போன்று விடுதலைப் புலிகளின் விமானங்களால் இந்தியாவுக்கோ அல்லது இதர தெற்காசிய நாடுகளுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதற்கு மாறாகப் பாகிஸ்தான் ராணுவ ஆலோசகர்களும், விமானிகளும், அவர்கள் அளித்துள்ள போர் விமானங்களும் இலங்கை படை வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து.

நார்வே நாட்டின் முன்முயற்சியுடன் நடந்து வந்த அமைத்திக்கான பேச்சுவார்த்தையைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்டு சொந்த நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது முப்படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்திப் பல்லாயிரக்கணக்கான மக்களை இலங்கை அரசு கொன்று குவித்து வருகிறது. அத்துடன் போக்குவரத்திற்குப் பயன்படும் பிரதான சாலையை மூடிப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களை பட்டினி போட்டு சாகடித்து வருகிறது.

இன்னும் சில நாட்களுக்குள் சர்வதேச சமூகம் அத்தியாவசியப் பொருட்களை அவசரமாக அனுப்பி வைக்காவிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்து மடிவதைத் தவிர்க்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வாழ்ந்து வந்தவர்கள் என்பதை மறந்துவிட்டு போஸ்னியா மக்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தி ஒரு இனத்து மக்களை கொன்று குவித்த செர்பிய நாட்டின் முன்னாள் அதிபர் மிலோஸ்விக்கின் கொடுங்கோன்மைக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தற்போதைய நடவடிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மிலோஸ்விக் எத்தகைய குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரோ அத்தகைய குற்றங்களையெல்லாம் ராஜபக்சே புரிந்து வருகிறார். எனவே, அவரது உபதேசத்திற்கும், அலறலுக்கும் இந்திய அரசோ, சர்வதேச சமூகமோ செவிசாய்க்கக் கூடாது.

ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அதற்கு இதுவரையில் அவர்கள் கொடுத்துள்ள விலை போதும். எனவே, இந்தியாவும், சர்வதேச சமூகமும் இனியும் நடப்பது நடக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்காமல் சமரசப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும். இல்லையென்றால், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்குள் தழைந்துவிடும். இந்த ஆபத்தைத் தடுக்க இந்திய அரசு சமரசப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும்.

இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களைக் காக்க அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், மருந்து பொருட்களையும் இந்திய அரசு, செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் தமிழீழ பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி - விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.