Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்­கைத்­தீ­வின் தலை­விதி என்­று­தான் மாறப்­போ­கி­றது?

Featured Replies

இலங்­கைத்­தீ­வின் தலை­விதி என்­று­தான் மாறப்­போ­கி­றது?

 
 
 
85454f25292c274c29f0f9f0951aa3ab_XL-750x
 
 

 

 

களுத்­துறைப் பிர­தே­சத்­தில் பெரு­ம­ள­வில் கறு­வா­வைப் பயி­ரிட்டு, அவற்றை வௌிநா­டு­க­ளுக்கு அனுப்பித் தேடிக்­கொண்ட பணத்­தைக்­கொண்டே பராக்­கி­ரம சமுத்­தி­ரம் உரு­வாக்­கப்­பட்­டது.

மேற்­கண்ட விதத்­தில் கடந்­த­வா­ரம் அர­ச­த­ரப்பு பிர­பல அர­சி­யல்­வாதி ஒரு­வர் வௌியிட்ட கருத்து இந்த நாள்­க­ளில் பல­ரது முகப்­புத்­த­கங்­க­ளில் பல்­வேறு விதத்­தில் விமர்­சிக்­கப்­ப­டும் ஒரு விடயமாக ஆகி­யுள்­ளது.

பொல­ந­றுவை யுகத்­தில்  இலங்கை புகழ் பெற்­றி­ருந்­தது

 

பொல­ந­றுவை யுகத்­தில், இந்த நாட்டை ஆண்ட மகா பராக்­கி­ர­ம­பாகு மன்­னன் இலங்­கையை மிக நீண்­ட­கா­ல­மாக நிர்­வ­கித்த– அதா­வது 33 ஆண்­டு­கள் நிர்­வ­கித்த மன்­ன­னென இலங்­கை­யின் வர­லாற்­றில் பதி­வா­கி­யுள்­ளது.
‘‘ஆகா­யத்­தி­லி­ருந்து பூமி­யில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் நாட்டு மக்­க­ளது பாவ­னைக்­குப் பயன்­ப­டுத்­தாது வெறு­மனே கட­லில் சேர இட­ம­ளித்­தல் ஆகாது’’

என்­பது மகா பராக்­கி­ர­ம­பாகு மன்­ன­னது அர்த்­தம் மிக்க வார்த்­தை­யா­கும். தமது ஆட்­சிக்­கா­லத்­தில் நூற்­றுக்­க­ணக்­கான பெரும் குளங்­களை அமைப்­பித்த பராக்­கி­ர­ம­பாகு மன்­ன­னால் உரு­வாக்­கப்­பட்ட இலங்­கை­யின் மிகப்­பெ­ரும் நீர்ப்பா­ச­னத் குளமே பராக்­கி­ரம சமுத்­தி­ரம் என்ற நீர்­நி­லை­யா­கும்.

அதனை அமைத்து முடிக்­கப் பல ஆண்­டு­கள் காலம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­து­டன், அதற்­கான பணியில் சிறைக்­கை­தி­ கள் பெரு­ம­ள­வில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் வர­லாறு குறிப்­பி­டு­கி­றது. நாட்­டின் பிர­ஜை­க­ ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­பட்ட பல்­வேறு வரி­கள் மற்­றும் யானைத் தந்­தங்­கள், மாணிக்­கக்­கற்­கள் மற்­றும் அரிசி போன்ற பல­வற்­றின் வௌிநா­டு­க­ளு­ட­னான வர்த்­த­கத்­தின் மூலம் பெறப்­பட்ட வரு­மா­னம் என்­பவை மேற்­கு­றிப்­பிட்ட பராக்­கி­ரம சமுத்­திர வேலைத்­திட்­டத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பண்­டைய சிங்­கள வர­லாற்று நூலான சூல­வம்­சத்­தில் குறிப்­பி டப்பட்டுள்ளது.

விசே­ட­மாக பராக்­கி­ர­ம­பாகு மன்­ன­னது ஆட்­சிக் காலத்­தில் கீழ்த்­திசை நாடு­க­ளின் தானி­யக் களஞ்­சி­யம் என்ற பெரு­மைக்­கு­ரிய பெயரை இந்த நாடு ஈட்­டி­யி­ருந்­த­தாக வர­லாற்­றுப் பதி­வு­கள் கூறு­கின்­றன.

அந்­தக் கால­கட்­டத்­தில் அரிசி மற்­றும் ஏனைய தானிய வகை­கள் இலங்­கை­யி­லி­ருந்து வௌிநா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­ட­தா­லேயே, இத்­த­கைய பெரு­மையை இலங்கை நாடு ஈட்­டிக்கொண்­டது.

பராக்­கி­ர­ம­பாகு மன்­னன் காலத்­தில் உல­கின் பல்­வேறு நாடு­க­ளு­டன் இலங்கை வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது என்­ப­தற்­குப் போதிய வர­லாற்­றுச் சான்­று­கள் இருப்­பி­னும், அண்­மை­யில் தற்­போ­தைய அர­சின் பிர­பல அர­சி­யல்வாதி­யொ­ரு­வர் தெரி­வித்த பராக்­கி­ரம மன்­னன், களுத்­துறைப் பிர­தே­சத்­தில் கறு­வாச் செய்­கையை மேற்­கொள்­ளு­வித்து, அவற்­றைப் பிற­நா­டு­க­ளுக்கு விற்றுத் தேடிக்­கொண்ட இலா­பத்­தில் பராக்­கி­ரம சமுத்­தி­ரத்தை உரு­வாக்­கி­னான் என்ற தக­வல் எமக்­குத் தெரிந்த எந்­த­வொரு வர­லாற்று நூலி­லும் குறிப்­பி­ டப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது மட்­டும் உண்மை.
எது எப்­ப­டி­யான போதி­லும், இந்த நாட்­டின் அடிப்­படை வச­தி­க­ளைப் பெரிய அள­வில் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்த பராக்­கி­ர­ம­பாகு மன்­னன் அதற்­குத் தேவை­யான நிதி­யைத் தேடிக்­கொள்ள நாட்­டின் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பல­த­ரப்­பட்ட வரி­களை அற­விட்­ட­தாக வர­லாற்று நூல்­க­ளில் குறிப்­பிடப்பட்டுள்ளது.

நாட்­டின் அண்­மைக்­கால வர­லாற்­றில் இதற்கு முன்­னர் பத­வி­யி­லி­ருந்த அர­சா­லும் நாட்­டில் பல்­வேறு அடிப்­படை வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டன.

ஆனால் அதற் காக நாட்­டு­மக்­களை வருத்தி பெரு­ம­ள­வில் வரி அற­வீ­டு எதுவும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தில்லை.

உண்­மை­யில் நாட்­டின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுத்­துச் செல்­லப்­பட்ட அதே­ச­ம­யம், அதற்­குச் சமாந்­த­ர­மாக நாட்டு மக்­க­ளது வரிச்­சு­மை­யை­யும் மெது­மெ­து­வாக தளர்த்த முன்­னைய அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

தேனீ, மலர்­க­ளி­லி­ருந்து தேனை உறிஞ்­சும்­போது மலருக்கு எத்­த­கைய பாதிப்­பும் ஏற்­ப­டாத விதத்­தில் எவ்வாறு தேனை உறிஞ்­சு­கி­றதோ, அதே­போன்­று­தான் நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்­தும் அரசு, அவர்­க­ளுக்கு அதிக பாதிப்பு ஏற்­ப­டுத்­தாத விதத்­தில் வரி­களை அற­விட வேண்­டு­மென முன்­னைய அரசு திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டது.

2015ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் பத­வி­யேற்ற  கூட்­டாட்சி நிர்­வா­கம் பின்­ன­டைவு கண்­டது

ஆனால் 2015ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் கூட்­டாட்சி அரசு பத­விக்கு வந்த நாள் முதல், வரி அற­வீடு தொடர்­பான அர­சின் நிலைப்­பாட்­டில் பெரும் மாற்­றம் ஏற்­பட்­டது.
2014ஆம் ஆண்­டில் பெற்ற மொத்த வரி வரு­மா­னத்தை 2018ஆம் ஆண்­டில் நூறு வீதத்­தால் அதி­க­ரிப்­ப­தற்கு அரசு எதிர்­பார்ப்­ப­தாக அரசு தெரி­வித்­தி­ருந்­தது.
கடந்த சில ஆண்­டு­க­ளாக வர்த்­த­கத்­து­றை­சார் வரி­க­ளைப் பெரிய அள­வில் அதி­க­ரிப்­ப­து­டன், புதி­தா­கச் சில­வரி வகை­க­ளை­யும் கூட்­டாட்சி அரசு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

உதா­ர­ண­மாக பெறு­ம­தி­சேர்­வரி (வற்­வரி) கார­ண­மாக பல பாவ­னைப் பொருள்­க­ளது விலை­கள் அதி­க­ரித்­துள்­ளன.

தொழில் செய்­வோர் மற்­றும் ஏதோ வகை­யில் மாதாந்­த வரு­மா­னம் பெறு­வோர் விட­யத்­தி­லும் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மாத­மொன்­றுக்கு ஒரு இலட்­சம் ரூபா­வுக்கு மேற்­பட்ட வரு­மா­னம் பெறும் சக­ல­ரும் தற்­போது வரு­மா­ன­வரி செலுத்த வேண்­டி­யுள்­ளது.

அதற்­கான வரிவீ­த­மும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எந்­த­வ­கை­யி­லான வரு­மா­ன­மா­யி­னும், வரு­மா­ன­வரி செலுத்­தியே ஆக­வேண்­டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரு­ட­மொன்­றுக்கு 5இலட்­சம் ரூபா­வுக்கு அதி­க­மான வரு­மா­னம் பெறும் சக­ல­ருக்­கும் அவ­ர­வர்­க­ளது பெய­ரில் வரி அற­வீடு தொடர்­பான கோப்பு பேணப்­ப­டல் வேண்­டும்.

வரு­மானவரித் திணைக்­க­ளத் தலை­வ­ரது தக­வல்­படி, வாக­ன­மொன்­றைச் சொந்­த­மாக வைத்­தி­ருப்­போர், வௌிநாட்­டுப் பய­ணங்­களை மேற்­கொள்­வோர் ஆகிய தரப்­பி­னர்­கள் பெய­ரி­லும் தனித்­த­னி­யான கோப்­பு­கள் பேணப்­பட்­டாக வேண்­டும்.

வங்­கி­க­ளில் உள்ள வைப்­புக்­க­ளுக்­கான வட்­டி­யி­லும் 5வீத வரி வங்கிகளால் அற­வி­டப்­ப­டு­கி­றது. வீடொன்றை வாட­கைக்கு வேறொ­ரு­வ­ருக்கு வழங்­கி­னால், அந்த வரு­மா­னத்­தில் 20வீதம் வரி­யாக அற­வி­டப்­ப­டு­கி­றது.
வீடு, காணி அல்­லது வாக­ன­மொன்றை விற்­பனை செய்வதால் கிடைக்­கும் இலா­பத்­தில் பத்­து­வீ­தம், அர­சுக்கு வரி­யா­கச் செலுத்­தப்­ப­ட­வேண்­டும். ஊழி­யர் சேம­லா­ப­நி­தி­யில்கூட அற­வி­டப்­ப­டும் வரி 28வீதம்­வரை உயர்த்­தப்­பட்­டுள்­ள­து­டன், சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெறும் வயதை அண்­மித்து, தமது வாழ்­நா­ளில் சேமித்த சேமிப்­புத் தொகையை பெற்­றுக்­கொள்­ளச் செல்­லும் தனி­யார் துறை ஊழி­யர்­க­ளுக்கு, தமக்­கான ஊழி­யர் சேம­லாப நிதி­யின் பகு­திக் கொடுப்­ப­ன­வை­விட கூடிய விகி­தம் அர­சால் வெட்­டப்­பட்­டுள்­ள­மை­யைத் தெரிந்து கொள்ள நேரும்­போது, பெரும் அதிர்ச்­சிக்கு உள்­ளாக நேர்­கி­றது.

வரிச்­சு­மை­யால் வாட­நேர்ந்­தி­ருக்­கும்  இலங்­கை­யர்­க­ளது தலை­விதி

நப­ரொ­ரு­வர் வரு­மா­ன­வரி செலுத்­து­வ­தி­னின்­றும் ஏதோ ஒரு விதத்­தில் தப்­பித்­துக்­கொண்­டா­லும், அவ­ரால் அர­சின் சுழற்சி வரி­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக் கொள்­ளவே இய­லாது. சகல பொருள்­கள் மற்­றும் சேவை­கள் மீது அர­சி­னால் விதிக்­கப்­பட்­டுள்ள வரி மொத்­தத்­தில்­பா­வ­னை­யா­ளர்­களைப் பாதிக்­கின்­றன.

கடை­யில் எரி­பொ­ருள் வாங்­கச் சென்­றா­லும், மருந்­து­வகை வாங்­கச் சென்­றா­லும், உண­வுச் சாலை­யில் திண்­பண்­டங்­களை வாங்­கச் சென்­றா­லும் நாட்டு மக்­கள் சக­ல­ருமே தம்­மை­ய­றி­யா­மல் இந்த சுழற்சி வரி அற­வீட்­டுக்கு உட்­பட்டே ஆக­வேண்­டி­யுள்­ளது.

2014ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2018ஆம் ஆண்­டில் வரு­ட­மொன்­றுக்கு ஒரு­கோடி இலட்ச ரூபா­வி­லி­ருந்து இரண்டு கோடி இலட்ச ரூபா­வரை அர­சின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தத்­தொகை நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்தே அற­வி­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சரி, நாட்டு மக்­க­ள் மீது மேற்­கு­றிப்­பிட்ட விதத்­தில் வரி­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள போதி­லும், பராக்­கி­ர­ம­பாகு மன்­னன் மேற்­கொண்­டமை போன்று அத்­த­கைய வரிப்­ப­ணம் நாட்­டின் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­ க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாகக் கூறிக்­கொள்ள இய­ல­வில்லை.

அதற்­குப் பதி­லாக நாளுக்கு நாள் உயர்­வ­டைந்து வரும் பொரு­ளா­தா­ரச் சிக்­கல்­க­ளையே அவ­தா­னிக்க முடி­கி­றது.

இன்­றைய கூட்­டாட்சி அரசு தானா­கவே இந்­தப் பொரு­ளா­தா­ரச் சிக்­கல்­களை உரு­வாக்­கிக் கொள்­வ­தற்­கான கார­ணங்­கள் சில உள்­ளன. முறைப்­ப­டி­யான பொரு­ளா­தா­ரக் கொள்கை எது­வும் இன்­றைய அர­சி­டம் இல்­லா­தமை, இவற்­றில் முத­லா­வது கார­ண­மா­கும்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் பொரு­ளா­தார திட்­டங்­க­ளென 9தட­வை­கள் வெவ்­வேறு திட்­டங்­களை முன்­வைத்­தமை மூலம் இந்த அர­சி­டம் நிலை­யான பொரு­ளா­தா­ரக் கொள்கை எது­வும் கிடை­யாது என்­பது நிரூ­ப­ண­மா­கி­றது.

ஒன்­றுக்­கொன்று முரண்­பட்ட கொள்கை நிலைப்­பாட்­டால் ஐ.தே.கட்­சி­க்கும் சுதந்­தி­ரக்­கட்சி­க்குமிடையே விரி­சல்

ஒன்­றுக்­கொன்று பொருத்­த­மில்­லாத கொள்கை நிலைப்­பா­டு­க­ளைக் கொண்ட இரு கட்­சி­கள் இணைந்து கூட்டு அர­சொன்றை நிர்­வ­கிக்க எடுத்த முயற்­சி­கள் தோல்­வி­ய­ளித்­துள்­ளன.

நிதி அமைச்­சர் மேற்­கொள்­ளும் சில தீர்­மா­னங்­கள் குறித்து அரசு அலட்­டிக்­கொள்­ளாத போக்­கும் தொடர்ந்த வண்­ண­முள்­ளன. அரசு அடிக்­கடி அறி­மு­கப்­ப­டுத்­தும் புதிய புதிய வரி அற­வீ­டு­கள் தொடர்­பா­கக் குழம்­பிப்­போ­யுள்ள உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் மட்­டு­மன்றி, அர­சின் உறு­தி­யற்ற பொரு­ளா­தா­ரக் கொள்கை கார­ண­மாக அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள வௌிநாட்டு முத­லீட்­டா­ ளர்­க­ளும் இலங்­கை­யில் தமது முத­லீட்டு முயற்­சி­க­ளைத் தவி­ரத்­துக்­கொள்­ளும் நிலை நிலவி வரு­கின்­றது.

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரம் கார­ண­மாக நாட்­டுக்கு ஏற்­பட்ட நட்­ட­மும் அத­னது பெய­ருக்கு நில­வி­வந்த மதிப்பு அற்­றுப் போயுள்­ளன.
விவ­சா­யத்­து­றை­மீது இன்­றைய அரசு காட்­டி­வ­ரும் அலட்­சி­யம் கார­ண­மாக அந்­தத்­துறை பெரு­ம­ள­வில் பின்­ன­டைவு கண்­டுள்­ளது.

அதே­போன்று இலங்கை ரூபா­வின் மதிப்­பி­றக்­க­மும், வட்­டி­வீத அதி­க­ரிப்­பும் தொழில்­துறை மற்­றும் சேவை­க­ளில் கடும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அர­சின் தவா­றன நிர்­வாக முடி­வு­கள் கார­ண­மாக அரசு பெரும்­தொகை நிதியை பன்னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு நட்ட ஈடா­கச் செலுத்த வேண்டி நேரிட்­டுள்­ளது.
சிறி­லங்கா எயர்­ல­யின்ஸ் ந।ிறு­வ­னம் முன்­னைய அர­சின் ஆட்சிக் காலத்­தில் புதிய விமா­னங்­க­ளைக் கொள்­வ­னவு செய்ய மேற்­கொண்ட கொள்­வ­ன­வுக் கட்­ட­ளையை இன்­றைய அரசு நிறுத்­திக் கொண்­ட­தன் கார­ண­மாக குறித்த விமா­னத் தயா­ரிப்பு நிறு­வ­னத் துக்கு நட்­ட­ஈ­டாக 110மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­யைச் செலுத்த நேர்ந்­துள்­ளது.

அதே­போன்று கொழும்பு துறை­முக நகர் நிர்­மா­ணத்­திட்­டம் தொடர்­பா­க­வும் முன்­னைய அரசு மேற்­கொண்ட ஒப்­பந்­தத்தை இன்­றைய அரசு விலக்­கிக் கொண்­ட­தால் சீன அர­சுக்கு நட்ட ஈடாக பெருந்­தொகை நிதி­யைச் செலுத்த நேர்ந்­தது.

2015ஆம் மற்­றும் 2016ஆம் ஆண்­டு­க­ளில் நாட்­டின் பொரு­ளா­தா­ரப் பின்­ன­டைவு மற்­றும் அர­சின் தவ­றாக நிர்­வா­கம் கார­ண­மாக இலங்கை ரூபா­வின் மதிப்பு பெரு­ம­ள­வில் வீழ்ச்சி கண்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக நாட்­டின் சகல துறை­க­ளும் பெரும் பொரு­ளா­தா­ரப் பின்­ன­டை­ வுக்கு முகம் கொடுக்க நேர்ந்­துள்­ளது.

மொத்­தத்­தில் இன்று இந்த நாட்­டின் சகல பொது­மக்­க­ளுக்­கும் மிக்க கவ­லை­ய­ளிக்­கும் ஒன்­றாக அமை­வது, இன்­றைய கூட்­டாட்சி அர­சின் நேர்­சீ­ரற்ற நிர்­வா­கம் கார­ண­மாக, இன்­றைய அர­சின் சகல தவ­று­க­ளாலும் அதிக வரி செலுத்தல் மற்றும் நட்டஈட்டுச் செலுத்தலில் இந்த நாட்­டின் ஒவ்­வொரு பிர­சை­யும் பங்­கேற்­றுச் செயற்­பட நேர்ந்­துள்­ள­மை­யா­கும்.

http://newuthayan.com/story/09/இலங்­கைத்­தீ­வின்-தலை­விதி-என்­று­தான்-மாறப்­போ­கி­றது.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.