Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து முன்பதிவுகளை ரத்துச் செய்யும் உல்லாசப் பயணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீதான வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விடுதிகளை முற்பதிவு செய்திருந்த உல்லாசப் பயணிகள் தமது பதிவுகளை பெருமளவில் இரத்துச் செய்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலானது ஒரு தனியான தாக்குதல் என விபரிக்கப்பட்டு வந்தாலும், மிக அதிகமாக உல்லாசப் பயணிகள் வரும் இந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட முன் பதிவுகள் இரத்துச் செய்யப்படுவது தம்மை மிகவும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடலாம் என முன்னணி விடுதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க வான் தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம் தனது பயணிகளை எச்சரித்துள்ளது. எனினும், ஏனைய நாடுகள் எச்சரிக்கைகளை விடுக்காதது ஒரு நல்ல அறிகுறி என இலங்கையின் சுற்றுலாத்துறை தலைவர் ரென்ரன் டீ அல்விஸ் தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் தங்களின் பயண ஆலோசனைகளை கடுமையாக்கிய போதும், தாங்கள் எதிர்பார்த்ததைப் போல பெருமளவில் சுற்றுலாத்துறை பாதிப்படையவில்லை என சுற்றுலாத்துறை விடுதிகள் சபையின் பிரதித் தலைவர் சிறீலால் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒவ்வொரு நாளும் 90 முதல் 95 பேர் தமது முற்பதிவுகளை இரத்துச் செய்து வருவதாக முன்னணி விடுதி ஒன்று தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நாடுகளில் இருந்து தான் அதிகளவான பயணிகள் வருவதுண்டு. இருந்த போதும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் போது அதிகளவான பயணிகள் வருவார்கள் என நம்புகிறோம். சுற்றுலா தொழிற்துறை தப்பிப்பிழைக்க வேண்டுமாயின், அமைதி முக்கியமானது என அது மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் சிலர் தமது பதிவுகளை இரத்துச் செய்திருந்தனர். ஆனால், எமது தற்போதைய கவலை என்னவென்றால்,எதிர்வரும் ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களுக்கான முற்பதிவுகள் ஏப்ரல், மே மாதங்களில் தான் மேற்கொள்ளப்படுவதுண்டு அவை பாதிக்கப்படலாம் என்பது தான்.

தாக்குதலானது சர்வதேச விமான நிலையத்திலிருந்து சில மீற்றர் தூரத்தில் நிகழ்ந்துள்ளதே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என அமயா விடுதியின் நிர்வாக இயக்குநர் லலின் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முற்பதிவுகள் செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கின்றனர்.கடந்த மாதம் எம்மால் பேர்லினில் ஐரீபியில் மேற்கொள்ளப்பட்ட எழுந்தமானமான ஆய்வில் பயண முகவர் நிலையங்களில் ஒரு சிலரை தவிர பெரும்பாலான நிலையங்கள் எமது பயணக் குறிப்புகளை தமது கண்காட்சி அறையில் இருந்து நீக்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான அறிகுறி என அவர் மேலும் தெரிவித்தார்.

காலித் துறைமுகம் மீதான தாக்குதலின் பின்னர் முற்பதிவுகள் பெருமளவில் குறைந்திருந்தன. ஆனால் தற்போதைய வான் தாக்குதலை தொடர்ந்து அது மேலும், வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தினக்குரல்

ரென்ரன் டீ அல்விஸுக்கு பிரித்தானியாவௌம் அவுஸ்திரேலியாவௌம் இலங்கைக்கு போகவேணம் என்டு எச்சரிக்கை விட்டது தெரியாதாமா........?

அடுத்த அடியுடன் அவங்க எல்லாம் இலங்கை சுற்றுலாவை முற்றாக மறக்கவேனும். அதுக்கு எங்கட தமிழ் மக்கள் எல்லாரும் பொரிய தேரின்ர வடத்தை மட்டும் பிடிச்சு இளுக்க வேனும் மற்றது எல்லாத்தையும் அடிச்சு உடைக்கவேனும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் சுற்றுலாப் பிராயாணத்துறை, காலி மற்றும் கிக்கடுவாவை நோக்கியதான ஒன்றாகவே இருக்கிறது. இதனால் தான் மகிந்த ராசாபக்சா அரசு அம்பாந்தோட்டையில் விமானநிலையத்தை அமைக்க முயன்று கொண்டிருக்கின்றார்.

இதிலிருந்து புரியது என்னவென்றால், இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியமானவிடயங்களில் ஒன்று. உல்லாசப் பிராயாணத்துறை. அதைத் தகர்த்தால் நிச்சயம் பொருளாதாரரீதியிலன சவால்களைச் சந்திக்க வேண்டி அவர்களுக்கு ஏற்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.