Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!!

Featured Replies

அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!!

 

கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை பிர­ச­வித் த­வர்­க­ளின் விவ­ரத்தை பங்­க­ர­வா­தக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர்.

மருத்­து­வ­ம­னை­யி­லும், வீடு­க­ளி­லும் குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. அதற்­கான கார­ணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பில் மாகாண சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் எஸ்.திரு­வா­க­ர­னைத் தொடர்­பு­கொண்டு கேட்­டோம்.

 

‘குழந்த பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பயங்­க­ர­வாத குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ளமை தொடர்­பில் அமைச்­சுக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது. அதை வழங்­கு­வ­தற்கு எமக்கு அனு­ம­தி­யில்லை. கொழும்பு சுகா­தார அமைச்­சுக்கு இந்த விட­யம் தொடர்­பில் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம். அவர்­கள் அனு­ம­தித்­தால் தக­வல் வழங்­கு­வோம்’ என்று அவர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/08/அச்சத்துடன்-பெண்கள்-குழந்தை-பிர­ச­வித்­த­வர்­க­ளின்-விவ­ரம்-திரட்­டு­கின்­றது-ரிஐடி.html

  • தொடங்கியவர்

இராணுவத்தின் காரணமற்ற கேள்விகளை புறக்கணியுங்கள்: சி.வி.

 

cv-1-720x450.png

 

இராணுவத்தினரால் உரிய காரணமின்றி கோரப்படும் தரவுகளை வழங்குவதற்கு எவரும் முனவரத் தேவையில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”இராணுவத்தினர் எமது வைத்தியசாலைகளிலிருந்தோ அல்லது அலுவலகர்களிடமிருந்தோ தரவுகளை பெற முயற்சித்தால் அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

இராணுவத்தினருக்கு அஞ்சி குறித்த விடயத்தில் எவரும் தனிப்பட்ட முறையில் தலையிட தேவையில்லை. முதல்வரின அனுமதியின்றி எவ்வித தரவுகளையும் வெளியிட முடியாது என வெளிப்படையாகக் கூறி இராணுவத்தினரை புறக்கணியுங்கள்” என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான தகவல்களை சேகரிப்பதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில். மத்திய சுகாதார அமைச்சு விபரங்களை வழங்குதவற்கு பணித்தால், அவற்றை வழங்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவரங்கன் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/?p=702959-இராணுவத்தின்-காரணமற்ற-கேள்விகளை-புறக்கணியுங்கள்:-சி.வி

  • தொடங்கியவர்

ஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

tid-letter.jpg?resize=800%2C724

 

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று வரும் விசாரணை சம்பந்தமாக கிளிநொச்சி சுகாதார சேவை காரியாலயத்திற்குரிய பிரதேசங்களில் இருந்த கர்ப்பிணி பெண்களில் 2018.05.25 தொடக்கம் 2018.05.30 ஆம் திகதி வரை உள்ள காலங்களில் குழந்தை பெற்றெடுப்பதாக .இருந்த பெண்களின் பெயர் முகவரி, அவரின் கணவரின் பெயர் முகவரி குழந்தை பெற்றெடுப்பதற்கு வழங்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை மிக விரைவாக தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் வழியாக புதுக்குடியிருப்புக்கு செல்லும் வழியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூமை புலிக்கொடி போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் ஆறுபேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகப்படும் நபர் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் அவரது மனைவி மேற்படி காலப்பகுதியில் குழந்தை பிரசவிக்க இருந்தார் என்ற தகவலுக்கமையவுமே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த தகவல்களை கோரியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://globaltamilnews.net/2018/87589/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.