Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச தலை­வ­ருக்கு மக்­கள் சொன்ன செய்தி

Featured Replies

அரச தலை­வ­ருக்கு  மக்­கள் சொன்ன செய்தி

 

 

தமது எதிர்­பார்ப்பு என்ன என்­பதை மீண்­டும் ஒரு தடவை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நேர­டி­யா­கவே தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கி­றார்­கள் தமிழ் மக்­கள்.

வலி­கா­மம் வடக்­கில் அமைந்­துள்ள முக்­கிய மீன்­பி­டித்துறையான மயி­லிட்­டி­யில் புதிய இறங்­கு­துறை ஒன்றை அமைப்­ப­தற்­கான அடிக்­கல் நடும் விழா­வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வின் உரை­யின் இடை­யி­டையே பலத்த கர­கோ­சத்தை எழுப்­பி­ய­தன் மூலம் தமது எண்­ணம், நோக்­கம் என்ன என்­பதை அவர்­கள் தெளி­வு­ப­டுத்தி யுள்­ளார்­கள்.

மைத்­தி­ரிக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் இடை­யி­லான உற­வில் மயி­லிட்டி துறை மிக­வும் முக்­கி­ய­மா­னது. அந்த வகை­யில் அரச தலை­வ­ரின் செய­லை­யும் வாக்­கு­று­தி­யைக் காக்­கும் மாண்­பை­யும் நிச்­ச­யம் பாராட்­டி­யா­க­வேண்­டும். ஏனெ­னில் மயி­லிட்­டித் துறை­மு­கம் படை­யி­ன­ரின் பிடி­யில் இருந்து விடு­விக்­கப்­ப­டவே போவ­தில்லை என்று தமி­ழர்­கள் நம்­பிய காலம் ஒன்­றி­ருந்­தது.

அதனை விடு­விப்­ப­தற்­கான தீவிர போராட்­டங்­களை நடத்­தி­ய­போ­தும் அதன் விடு­விப்பு மீது நிச்­ச­ய­மற்ற தன்மை ஒன்றை தமி­ழர்­கள் உறு­தி­யாக உணர்ந்­தார்­கள். ஆட்சி மாற்­றத்­தால் அத­னைச் சரிப்­ப­டுத்த முடி­யும் என்று நம்­பித்­தான் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாக்­க­ளித்­தார்­கள்.

அந்த நம்­பிக்­கையை சாக­டிக்­கா­மல் மைத்­தி­ரி­பா­ல­வும் 2015ஆம் ஆண் டு இறு­தி­யில் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த போது, மயி­லிட்­டித் துறை­மு­கம் 6 மாதங்­க­ளில் விடு­விக்­கப்ப டும் என்று, இடைத் தங்­கல் முகா­மில் தங்­கி­யி­ருந்த அந்­தப் பகுதி மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தார். அந்த வாக்­கு­றுதி அவர் குறிப்­பிட்ட காலப்­ப­கு­தி­யில் நிறை­வேற்­றப்ப டவில்லை.

வரு­டங்­கள் கடந்த பின்­னர் என்­றா­லும் அது நிறை­வேற்­றப்­பட்­டமை மகிழ்ச்­சி­தான். அத்­தோடு அந்­தத் துறையை மீண்­டும் 80களின் நில­மையை நோக்கி அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு எடுக்­கப்­பட்­டி­ருக்­கும் முயற்சி களும் பாராட்­டப்­ப­ட­வேண்­டி­ய­வையே!

இத்­த­கைய பின்­ன­ணி­யைக் கொண்ட மயி­லிட்­டி­யின் அபி­வி­ருத்தி நிகழ்­வில்­தான் தமது எதிர்­பார்க்­கை­கள் என்ன என்­ப­தைத் தமிழ் மக்­கள் ஆணித்­த­ர­மாக மீண்­டும் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு எடுத்­தி­யம்­பி­யி­ருக்­கி­றார்­கள்.

“புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம் கிடைக்­கும், எனவே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தைரி­ய­மாக முடிவு எடுத்து இந்த ஆண்டு இறு­திக்­குள் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண­வேண்­டும்” என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராசா கூறி­ய­போது பலத்த கர­கோ­சத்தை எழுப்பி அதனை ஆமோதி த்தது அங்கே திரண்­டி­ருந்த சனக்­கூட்­டம், இந்­தக் கூட்­டம் மைத்­தி­ரி­யின் கட்­சி­யின் ஏற்­பாடு மற்­றும் ஒழுங்­க­மைப்­பின் கீழ் நிகழ்­வுக்க அழைத்து வரப்­பட்­டி­ருந்­தது என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும். இருந்­த­போ­தும் மாவை­யின் உரைக்கு அழுத்­த­மான ஆத­ரவை வழங்­கி­ய­தன் மூலம் மைத்­தி­ரிக்கு தமது எண்­ணக் கிடக்­கையை வெளிப்­ப­டுத்த அவர்­கள் தவ­ற­வில்லை.

அரச படை­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பின் கீழ் உள்ள காணி­க­ளை­யும் ஆண்­டி­று­திக்­குள் விடு­விக்­க­வேண்­டும் என்று மாவை கூறி­ய­போது அதற்­கும் பலத்த ஆத­ரவு தெரி­வித்து தமது எதிர்­பார்ப்பை அவர்­கள் வெளிப்­ப­டுத்­தி­னர்.

மக்­க­ளின் அழுத்­த­மான இந்­தச் செய்­தியை மைத்­தி­ரி­பால சிறி­சேன புரிந்­து­கொண்­டாரோ இல்­லையோ தெரி­யாது. ஆனால் அவர் மிக முக்­கி­ய­மா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டிய விட­யம் இது.
அபி­வி­ருத்தி, உதவி எல்­லா­வற்­றுக்­கும் முத­லில் அர­சி­யல் தீர்­வையே தாம் எதிர்­பார்க்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அதை­நோக்­கித் துணிந்து அரச தலை­வர் முன்­னேற வேண்­டும் என்­ப­தை­யும் அதற்­குத் தாம் ஆத­ர­வாக இருப்­பார்­கள் என்­ப­தை­யும் மக்­கள் தமது செயல் மூல­மா­கத் தெளி­வு­ப­டுத்­தியி ருக்­கி­றார்­கள்.

அவர்­க­ளின் செய்­திக்கு பதில் சொல்­லா­மல் அரச தலை­வர் நழு­வி­விட்­டார் என்­கி­ற­போ­தும் மயி­லிட்டி துறையை விடு­வித்­தது போன்று பல காலம் தாழ்த்தி தீர்­வைக் கொண்­டு­வர முடி­யாது. அதற்­கி­டை­யில் அவ­ரது பதவி இந்­தக் கார­ணத்­திற்­கா­க­வே­கூட பறி­போய்­வி­ட­லாம் என்­ப­தால் தீர்வை எட்­டு­வ­தற்கு துணி­வோடு முன்வ ரவேண்­டும் அரச தலை­வர்.

https://newuthayan.com/story/12/அரச-தலை­வ­ருக்கு-மக்­கள்-சொன்ன-செய்தி.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.