Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'''போரா ...சமதானமா..? குழப்பத்தில் மகிந்தா...''

Featured Replies

:lol:'''போரா ...சமதானமா..? குழப்பத்தில் மகிந்தா...''

இலங்கை அரசு தனது இழப்புக்களை

அவமானத்தை மறைக்க ஒரு பாரிய வலிந்து தாக்குதலை தொடுத்து

அதன் ஊடாக வெற்றி செய்தி ஒன்றை சிங்கள மக்களிற்கும் உலகிற்கும்

சொல்ல முற்படுகிறது ஆயினும் என்ன யாவும் தோல்வியில் முடிகிறது.

கடந்த விமான தாக்குதலை அடுத்து தனது பாதுகாப்பில் பாரிய

இடை வெளி உண்டு என்பதை ஒத்து கொண்ட படைகள் அவற்றை நிவர்த்தி செய்ய

பாரிய படை கலங்களை வேண்டி குவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன அன்றி

உள்ளவற்றை சரியான முறையில் செயற்படுத்த வைத்துள்ளது.

ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பு படைகளின் நிலைகளையும் தற்போது தக்க வைத்து கொள்ள

முடியுமா என்ற வினா அரச படை மட்டத்தில் எழுந்துள்ளது.

இந்த வினாவிற்க்கு விடையை தேடினால் அவை கடந்த ஓயாத அலைகளை அப் படைகளுக்ககு

நினைவு படுத்துகிறது.

கடந்த காலங்களில் பலத்த மௌனம் காத்த புலிகள் தற்போது சுறு சுறுப்பாக இயங்க

ஆரம்பித்திருப்பதும் அடுத்த கட்ட போரியல் பரி மாணத்திற்குள் அவர்கள் நுழைந்திருப்பதும்

பலத்த சங்கடத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது அரசை.

பேச்சா..போரா..?? என்ற நிலைக்கு தற்போது தாங்களே வர வேண்டிய ஒரு புற சூழலை

இந்த தாக்குதல் தோற்றுவித்துள்ளது. வடக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பை. வளங்கலை

இனி வரும் காலங்களில் தடையின்றி நடாத்த முடியுமா என்ற ஒரு ஜய நிலை சிங்கள மட்டத்தில்

எழுந்துள்ளது.

இவ்வாறான தொடர் முற்றுகைக்குள் புலிகள் தொடர்ந்தும் அரச இயந்திரத்தை

முடக்குவார்களாயின் வடக்கு படைகளின் நிலை பரிதாபத்துற்குரிய ஒன்றாகவே இருக்கும்.

முல்லை தள வீழ்ச்சியின் பின் புலிகள் கை தாவிய ஆட்லெறி பீரங்கிகள் தற்போது

பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்து ஆட்டம் காண தொடங்கிய படைகளிற்கு.

தற்போது புலிகளின் விமான படையின் பாய்ச்சல் பெரும் அதிர்வை கொடுத்துள்ளது.

உடல். உளவியல் ரீதியில் கடுமையாக பாதிப்புற்றிருக்கும் படைகள் மத்தியில்

பாரிய ஒரு தாக்குதலின் ஊடாக அதனை இல்லாது ஒழித்து விடலாம் என அரசு நம்புகிறது.

ஆனால் அடுத்தடுத்து புலிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதலால் அவை தகர்ந்து போகின்றன.

தற்போது இலங்கையில் உள்ள எந்த ஒரு படைத் தளங்களுக்கும் பாது காப்பு இல்லையென்றான பின்

அடுத்து வரப் போகும் களமுனை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்பது ஒரு புறம் இருக்க.

இது வரைகாலமும் இராணுவத்தினருடன் போரிட்டு வந்த புலிகள் தற்போது அரச இயந்;திரத்தின்

பொருளாதார இலக்குகள் மீது குறிவைத்து நடாத்தப் படும் தாக்குதலால் அவை மந்தமடையும்

நிலை வந்துள்ளதால் அந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத நிலையும்

மீண்டும் மீண்டும் கடனுக்கு நாட்டை அடைமானம் வைக்கும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.

சமரசம் என்ற போர்வையில் சண்டையை தொடங்கிய அரசுக்கு தற்போது பேச்சு மேசைக்கு

வர வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது. அவ்வாறு வருகின்ற பொழுது புலிகள் உடன்

படிக்கையில் உள்ளவாறு அரசு நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துவர்.

அவ்வாறாயின் இது வரை ஆக்கரமித்த நிலங்களை விட்டு அவை வெளியேறி பேச்சுக்கு முன்

இருந்த எல்லைகளுக்கு மீள் திரும்ப வேண்டும்.

2) ஒட்டுக்குழுக்களின் ஆயுதம் களைய வேண்டும்;

3) பாடசலைகள். ஆலயங்கள். மக்கள் வாழ்விடங்களில் இருந்து

படைகள் விலக வேண்டும்.

4) ஏ. 9. திறக்கப்பட வேண்டும்.

5) அவசர காலச் சட்டம் விலக்கப் பட வேண்டும்

6) ஊரடங்கு சட்டம். கெடுபிடிகள் அகற்ப்பட வேண்டும்.

7)

படைகள் முகாமிற்குள் முடக்கப்பட வேண்டும்.

ஆக மொத்தம் '' பேச்சு உடன் படிக்கை'' முற்றாக அமுலுக்கு வர வேண்டும்

இதனை அரசு செய்யுமா...??

இல்லை ..அது போரைத்தான் தொடங்கும்..அவ்வாறு போரை

தொடங்கும் போது..புலிகள் மும் முனை தாக்குதலால் அந்த படை கட்டு மானங்ககளை சிதைத்து

சிங்கள படைகளிற்கு பெரும் அழிவை உண்டாக்குவார்களேயானால்..அவை தென்னிலங்கையில்

பாரிய புகம்பத்தை அரசுக்கு எதராண போராட்டங்களை தோற்றுவிக்கும்.

அது இன்றைய அரசுக்கு ஆபத்தானது....அவ்வாறு ஒரு நிலை தோன்றுமேயானால்

அது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடும். அப்படி பார்ப்போமேயானால் தற்போது இடியப்ப சிக்கலை

சிக்கெடுக்க வேண்டிய நிலைக்குள் மகிந்தா அரசு தள்ளப் பட்டுள்ளது...

அடுத்தடுத்து புலிகள் படைகளின் நிலைகளை தாக்கியழித்து தமது ஆளுகை;குள்ளோ அன்றி

அழித்தொழிப்பு தாக்குதல்களையோ நடத்துவார்களேயானால் அவை பாரிய சங்கடத்தையும்

அரசாடசி கவிழ்ப்பையும் உருவாக்கும்..அத்தோடு புலிகளின் தற்போதைய குறி அரச

இயந்திரத்தை முடக்குவதே.

அதனடிப்படையிலே அவர்கள் கேந்திர முக்கியத்துவம் வாயந்ததும் அரசின்

பொருளாதார இலக்ககள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் தமது கவனத்தை

திருப்பியுள்ளது அண்மைய தாக்குதல் சம்பவங்கள் ஊடாக தெளிவு பெருகிறது...

தமது மக்களை திருப்பி படுத்த நில ஆக்கிரமிப்புக்களை செய்து

அந்த வெற்றி பரப்புரையில் குளிர் காய்ந்த மகிந்தாவுக்கு தற்போது பெரும் நெருக்கடியையும்

அவலத்தையும் தலையிடியையும் கொடுத்துள்ளது.

தற்போது தம்மால் புலிகளை அழிக்க முடியாதென்பதையும் அவர்களுடன்

போரிட்டு வெல்ல முடியாதென்பதையும் உள்ளாந்தரீதியாக உணர்ந்த படைகள்

தமது அடுத்த கட்ட நகர்விற்க்குள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவித்துள்ளது.

மகிழச்சி களிப்பில் இருக்கும் புலிகள்..அடுத்தடுத்து தமபடைகள் மீது

தாக்குதலை தொடுப்பார்கள் என்ற அச்சத்தில் அணைத்து படை முகாம்களும்

பீதியில் உறங்கியுள்ளது.

போர ..சமாதானமா...???

என்பதை அரச படைகளே தீர்மாணிக்க வேண்டிய நிலையை

கடந்த தாக்குதல்கள் ஊடாக தெட்ட தெளிவாக தெளிவு படுத்தியுள்ளது.

இந்த சந்தப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சனைக்க தீர்வு காண அவர்கள் முற்படுவார்களெயானால்

அது சாலச் சிறந்தது.

அல்லது..இனி வரப்போகும்...பெரும் அழிவுகளில் இருந்து

அவர்களை யாருமே காக்க முடியாதென்ற நிலை உருவாகும்.

இது புலிகளின் தமிழீழ பிரகடனத்தை பிரகடனப்படுத்தும்...

ஆக மொத்தம் போரா..சமதானமா..??

என்ற நிலையில் இனவாத அரச ஆட்சி பீடம் ஆடிப்பேயுள்ளது.....!!!

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கேள்வி!

போரா? சமாதானமா?

எங்கள் புலிகளின் தொடர்ந்து வரும் நகர்வுகள் 'அரசை பேச்சுவார்த்தைக்கு இழுத்துவர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதே! சம்பூர்/ வாகரை பிடித்துவிட்டோம் என்று ஒரு முட்டை போட்டுவிட்ட கோழியாக கொக்கரித்த அரசு "புலிகள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்றே கணித்து விட்டது. ! புலிகளின் மெளனம் தோல்வியின் மூச்சாய் அல்ல வெற்றியின் இலக்கு" என்பதை இப்போது அவர்கள் மிகவும் தெளிவாகப் புரிந்தே இருப்பார்கள்.

சமாதான உடன்படிக்கை முற்றுப் பெறாத காலத்தில் தமிழ்மக்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்ட அவலங்களூக்கு புலிகள் கொடுத்த பாரிய அடிதான் விமானத் தாக்குதல்!.

கூலிக்கு மாறடிக்கிறவன் புலிகளின்கால் தூசுக்கும் சமானம் இல்லை!.

விரைவில் தேர்தலை எதிர்நோக்கலாம் என்றே நானும் நினைக்கின்றேன்.

எந்த அரசு வந்தாலும் ஈழத்தமிழனுக்கு எப்போதும் தமிழீழத் தனியரசே!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.