Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த அரசின் அச்சுறுத்தல்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அடிபணியாது! விசாரணையை எதிர்கொள்ளத் தயாரென சிவாஜிலிங்கம் சூளுரை

Featured Replies

[Thursday April 05 2007 06:28:56 AM GMT] [யாழ் வாணன்]

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புலி முத்திரை குத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கே ஆப்புவைக்க முயல்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாம் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை. எந்தவிதமான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கத் தயார். இப்படி அரசுக்கு சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்.

நேற்று நாடாளுமன்றம் கூடியபோது சிவாஜிலிங்கம் எம். பி. சிறப்புரிமைப் பிரச் சினை ஒன்றை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே இப்படிக் கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது மேலும் கூறியதாவது:

நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தை யும் தன்கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது வெளியிட்ட கருத்துகள் மிகவும் பாரதூரமானவை.

ஜனாதிபதி அங்கு வெளிப்படுத்திய கருத்துகளை ""லங்கா என்ற தேசிய பத்தி ரிகை ஏப்ரல் முதலாம் திகதி இதழில் பிரதான செய்தியாக பிரசுரித்துள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வழங் கப்பட்ட வாகனத்தை ஓமந்தை ஊடாக எடுத்துச் சென்று புலிகளிடம் ஒப்படைத் துள்ளார் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறினார் என "லங்கா பத்திரிகை ஜனாதிபதியை மேற்கோள் காட்டி அச்செய்தியை எழுதியுள்ளது.

அதேவேளை, அப்பத்திரிகையின் நிரு பர் என்னுடன் தொடர்புகொண்டு விவரம் கேட்டபோது, அக்குறிப்பிட்ட வாகனம் பழுதடைந்துள்ளதால் அதை நான் எனது நண்பரின் வீட்டில் விட்டிருப்பதாகக்கூறினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் எந்த உண்மையும் இல்லை. இப்பத்திரிகை நிருபர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னுடன் தொடர்புகொள்ளவில்லை. இது சோடிக்கப்பட்ட ஒரு கதை.

நான் ஓமந்தை ஊடாக எடுத்துச் சென்ற வாகனம் தமிழர் புனர்வாழ் வுக்கழகத்துக்குச் சொந்தமானது. அதன் இலக்கம் தீ.ணீ.ண.ச் .0457. டொயோட்டா ரக வாகனம். இவ்வாகனம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வாகனத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு என்னுடைய உதவியை நாடினர். அதன்படி அதனை நான் கொண்டு சென்று அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன். இந்த வாகனம் இப்பொழுது மகாதேவா ஆச்சிரமம் குழந்தைகள் இல்லம், அன்பு இல்லம் வலது குறைந்த சிறுவர்கள் இல்லம் என்பனவற்றின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கூறியதன் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் என்னிடம் பத்து மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று சபைக்கு வரும்போதும் மோப்ப நாய்களின் பரிசோதனையின் பின்னரே இச்சபைக்கு வந்துள்ளேன்.

அதோடு நின்றுவிடவில்லை. இன்று (புதன்) மாலையும் விசாரணைக்கு வரும்படி இரகசியப் பொலிஸார் அறிவித்துள்ளனர். நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இல்லை என்று கூறினார் சிவாஜிலிங்கம்.

நன்றி : தமிழ்வின்

அடுத்த மஹிந்தவன் பலிகடா??????

வாகனத்தை வைத்து எதிரிகளை தூக்கும் தாதா ராஜபக்சா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.