Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள் – கனேடியத் தூதுவர் (படம்)

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள் – கனேடியத் தூதுவர் (படம்)

DSC_0407.jpg?resize=800%2C533

 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உடன் புரிந்து கொள்ள முடியாவிடினும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நலம் என இலங்கைக்கான கனடிய தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்துள்ளார்.

டான்ட் மிக்கினோ நேற்று நிங்கட்கிழமை மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுநர் சபை பிரதி நிதிகளையும் சந்தித்து உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசாங்கமானது பெரும் ஆதரவை வழங்கி வருகின்றதனால் வடக்கு கிழக்குப் பகுதிக்குச் சென்று அங்கு வாழ் வாழ் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே மன்னாருக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய தூதுவராக வந்து ஒன்பது மாதங்கள் தான் எனவும் தற்பொழுது மன்னாருக்கு முதல் தடவையாக வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களின் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உரையாடல் இடம்பெற்றது.

பிரஜைகள் குழுவினர் இந்த அலுவலகம் அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.இதற்கு கனேடிய தூதுவர் பதிலளிக்கையில் ,,
இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் சாலிய பீரீஸ். அவர் மிகவும் நல்லவர். கொஞ்சக் காலத்துக்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். இப்பொழுது அவர்களின் செயல்பாட்டை உடன் கணிக்க முடியாது என்றார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்வர்கள் குறித்து இந்த அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லையென பிரஜைகள் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.அதற்கு தூதுவர் கருத்து தெரிவிக்கையில் ,
காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கியவர்களையும் கொண்ட திட்டங்களை கொண்டே பல நிபுணர்களை உள்வாங்கி செயல்படுகின்றது.இதற்கு கனடா அரசாங்கம் இவர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் ஊக்கத்தையும் வழங்குகின்றது. கனடாவைச் சேர்ந்த ஒரு சில தொண்டர் பணியாளர்களும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என்றார்.

கனேடிய அரசால் வழங்கப்படும் உதவிகள் உண்மையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு போய் சேர்கின்றதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

DSC_0404.jpg?resize=800%2C533DSC_0405.jpg?resize=800%2C533DSC_0406.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/87153/

  • தொடங்கியவர்

சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் முயற்சியில் கனடா!! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்!!

 

 

 
Image

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவகாரத்தை அணுகுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை விடுத்து அவர்களுக்கு அவகாசம் வழங்குமாறு தமிழர் தரப்பிடம் கொழும்புக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு கடந்த யூன் மாதம் 19 ஆம் திகதி கொழும்புக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வட மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே கனேடியத் தூதுவர் மன்னார் பிரஜைகள் குழுவை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

OMP என்ற காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பின் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நல்லது என்றும் கொழும்புக்கான கனேடிய தூதுவர் டேவிட் மிக்கினோன் இரு நாள் சுற்று பயணத்தை மேற்கொண்டு மன்னாருக்கு வருகை தந்தபொழுது கடந்த திங்கள் கிழமை (09.07.2018) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரை சந்தித்தபொழுது இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்புக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மிக்கினோன் இந்த வார ஆரம்பத்தில் மன்னாருக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது யூலை 9 ஆம் திகதியான நேற்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் அமைப்புக்களில் முக்கியமான அமைப்பாக கருதப்படும் மன்னார் பிரஜைகள் குழுவினரின் தலைமைக் காரியாலயமான மன்னாரிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாகக் கூறியதுடன், வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே தான் இந்த விஜயத்தை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கான கனேடிய தூதுவராக பொறுப்பேற்று ஒன்பது மாதங்களே கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், முதன் முறையாகவே மன்னாருக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டு வருவதுடன், சிறிலங்கா அரசாங்கத்தினால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள OMP என்ற காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டனர்.

OMP சிறிலங்கா அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய மன்னார் பிரஜைகள் குழுவினர், சர்வதேச சமூகத்தை திசைத் திருப்புவதற்காக வெறும் கண்துடைப்பிற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு கனேடிய தூதுவர் பதிலளிக்கையில் இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் மிகவும் நல்லவர் என்று நற்சான்றிதழ் வழங்கியதுடன், சிறிது காலத்துக்கு அவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்து பாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கடந்த யூன் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரித்தானியாவின் கொழும்புக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வட மாகாண முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இந்த கருத்தை சந்திப்பின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியும் இருந்தார்.

இதேவேளை கனடா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் சிறிலங்காவிற்கு உதவி வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே நீதிக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடிவரும் தமிழர் தரப்பின் போராட்டங்களால் மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்கா அரசு தென்னிலங்கையில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துவரும் பிரித்தானியா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவற்றிலிருந்து விலகியிருக்குமாறு தமிழர்களிடத்தில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/canada/80/103130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.