Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வான்படை தென்னாசியாவுக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய அரசை ஏமாற்றும் ஓரு உத்தி: ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

Featured Replies

புலிகளின் வான்படை தென்னாசியாவுக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய அரசை ஏமாற்றும் ஓரு உத்தி: ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தென்னாசிய பிராந்தியதுக்கு ஓர் அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவது, இந்திய அரசாங்கத்தை ஏமாற்றவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களை ஏமாற்றவும் கைக்கொண்டிருக்கும் ஒரு உத்தி" என்று மூத்த அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) ஒளிபரப்பாகிய 'நிலவரம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியிருப்பதாவது:

"சிங்கள அரசாங்கம் என்றுமே பிரதான எதிரியாகக் கருதுவது இந்தியாவைத்தான். இப்போது விடுதலைப் புலிகளோடு போராடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பிரதான பிரச்சினையாகக் கருதுவது இந்தியாவைக் கையாள வேண்டும் என்பதனைத்தான். அவர்கள் இப்போதும் என்ன நினைக்கின்றார்கள் எனில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் இந்திய மத்திய அரசாங்கம் ஏமாற்றப்பட்டது போல, வெற்றி பெற்றதுபோல இப்படி ஒரு பூச்சாண்டி ஒன்றை அவர்களுக்குக் கொடுப்போம் என்றுதான்.

காலத்துக்கு காலம் இந்திய அரசாங்கத்தை ஏமாற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது என்ற ஒரு சோகமான உண்மையை இந்திய இராஜதந்திரிகள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அவர்களுக்கு இது ஒரு புதிய பாடம் அல்ல.

இலங்கைக்கு இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வந்திருந்த போது கொழும்புடன் நடந்த அரசியல் மற்றும் தமிழீழ மண்ணில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் என இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பினை விடவும் கிடைத்த படிப்பினை பெரிது.

மிகப் பிரம்மாண்ட தேசத்தின் மிகப்பலம் பொருந்திய இராஜதந்திரிகளை ஒரு தனியாளாக நின்று கையாளக்கூடிய ஒரு சிறப்பை ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெற்றிருந்தார் என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் எல்லோரிடமும் ஒரு இராஜதந்திர மெருகு இருக்கின்றது. எப்படி எனில், தமது எதிரியின் முகத்தில் கரி பூசுவது.

நிச்சயமாக தமிழீழ வான்படையினாலோ அல்லது தமிழீழத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு இராணுவப் போராட்டத்தினாலோ இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படப்போவதில்லை. ஆனால் இப்படியான ஒரு அச்சத்தைக் காட்டி அவர்கள் விரும்பும் இந்திய ஊடகங்களைத் தம்பக்கம் கவர்ந்து அவற்றின் மூலம் இந்திய மக்களுக்கு ஒரு பீதியைக் கொடுத்து போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான ஒரு பிரச்சாரத்தை நடத்தவே சிறிலங்கா தலைவர்கள் விரும்புகின்றார்கள்.

இப்படியான ஒரு உத்திக்குள் யாரும் அகப்படுவது ஒரு சோகமானது. ஆனால் சற்று ஆறுதல் தருவது இந்தியாவின் நிதானமான போக்கு. வான்தாக்குதலைப் பற்றிப் பேசுவதை விடவும், வான்தாக்குலை செய்வதற்கான காரணத்தைப் பற்றிப் பேசுவது முக்கியம் எனக் கூறுகின்றார்கள். இது மிகவும் ஒரு நிதானமான அறிக்கை. இது இந்தியாவின் மூத்த ஆய்வாளர்களின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைச்சர்களும் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது ஆத்திரப்பட்டோ எமக்கு எதிரான அறிக்கைகளை விடவில்லை என்ற செய்தி எமக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி. அவர்கள் இதனைப் பற்றி அலட்டிக்கொண்டதாக நாம் நிச்சயமாகக் கருதமுடியாது.

விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் பல்வேறு பரிணாமத் தன்மைகளைக் கொண்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்கின்மீது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் இரவு வேளையில் துல்லியமாகத் தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாகத் திரும்பி இருக்கின்றார்கள்.

அதேநேரம் வான்புலிகள் என்று ஒன்று இருக்கின்றது என்பதனை, ஒரு செய்தியை அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்காவுக்கும் கொடுத்திருக்கின்றார்கள். இன்னும் தொடர்ந்து இது மாதிரியான தாக்குதல்களை நடத்துவோம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

எந்த வழியாக வரப்போகின்றார்கள், எந்த நேரத்தில் தாக்கப்போகின்றார்கள், எந்த இலக்குகளைத் தேர்ந்தெடுக்கப்போகின்றார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.