Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமாளிகளா அல்லது கொலைகாரர்களா – எங்களது தெரிவு எது?

Featured Replies

கோமாளிகளா அல்லது கொலைகாரர்களா – எங்களது தெரிவு எது?

 

 

maithiri-and-rajapaksa.jpg

 
 

 

 

வியாத் மாவத்தை’’ என்­பது ஒரு வழி­யையோ, பாதை­யையோ குறிப்­பி­டு­வது அல்ல. மகிந்த சிந்­தனை என்ற நிகழ்ச்­சித் திட்­டத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லு­தலே அவ்­வி­தம் குறிப்­பி­ டப்­ப­டு­கி­றது என கடந்த ஜூலை மாத முதல் வாரத்­தில் மகிந்த ராஜ­பக்ச நிகழ்­வொன்­றில் வைத்­துக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இரத்­தி­ன­பு­ரி­யி­லுள்ள ஒரு விகா­ரை­யின் விகா­ரா­தி­பதி, பொலிஸ் சிரேஷ்ட உத்­தி­யோ­கத்­தர் (சார்­ஜன்ட்) ஒரு­வ­ரின் கழுத்தை நெரித்­துக் கொலை செய்­துள்­ளார். அது, உணர்ச்சி மிக்­க­தொரு சம்­ப­வம் என்­றா­லும்­கூட, பெரிய விட­ய­மா­கக் கரு­தப்­ப­டா­மல் மறைக்­கப்­பட்­டு­விட்­டது. குறிப்­பிட்ட இந்த விகா­ரா­தி­பதி பாலி­யல் வழக்கு ஒன்­றில் குற்­ற­வா­ளி­யாக பொலி­சா­ரால் தேடப்­பட்டு, தலை­ம­றை­வாக இருந்­துள்­ளார்.

அவர் மீதான வழக்கு சம்­பந்­த­மான பிடி ஆணையை குறித்த விகா­ரா­தி­ப­தி­யி­டம் கைய­ளிப்­ப­தற்­கா­கவே நிரா­யு­த­ பா­ணி­யாக, தனி­யாக, குறிப்­பிட்ட அந்­தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் விகா­ரைக்­குச் சென்­றி­ருந்த வேளை­யி­லேயே துக்­க­க­ர­மான அந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.
குறிப்­பிட்ட விகா­ரா­தி­பதி குறித்த அந்­தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரது கழுத்­தைப் பிடித்து நெரித்­துக் கொலை செய்­துள்­ளார். அந்­தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரது சாவு ஓலத்­தைக் கேட்­க­நேர்ந்த அய­ல­வர்­கள் உசா­ர­டைந்து பொலிஸ் அவ­சர சேவை 119இற்கு அது குறித்து அறி­வித்­தி­ருந்­த­னர். அதன்­படி அங்கு அவ­சர சேவைப் பொலி­சார் விரைந்து வந்து குறிப்­பிட்ட விகா­ரைக்­குள் செல்ல முயன்­ற­போது, குறிப்­பிட்ட அந்­தப் பிக்கு கைக்­குண்­டொன்றை வீசி அவர்­க­ளைப் பய­மு­றுத்­தி­யுள்­ளார்.

 

சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு
சிறு விடயமொன்றைக்கூட
ஊதிப் பெருப்பிப்பது அரசியலில் சகஜம்
Äåசரி, இதே போன்­ற­தொரு சம்­ப­வம் ஒரு இந்­துக் கோவி­லில், கிறிஸ்­தவ தேவா­ல­ய­மொன்­றில் அல்­லது முஸ்­லீம் பள்­ளி­வா­ச­லொன்­றில் இடம்­பெற்­றி­ருந்­தால் ஒரு பூச­கர், பாதி­ரி­யார் அல்­லது மௌலவி இப்­படி ஒரு காரி­யத்தை, ஒரு பொலிஸ் அதி­கா­ரியை கைக­ளால் கழுத்தை நெரித்­துக் கொலை செய்­தி­ருந்­தால், அல்­லது பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் மீது கைக்­குண்­டுத் தாக்­கு­தலை மேற்­கொண்டு இருந்­தால், சகல ஊட­கங்­க­ளாலும், வாரக்­க­ணக்­கில் அது­கு­றித்­துப் பல­த­ரப்­பட்ட கோணங்­க­ளில், பல தரப்­பி­ன­ரது கருத்­துக்­க­ளை­யும் உள்­வாங்கி அதுவோர் பார­தூ­ர­மான விட­ய­மாக மாற்­றப்­பட்டு விட்­டி­ருக்­கும்.

அதைத்­த­விர, நாட்­டுப்­பற்­றுள்ள இலங்­கை­யின் அர­சி­யல்­வா­தி­கள், இந்­தச் சம்­ப­வத்தை வேறு கோணத்­தில் திரித்து அர்த்­தம் கற்­பித்து, இது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளது, அல்­லது புரட்­சி­வாத இஸ்­லா­மிய இன­வாதக் குழு­வி­னது, அல்­லது கிறிஸ்­தவ சதி­மு­யற்சி எனப் பெய­ரிட்டு இந்­தச் செயல் நாட்­டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­வ­தாக அறிக்­கை­க­ளும் வௌியிட்டு அர­சி­யல் இலா­பம் தேடிக்­கொண்­டி­ருப்­பார்­கள்.

ஆனால் இப்­ப­டி­யா­ன­தொரு குற்­றம் புரிந்­த­வர் ஒரு பௌத்த பிக்கு என்ற கார­ணத்­தால், சக­ல­ரும் மௌன­மாக இருந்­து­விட்­ட­னர். மதச் சார்­பற்ற எல்லா விட­யங்­க­ளி­லும் தலை­யி­டக்­கூ­டிய தகுதி இல்­லாத போதி­லும் கூட, அவை எல்­லா­வற்­றி­லும் மூக்கை நுழைக்­கும் பௌத்த மதத் தலை­மைப் பீடங்­கள், இந்­தச் சம்­ப­வத்­தை­யிட்டு வாயே திறக்­க­வில்லை என்­ப­த­னூ­டாக, இலங்­கை­யில் சிங்­கள பௌத்த மதத்­தின் நிலைப்­பாடு என்ன என்­பதை எம்­மால் புரிந்து கொள்ள இய­லும்.

சந்­தேக நப­ரான குறிப்­பிட்ட அந்­தப் பிக்கு, பொலி­சா­ரின் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். விசா­ர­ணை­யின் பின்­னர் இந்­தப் பிக்கு ஏற்­க­னவே கொலை மற்­றும் வேறு குற்­றங்­க­ளுக்­காக சிறை­வா­சம் அனு­ப­விக்­கும் 15 பிக்கு­களு­டன் 16ஆவது ஆளாக இணைந்து கொள்­வார் என நம்­பப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே 10 பிக்­கு­மா­ர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளின் பேரில் விளக்­க­ம­றி­ ய­லில் உள்­ள­தாக சிறைச்­சாலை வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

தமது தரப்பு மீது வேண்டுமென்றே
பொய்க் குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்படுவதாக மகிந்த குறை கூறுகிறார்
சூனி­யம் செய்­வ­த­னூ­டாக குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளைத் துன்­பு­றுத்­த­லாம் என மகிந்த ராஜ­பக்ச நினைத்­தார். ஆனால் இப்­போது குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­வ­து­தான் துன்­பு­றுத்­தல் என­வும் இதில் சூனி­யம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் நினைக்­கி­றார்.

மாத்­த­றை­யில் ஒரு விகா­ரை­யில் கடந்த மாதம் இடம்பெற்ற மத வழி­பா­டு­க­ளில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச, பிக்­கு­கள் சிறை­யி­லி­ருக்­கும் விவ­கா­ரத்தை திரி­பு­ப­டுத்தி, அவர்­கள் துன்­பு­றுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாக்­கப்­பட்­டுள்­ள­னர் எனக் குறிப்­பிட்­டுள்­ளார். தற்­போ­துள்ள நிலை­யில் பிக்­கு­மார் தங்­கள் அங்­கி­களை சிறை­யி­லுள்ள கைதி­கள் அணி­யும் ஜம்­பர்­க­ளாக மாற்­று­வ­தற்கு தெரிந்து கொண்­டி­ருப்­பது அவ­சி­யம் என­வும் மகிந்த கூறி­யி­ருந்­தார்.

தற்­ச­ம­யம் 40 அல்­லது 50 பிக்­கு­மார் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், நாங்­கள் பௌத்­தர்­கள் என்ற ரீதி­யில் எங்­க­ளுக்கு பெரிய பொறுப்­புக்­கள் உள்­ளன எனக்­கூ­றிய மகிந்த, அந்த இடத்­தில் தனது பேச்­சின் போக்கை மாற்றி, நாட்­டில் பிக்­கு­மா­ருக்­கான பற்­றாக்­குறை உள்­ளது எனத் தொடர்ந்­தார். அந்த காலத்­தில் ஒரு குடும்­பத்­தில் 9அல்­லது 10 பிள்­ளை­கள் இருந்­த­னர் எனக் குறிப்­பிட்ட மகிந்த ராஜ­பக்ச, சிங்­கள இனம் சனத்­தொ­கை­யில் படிப்­ப­டி­யா­கக் குறைந்­து­கொண்டே போகி­றது என­வும், இதற்­குக் கார­ணம் பொரு­ளா­தார நெருக்­கடி என்­ப­து­டன், அரசினாலும் குடும்­பக்­கட்­டுப்­பாடு போன்­ற­வை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என­வும் குற்­றம் சாட்­டி­னார்.

சூக்காட்டுவதில் மகிந்த வல்லவர்
மகிந்த ராஜ­பக்ச ‘‘சூக்­காட்­டு­வ­தில்’’ வல்­ல­வர். மறை­மு­க­மாக அவர் இந்த அர­சின் சதித்­திட்­டம், பௌத்­தத்தை நலி­வு­ப­டுத்தி, சிங்­கள இனத்தை அழிப்­ப­து­தான் என­வும், சிங்­கள இனம் விரை­வில் அழிந்து போகப்­போ­கி­றது என்­றும் கூறா­மல்­கூறி வைத்­த­தா­கக் கொள்­ள­மு­டி­யும்.
பர­வா­யில்லை, நாட்­டின் சனத்­தொகை அதி­க­ரிப்பு விகி­தா­சா­ரத்தை உற்று நோக்­கி­னால், 1981ஆம் ஆண்­டில் 66.91 வீத­மாக இருந்த சிங்­க­ள­வர்­க­ளும் 61.53வீத­மாக இருந்த பௌத்­தர்­க­ளும், 2012ஆம் ஆண்­டில் சிங்­க­ள­வர்­கள் 74.9வீத­மா­க­வும், பௌத்­தர்­கள் 70.1வீத­மா­க­வும் அதி­க­ரித்­துள்­ள­னர். பர­வா­யில்லை; ஆக 25பிக்­கு­கள் மட்­டும்­தானே அவர்­கள் செய்த குற்­றங்­க­ளுக்­காக சிறை­யில் இருக்­கி­றார்­கள். மகிந்­த­வின் பேச்­சைக் கேட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்த உண்­மை­கள் தெரி­வ­தில்லை. மகிந்த உண்­மை­யென நாம் நம்­பும் விதத்­தில் பொய் கூறு­வ­தில் வல்­ல­வர்.

சிங்கள இனத்தவரது சனத்தொகை வீதம்
குறைவடைவது குறித்த
மகிந்தவின் கருத்து பலவீனமானது
அவரது பேச்­சைக் கேட்­டுக் கொண்­டி­ருக்­கும் பொது­மக்­க­ளது மனதில் ஏனை­யோர் 9அல்­லது 10 பிள்­ளை­க­ ளைப்­பெற்­றெ­டுப்­பது பற்­றிக்­கூ­றும் மகிந்­த­வுக்கு 3பிள்­ளை­கள்­தானே? மகிந்­த­வின் சகோ­த­ரர் கோத்­த­பா­ய­விற்கு ஒரே­யொரு பிள்­ளை­தானே? அப்­ப­டி­யா­னால் அதி­கம் பிள்­ளை­க­ளைப் பெற்­றெ­டுக்­கா­மைக்­கான கார­ணம் பொரு­ளா­தா­ரப் பிரச்­சினை என்­றால், மகிந்­த­வுக்­கும் பொரு­ளா­தார பிரச்­சினை இருந்­தி­ருக்­கக்­கூ­டுமா? அத­னால்­தான் அவ­ரும் 3பிள்­ளை­களை மட்­டுமே பெற்­றெ­டுத்­துள்­ளாரா? அல்­லது இந்த அர­சின் சூனி­யக்­கா­ரர்­க­ ளின் சூழ்ச்­சி­யால் மேல­தி­க­மா­கப் பிள்­ளை­க­ளைப் பெற்­றெ­டுக்க இய­லாது போயிற்றா? ஏன் ராஜ­பக்­ச­வின் குடும்­பத்­தி­லி­ருந்து எவ­ருமே துற­வ­றம் பூண்டு பிக்­கு­க­ளாக மாற­வில்­லையே? என்பவை போன்ற கேள்­வி­கள் தலை­தூக்­கு­வ­தைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

கோமா­ளி­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிரி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய கோமா­ளி­க­ளின் அர­சு­தான் தற்­போ­தைய அரசு. இந்த இரு­வ­ரின் நிர்­வா­கம் சம்­பந்­த­மாக இலட்­சக்­க­ணக்­கான குறை­க­ளைக் கூற இய­லும். அவற்­றுள் முதன்­மை­யா­னது சாதா­ரண மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்த இந்த அரசு எதை­யுமே செய்­ய­வில்லை என்­பதுதான். இலங்­கை­யில் மீண்­டும் ஒரு கறுப்பு ஜூலை சம்­ப­வம், 35வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்­ற­மை­போன்று உரு­வா­கத் தேவை­யில்லை. அத்­து­டன் இன்­னு­மொரு உண்­மை­யும் தெட்­டத்­தௌி­வா­கப் புலப்­ப­டு­கி­றது. அதா­வது மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் அர­சி­ய­லில் தலை­தூக்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளும் முயற்­சியே அது. நாட்­டில் மீண்­டும் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான தமது நட­வ­டிக்­கை­க­ளால், ஜன­நா­யக உரி­மை­க­ளை­யும் மக்­க­ளின் சுதந்­தி­ரத்­தை ­யும் சீர்­கு­லைப்­ப­த­னூ­டாக மக்­க­ளின் ஆத­ரவை இவர்­க­ளால் ஈட்­டிக்­கொள்ள முடி­யுமா?

கோத்­த­பாய ராஜ­பக்­சவை ஹிட்­லர் போல் ஆட்சி நடத்த வேண்­டும் என்று கூறிய வெந்­து­ருவ உபாலி தேரர், மட்­டும்­தான் ‘ஹிட்­லர் மேனியா’ என்ற நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர் என்­ப­தல்ல. இன்­னு­மொரு கிறீஸ்­த­வ­ரும் இதே போன்ற விமர்­ச­னத்­துக்­கு­ரிய கருத்­தைத் தெரி­வித்­து­விட்­டுப், பின்­னர் தமது அந்­தக் கூற்­றைத் திரும்­பப் பெற்­றுக் கொண்­டுள்­ளார்.
இலங்­கை­யில் பொது­மக்­கள் மத்­தி­யில் குற்­றங்­கள் மிக மோச­மா­கப் பெரு­கி­வ­ரும் இன்­றைய கால­கட்­டத்­தில், ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தை­விட குறை­வான குற்­றங்­களே எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் நடை­பெ­று­கின்­றன என்று புள்­ளி­வி­ப­ரங்­களை முன்­வைத்து தமது தரப்பை நியா­யப்­ப­டுத்­து­வ­து­தான் இன்­றைய பிரச்­சி­னைக்­கான தீர்வு என இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் நம்­பு­கின்­ற­னரா?

இலங்கை முன்­னொ­ரு­போ­தும் குற்­றம், வன்­செ­யல்­கள் இடம்­பெ­றாத நாடு அல்ல. ஆனால் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இருந்த நிலை­மை­யைப் போலல்­லா­மல், இப்­போது அவை ஓர­ளவு குறைந்­துள்­ளன. பொய்­யான தக­வல்­கள் கார­ண­மா­கவே அது தொற்று நோய்­போல் பரவி, நாட்­டில் சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைந்த இரத்­தக்­க­ள­ரி­யான ஒரு நாட்­டில் வாழ்­கி­றோம் என நினைக்­கத் தோன்­றும்.

மீண்டும் நாட்டில் ராஜபக்ச
யுகத்தை உருவாக்குவதுதான்
சில தரப்பினரது குறிக்கோள்
இதன் உள்­நோக்­கம் என்­ன­வென்­றால், அர­சி­யல் ரீதி­யான பிரி­வி­னையை வளர்த்து, நாட்­டில் ஜன­நா­ய­கத்­தை­யும், மக்­க­ளின் சுதந்­தி­ரத்­தை­யும் சீர்­கு­லைத்து, மீண்­டும் இந்த நாட்­டில் ராஜ­பக்ச தரப்­பி­ன­ரது ஆட்சி மல­ரு­வதை நியா­யப்­ப­டுத்து­வது­தான்.
ஞாபக சக்தி என்­பது விலாங்­கு­மீன் போன்­றது. கூட்டு அரசு, நாட்டு மக்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்­து­விட்­டது. மூன்­றா­வது விமா­னத்­த­ளத்தை பொல­ன­று­வை­யில் நிறு­வு­வோம் என்­ப­து­தான் அவர்­கள் கடை­சி­யாக வழங்­கி­யுள்ள வாக்­கு­றுதி. சில­வேளை அந்­தத்­தொ­குதி மக்­கள் தாங்­கள் ராஜ­பக்ச காலத்­தில் எத்­த­கைய நிலை­யில் இருந்­தோம் என்­பதை மறந்­து­விட்­டி­ருப்­பார்­கள் போலத் தோன்­று­கி­றது.

தொடர்ச்­சி­யாக காவத்த, கொட­க­தெ­னிய பகு­தி­க­ளில் நடந்த படு­கொ­லை­கள், பாரத லக்ஷ்­மன் பிரே­ம­சந்­திர கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டமை, இங்­கி­லாந்­தி­லி­ருந்து வந்த சுற்­று­லாப் பயணி கரும் சேக் படு­கொலை செய்­யப்­பட்­டமை, ரஷ்­யா­வைச் சேர்ந்த சுற்­று­லாப் பய­ணி­யின் மனைவி மீது மேற­கொள்­ளப்­பட்ட கூட்­டுப் பாலி­யல் வல்­லு­றவு என இவை எல்­லா­வற்­றை­யும் தற்­போது நாட்­டின் பொது­மக்­கள் மறந்­து­விட்­ட­னர். அது­மட்­டு­மல்ல, ராஜ­பக்­ச­வின் விசு­வா­சி­யான போதைப்பொருள் வியாபாரி। ஜூலாம்­பிட்­டிய அம­ர­வுக்கு எதி­ராக, அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பாக நீதி­ மன்­றத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட பிடி­யா­ணை­கள் இருந்­த­போ­தி­லும், அவர் தற்­போ­தும் தங்­கா­லைப் பகு­தி­யில் சுதந்­தி­ர­மாக நட­மா­டிக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

அந்த வகை­யில் எமது அர­சி­யல் தலை­மை­கள் நாட்­டின் அர­சி­ய­லில் எத்­த­கைய பாத்­தி­ரத்தை வகிக்­கின்­றார்­கள் என்­பது குறித்து உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள இய­லாத திரி­சங்கு சொர்க்க நிலை­யில் நாட்டு மக்­கள் குழம்­பிப்­போ­யுள்­ள­னர் என்­ப­தில் எது­வித சந்­தே­க­மும் கிடை­யாது.

http://newuthayan.com/story/10/கோமாளிகளா-அல்லது-கொலைகாரர்களா-எங்களது-தெரிவு-எது.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.