Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களிடம் இருக்கும் காமதேனு

Featured Replies

உங்களிடம் இருக்கும் காமதேனு

வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி உழைப்பு,உழைப்பு. இதை நிறையப்பேர் சொல்வார்கள் ஆனால் அப்படி கடுமையாக உழைத்தும் தாங்கள் நினைத்த இலட்ச்சியத்தினை அடைய முடியவில்லையே என்று வருத்தம் தெரிவிக்கும் நம்மில் பலரைப் பார்க்கின்றோம்.

ஆனால் வெற்றி பெற்ற பலரும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ தமக்குள் இருக்கும் ஒரு விந்தையான சக்தியைப்பயன் பயன் படுத்தி இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

இந்த ஆச்சர்யமூட்டும் சக்தியினை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தலாம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த வெற்றிகளையெல்லாம் பெற முடியும்.

ஒரு காமதேனு பசுவை கையில் வைத்திருப்பது போல. நாம் பார்த்த பலர் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதை நாங்கள் எல்லோரும் கண்களால் பார்க்கிறோம். நாம் எமக்குள் கேட்டுக்கொள்ளுகிறோம் ஏனடா அவன் மட்டும் ஏறியபடியே போகிறான். தொட்டதெல்லாம் வெற்றியாக முடித்துவிடுகிறானே என்று இல்லையா?

அந்த விந்தை என்ன? வந்து அடிக்கடை இதைக்கிளிக் பண்ணி வாசிச்சு நீங்களும் அப்படி சாதனை செய்யமுடியும் என்பதினை படியுங்க.

தொடரும்......

Edited by puli_pasarai

  • தொடங்கியவர்

நமக்குள் மனம் என்னும் மகாசக்த்தி இருக்கிறது என்பதைப் பலரும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் மேல் மனதினைத்தான் நாம் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், திட்டங்கள் போடவும் உபயோகிக்கிறோம்.

அதற்கு கீழே ஆழ்மனம் என்ற சப் கான்சியஸ் என்ற ஒன்று இருக்கிறது. அதனைப்பயன் படுத்துவதன் மூலம் நாம் நினைத்த காரியங்களில் வெற்றி பெறமுடியும்.

அமெரிக்காவின் மிகப்பெரும் மனோ தத்துவ நிபுணர் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், " இன்றைய நவீன உலகின் மிகப்பெரும் கண்டுபிடிப்பே மனத்தின் உள்நிலையை மாற்றுவதன் மூலம் வெளிவாழ்க்கையில் மகத்தான வெற்றிகளை பெற முடியும் என்கிறார்.

திரும்பத்திரும்ப ஒன்றினையே ஆழ்ந்து நினைப்பதன் மூலமும் , நமக்குளேயே ஒரு திரைப்படம் போலக்காண்பதன் மூலமும் நம் ஆழ்மனதின் ஒரு செய்தியை ஆழமாகப்பதிக்க முடியும். அந்த ஆழ்மனப் பதிவே பிரமாண்டமான செயலாற்றலாக வெளிப்பட்டு எந்தத்தடையையும் மீறி வெற்றி பெறச் செய்கிறது. ஏனெனில் உள்ளிருக்கும் எமது எண்ணங்களின் பிரதிபலிப்பே, வெளியே நம்மைச்சுற்றி நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. இது சந்தேகம் இல்லாத உண்மை.

சரி இதை எப்படி நடைமுறையில் சாதிப்பது?

தொடரும். பதற்றப்படாம ஆத்திரப்படாம பிறகு வாங்க எனித்தான் விசயம் சொல்லப்போகிறேன்.

  • தொடங்கியவர்

தொடர்ந்த விஞ்ஞான ஆராட்ச்சிகளில் நிருபணம் ஆகியிருக்கும் ஒன்று-

நம்முடைய மனதில் ஒரு நொடிக்கு 14 முதல் 20 சுற்று எண்ணங்கள் சுழலுகின்றன. இதையே பீற்றா நிலை என்று சொல்லுகிறார்கள்.

அந்த மனதினை அமைதிப்படுத்தி வினாடிக்கு 8 ல் இருந்து 12 வரை எண்ணங்களினை சுழல்வதற்கு கொண்டு வருவது அல்பா நிலை.

இதைத்தான் தியான் நிலை என்று காலம் காலமாக எல்லோரும் சொல்லுகிறோம்.

ஏன் உங்கள் ரஜினி கூட ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார். ஒரு 5 நிமிடம் ஒவ்வொருநாளும் தான் தியானம் இருந்து தான் இப்படி அழுக்கு வாழ்க்கையில் இருந்து அதி உயர் வாழ்க்கையினை அடைந்ததாக.

இந்த அல்பா நிலையில் உள்ள மனமே காமதேனுவாக மாறுகிறது.

இந்த நிலைக்கு எம் மனதை எப்படிக் கொண்டு வருவது? இது ஒன்றும் பெரிய வித்தை இல்லை.

கண்களை மேல்நோக்கி மெதுவாகக் கொண்டு சென்று அமைதியாக மூடிக்கொள்ளுங்கள். நூறில் இருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணுங்கள். அந்த அளவு தேவையில்லாதவர்கள், 50 லிருந்து கூட ஆரம்பிக்கலாம். மனதுக்கு பிடித்த மெல்லிய இசையை மெதுவாக பின்னனியில் இசைக்கச்செய்யலாம் தேவையென்றால்.

எண்ணிக்கை எண்ணும் போது முழுமையாக அதன் மீது கவனம் கொண்டு எண்ண வேண்டும்.

இப்போது உங்களின் எண்ண வேகம் குறைந்துவிடும், மூச்சும் நிதானப்பட்டு விடும். இதுவே அல்பா நிலை.

இந்த நிலையில் உங்கள் இலட்ச்சியத்தினை அப்படியே படமாகக் கொண்டு வாருங்கள்.( ஒவ்வொரு தமிழ் கள உறுப்பினர்களும் ஒரு 5 நிமிடம் உலகம் முழுவதிலும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்ற இலட்ச்சியத்தினை இங்கே பாவிக்கலாம்) உங்களுக்கு அல்லது உங்கள் மேல் வெறுப்புக்கொண்ட மனிதரை( உதாரணமாக எனக்கு பண்டிதர்) முன்னிலையில் நிறுத்தி

அவருக்கு உங்கள் அபரீதமான் உங்கள் அன்பை கொடுங்கள். அதே நேரம் அவர் உங்களி அன்பு செலுத்துவதை நீங்கள் உணருவீர்கள்.

இது ஒரு மிராக்கிள் போல அவரது, உங்களது இலட்சியங்கள் சிறிது சிறிதாக உங்களை நோக்கி மாறுவதை நீங்கள் ஒரு மாதத்தில் உணருவீர்கள்.

இதைப்போல எதைவேண்டுமானாலும் ஆல்பா நிலையில் இருந்து உங்கள் மனத்தினூடு சாதிக்கமுடியும். எந்தப்பிரச்சனையையும் தீர்த்துக்கொள்ளலாம்.எந்த உயர் நிலைக்கும் ஏறலாம்.இந்த அல்பா நிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் செல்வதினை கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை மேலும் வலுவாக்க

உங்கள் கனவுகளினை ஒரு பேப்பரில் எழுதி எடுத்து உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.அவை நிறைவேறிய பின் நீங்களும் ஒரு பெரிய பென்ஸ் காரில் போவது போலவும், உங்கள் வங்கிக்கணக்கில் கோடி டாலர்கள் இருப்பதாகவும் அதை நீங்கள் எண்ணுவதாகவும் நினைத்து ஆன்ந்தப்படுங்கள். உங்கள் தேவைகளினை செய்து தரும் உங்கள் மிக பெரும் சக்தியிற்கு மனப்பூர்வமாக நண்றி செலுத்துங்கள்.உங்கள் இலட்ச்சியத்தினை நனவாக்க அந்த அல்பா நிலையில் இருந்து விடுபட்ட கணமே செயல் பட தொடங்குங்கள்.உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் நீங்கள் நினைத்தபடி மாறுகின்றது என்பதினை நீங்களே ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள்.

வாழ்க்கையில் உயர்வதற்கும், குடும்பச்சூழ்ந்விலைகளினை மாற்றுவதற்கும், கல்வி, வேலைகளில் மேலும் மேலும் வளர இந்த யுத்தியினை பாவித்துக்கொண்டு வாருங்கள். இமாலய வெற்றிகள் உங்களுக்கு பெரிய வெற்றியாகவே தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.