Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சு அல்ல- செயலே தேவை- நீதியரசர் பேசுகிறார்!!

Featured Replies

பேச்சு அல்ல- செயலே தேவை- நீதியரசர் பேசுகிறார்!!

தொகுதி-1

 

IMG_1155-750x430.jpg

 
 

-த.செல்வராசா

2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2013ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­திக்­குள் வட­மா­கா­ணத்­துக்­கான மின்­சா­ரம், வீதி­கள், பாலங்­கள், பாட­சா­லை­கள், தபால் நிலை­யங்­கள், விவ­ சா­யத் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம், நில அள­வைத் திணைக்­க­ளம், பிர­தேச செய­ல­கங்­கள், நீர்த்­தாங்­கி­கள் எனக் குறித்­தொ­துக்­கப்­பட்ட சகல உட்­கட்­ட­மைப்பு வேலை­க­ளும் இயன்­ற­ள­வில் முடி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன.

அதற்கு அப்­போ­தைய வட­மா­காண ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி முக்­கிய காரண கர்த்­தா­வாக இருந்­தார். மக்­கள் இன்­னும்­சில தேவை­களை அவ­ரூ­டாக நிறை­வேற்­றி­யி­ ருந்­த­னர். இத்­த­கைய ஒரு சூழ­லில்­தான் வட­மா­காண சபைக்­கான உரு­வாக்­கம் கருக்­கொண்­டது.

 

சபை அமை­வும் எதிர்­பார்ப்­புக்­க­ளும்
வடக்கு மாகாண சபைக்­கான தலை­மைச் செய­ல­கம் விடு­த­லைப் புலி­க­ளால் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­து­போல மாங்­கு­ளத்­தில் அமைக்­கப்­ப­டும். வடக்­கின் 5மாவட்­டங்­க­ளும் மாங்­கு­ளத்தை மைய­மாக வைத்­துத் தமக்­கு­ரிய 5வழி­க­ளா­லும் அங்கு சென்று தமது தேவை­களை ஒரு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் நிறைவு செய்­து­விட முடி­யும். அத்­தோடு வர­வி­ருக்­கும் முதல்­வர் ஓர் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர் என்­கிற எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில், வட­மா­காண சபை எழுந்­தது.

வேலை­வாய்ப்பு, வட­மா­கா­ணத்­துக்­கான சட்ட ஏற்­பா­டு­கள், வாழ்­வா­தார அபி­வி­ருத்­தி­கள், வினைத்­தி­றன் மிக்க திணைக்­க­ளங்­களை உரு­வாக்­கு­தல், ஏனைய மாகாண சபை­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக ஊழல் அற்ற மிகச் சிறந்த முன்­னு­தா­ர­ணங்­க­ளு­டன் வட­மா­காண சபை அமை­யும் என்­றும் பல எதிர்­பார்ப்­புக்­கள் மக்­க­ளி­டம் இருந்­தன. இந்த எதிர்­பார்ப்­புக்­க­ளில் எது­வுமே நிறை­வே­றாது இருக்­கும் நிலை­யில், முத­ல­மைச்­சர் மேடை­க­ளில் பக்­கம் பக்­க­மாக வாசித்­த­வற்றை (மக்­க­ளின் முகம் பார்க்­காது) தற்­போது புத்­த­க­மாக வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், வட­மா­காண சபை நிறை­வேற்­றும் என்று எதிர்­பார்த்த எல்­லா­வற்­றை­யும் ஆளு­ந­ரி­டம் சென்று மக்­கள் நிறை­வேற்­ற­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையே இன்­றும் காணப்­ப­டு­கி­றது.

வட­மா­காண சபை­யில் புதி­னம்!
அர­சி­யல் தீர்வு ஒன்று கிடைத்­து­விட்­டால் தமிழ் மக்­க­ளின் சகல பிரச்­சி­னை­க­ளும் ஒரு நாளில் தீர்க்­கப்­பட்­டு­ வி­டும் என்ற தோற்­றப்­பாடு நில­வு­கி­றது. வட­மா­கா­கண சபையை 2013ஆம் ஆண்­டில் முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்­ற­போது இருந்த நிலையை விட வேக­மான ஒரு சூழலை எதிர்­பார்த்­தி­ருந்த மக்­க­ளுக்கு எது­வும் கிடைக்­க­வில்லை என்­பது வட­மா­காண சபை­யின் ஒற்­று­மை­யின்­மை­யால் ஏற்­பட்­டதே.

ஏதிர்க்­கட்­சி­கள் மிக­வும் வலு­வி­ழந்த நிலை­யில் குறைந்த அங்­கத்­த­வர்­க­ளைக் கொண்­டி­ருந்­த­போ­தி­லும் ஆளும் கட்­சி­யான தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் நில­விய முரண்­பா­டு­கள் கார­ண­மாக எதிர்க்­கட்­சித் தலை­வர் பல அமர்­வு­க­ளில் அவர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்­த­வேண்­டிய புதி­னம் வட­மா­காண சபை­யில் தான் நடந்­தே­றி­யது.

மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை­வ­தற்கு மிக வேக­மான தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­பட்டு, உட­ன­டி­யா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டல் வேண்­டும். வடக்­குக்­கான பொரு­ளா­தார மையம் ஒன்றை அமைப்­ப­தற்கு நடந்த வாதப் பிர­தி­வா­தங்­கள் அப்­படி ஒரு விட­யத்தை இல்­லா­ம­லேயே செய்­து­விட்­டன. இதே இழு­ப­றி­நி­லையே வவு­னியா பஸ் தரிப்­பிட விட­யத்­தி­லும் இருந்­தது.

அலு­வ­ல­கங்­க­ளில் பர­வ­லால்
மக்­க­ளுக்கு அசௌ­க­ரி­யம்
வட­மா­காண சபை­யின் அலு­வ­ல­கங்­கள் கைதடி, நல்­லூர், திரு­நெல்­வேலி என நாலா­பு­றங்­க­ளி­லும் சித­றிக் கிடப்­ப­தால் வெளி­மா­வட்­டங்­க­ளில் இருந்து வரு­கின்ற மக்­க­ளுக்கு அந்த அலு­வ­ல­கங்­க­ளைத் தேடிப் பிடிப்­பதே மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. (இவ் அலு­வ­ல­கங்­கள் அமைந்­தி­ருக்­கும் வீடு­கள், கட்­ட­டங்­கள் என்­பன உயர் அதி­கா­ரி­க­ளி­ன­தும், உற­வி­னர்­க­ள­தும் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது) ஊழல் அற்ற மிகத் தூய்­மை­யான அர­சி­யல் என்று வந்த வட­மா­காண சபை­யில் சில அமைச்­சர்­க­ளில் ஊழல் குற்­றம் சுமத்­தப்­பட்டு பதவி நீக்­கப்­பட்­டார்­கள். ஆனால், அதற்கு மேல­தி­க­மாக அவர்­க­ளின் விவ­கா­ரம் நிதிக் குற்­ற­வி­யல் பிரி­வி­டம் அழிக்­கப்­பட்டு மக்­க­ளின் நிதி மீளப் பெறப்­ப­ட­வில்லை. அமைச்­சர்­க­ளுக்­கான தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது நீதி­ப­தி­யா­க­வி­ருந்த முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யா­தி­ருக்க முடி­யாது.

கேள்­வி­யும் நானே
பதி­லும் நானே
கந்­த­கா­லங்­களை நோக்­கி­னால், மக்­க­ளின் சந்­தே­கங்­க­ளைத் தீர்க்­கும் பொருட்டு ஊட­கர்­கள் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு நேர­டி­யா­கப் பதி­ல­ளிக்­காது ‘கேள்­வி­யும் நானே பதி­லும் நானே’ பாணி­யில் தன்னை நியா­யப்­ப­டுத்­த­வும் அர­சை­யும் ஏனை­ய­வர்­க­ளை­யும் சாடி­யும் பதி­ல­ளித்­தி­ருப்­பார் முத­ல­மைச்­சர். இந்த நிலை இலங்கை தமிழ் அர­சுக் கட்­சிக்­குள்­ளும் முற்­றி­விட்ட நிலை­யில், சம்­பந்­த­னும் விக்­னேஸ்­வ­ர­னும் ஒரே மேடை­யில் சந்­தித்து அரு­க­ரு­காக அமர்ந்­தி­ருந்­ததை ஊட­கங்­கள் மிக அரி­தாக நடந்த அமெ­ரிக்க வட­கொ­ரி­யத் தலை­வர்­க­ளின் சந்­திப்­புப்­போல காட்ட முனை­கின்­ற­னர்.

2013ஆம் ஆண்­டில், தனது ஓய்­வுக் காலத்­தில் அர­சி­ய­லுக்கு வந்த விக்­னேஸ்­வ­ரன் தான் சார்ந்த தமிழ் அர­சுக் கட்சி, ஏனைய தமிழ்க் கட்­சி­கள், இலங்கை அரசு என எல்­லா­வற்­றை­யும் பிழை­யென்று விமர்­சிப்­ப­தன் மூலம் தன்­னைப் பலப்­ப­டுத்த முனை­வது ஒரு பிழை­யான அணு­கு­மு­றை­யா­கும். அந்­தக் கட்­சி­க­ளும் தலை­வர்­க­ளும் 30வரு­டங்­கள் நெருக்­க­டி­யைச் சந்­தித்து அர­சி­யல் ரீதி­யான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­போது, எந்­த­வித நெருக்­க­டி­யு­மின்­றிக் கொழும்­பில் சுக­மாக வாழ்ந்­த­வர்­தான் முத­ல­மைச்­சர்.

அக்­க­றை­யற்ற முத­லை­மைச்­சர்
கட­மை­யி­லி­ருந்த மிகச் சிறந்த நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர்­கள் ஏறத்­தாழ 20ஆண்­டு­க­ளுக்கு முன்பே ஓய்­வு­பெற்­று­விட்­ட­னர். கொழும்பு அலு­வ­ல­கங்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள ஆங்­கி­லத்­தில் கடி­தம் எழு­து­வ­தற்கோ அல்­லது கதைப்­ப­தற்கோ வட­மா­காண அலு­வ­ல­கங்­க­ளில் தற்­போது அலு­வ­லர்­கள் இல்லை. கொழும்­புக்கு அனுப்­ப­வேண்­டிய கடி­தங்­களை வட­மா­காண அமைச்­சுக்­க­ளின் செய­லா­ளர்­களே தமி­ழில் அனுப்­பு­கிற நிலையே காணப்­ப­டு­கி­றது.

அவை மொழி­பெ­யர்க்­கப்­பட்டு குறிப்­பிட்ட விட­யம் தொடர்­பில் ஒரு பதி­லைப் பெறு­வ­தற்கு 2 மாதங்­க­ளுக்கு மேல் தேவைப்­ப­டு­கி­றது. இத்­த­கைய விட­யங்­கள் சாதா­ரண மக்­க­ளால் கவ­னித்­துச் சீர் செய்­யப்­ப­டு­கிற விட­யங்­கள் அல்ல. முத­ல­மைச்­சர்­போன்ற உயர் படிப்­பா­ளி­க­ளும் மக்­க­ளில் அக்­கறை உள்­ள­வர்­க­ளும் பார்க்­க­வேண்­டிய விட­யங்­களே.

வட­மா­காண சபை அமைக்­கப்­பட்ட 5வரு­ட­கா­லப்­ப­கு­திக்­குள் போதைப்­பொ­ருள், வாள்­வெட்டு, அதி­க­ரித்த மதுப் பா­வனை போன்ற விட­யங்­க­ளில் முத­ல­மைச்­சர் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுத்­த­தா­கத் தெரி­ய­வில்லை. குறைந்த பட்­சம் வட­மா­கா­ணத்­தில் உள்ள மது­பான சாலை­களை மூடு­மாறு முத­ல­மைச்­சர் தனி­யான நட­வ­டிக்கை ஒன்­றை­யா­வது எடுத்­தி­ருக்­க­மு­டி­யும்.

தமிழ் மக்­கள் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரனை மேடை­யில் பேசு­வ­தற்­காக தெரி­வு­செய்­ய­வில்லை. தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பார் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே வாக்­க­ளித்­த­னர். ஆனால், அவர் விட­யத்­தில் மேடைப்­பேச்சே எஞ்­சு­வ­தாக உள்­ளது.

சுன்­னா­கம் நீர் மாச­டைந்த விட­யத்­தில் முத­ல­மைச்­சர் ஒரு நீதி­ப­தி­யாக நின்று மக்­க­ளின் குறை தீர்ப்­பார் என எதிர்­பார்த்­த­போது ஒரு போலி­யான அறிக்­கை­யைச் சரி­யென முதல்­வர் ஏற்­றுக்­கொண்ட பரி­தா­பம் நிகழ்ந்­தது.

மக்­க­ளு­டன் பழ­காத மனி­தர்
1939ஆம் ஆண்டு கொழும்­பில் பிறந்த விக்­னேஸ்­வ­ரன் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதி­ப­தி­யா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­தில் தொடங்கி 2004ஆம் ஆண்­டில் நீதி­ய­ர­ச­ராகி ஓய்வு பெறும் வரை மக்­க­ளு­டன் கலந்து புழங்­க­மு­டி­யாத ஒரு பணி­யி­லேயே இருந்­தார். அவ­ரு­டைய கைய­சை­வுக்­கும், கட்­ட­ளைக்­கும் ஏற்ப அவ­ர­வ­ரை­சட சேவை செய்­யப் பழக்­கிக் கொண்­டார். அத­னால் பொது­மக்­க­ளு­டன் எவ்­வாறு இறங்­கிப் பழ­க­வேண்­டும்; என்­பதோ, தானே களத்­தில் இறங்கி மக்­க­ளுக்­கான பணி­யில் ஈடு­ப­டு­வதோ அவ­ரால் முடி­யாத செய­லாக இருக்­கி­றது.

வட மாகாண சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளில 5 வீதம் கூட இன்­று­வ­ரை­யில் செயல்­வ­டி­வம் பெற­வில்லை. ஒதுக்­கப்­பட்ட நிதி­கூ­டப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்­கெல்­லா­வற்­றுக்­கும் ஒரு ‘றோல்­மொ­ட­லாக’ இருந்­தி­ருக்க வேண்­டிய விக்­னேஸ்­வ­ரன் தனக்­குத் தானே புத்­த­கம் வெளி­யிட வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார். ஒரு மனி­த­னின் சாதனை என்­பது பேச்­சில் அல்ல, செய­லி­லேயே இருத்­தல் வேண்­டும். அதுவே மக்­க­ளுக்கு நன்மை பயக்­கும். ஆனால், வெட்­டிப்­பேச்­சுக்­க­ளைப் பேசி­ய­து­டன் மாத்­தி­ரம் நின்­று­வி­டாது அதை நூலாக்­கி­யும் வெளி­யி­டு­ம­ள­வுக்கு அவ­ருக்­குள்­ளி­ருக்­கின்ற அசாத்­தி­யத் திற­மை­யைப் பாராட்­டியே ஆக­வேண்­டும்.

http://newuthayan.com/story/11/பேச்சு-அல்ல-செயலே-தேவை-நீதியரசர்-பேசுகிறார்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.