Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்யப்போகிறது சர்வதேசம்?

Featured Replies

என்ன செய்யப்போகிறது சர்வதேசம்?

-சி.இதயச்சந்திரன்-

கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது 26 ஆம் திகதி அதிகாலையில் விடுதலைப் புலிகள் வான்படைத் தாக்குதல் தொடுத்த செய்தி சர்வதேசமெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தி, சோர்ந்த நிலையிலிருந்த தமிழர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டியது. புலிகளின் வான்படையினை உருவாக்கிய, கேணல் சங்கர் வீரமரணமெய்திய நாளும் 26 தான்.

சங்கரின் கல்லறையிலிருந்து கிளம்பிய பேரொளி, முள்ளியவளை துயிலும் இல்லமெங்கும் பரவி தாயகத்தை ஒளிக்களமாக்கியுள்ளது. தற்போது புலிகளுக்கெதிராகப் போராட அனைத்து சிங்கள மக்களும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

புலிகளின் விமான வெள்ளோட்ட நிகழ்வால் நிலைகுலைந்த அரசு, தாக்குதலில் விமானங்கள் நொருங்கவில்லையென்பதை மக்களுக்கு உறுதி செய்யவேண்டிய நிலையில், மன்னார் முல்லைத்தீவின் மீது தமது விமானத் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது.

பல சர்வதேச விமான சேவைகள் தமது பயணப் போக்குவரத்தினை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக அறிவித்து, உல்லாசப் பயணத்துறையின் வருமானத்திற்கு வேட்டு வைத்துள்ளன இலங்கைப் பங்குச் சந்தையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

வருமான இழப்பும், செலவீனங்களின் அதிகரிப்பும், அரச திறைசேரியைக் கரைக்கும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு இட்டுச் செல்கிறது.

அவலத்தைத் தந்தவனிற்கு அதைத் திருப்பிக் கொடு என்கிற கோட்பாட்டில் மானுட தர்மம் மீறப்படுவதாகத் தோற்றமளித்தாலும், உச்ச அவலத்தை தொட்டு நிற்கும் படுவான்கரை மக்களின் அடிப்படை மனித உரிமையினை நிராகரிப்பவர்களிடம் பௌத்தத்தைப் போதிக்க முடியாது என்பதிலேயே அதற்கான விளக்கமும் உள்ளடக்கப்படுகிறது.

பல்குழல்கள், முன்னரங்கக் கோட்டில் அடுப்பு ஊத, திசைகாட்டி மையத்தின் தலைமேல் வான்புலிகள் வட்டமிடத் தொடங்கி விட்டன.

பிராந்திய நலன் தேடும் சர்வதேசத்திற்கு பேரதிர்ச்சிகள் பல இன்னமும் காத்திருக்கின்றன போலுள்ளது.

ஜூலை 2001 கட்டுநாயக்கத் தாக்குதலின் பின் இரு தரப்பு படைவலுச் சமநிலையை உணர்ந்தே சர்வதேச சமூகத்தினனர், சமாதானக் காவலர்களாக இலங்கையில் கால் பதித்தார்கள். பேச்சுவார்த்தையின் நீட்சி, புலிகளின் பலத்தைச் சிதைக்குமென தப்புக் கணக்குப் போட்டார்கள்.

இடையில் வந்த புதிய ஆட்சியாளர், இன மேலாதிக்கத்தின் மொத்த உருவகமாக தொழிற்பட முனைகையில், சர்வதேசம் சற்றுப் பின்வாங்கி, இராணுவ முனைப்பிற்கு ஆதரவளித்தது. பல்குழல் எறிகணைச் செலுத்திகள், முன்னரங்க நிலையெங்கும் பரவிக் கிடந்தது. கண்காணிப்புக் குழுவின், அனுசரணையாளர்களும் ஒளிந்து கொண்டனர்.

மஹிந்த சிந்தனை செயலுருப்பெற்று மாவிலாற்றிலிருந்து மடுவரை அகலக்கால் பதித்தது. இந்த இராணுவ முன்னெடுப்புக்களால் அவலப்படும் தமிழ் மக்களின் வாழ்வு பற்றிய கரிசனையற்று வேடிக்கை பார்த்தது சர்வதேசம். புலிகளின் பின்னகர்வுகளை, தோல்வியாகக் கணித்த அரசு, மூன்று வருடத்துக்குள் புலிகளை அழிப்பேனென உறுதிபூண்டது.

எம்மில் சிலர், தோல்வியுறும் புலிகளுக்கு, இந்தியா வழிகாட்ட, லண்டனில் மாநாடும் நடத்தினர். இருப்பினும் பிராந்திய வல்லரசுகள், சரியான, தீர்க்கமானதொரு முடிவெடுக்க வேண்டிய காலச் சூழல் உருவாகியுள்ளதை உணரும் வேளை வந்துவிட்டது.

ஆயுதங்களைத் தாருங்கள் புலிகளை அழிப்பேனென அறைகூவல் விடுத்த அரசாங்கத்தின் சவடால்களை சர்வதேசம் இனியும் நம்பும் என்பது சந்தேகமே.

இனவெறிச் சகதிக்குள் விழுந்தவர்கள் இனி திருந்தப் போவதுமில்லை.

மௌனம் காத்து, நடப்பதைச் சோகமுகத்துடன் தரிசிப்பதே சர்வதேசத்தின் ஒரே தெரிவாக அமையும். ஆயினும் முன் நிபந்தனையின்றி இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஐ.நா. சபைச் செயலாளர் நாயகம் பான் கி மூன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைத்தலைமை நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை அழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலிப்பாகவே பான் கி மூனின் அவசர அறிக்கை வெளிவந்துள்ளது.

சர்வதேசத்தின் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தாமல் இனி ஒரு பேச்சுவார்த்தை சாத்தியமில்லையென்பதை தெளிவான நிலைப்பாட்டை ஐ.நா.சபைக்கு முன்வைக்க வேண்டும்.

இராணுவம் தனது பழைய நிலைக்குத் திரும்பினால், பேச்சுவார்த்தை குறித்துப் பேசலாமென திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் கூறியது அரசாங்கத்தின் பேச்சில் மாற்றமேற்படுத்தப் போவதில்லை.

அதேவேளை, புலிகளின் வான் படையால் தென்னாசியப் பிராந்தியத்திற்கு ஆபத்து சூழ்ந்துள்ளதென இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஜனாதிபதி.

இந்திய அரசானது, இலங்கைக்கு ராடர்களையும், யுத்தக் கப்பல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சீனாவும், மேற்குலகமும் இலங்கைக்குள் மூக்கை நுழைக்காமலிருப்பதற்கு, தன்னால் இயன்ற உதவிகளை இந்தியா வழங்கிக் கொண்டுதானிருக்கிளைத் இழந்ததை ஈடுசெய்ய, பிராந்தியப் பயங்கரவாதமென்கிற இலகு ரக (மன்னிக்கவும் விமானமல்ல) ஆயுதத்தை பிரயோகித்து, வானூர்திகளை பெறும் முயற்சியின் பின்புலத்திலேலேய 'தென்னாசிய ஆபத்து" பேசப்படுகிறது.

மறுபுறம் யுத்த களத்தில், விடுதலைப் புலிகளின் மீள் பிரவேசம், சமஷ்டிக்கு அடுத்தபடியான கூட்டாட்சி அல்லது தனிநாடு நோக்கிய தீர்வினை குறித்து ஆலோசிக்க வேண்டிய கள யதார்த்த நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச சபைக்குள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அடக்கலாமென விரும்புபவர்களின் முனைப்பிற்கு மாறாக, புலிகளின் படைவலு வளர்ச்சி நிலையானது, தனி நாடு நோக்கிய தீர்விற்கே வழிவகுக்கும். பௌத்த சிங்கள மேலாண்மைக் கருத்தியல் கூர்மையடைந்து ஒருமித்த குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அழிக்க நினைப்பவன், அழிவையும் ஏற்கத்தான் வேண்டும். சர்வதேசத்தின் மாயமான் வேட்டையில் சமாதானம் தேடப்படுகிறது.

தற்போது வடபோர் முனை முன்னரங்கில் இடைவிடாது ஓய்வின்றி எறிகணை வீச்சின் அதிர்வலைகள் கிளம்புகின்றன. நவீன சென்சூயி, எதிரி நெருங்கி வரும் போதுதான் தூரத்தில் இருப்பது போல் காட்டமாட்டார். எட்டிச் சிரசில் அடி என்கிற புதுமொழியை வரைவார்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (01.04.07)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.