Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ் பிரகடனத்தைப் பார்த்து பொங்கியெழுந்த தென்னிலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழ் பிரகடனத்தைப் பார்த்து பொங்கியெழுந்த தென்னிலங்கை!

  •  

பொங்குதமிழ் நினைவுத் தூபியால்குழப்பமடைந்துள்ள கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை மீள நிறுவப்பட்டதற்கு தென்னிலங்கையின் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தனித் தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ள பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் கம்புரேவெல சந்திரரத்ன தேரர், இந்த நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நிறுவப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை புனரமைக்கப்பட்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடனத்தின் பிரதான விடையங்களான, தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் பெரிதும் குழப்பமடைந்துள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள பௌத்த பேரிவாத சக்திகள், தமது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொது பல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்றைய தினம், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர், 'பொங்கு தமிழ் நிகழ்வுக்கு பொதுபல சேனா அமைப்பு ஏன் எதிர்ப்பை வெளியிடுகிறது" என வினவினார். அதற்குப் பதிலளிக்கையில்,“ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே பொங்கு தமிழை அறிமுகப்படுத்தினார்.

பொங்கு தமிழ் நிகழ்வை நடத்துவதில் மூன்று முக்கிய நோக்கங்கள் காணப்படுகின்றன. சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் ஆகியனவே அந்த விடயங்கள் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதே இதன் தொனிப்பொருள். ஆகவே நாட்டின் வடபகுதி வடக்கு தமிழர்களுக்கு, கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு ஏனைய பகுதிகள் சிங்களவர்களுக்கு என பிரித்தால் உலகின் ஏனைய நாடுகளைப்போல் நாம் மோதல்களில் ஈடுபட வேண்டி ஏற்படும்.

அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனினும் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் யாழ். பல்கலைக்கழகத்தில் நாட்டை துண்டாடும் ஒரு செயலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதனை நாம் எதிர்க்கின்றோம்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட 5,000 இற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசம் இருப்பதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரான மாகல்கந்தே சுதந்த தேரர் குற்றம்சாட்டினார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அமைப்பினர் அண்மையில் பொது பல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும், முஸ்லீம் அரசியல் தலைவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரான மாகல்கந்தே சுதந்த தேரர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார்.

அவர் மேலும் கூறுகையில் “அரச தலைவரையே கொலை செய்யத் திட்டமிடுகின்றார்கள். புலனாய்வுப் பிரிவின் பலவீனத்தின் வெளிப்பாடே இது. அதனைவிடவும் பயங்கரமான நிலைமை கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5000க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காணப்படுகின்றன.

கிழக்கில் நடைபெறும் இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள் கொழும்புக்கு அறிக்கையிடப்படுவதில்லை. இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க புலனாய்வாளர்கள் அச்சப்படுகின்றார்கள். காரணம் அவர்களை சிறையில் அடைக்கிறது இந்த அரசாங்கம்.

எவ்வாறாயினும் கிழக்கில் வாழும் முஸ்லீம்களிடம் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் முழுமையாக நிராகரித்திருப்பதுடன், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஒரு சமூகத்தை நெருக்கடியில் தள்ளிவிட வேண்டாம் என்றும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/106354?ref=rightsidebar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.