Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1/2 இறாத்தல் பாணை 5 பேர் பகிர்ந்துண்ணும் பரிதாபம் கன்னன்குடாவில் இந்து ஆலயங்கள் இடித்தழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பின்அவலத்தை கூறுகிறார் அரியநேத்திரன் எம்.பி.

-ஏ.ரஜீவன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் கன்னன்குடா, ஈச்சம்பற்று பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அகதிமுகாம்களில் அரை இறாத்தல் பாணை ஐவர் பகிர்ந்து கொள்ளும் பரிதாப நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பிலிப் குணவர்தன மைதானத்தில் புதன்கிழமை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட சத்தியாக் கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

காணாமற் போனோரை தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், காணாமல் போனவர்களை, கடத்தப்பட்டவர்களை எங்கு புதைத்தீர்கள், எந்த வயல் வெளிகளில் வீசினீர்கள் என்றாவது தெரிவியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

சர்வதேச அளவில் அதிகளவானோர் காணாமற்போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. வெகுவிரைவில் முதலாவது இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மட்டக்களப்பு இடம்பெயர்ந்தவர்கள் வாழ்கின்ற நகரமாக மாறியுள்ளது. படுவான்கரை பகுதியிலிருந்து 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

படுவான் கரையை கைப்பற்றிய இராணுவம் மக்களின் பொருட்களை சூறையாடுகின்றது. வீடுகள் தீயிட்டு அழிக்கப்படுகின்றன.

சற்று முன்னர் எனக்கு கிடைத்த தகவலின்படி கன்னன்குடா, ஈச்சம்பற்று பகுதிகளில் பல ஆலயங்களை இடித்து தரை மட்டமாக்கியுள்ள இராணுவத்தினர் 12 உழவு இயந்திரங்களில் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். மக்களை வெளியேற்றிவிட்டு இது இடம்பெறுகின்றது.

வட, கிழக்கில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகியுள்ளனர். எட்டு மாவட்டங்களும் அகதிகள் வாழும் மாவட்டங்களாகியுள்ளன.

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கடத்தல்கள் இடம்பெறுகின்றன. கடத்தப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுங்கள் என கோரினோம். எனினும், எதுவும் இடம்பெறவில்லை.

அரசாங்கமொன்றிற்கு காணாமற் போனவர்களை கண்டுபிடிப்பதற்கும் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்குமான கடப்பாடுள்ளது. ஆனால், அரசாங்கம் இதனை கூட நிறைவேற்றவில்லை.

கடத்தப்பட்டவர்கள் எங்கு புதைக்கப்பட்டார்கள். எந்த வயல் வெளியில் வீசப்பட்டார்கள் என்பதையாவது தெரிவியுங்கள்.

அரசாங்கம் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மட்டக்களப்பில் ஒரு பகுதி மக்கள் எறிகணை வீச்சிற்கு அகப்பட்டுள்ளனர். இன்னொரு பகுதி மக்கள் அகதிகளாக வெளியேறி சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.

அகதிமுகாம்களில் அரை இறாத்தல் பாணை ஐவரை பகிர்ந்து கொள்ளுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

http://www.thinakkural.com

அகதிமுகாம்களில் அரை இறாத்தல் பாணை ஐவரை பகிர்ந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் அதிகாரிகள் யாரென்பதையும், அவர்களின் பெயர் விபரங்களையும் பகிரங்கப் படுத்தலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.