Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் :

Featured Replies

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் :

 

 

logeswary-2.jpg?resize=624%2C351

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்இ மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும்இ வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும்இ பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும்இ கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பிப்பது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்ட போது லோகேஸ்வரியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய பயிற்சியாளர் அவரை கீழே தள்ளியுள்ளார். இதன்போது மாணவி நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த நிலையில் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

logeswary.jpg?resize=624%2C351

http://globaltamilnews.net/2018/87559/

  • தொடங்கியவர்

கோவை: 'மாணவியை பலி கொண்ட பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு அனுமதி பெறவில்லை'

கோவையில் உள்ள கல்லூரியில் பயிற்சியாளர் கீழே தள்ளியதில் தடுமாறி விழுந்த மாணவி பலியான, பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

லோகஸ்வரி Image captionஉயிரிழந்த மாணவி லோகஸ்வரி

கோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பி.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்தார் 19 வயதான லோகஸ்வரி.

இவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாலை 4 மணியளவில் அனைவரும் இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பிப்பது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.

லோகேஸ்வரியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய பயிற்சியாளர் ஆறுமுகம் அவரை கீழே தள்ளியுள்ளார். அப்போது நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டுள்ளது.

உடனடியாக லோகேஸ்வரிக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவை

அரசு மருத்துவமனையில் லோகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

அனுமதி இல்லை

இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தற்காப்பு பயிற்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான ஒரு செயல். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது போன்ற தற்காப்பு பயிற்சிகளை அரசின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகம் மட்டுமே மேற்கொள்ளும். கலைமகள் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு பயிற்சி தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்காப்பு பயிற்சியை நடத்தி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விபத்து துரதிர்ஷ்ட வசமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தங்கள் அனுமதியுடன் இந்த ஒத்திகை நடத்தப்படவில்லை என்றும், அந்தப் பயிற்சியாளர் முறையாக பயிற்சி பெற்றவரல்ல என்றும் கூறியுள்ளது. போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாத இத்தகைய ஒத்திகைகளை நடத்த தாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

தெளிவான விதிமுறைகள் இல்லை

2017ஆம் ஆண்டு அக்டோபரில் பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அந்தச் சுற்றறிக்கையில், உயர் கல்வி வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மாணவர்களுக்கு நிலநடுக்கம், குண்டுவெடிப்பு, தாக்குதல். துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதத் தாக்குதல், இயற்கைப் பேரிடர் ஆகியவற்றை எதிர்கொள்ள கட்டாய வகுப்புகளை நடத்த வேண்டுமெனக் கூறியிருந்தது.

மாநில கல்வித் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, பல்கலைக் கழக மானியக் குழு பயிற்சி அளிக்க வேண்டுமெனக் கூறியிருந்தாலும் இதற்கென ஒரு நடைமுறை தற்போதுவரை இருப்பதாகத் தெரியவில்லை என்றே தெரிவித்தனர். இம்மாதிரி ஒரு பயிற்சியில் என்னென்ன பயிற்சிகள் இடம்பெற வேண்டும், யாரை வைத்துப் பயிற்சியளிக்க வேண்டும், யாரிடமெல்லாம் அனுமதி பெறவேண்டும் என்பது குறித்து அரசுத் தரப்பிலிருந்து தெளிவான குறிப்புகள் ஏதும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை.

 

 

ஆகவே, இம்மாதிரி பயிற்சிகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே, தங்களுக்குத் தெரிந்த வகையில் நடத்திவருகின்றன.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, "தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றிருக்கிறோம். தேசியப் பேரிடர் முகமையின் ஆலோசனைப் படி, இதை எப்படி நடத்துவது என்பது குறித்து தரப்படுத்தப்பட்ட செயல் முறைகளை (Standard Operating Prodedure) கொண்டுவருவோம்" என்று தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால், தற்போது இந்தப் பயிற்சிகளுக்கென தரப்படுத்தப்பட்ட செயல்முறைகள் வகுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

"தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை நடத்த வேண்டுமென யுஜிசியிடமிருந்து கடிதம் வந்தது உண்மைதான். ஆனால், அதற்கான விதிமுறை ஏதும் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கெனத் தெளிவான விதிகளை வகுக்க வேண்டும். தற்போதைய சம்பவத்தில் அந்தப் பயிற்சியாளர், அசட்டையாக நடந்துகொண்டிருக்கிறார். இந்த மரணம் நடந்திருக்காவிட்டால், இந்த விவகாரமே பெரிதாகியிருக்காது" என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான டாக்டர் கலாநிதி.

https://www.bbc.com/tamil/india-44817518

  • தொடங்கியவர்

பேரிடர் பயிற்சியில் மாணவி சாவுக்கு காரணமானவர்: `7 ஆண்டுகளில் ஆயிரம் கல்லூரிகளை ஏமாற்றியவர்'

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி பயிற்சியாளர் மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லோகேஸ்வரிபடத்தின் காப்புரிமைBBC SPORT

பேரூர் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை ஆய்வாளர் தங்கம் ஆகிய இருவர் அடங்கிய தனிப்படையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இந்த சம்வத்தின் புலனாய்வு குறித்து கேட்டபோது, பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

போலி ஆவணங்கள் பற்றி விசாரணை

கோவையில் மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் என்பவர் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும், கல்லூரிக்கு அவர் அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் போலியானவை என்பதும் வெள்ளிக்கிழமை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இது போன்ற முறைகேடான ஒத்திகைகளை இவர் தனியாக செய்கிறாரா அல்லது இவர் உட்பட ஒரு குழுவாக பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆறுமுகம் தொடர்பான படிப்பு, பணி, முந்தைய பயிற்சிகள்,அவரின் பின்னணி தொடர்பான ஆவணங்கள் ஆகியவை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் ஆறுமுகத்துடன் இருந்ததாக கூறப்படும் சதீஷ், கோபாலகிருஷ்ணன், வினிதா ஆகியோரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தள்ளிவிடப்படும் லோகேஸ்வரி

இதில் சனிக்கிழமை அசோக் மற்றும் தாமோதர் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த 5 பேரும் ஆறுமுகத்துடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற வகையிலும் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக் மட்டும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆறுமுகத்தின் பின்னனி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்துள்ளார்.

இதனால், தன் வாழ்வாதரத்திற்காக இவர் திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

போலியோ பாதிப்பால் இடது கால் சற்று ஊனமாக இருப்பதால் அதிக நேரம் நிற்க முடியாது என்பதற்காக அந்த கடையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பிறகு மற்றொரு நபரின் உதவியுடன், கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் வார்டனாக சேர்ந்துள்ளார். அதற்கு பிறகான ஆறுமுகத்தின் வாழ்க்கைதான் மர்மமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆறுமுகம்

டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூர கல்வியில் படித்ததாக காவல்துறை விசாரணையில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி பாதுகாப்பு ஒத்திகையையும் நடத்தி வந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு முதல் 1,047 கல்லூரிகளுக்கு இது போன்று நடத்தியுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு உடந்தையாக...

போலியான லெட்டர் ஹெட் தயாரிக்க ஆறுமுகத்திற்கு உதவியதாக, ஈரோட்டை சேர்ந்த அசோக் மற்றும் தாமோதரன் ஆகியோரை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதையை நிலையில், ஆறுமுகத்திற்கு உதவியாக படித்து வேலையில்லாமல் இருக்கும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என 3 பேர் உள்ளனர்.

அரசு தேர்வுகள் எழுதும்போது , இது போன்ற பயிற்சியில் உதவியதாக குறிப்பிட்டால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் போன்ற போலி ஆசை வார்த்தைகள் கூறி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆறுமுகம்

மிக முக்கியமாக, 2011ம் ஆண்டுக்கு முன் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய வேறு ஒரு குழுவில் ஆறுமுகம் வேலை செய்து வந்துள்ளதாகவும், அந்த குழுவை சேர்ந்த நபர்கள் யார்? அவர்கள் உண்மையிலேயே தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்தவர்கள் தானா போன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை கோரிய பல்கலைக்கழகம்

கோவையில் கல்லூரி மாணவி பேரிடர் கால தற்காப்பு பயிற்சியின்போது இறந்தது குறித்து பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் சரவணச்செல்வன் பிபிசி யிடம் தெரிவித்தபோது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 121 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக கல்லூரிகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படுவதில்லை என்றார்.

ஒரு மீட்புதவியாளர் இறந்த நிலையில் குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணிகள் தீவிரம்

 

ஒரு மீட்புதவியாளர் இறந்த நிலையில் குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணிகள் தீவிரம்

ஒவ்வொரு கல்லூரிகளிலும் தேசிய சேவை திட்டம் (என். எஸ். எஸ்) உள்பட என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து ஒரு பொதுவான அனுமதியை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

அதிகமான கல்லூரிகள் இருப்பதாலும், மாதத்திற்கு ஒருமுறை பல்வேறு கல்லூரிகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாலும் தனித்தனியாக அதற்கான அனுமதியை கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் பெறும் வழக்கம் இல்லை.

என். எஸ். எஸ். நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் என். எஸ். எஸ். ஒருங்கிணைப்பாளர் கல்லூரிகளின் என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவார்.

பயிற்சி

பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பொதுவாக அனுமதிக்கப்படும். கல்லூரியில் பேரிடர் மேலாண்மை தற்காப்பு பயிற்சியை நடத்தியது குறித்தும் கல்லூரி நிர்வாகத்திடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சென்னையில் உள்ள என். எஸ். எஸ். மண்டல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு வழங்கப்படும் அறிக்கையை பொறுத்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் யாரும் இல்லாததால் துணைவேந்தர் குழு அறிக்கையில் ஆய்வு மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சரவணச்செல்வன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-44835441

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.