Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோர் அலுவலகத்தை முற்றாக புறக்கணித்த உறவினர்கள்

Featured Replies

காணாமல்போனோர் அலுவலகத்தை முற்றாக புறக்கணித்த உறவினர்கள்

 

 
 

கிளிநொச்சியில் காணாமல்போனோர் அலுவலகம் நடத்திய கலந்துரையாடலை புறக்கணித்த காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணால்போனோர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர்.

k1.jpg

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல்போனர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெறவிருந்தது.

இதன்போதே குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகளுடனான சந்திப்பினை புறக்கணித்து கூட்டுறவு சபை மண்டபத்திற்கு வெளியில் காணாமல்போனோரது புகைப்படங்களை கையில் ஏந்தியவாறும் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த உறவுகளை மீட்டுத்துருமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

k5.jpg

k3.jpg

மேலும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இந்த அலுவலகமானது எந்த எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்றும் அதனால் காணாமல்போனோர் அலுவலகத்தை முற்றாக புறக்கணிப்பதாகவும் அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவித்தனர்.

k2.jpg

அத்துடன் இவர்களது நடவடிக்கையினால் கடமையை மேற்கொள்ள  முடியாத அலுவலக அதிகாரிகள் பொலிஸாரின் உதவியை நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

k4.jpg

http://www.virakesari.lk/article/36613

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரானது – படங்கள் இணைப்பு…

 

 

கிளிநொச்சி  உறவினர்கள்,  அலுவலகத்தை நிராகரித்து ஆர்ப்பாட்ம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Missing-People-relatives-protest-in-kili

 

அரசின் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரானது இதன் மூலம் எங்களுக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்து இன்று(15) கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுடனான கலந்துரையாடலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று(15) காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த அலுவலகம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், காலத்தை கடத்துவதற்குமானது, கடந்த காலங்களில் இது போன்றே பல ஆணைக்குழுக்களுக்கும் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

Missing-People-relatives-protest-in-kili

அவ்வாறான ஆணைக்குழுக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நியாயங்களை திருப்தி படுத்தாத வகையில் முன் வைத்த பரிந்துரைகளை கூட அரசு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இந்தநிலையில் தற்போது இந்த அலுவலகமும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எங்களை பொறுத்தவரை கடந்த காலத்தின் அனுபவத்தின் வெளிப்பாடாக இந்த அலுவலகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாம் இந்த காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிராகரிக்கின்றோம் எனத் தெரிவித்த உளவினர்கள், எங்களுக்கு எங்களுடை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களே தேவை அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? எங்களால் நேரடியாக முல்லைத்தீவிலும், ஓமந்தையிலும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உளவினர்களுக்கு பதில் சொல்லுங்கள், செட்டிக்குளம் முகாம்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? அருட்தந்தையுடன் சரணடைந்தவர்கள் எங்கே? இவ்வாறானவர்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை எழுப்பி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய கலந்துரையாடலை புறக்கனித்திருந்தனர். இதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதின்மூன்று பேருடனும், கிராம அலுவலர்களுடனும் தங்களது கலந்துரையாடலை மேற்கொண்டனர்

நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தின் பெரும் பகுதி வெறுமையாக காணப்பட்டது. அத்தோடு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட உறவினர்கள் பிற்பகல் இரண்டு மணிவரை கூட்டுறவாளர் மண்டப வாயிலில் நின்று தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் பாதுகாப்புக்காக பல பொலீஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Missing-People-relatives-protest-in-kili

Missing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kiliMissing-People-relatives-protest-in-kili

http://globaltamilnews.net/2018/87811/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.