Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம்

Featured Replies

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம்

 

அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டின் பிரபல Time நாளிதழ் நாளிதழ், ஜூலை 2 பிரதியின் அட்டைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல புகைப்படக்கலைஞர் ஜான் மூர் என்பவர் எடுத்த புகைப்படம் விருதுகளைக் குவித்து வருகிறது.

இதில், ஒரு அகதியின் 2 வயது பெண் குழந்தை அழுதுகொண்டு இருக்கும் அந்தப் புகைப்படத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ இணைத்து, ”அமெரிக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வாசகத்துடன் தலைப்பிட்டு Time நாளிதழ் வெளியிட்டுள்ளது.

 

trump.jpg

 
 

https://www.newsfirst.lk/tamil/2018/06/பரபரப்பை-ஏற்படுத்தியுள்/

  • தொடங்கியவர்

'கண்ணீர் சிந்தும் சிறுமி தாயிடம் இருந்து பிரிக்கப்படவில்லை'

ஆவணங்கள் இல்லாத குடியேறிகள், அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் கைதுசெய்யப்படும்போது, பெற்றோர் மற்றும் குழந்தைகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்படுவது குறித்த டிரம்பின் கொள்கைக்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சிறுமியின் படம் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த சிறுமியின் படம் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது

அமெரிக்கப் புலம்பெயர்ந்த குடியேறிகள் குடும்பங்கள் சந்தித்த பிரச்சனையை வெளிப்படுத்துவதாக இருந்த ஒரு சிறுமியின் புகைப்படம், அனைவருக்கும் நிலைமையின் தீவிரத்தை புரியவைத்தது. இந்த சிறுமியின் அமெரிக்க எல்லையில் தனது தாயிடமிருந்து பிரிக்கப்படவில்லை என சிறுமியின் தந்தை கூறுகிறார்.

ஒரு இளஞ்சிவப்பு ஜாக்கெட் அணிந்த தளிர் நடை பயிலும் ஹோண்டுரா நாட்டு குழந்தையின் புகைப்படத்தை தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட டைம் பத்திரிகை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்த குழந்தையை பார்த்து: "அமெரிக்கா வரவேற்கிறது" என்று கூறுவதுபோல் சித்தரித்திருந்தது.

ஆனால் உண்மையில் அந்த குழந்தை, பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவர் இல்லை.

இந்தப் புகைப்படம் டெக்சாஸின் மெக்கலனில் வசிக்கும் ஜான் மூரே என்ற புகைப்படக் கலைஞர் கெட்டி இமேஜஸ் என்ற செய்தி நிறுவனத்திற்காக எடுத்த புகைப்படம் அது.

புலிட்சர் பரிசு வென்ற ஜான் மூரே பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பிறகு ரயோ கிராண்டேவை படகு ஒன்றில் கடந்து வந்தார் என்றும், அதன் பிறகு, அவர்கள் தடுத்து வைத்துப்பட்டதாகவும் தெரிவித்தார். அவர்கள் எல்லை ரோந்து படையினரால் கொண்டுச் செல்லப்பட்டதாக மூரே கூறுகிறார்.

யானெலாபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடெனிஸ் வலேரா (இடது), சான்ரா சான்சேஸ் (வலது) மற்றும் சிறுமி யானெலா டினைஸ். இந்த தம்பதிக்கு ஹோந்துராஸில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்திய குடியேறிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கும் கொள்கைக்கு எதிராக இந்த புகைப்படம் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியது.

டெக்சாஸை சேர்ந்த அகதிகள் மற்றும் கல்வி மற்றும் சட்ட சேவைகள் குடியேற்ற மையம் என்ற லாப நோக்கற்ற அமைப்பு, பேஸ்புக் மூலம் லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து 17 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி திரட்டுவதற்கு இந்த புகைப்படம் உதவியது.

"அமெரிக்க எல்லையில் குழந்தைகளை பிரிக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையின் சின்னமாக என் மகள் மாறிவிட்டார்" என்று டெனிஸ் வலேரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

"அதிபர் டிரம்ப்பின் இதயத்தையும் என் மகளின் புகைப்படம் தொட்டிருக்கலாம்."

"அந்த தருணத்தில் அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்பவர்களின் இதயத்தை உடைப்பதாக அந்த புகைப்படம் இருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

 
 

We all know how proud @realDonaldTrump is of his @TIME
magazine covers. Will he be proud of his latest one?

 

அடைக்கலம் கோரி அமெரிக்கா சென்ற தனது மனைவியுடன் மகள் இருப்பதாக கூறும் வலேரா, இருவரும் எல்லை நகரான மெக்கலெனில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

ஹோண்டுரா நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் நெல்லி ஜெரெஜ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வலேரா கூறிய செய்தியை உறுதிப்படுத்துகிறார்.

சான்செஸ் மற்றும் அவரது மகளை தடுத்து நிறுத்திய எல்லை ரோந்துப் பணியாளர் கார்லோஸ் ரூயிஸ், பரிசோதனை செய்வதற்காக குழந்தையை கீழே இறக்கிவிடுமாறு தாயிடம் கூறினார்.

"கீழே இறக்கிவிடப்பட்டதுமே குழந்தை அழுகத் தொடங்கினாள்" என்று கூறிய ரூயிஸ், "பிரச்சனை ஒன்றும் இல்லையே, எல்லாம் சரியாக இருக்கிறதா? குழந்தை சரியாக இருக்கிறாளா?" என்று நான் தனிப்பட்ட முறையில் அந்த பெண்ணிடம் கேட்டேன் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த தாய், "ஆமாம், அவள் களைப்பாகவும் தாகமாகவும் இருக்கிறாள், இப்போது இரவு 11 மணி" என்று சொன்னார்.

அந்த சிறிய குழந்தை இரண்டு வயது யானெலா டெனிஸ் என்று டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்தது.

தன்னிடமோ தங்களின் மற்ற மூன்று குழந்தைகளிடமோ எதுவுமே தெரிவிக்காமல், தனது மனைவி சான்செஸ், மகளை அழைத்துக் கொண்டு, ஹோண்டுரா நகரை விட்டு வெளியேறிவிட்டதாக வலேரா கூறுகிறார்.

Yanela Deniseபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் தனது தாய் சான்ரா உடன் சிறுமி யானெலா

அமெரிக்காவில் வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மனைவி அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்று நம்புவதாக வலேரா கூறுகிறார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய வலேரா, "தாயிடம் இருந்து குழந்தையை பிரிக்காமல் அவர்கள் நாடு கடத்தப்பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சொல்கிறார்.

டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், எல்லையை கடக்க உதவிய கடத்தல்காரனுக்கு சான்செஸ் $ 6,000 தொகையை கொடுத்திருக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.

அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, வலேராவுக்கு 14, 11 மற்றும் 6 வயதில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

"நடப்பதை குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடக்கும் என்று குழந்தைகள் கவலைப்படுகின்றனர். ஆனால் நான் அதை அதிகரிக்க முயற்சி செய்யவில்லை. தாயும், சகோதரியும் இப்போது பாதுகாப்பாக இருப்பது அவர்களுக்கு தெரியும்."

https://www.bbc.com/tamil/global-44582073

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.