Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள­வு­களை தவிர்க்கும் வகையில் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம்

Featured Replies

பிள­வு­களை தவிர்க்கும் வகையில் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம்

 

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைக்கும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான முரண்­பாடு தற்­போது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் எதிர்­கால அர­சி­யலில் தனி­வ­ழி­செல்லும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த விட­ய­மா­னது தமிழ் மக்­களை பொறுத்­த ­வ­ரையில் அவர்­க­ளது அர­சியல் எதிர்­கா­லத்தில் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று சிந்­திக்­க­வேண்­டிய நிலைமை தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

2013ஆம் ஆண்டு இடம்­பெற்ற வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் முன்னாள் நீதி­ய­ர­ச­ரான சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனே முன்­னின்று கள­மி­றக்­கி­யி­ருந்தார். தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு முதலில் விக்­கி­னேஸ்­வரன் தயக்கம் காட்­டி­ வந்தார். ஆனாலும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்து அவர் தேர்­தலில் போட்­டி­யிட சம்­மதம் தெரி­வித்­தி­ருந்தார்.

கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்று அவர் முத­ல­மைச்­ச­ராக தெரி­வா­கி­ய­துடன் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­ன­ரைப் ­போன்றே ஆரம்­பத்தில் அவர் செயற்­பட்டு வந்தார். முத­ல­மைச்­ச­ரது இத்­த­கைய செயற்­பா­டு­களை கூட்­டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சிகள் அதி­ருப்­தி­யு­டன்­நோக்கும் நிலையே அன்று காணப்­பட்­டது. காலம் செல்­லச்­செல்ல முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தமி­ழ­ர­சுக்­கட்­சியை சாராது நடு­நி­லை­மை­யான போக்கை கடைப்­பி­டிக்க ஆரம்­பித்­த­துடன் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கும் அவ­ருக்­கு­மி­டை­யி­லான விரி­சல்கள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்தன.

இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்­திலும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சினை விட­யத்­திலும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை உரிய அக்­கறை காண்­பிக்­க­வில்லை என்ற அதி­ருப்­தியில் முத­ல­மைச்சர் பல்­வேறு வித­மான கருத்­துக்­க­ளையும் தெரி­வித்து வந்தார். இவ்­வா­றான நிலை­யில்தான் வட­மா­கா­ண­ச­பையில் இனப்­ப­டு­கொலை தொடர்­பான தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்­புக்கு இணைத்­த­லைமை வழங்­கவும் அவர் முன்­வந்­தி­ருந்தார்.

இதனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யுடன் முத­ல­மைச்­சரின் செயற்­பா­டுகள் ஒத்­துப்­போ­கா­த­னவ­ாக அமைந்­தி­ருந்­தன. இதன் பின்­ன­ணியில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரால் குறிப்­பாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­னரால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை மூலம் முத­ல­மைச்­சரை பத­வி­வி­லக்­கி­விட்டு தமது கட்சி சார்ந்த ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக்கும் எண்­ணத்தில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக பல்­வேறு தரப்­பி­லி­ருந்தும் எதிர்ப்­புக்கள் கிளம்­பி­யி­ருந்­தன. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சி­க­ளான ரெலோ, புௌாட், முன்னர் அங்கம் வகித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­களும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ரா­கவே செயற்­பட்­டன. பொது அமைப்­புக்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­ட­துடன் ஹர்த்­தாலும் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இவ்­வா­றான நிலைமை ஏற்­படும் என்று கரு­தி­யி­ருக்­காத தமி­ழ­ர­சுக்­கட்சி பின்னர் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­கா­ரத்­தி­லி­ருந்து பின்­வாங்­கிக்­கொண்­டது.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து முத­ல­மைச்­ச­ருக்கும் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்­கு­மி­டையில் பெரும் பிணக்கு உரு­வா­கி­யி­ருந்­தமை வெளி­யா­கி­யி­ருந்­தது. ஆனாலும் அந்த முரண்­பா­டா­னது ஒரு­வ­கையில் தீர்க்­கப்­பட்டு ஒற்­றுமை முயற்சி பலம்­பெறும் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் அந்த நிலை­மை­யா­னது தற்­போது முற்­று­மு­ழு­தாக திசை­மா­றி­யுள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­லணி விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை எடுத்த முடி­வா­னது முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்கும் அவர்­க­ளுக்­கு­மி­டையில் உள்ள முரண்­பாட்டை பறை­சாற்­று­வ­தாக அமைந்­தி­ருந்­தது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இடம்­பெற்­றி­ருந்தார். ஆனாலும் வடக்கு, கிழக்கை சேர்ந்த ஏனைய மக்­களின் பிர­தி­நி­தி­களை நிய­மிக்­காத அந்த செய­ல­ணியில் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என்று அவர் அறி­வித்­தி­ருந்தார்.

இந்தப் பின்­ன­ணியில் முத­லா­வது செய­ல­ணிக்­கூட்­டத்தில் அவர் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து வடக்கு, கிழக்­கைச்­ சேர்ந்த ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் இரண்­டா­வது செய­ல­ணிக்­கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­தி­ருந்­தது. இந்த நிலையில் அர­சியல் தீர்வை மையப்­ப­டுத்தி இந்த செய­ல­ணிக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமல் தவிர்ப்­பது நல்­லது என்று ஆலோ­சனை தெரி­வித்து முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார்.

ஆனால் விக்­கி­னேஸ்­வ­ரனின் இந்தக் கோரிக்­கையை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு நிரா­க­ரித்­தி­ருந்­தது. செய­ல­ணிக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­றி­ருந்­தனர். இந்த விவ­கா­ர­மா­னது பெரும்­பூ­தா­க­ர­மாக மாறி­ய­தை­ய­டுத்து கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு எதி­ராக முத­ல­மைச்சர் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்தார்.

இத­னை­விட வட­மா­காண முன்னாள் அமைச்சர் டெனீஸ்­வரன் விவ­கா­ரத்­திலும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த வழக்கில் பிர­தி­வா­தி­யான முத­ல­மைச்­ச­ருக்கு அழைப்­பா­ணையும் விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் கடந்த வெள்­ளிக்­கிழமை யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற தமிழ் மக்கள் பேர­வையின் அலு­வ­லகத் திறப்பு விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய முத­ல­மைச்சர் தனது மாற்­று­வ­ழிகள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொண்ட தலை­மைப்­பாத்­திரம் தோல்­வி­ய­டைந்­து­விட்­டது. 60வரு­டத்­திற்கு மேற்­பட்ட தமிழ் தேசிய போராட்ட வர­லாறு எனக்கு வகுத்து அளித்­தி­ருக்கும் பொறுப்பை நான் தெளி­வாக உணர்­கின்றேன். வடக்கு, மாகா­ண­சபை தலை­மைப்­ப­தவி அதி­கா­ர­பூர்­வ­மாக இன்னும் சில வாரங்­களில் முடி­வுக்கு வரு­கின்­றது. இந்த நிலையில் தமிழ் தேசிய அர­சியல் தொடர்பில் நான் ஆழ­மாக ஆராய்ந்து வரு­கின்றேன் என்று முத­ல­மைச்சர் கூறி­யி­ருந்தார்.

அத்­துடன் தன்­வசம் தற்­போது நான்கு தெரி­வுகள் உள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

முத­ல­மைச்­சரின் இந்­தக்­கூற்று தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஆராய்ந்­த­துடன் வடக்கின் முத­ல­மைச்சர் எதிர்­கா­லத்தில் அர­சி­யலில் இருந்து ஒதுங்க முடி­யாது என்று வலி­யு­றுத்­தி­ய­துடன் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­பதா அல்­லது இருக்கும் கட்­சியில் இணைந்து பணி­யாற்­று­வதா என்­பது தொடர்பில் அவர் தீர்­மா­னிக்­க­வேண்டும் என்றும் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

இந்­தக்­கூட்­டத்­திற்குப் பின்­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் சமஷ்டி குறித்து தெரி­வித்த கருத்து தொடர்­பிலும் முத­ல­மைச்சர் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார். ஜனா­தி­பதி செய­ல­ணியில் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­றமை குறித்து நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கருத்து வெளி­யிட்­டி­ருந்த முத­ல­மைச்சர் முன்னர் அர­சாங்கம் தரு­வதை ஏற்று எங்கள் இடங்­களை நாங்கள் அபி­வி­ருத்தி செய்­ய­வேண்­டு­மென்று சில தமிழ்­கட்சித் தலை­வர்கள் கூறி­ய­போது அதனை எதிர்த்­த­வர்கள் எமது கட்­சி­யி­ன­ரே­யாவர். அவர்­களை துரோ­கிகள் என்று அழைத்­த­வர்கள் இன்று அவர்­க­ளு­ட­னேயே உள்­ளூ­ராட்சி சபை­களில் கூட்டு வைத்­துள்­ளனர் என்றும் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

இந்த விட­யங்கள் தொடர்பில் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­தி­ரனும் முத­ல­மைச்­சரை கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்றார். இந்த முரண்­பா­டான நிலை­மை­யா­னது எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்­புடன் இணைந்து முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் செயற்­ப­ட­போ­வ­தில்லை என்­ப­தையும் அவர் தனி­வ­ழியில் செல்­ல­வுள்­ள­தையும் சுட்­டிக்­காட்­டுவ­தா­கவே அமைந்­துள்­ளது.

இவ்­வா­றான பிள­வா­னது தமிழ் மக்களின் எதிர்கால அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். ஏனெனில் அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாகவும் முதலமைச்சர் தலைமையிலான அணியினர் ஒரு பிரிவாகவும் போட்டி நிலைமை அமையுமானால் அது தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை சிதறடிப்பதாகவே அமையும்.

இதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் இருதரப்பினருமே கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகவுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமை தோல்வி அடைந்ததன் பின்னர் ஜனநாயக ரீதியான தமிழ் மக்களின் தலைமை பொறுப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசம் வந்திருந்தது. ஆனால் அந்த தலைமை இதுவரை ஒழுங்கான முறையில் செயற்பட்டதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இந்த நிலையில் பிளவுகளை தவிர்க்கும் வகையில் விட்டுக்கொடுப்புக்களுடன் இருதரப்பும் செயற்படவேண்டும். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை இந்த விடயத்தில் சிந்தித்து ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பதை வலியுறுத்துகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.