Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்

Featured Replies

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்

Untitled-9-a148e87806fec6ea7d5e29c1f3630632a0b31051.jpg

 

-சத்­ரியன்

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். 

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ரணி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் யார் என்ற விவ­காரம் இப்­போது முன்­னை­யதை விடவும் சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர்­களில் ஒரு­வரை போட்­டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது.

குறிப்­பாக, இரண்டு பேருமே அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும், பசில் ராஜபக் ஷ மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகிய இரு­வரில் ஒரு­வரை, போட்­டியில் நிறுத்தும் வாய்ப்­புகள் அதிகம் என்றே பேசப்­பட்­டது.

ஆனாலும், இவர்கள் இரு­வ­ரையும் விட சமல் ராஜபக் ஷவே வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட வேண்டும் என்­பது மஹிந்த ராஜபக் ஷவின் இட­து­சாரித் தோழர்­களின் நிலைப்­பாடு.

ஆனாலும், அடுத்த வேட்­பாளர் யார் என்­பதை கூறாமல் மஹிந்த உயர் இர­க­சி­யத்தை பாது­காத்து வந்­துள்ளார்.

இதற்­குள்­ளா­கவே, 19 ஆவது திருத்தச் சட்டம், இதற்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­த­வர்­க­ளுக்குப் பொருந்­தாது என்ற ஒரு “ஓட்டை” இருக்­கி­றது என்ற மிகவும் பல­வீ­ன­மான வழி­யொன்­றையும் கூட்டு எதி­ரணி கண்­டு­பி­டித்து வைத்­தி­ருக்­கி­றது. 

அந்த வழியின் ஊடாக மஹிந்­த­வினால் செல்ல முடியும் என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை.

19 ஆவது திருத்­தத்தில் இருப்­ப­தாக கூறும் ஓட்­டையைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் போட்­டி­யி­டு­வது பற்றி முடிவு செய்­ய­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, இன்­னொரு பக்­கத்தில், “தி ஹிந்து” வுக்கு அண்­மையில் அளித்­தி­ருந்த செவ்­வியில், தமது சகோ­தரர் நிச்­சயம் போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்­ப­தையும் கூறி­யி­ருந்தார். அவ­ரது இந்தக் கருத்து அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

“நாமல் ராஜபக் ஷவினால் போட்­டி­யிட முடி­யாது. அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான குறைந்­த­பட்ச வய­தெல்­லையை அடை­ய­வில்லை. எனவே அவரைக் கவ­னத்தில் கொள்ள முடி­யாது.

எனது சகோ­தரர் நிச்­ச­ய­மாக போட்­டி­யா­ள­ராக இருப்பார். ஆனால் கட்சி மற்றும் பங்­காளிக் கட்­சி­களே யார் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக இருப்பர்.” இது தான் அவர் “தி ஹிந்­து”­வுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில் கூறி­யி­ருந்த விடயம்.

அவர் இதனைக் கூறி­ய­துமே, கோத்­தா­பய ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்கத் துடிக்கும் தரப்­பி­னரும், ஊட­கங்­களும், கோத்­தா­பய ராஜபக் ஷ தான் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று கொட்டை எழுத்­து­களில் செய்தி வெளி­யிட்­டன.

இங்கு தான் மஹிந்­த­வுக்கு பிரச்­சி­னையே வெடித்­தது. மஹிந்த ராஜபக் ஷ இதனைக் கூறி­யதும், அதற்கு எதி­ராகப் போர்க்­கொடி தூக்­கி­ய­வர்கள் இரண்டு பேர்.

ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம. இன்­னொ­ருவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார. இரு­வ­ருமே, மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வர்கள். அவ­ரது நல்ல விசு­வா­சி­களும் கூட.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவின் கருத்தை அவர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இரண்டு பேரி­னது எதிர்க் கருத்­துக்­க­ளிலும் வேறு­பட்ட நோக்­கங்கள் இருந்­த­மையும் கவ­னிக்­கத்­தக்­கது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்­த­வுடன் ஒன்­றா­கவே, வெளியே வந்­தவர் குமார வெல்­கம. அவரைப் பொறுத்­த­வ­ரையில், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வர வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தாலும், அவ­ருக்குப் பதி­லாக, ராஜபக் ஷ குடும்­பத்தில் இருந்து மற்­றொ­ருவர் வரு­வதை ஏற்கத் தயா­ரில்லை.

நிச்­ச­ய­மாக, தனது சகோ­தரர் போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யது தான், குமார வெல்­க­ம­வுக்கு கொதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அவர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான கருத்தைக் கொண்­டவர்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டக்­கூ­டாது என்று ஏற்­க­னவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­தவர்.

2015இல் மஹிந்த ராஜபக் ஷ, தமது குடும்­பத்­தி­னரை முன்­னி­றுத்­தி­யதால் தான் தோல்வி கண்டார், எனவே ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வதை ஏற்­க­மு­டி­யாது என்று அவர் போர்க்­கொடி உயர்த்­தினார்.

அதே­வேளை, வாசு­தேவ நாண­யக்­கா­ர­வுக்கோ, ராஜபக் ஷவி­னரின் குடும்ப அர­சியல் பிரச்­சி­னை­யில்லை. அவரைப் பொறுத்­த­வ­ரையில் கோத்­தா­பய ராஜபக் ஷவையோ, பசில் ராஜபக் ஷவையோ வேட்­பா­ள­ராக நிறுத்­தக்­கூ­டாது.

சமல் ராஜபக் ஷவை நிறுத்த வேண்டும் என்­பதே அவ­ரது கருத்து. இவ­ரது இந்தக் கருத்­துடன் கூட்டு எதி­ர­ணியில் உள்ள திஸ்ஸ விதா­ரண போன்ற இட­து­சாரித் தலை­வர்­களும் இணங்­கு­கின்­றனர்.

கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவை நிறுத்­தினால் கூட்டு எதி­ர­ணிக்குள் பிளவு ஏற்­படும், கட்சி உடையும் என்­றெல்லாம் வாசு­தேவ நாண­யக்­கார எச்­ச­ரித்தார்.

மஹிந்த ராஜபக் ஷ நாடு திரும்­பிய போது, அவ­ரது கருத்­தினால் ஏற்­பட்ட கொந்­த­ளிப்பு அடங்­க­வில்லை.

அதனால் தான் அவர், கெபிற்­றி­கொல்­லா­வயில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்தப் போவ­தாக நான் கூற­வே­யில்லை. அப்­படிக் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­வது முற்­றிலும் பொய். இது சில­ரது கற்­பனை. என்று கூறி­யி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவின் இந்தக் கருத்து உண்­மை­யா­னதே,

இந்­தி­யாவில் இருந்­த­போது, மஹிந்த ராஜபக் ஷ ‘தி ஹிந்து’ நாளிதழ், News X தொலைக்­காட்சி, Strategic News International தொலைக்­காட்சி மற்றும் தந்தி தொலைக்­காட்சி ஆகி­ய­வற்­றுக்குத் தான் செவ்­வி­களை அளித்­தி­ருந்தார்.

அதில், ‘தி ஹிந்து’ மற்றும் Strategic News International செவ்­வி­களில் தான், அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து பேசி­யி­ருந்தார்.

‘தி ஹிந்து’ செவ்­வியில் தான், ‘நிச்­ச­ய­மாக எனது சகோ­தரர் ஒரு போட்­டி­யா­ள­ராக இருக்­கிறார்’ என்று குறிப்­பிட்டார். ஆனால் அதில் எந்த சகோ­தரர் என்­பதை மஹிந்த கூற­வில்லை.

அந்த சகோ­தரர் கோத்­தா­பய ராஜபக் ஷவாகத் தான் இருக்க வேண்டும் என்­ப­தில்லை, அது பசில் ராஜபக் ஷவா­கவோ, சமல் ராஜபக் ஷவா­கவோ கூட இருக்­கலாம். அந்த மர்­மத்தை அவர் உடைக்­க­வில்லை. அது அவ­ரது தந்­தி­ர­மாகக் கூட இருக்­கலாம்.

Strategic News International தொலைக்­காட்­சியில் மஹிந்­தவைச் செவ்வி கண்ட நிதின் கோக்­ஹலே, “அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வாய்ப்பு உங்­க­ளுக்கு கிடைக்­காமல் போனால், நீங்கள் ஒரு வேட்­பா­ளரை பெய­ரிட வேண்­டி­யி­ருக்கும், அது யார் என்று கேட்­டி­ருந்தார்.

அதற்கு மஹிந்த, நான் அந்த வேட்­பா­ளரை தேடிக் கொண்­டி­ருக்­கிறேன் என்று பதி­ல­ளித்­த­போது, நிதின் கோக்­ஹலே இன்­னொரு கேள்­வியைத் தொடுத்தார்.

அந்த வேட்­பாளர் உங்­களின் குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ராக இருப்­பாரா? என்று, மஹிந்­த­விடம் கேட்க அவர், ‘அதற்கு அவ­சி­ய­மில்லை’ என்றே கூறினார்.

அதா­வது அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர், ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை என்று கூறி­யி­ருந்தார்.

ஏற்­க­னவே, பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸை வேட்­பா­ள­ராக மஹிந்த நிறுத்தப் போவ­தாக செய்­திகள் வெளி­யா­னதும் நினை­வி­ருக்­கலாம்.

அம்­பா­றையில் நடந்த கூட்டம் ஒன்றில், தமது கட்சி விம­ல­வீர திச­நா­யக்­கவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தினால் கூட வெற்றி பெறும் என்று பசில் ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

இதை­விட, அண்­மையில் தமது பெயரும் கூட, ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் இருக்­கி­றது என்று வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் கூட குறிப்­பிட்­டி­ருந்தார்.

தமது அணியில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத் தகுதி பெற்ற பலர் இருக்­கி­றார்கள் என்று, கூட்டு எதி­ர­ணி­யினர் நம்­ப­வைக்க முயன்­றாலும், ராஜபக் ஷவி­னரை விலக்­கிய ஒரு வேட்­பா­ளரைக் கண்­டு­பி­டிப்­பது அவர்­க­ளுக்கு இய­லு­மா­னதா என்­பது சந்­தேகம் தான்.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை மையப்­ப­டுத்­தியே இந்தக் கூட்டு எதி­ரணி உரு­வா­னது. அவர் கையைக் காட்டும் ஒரு­வரை தாம் வேட்­பா­ள­ராக ஏற்றுக் கொள்வோம் என்றும் அவ­ரது சக­பா­டிகள் கூறி வந்­தனர்.

ஆனால் இப்­போது, மஹிந்த கைகாட்­டக்­கூ­டிய ஒரு­வரை ஏற்றுக் கொள்ளும் மனோ­நி­லையில் அவர்கள் இல்லை என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில், தனது மகன் நாமல் ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதே அவ­ரது இலக்கு. இந்­தியப் பய­ணத்தில் அவ­ரையும் அழைத்துக் கொண்டு சென்று அங்­குள்ள தலை­வர்­க­ளிடம் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தற்கு அதுவே காரணம்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட அவ­ருக்கு வயது போதாது. இந்­த­நி­லையில் ராஜபக் ஷவி­னரில் ஒரு­வரை ஜனா­தி­பதித் தேர்­தலில் இறக்­கு­வதா- அல்­லது வெளியில் இருந்து ஒருவரை இறக்குவதா, தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கு துணையாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே அவர் முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜபக் ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள்.

இதுதான் மஹிந்த ராஜபக் ஷ எதிர்கொள்ளப்போகும் சிக்கல். அவரது பலவீனமும் இதுதான். இந்தப் பலவீனத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஐ.தே.க.வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ முற்பட்டால், மஹிந்தவுக்கு பெரும் நெருக்கடி ஏற் படும்.

கிட்டத்தட்ட அவர் அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் நகர்ந்திருக் கிறார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.