Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவருக்கும் குவான்ரம்.-பகுதி 1

Featured Replies

schrc3b6dingercatcv3.png

(படம்:ஸ்வாடின்சரின் பூனை)

தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பத்தைப் புரிந்து கொண்டவர்களாகத் தெரியவில்லை.குவான்ரம் தத்துவத்தின் ஒரு சில தர்க்கவியற் கூறுகளை பொறுக்கி எடுத்து தமது கோட்பாட்டிற்கு ஏற்றவாறு வியாக்கியானம் செய்வதாகவே படுகிறது.

இந்தச் சூழலில் இயற்பியலாளர்களாலேயே கடினமான கோட்பாட்டையும் தர்க்கங்களையும் உடையது என்று சொல்லப்படும் குவான்ரம் இயற்பியலை இலகுவில் அனைவரும் விளங்கும் வண்ணம் தமிழில் எழுதலாம என்கிற ஒரு முயற்ச்சி தான் இது.இதில் என்னால் எவ்வளவு சாத்தியப்படும் என்பதை வாசிக்கும் நீங்கள் தான் கூற வேண்டும்.எனக்கு விளங்கினது சரியா என்றும் விளக்கம் உள்ளவர்களும் கூறலாம்.இது ஒரு தொடர் கருத்தாடலுக்கான ஆரம்பப் புள்ளி மட்டுமே.

முதலில் அறிவியல் என்பது என்ன ,அதன் பிராதான இயங்கு தளம் அல்லது முறமை என்ன என்று பார்ப்போம்.இந்த உலகை புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே அறிவியலின் அடிப்படை நோக்கம்.மனிதன் இந்த உலகை தனது வாழ்விற்கு ஏற்றதாக ஆக்க வேண்டுமெனில் அவனுக்கு இந்த உலகின் இயங்கு விதிகள் தெரிய வேண்டும் எங்கிற அவாவினால் எழுந்ததே அறிவியற் தேடல்.இந்த விதிகளை நாம் கண்டு கொண்டால் அவற்றை எம்மால் எமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் அல்லவா? அதனால் இந்த உலகைப் பற்றிய தத்துவ விசாரணையே அறிவியலின் உள் அடக்கம்.இங்கே தத்துவம் என்பது என்ன? ஒருவர் தனது சிந்தனையால், தனது சிந்திக்கும் திறனால், தனது மூளையில் ஏற்கனவே பிறரால் உருவாக்கப்பட்ட ,சேகரிக்கப்பட்டுள்ள இந்த உலகு பற்றிய 'அறிவில்' இருந்து , ஒருவகை தொடர்பு படுத்தல்கள்,தர்க்கவியல் விசாரணைகள் மூலம் ஒரு புதிய முன் மொழிவை வைக்கிறார்.இதுவே கோட்பாடு எனப்படுகிறது.இங்கே சித்தாந்தம் எனப்படுவதும், ஒரு கருத்து நிலை என்பதுவும் இந்தக் கோட்பாடு என்பதுவும் ஒன்றாகவே இருக்கிறது.ஆனால் இந்தக் கோட்பாட்டை முன் மொழிவது என்பது அறிவியலின் ஒரு ஆரம்பப்படி நிலையே.முன் மொழியப்பட்ட கோட்பாடு ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட 'அறிவில்' இருந்து வேறு பட்டால் ,தர்க்கவியல் ரீதியாக அல்லது பொறிமுறை ரீதியாக அல்லது சமன்பாடுகள் மூலம் சரியானதென நிறுவப்பட வேண்டும்.இங்கே சமன் பாடு எனப்படுவதும் விதிகள் எனப்படுவதும், ஒரு தர்க்கத்தை இலகுவான முறையில் சுருக்கி எழுதும் ஒரு வகை சுருக்கெழுத்தே அன்றி வேறொன்றும் அல்ல.இங்கே பாவிக்கப்படும் தர்க்கம் 'அறிவியல்' ரீதியாக ஏற்கனவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும்.இங்கே பலராலும் என்று குறிப்பிடப்படுவது, அத் துறை சார் வல்லுனர்கள் என்று படிக்கப்பட வேண்டும்.இதிலே அது ஏன் அந்தத் துறை சார் வல்லுனர்களால் என்கிற கேள்வி எழுகிறது.அறிவியல் என்பது பல துறைகளை உடையது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விடயம்.ஒரு மனிதனால் எல்லா விடயங்களையும் மிக நுணுகி ஆராய முடியாது என்பதுவும் மனித மூளையின் கொள்ளவு என்பது வரையறுக்கப்பட்டது என்பதுவும் எமக்கெல்லாம் விளங்கக்கூடிய ஒரு விடயம்.ஒரு துறை சார் நிபுணர் அந்தத் துறையில் பல வருடங்களாக ஏன் பல நூற்றாண்டுகளாகக் எழுதப்பட்ட புத்தகங்கள் அதாவது 'அறிவை' அறிந்தவராக இருப்பார்.அத்துறையின் தத்துவ விசாரணைகளில் கணிதச் சூத்திரங்களை விளங்கிக் கொண்டவராக இருப்பார். இங்கே இதனை நான் எழுதுவதற்கு காரணமான ஒருகிளைக் கதை இருக்கிறது.

நான் இந்தப் பின் நவீனத்தை துகில் உரித்தல் என்னும் கட்டுரையை வாசித்த போது கண்ட ஒரு விடயம் பற்றி இங்கே கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திரவ நிலையில் அணுக்களின் இயல்பைக் கூறும் ஒரு இயற்பியற் சமன் பாடு இருக்கிறது.அதனை ' நேவியர் ஸ்டோக்' தியரம் என்பார்கள்.ஒரு பின் நவீனத்துவ பெண் நிலை வாதி இந்த திரவ நிலைச் சூத்திரம் இது வரை விடை காணப் படாததாக இருப்பதற்குக் காரணம் 'ஆண் நிலைவாதக்' கருத்தியலை உடைய அறிவியளாளர்கள் தான் என்று கூறுகிறார்.இதற்கு அவர் கூறும் காரணம் பெண்கள் திரவ நிலையை ஒத்தவர்கள் என்றும், திண்ம நிலையை உடைய ஆண்கள் திண்மங்கள் பற்றியே வெகுவாக ஆராய்ந்துள்ளார்கள் என்பதே.ஆனால் இங்கே அவரின் பின் நவீனத்துவ தத்துவார்த்தப் பார்வை எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது என்பதற்க்கு, இந்த நேவியர் ஸ்டோக் சமன் பாடு தீர்க்கப்பட முடியாததாக இருப்பதற்கான 'அறிவியற்' காரணத்தை தெரிந்தாலே போதும்.திரவ நிலையில் அணுக்களுக்கு இருக்கும் நகர்வதற்கான சுதந்திரம் திண்ம நிலையை விட அதிகமானது.இதனால் நேவியர் ச்டோக்கில் இருக்கும் சமன் பாட்டைத் தீர்ப்பதற்க்கு உகந்த கணிதவியல் முறமைகள் இல்லாததே அது தீர்க்கப்பட முடியாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம்.இது எவ்வாறு அந்தத் துறையைப் பற்றிய போதிய 'அறிவு ' இன்றி அரைகுறையான புரிதல்களுடன் தமது தத்துவார்த்த நிலைகளை 'அறிவியல்' மூலம் நிறுவ முற்படுவதன் அபத்தத்தைக் காட்டி நிற்கிறது.இங்கே நாம் அடுத்துப் பார்க்கப் போவது வெறும் தத்துவார்த்த முன்மொழிதல் மட்டுமே அறிவியலை நியாயப்படுத்தி விடுமா என்பதைப் பற்றி.

இவ்வாறு தத்துவார்த்த ரீதியாக முன் மொழியப்பட்ட கோட் பாடானது நடைமுறையில் அவ்வாறானதாக இருக்கிறதா என்று நிருபீப்பதற்கு பல் வேறு பரிசோதனைகள் வடிவமைக்கப்பட்டு முன் மொழியப்பட்டு அவை பல முறை நிகழ்த்திக் காட்டப்பட வேண்டும்.இங்கே ஒருவர் செய்யும் பரிசோதனைகள் வேவ்வேறு இடங்களில் திருப்பிச் செய்யப்பட்டு அதே முடிவுகளுடன் மீளவும் நிகழ்த்திக் காட்டப்பட வேண்டும்.இங்கே தான் கருத்து முதல்வாதமாக முன் மொழியப்படும் சித்தாந்தம் பொருள் முதல்வாத அடிப்படையைப் பெறுகிறது.குவான்ரம் இயற்பியல் கருத்து முதல் வாதத்தை நியாயப் படுத்துகிறது என்று எழுத்தப்படும் அபத்தத்தின் நிலை தகரும் இடம் இந்தப்பொருள் முதல் வாதப் பரிசோதனைகளே.ஒரு கருத்து நிலையாக உருப்பெற்ற குவான்ரம் இயற்பியல் எவ்வாறு பரிசோதனைகள் வாயிலாகப் பொருள் முதல் வாதமாக மாறுகிறது என்பதை அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

Posted by அற்புதன் at 06:29 0 comments

http://aatputhan.blogspot.com/index.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.