Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இரண்டு வீரவணக்க நிகழ்வுகள்

Featured Replies

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 19:41 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வன்னியில் இரண்டு வீரவணக்க நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

லெப். கேணல் கனிவாளனின் வீரவணக்க நிகழ்வு

லெப். கேணல் கனிவாளனின் வித்துடல் புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 23 டோறாக்களைக்கொண்ட அணிக்கு எதிராக சமரிட்டு, அவற்றில் இரண்டை சேதமாக்கி அந்த அணியை திருகோணமலை துறைமுகம் வரை விரட்டியடித்த தாக்குதலில் வீரச்சாவைத் தழுவியவர் லெப். கேணல் கனிவாளன்.

இந்நிகழ்வில் பொதுச்சுடரை விநாயகம் ஏற்றினார். வித்துடலுக்கு லெப். கேணல் கனிவாளனின தாயார் ஈகச்சுடரேற்றி மாலை அணிவித்தார்.

வீரவணக்க உரைகளை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம், திரைப்பட வெளியீட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ராதா ஆகியோர் நிகழ்த்தினர்.

கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் தனது வீரவணக்க உரையில் தெரிவித்ததாவது:

"கடற்புலிகள் அணியிலும், ராதா வான்காப்பு அணியிலும் இருந்து தாய் மண்ணின் மீட்புக்காக உறுதியுடன் சிறப்பாக செயலாற்றியவர் லெப்டினன்ட் கேணல் குட்டிவீரன் அல்லது கனிவாளன்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 23 டோறாக்களைக்கொண்ட அணிக்கு எதிராக சமரிட்டு அவற்றில் இரண்டை சேதமாக்கி அந்த அணியை திருகோணமலை துறைமுகம் வரை விரட்டியடித்த தாக்குதலில் கனிவாளன் வீரச்சாவைத்தழுவினார். 8 ஆண்டுகால விடுதலைப் போராட்டப்பணியில் கனிவாளன் செய்த வீரச் சாதனைகள் அதிகம்" என்று விநாயகம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது வித்துடல் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு இராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டது.

லெப். கேணல் தேவனின் வீரவணக்க நிகழ்வு

லெப். கேணல் தேவனின் வீரவணக்க நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சி பண்பாட்டுமண்டபத்தில் நடைபெற்றது.

மணலாறில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவியவர் லெப். கேணல் தேவன்.

இந்நிகழ்வு கிளிநொச்சிப் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் சிறிநாத் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றி வைத்தார்.

மாவீரரின் வித்துடலுக்கான ஈகச்சுடரேற்றி, மலர்மாலையினை லெப். கேணல் தேவனின் துணைவியார் அணிவித்தார்.

தொடர்ந்து மலர்மாலையினை தளபதி கேணல் தீபன் அணிவித்தார். வீரவணக்க உரையினை சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளில் ஒருவரான அமுதாப் நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில்:

"வன்னிப்பகுதிக்குள் ஊடுருவி அதனைக் கூறுபோட்டு எமது போராட்டத்தை நசுக்க சிங்களப் படைகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில் சிங்களப்படைகளை எமது மண்ணைவிட்டு விரட்டியடிப்பதன் மூலமே எமக்கான சுதந்திர வாழ்வைப் பெறமுடியும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மலர்வணக்கத்தினை தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி தொடக்கி வைத்தார்.

வித்துடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழு இராணுவ மரியாதையுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காக இன்னுயிர்த் தியாகம் செய்த எமது உறவுகளுக்கு வீரவணக்கங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.