Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் புகலிடக் குறும்பட ஒளித்தட்டு வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் புகலிடக் குறும்பட ஒளித்தட்டு வெளியீடு [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:50 ஈழம்] [கி.தவசீலன்]

2005 இல் வெளிவந்து பலரது பாராட்டுகளைப் பெற்ற பராவின் 'பேரன் பேத்தி' (பிரான்ஸ்), ஜனாவின் 'எதுமட்டும்' (பிரான்ஸ்), ஈழத்தின் மூத்த கலைஞன் கே.எஸ்.பாலச்சந்திரனின் 'வாழ்வெனும் வட்டம்' (கனடா) ஆகிய மூன்று புகலிடக் குறும்படங்களையும் இணைத்து ஒளித்தட்டாக வெளியிட்டிருக்கிறது நேயாலயம்.

இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.04.07) மாலை, பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவில் மண்டபத்தில், நிறைந்த பார்வையாளர்களுடன் இனிய வெளியீடாகியது.

ஏற்கனவே பார்த்து இரசித்த படங்களை குறுந்தட்டாக வெளியிடும்போது பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரும் உற்சாகமாக வருகை தந்துள்ளதைக் காணுற்ற போது இனம்புரியாத கிளர்ச்சி ஏற்படவே செய்தது. 'நம்மவர் படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஊக்கிவிப்போம்!' என்ற விருதுவாக்கியம் அவையின் இருப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

20070413001kr2.jpg

ஈழத்தின் திரைப்பதிவுக்காக அர்ப்பணிப்புடன் வாழும் எமது மூத்த கலைஞன் ஏ.ரகுநாதன் வரவேற்று நிகழ்வைத் தொடக்கி வைத்தார். தன்னைப்போல் கலைஞர்கள் வெளியுலகிற்குத் தெரிய வந்ததற்கு குடும்பத்தை சுமந்தவாறு அர்ப்பணித்த துணைவிமாரின் முக்கியத்தைக் கூறி திருமதி பரா அவர்களை அழைத்து மங்கல விளக்கேற்ற வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வு கவிஞர் மாணி நாகேஷ் தலைமையில் தொடரப்பட்டது. தனது கம்பீரமான தொனிப்பில் அவையை ஈர்த்தவாறு நிகழ்வைக் கச்சிதமாக நகர்த்தினார் நாகேஷ். பலர் உரையாற்றிய போதிலும் சுருக்கமாக சிற்றுரைகளாக கோர்க்கப்பட்ட பேச்சுகள் மாலையாகி அழகுற்றது. பேரன் பேத்தியில் நடித்திருந்த சிறார்களான செல்வி வாகினி அமிர்தராஜா, செல்வி சிந்தி பாபு, இளம் படைப்பாளியின் உரையாக நல்லூர்ஸ்தான் குணா அவர்களும், இளம் கலைஞர் சதா பிரணவன் அவர்களும் மனந்திறந்தார்கள். உரைகளின் முதற்சுற்று நிறைவுற, சிறப்பு வருகை தந்த டுனி நகரசபை அங்கத்தவர் அலன் ஆனந்தன் அவர்களால் 'எதுமட்டும்' கலைஞர்கள் பூங்கொத்து வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

20070413002hc8.jpg

தொடர்ந்தது, உரைஞர்களின் அடுத்த சுற்று, நம்மவர்களின் நாளைய சினிமா பற்றிய கனவுக்கோட்டைக் கீறிச்சென்றார் கவிஞர் தா.பாலகணேசன். புலம்பெயர் தேசங்களில் நகர்வலம் வரும் நம்மவர் சினிமாபற்றிய பதிவை முன்வைத்தார் சலனம் முகுந்தன் அவர்கள்.

சமூக வாழ்வின் அசைவியக்கத்தில் குறும்படங்களின் தாக்கத்தை இரத்தினச் சுருக்கமாகப் பதிந்தார் கவிஞரும் எழுத்தாளருமான கிபி அரவிந்தன் அவர்கள். கனவுப்படங்களாக கற்பனையில் தவிக்காமல் நம்மவர் அனுபவ வாழ்வின் தடங்களைப் பதியும் குறும்படங்களில் நிறையவே சாதனைகள் புரியமுடியும் என முன்மொழிந்தார் இவர்.

நிறைவாக இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை தந்திருந்த தத்துவவியலாளர், கலைஞன், விரிவுரையாளர் ஆதவன் அவர்கள் திரைக்கலை இரசனை அறிவின் முக்கியத்தும் பற்றி எடுத்துரைத்தார். பொதுப் பார்வையாளர்களின் இரசனைத்தளம் விரிவடையும்போது படைபின் வெளிப்பாடு பன்முகப்படும் இது ஒன்றுடன் மற்றது பின்னியவாறு தொழிற்படவேண்டும் என அழகாக விபரித்தார்.

20070413003qd5.jpg

வெளியீட்டு நிகழ்வை ரிரிஎன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜஸ்ரின் தொகுத்து வழங்க ஒளித்தட்டினை வெளியிட்டார் பொண்டி தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர் கிருஷ்ணபிள்ளை தவராசா அவர்கள். அகழகான தொகுப்பாகவும் வெளியீட்டைப் பெற வந்தவர்களையும் நாலு வார்த்தை பேசவைத்து அவையீர்ப்புடன் நிகழ்வை நடாத்தினார் ஜஸ்ரின். தமது பேரர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு குடும்ப பாரம்பரிய நினைவுகளுடன் பேரர்களும் பேத்திகளும் ஒளித்தட்டைப் பெற்றுச் சென்றது வித்தியாசமாகவிருந்தது. புலம்பெயர் தேசமொன்றில் தமது பரம்பரை மூலத்தை நினைவுற வைத்த இந்நிகழ்வு அவையின் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிகழ்வில் பொண்டியில் இருந்து வருகை தந்து சிறப்பித்தவர் கெயிட்டி வழிவந்து பிரான்சில் வதியும் பியர் என்ற மானிட நேசிப்பாளர், பிரஞ்சு மொழியில் இவர் ஆற்றிய சிறு உரை அவையைக் கிறங்கலுற வைத்தது. தான் பிரெஞ்சு பெண்ணை மணம் புரிந்து வாழ்வதாகக் குறிப்பிட்ட இவர், இங்கு நாம் கட்டாயமாக நம் மூலமொழியை நம் சந்ததியினருக்கு வழங்கியே ஆகவேண்டும் என்பதை அழகாகப் பதிவு செய்திருக்கிறது பேரன் பேத்தி சபையினரின் கரவொலியுடன் தெரிவித்தார்.

நிகழ்வின் அச்சாக இருந்து பொறுமையுடன் செம்மைப்படுத்திய நம் கலைஞன் பரா அவர்களின் மென்மையான நன்றிகூறலுடன் நிறைவுற்றது இன்றைய சங்கமம்.

மூலம் - புதினம்

பாரிசில் புகலிடக் குறும்பட ஒளித்தட்டு வெளியீடு [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:50 ஈழம்] [கி.தவசீலன்]

2005 இல் வெளிவந்து பலரது பாராட்டுகளைப் பெற்ற பராவின் 'பேரன் பேத்தி' (பிரான்ஸ்), ஜனாவின் 'எதுமட்டும்' (பிரான்ஸ்), ஈழத்தின் மூத்த கலைஞன் கே.எஸ்.பாலச்சந்திரனின் 'வாழ்வெனும் வட்டம்' (கனடா) ஆகிய மூன்று புகலிடக் குறும்படங்களையும் இணைத்து ஒளித்தட்டாக வெளியிட்டிருக்கிறது நேயாலயம்.

இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.04.07) மாலை, பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவில் மண்டபத்தில், நிறைந்த பார்வையாளர்களுடன் இனிய வெளியீடாகியது.

ஏற்கனவே பார்த்து இரசித்த படங்களை குறுந்தட்டாக வெளியிடும்போது பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரும் உற்சாகமாக வருகை தந்துள்ளதைக் காணுற்ற போது இனம்புரியாத கிளர்ச்சி ஏற்படவே செய்தது. 'நம்மவர் படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஊக்கிவிப்போம்!' என்ற விருதுவாக்கியம் அவையின் இருப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

20070413001kr2.jpg

ஈழத்தின் திரைப்பதிவுக்காக அர்ப்பணிப்புடன் வாழும் எமது மூத்த கலைஞன் ஏ.ரகுநாதன் வரவேற்று நிகழ்வைத் தொடக்கி வைத்தார். தன்னைப்போல் கலைஞர்கள் வெளியுலகிற்குத் தெரிய வந்ததற்கு குடும்பத்தை சுமந்தவாறு அர்ப்பணித்த துணைவிமாரின் முக்கியத்தைக் கூறி திருமதி பரா அவர்களை அழைத்து மங்கல விளக்கேற்ற வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வு கவிஞர் மாணி நாகேஷ் தலைமையில் தொடரப்பட்டது. தனது கம்பீரமான தொனிப்பில் அவையை ஈர்த்தவாறு நிகழ்வைக் கச்சிதமாக நகர்த்தினார் நாகேஷ். பலர் உரையாற்றிய போதிலும் சுருக்கமாக சிற்றுரைகளாக கோர்க்கப்பட்ட பேச்சுகள் மாலையாகி அழகுற்றது. பேரன் பேத்தியில் நடித்திருந்த சிறார்களான செல்வி வாகினி அமிர்தராஜா, செல்வி சிந்தி பாபு, இளம் படைப்பாளியின் உரையாக நல்லூர்ஸ்தான் குணா அவர்களும், இளம் கலைஞர் சதா பிரணவன் அவர்களும் மனந்திறந்தார்கள். உரைகளின் முதற்சுற்று நிறைவுற, சிறப்பு வருகை தந்த டுனி நகரசபை அங்கத்தவர் அலன் ஆனந்தன் அவர்களால் 'எதுமட்டும்' கலைஞர்கள் பூங்கொத்து வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

20070413002hc8.jpg

தொடர்ந்தது, உரைஞர்களின் அடுத்த சுற்று, நம்மவர்களின் நாளைய சினிமா பற்றிய கனவுக்கோட்டைக் கீறிச்சென்றார் கவிஞர் தா.பாலகணேசன். புலம்பெயர் தேசங்களில் நகர்வலம் வரும் நம்மவர் சினிமாபற்றிய பதிவை முன்வைத்தார் சலனம் முகுந்தன் அவர்கள்.

சமூக வாழ்வின் அசைவியக்கத்தில் குறும்படங்களின் தாக்கத்தை இரத்தினச் சுருக்கமாகப் பதிந்தார் கவிஞரும் எழுத்தாளருமான கிபி அரவிந்தன் அவர்கள். கனவுப்படங்களாக கற்பனையில் தவிக்காமல் நம்மவர் அனுபவ வாழ்வின் தடங்களைப் பதியும் குறும்படங்களில் நிறையவே சாதனைகள் புரியமுடியும் என முன்மொழிந்தார் இவர்.

நிறைவாக இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை தந்திருந்த தத்துவவியலாளர், கலைஞன், விரிவுரையாளர் ஆதவன் அவர்கள் திரைக்கலை இரசனை அறிவின் முக்கியத்தும் பற்றி எடுத்துரைத்தார். பொதுப் பார்வையாளர்களின் இரசனைத்தளம் விரிவடையும்போது படைபின் வெளிப்பாடு பன்முகப்படும் இது ஒன்றுடன் மற்றது பின்னியவாறு தொழிற்படவேண்டும் என அழகாக விபரித்தார்.

20070413003qd5.jpg

வெளியீட்டு நிகழ்வை ரிரிஎன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜஸ்ரின் தொகுத்து வழங்க ஒளித்தட்டினை வெளியிட்டார் பொண்டி தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர் கிருஷ்ணபிள்ளை தவராசா அவர்கள். அகழகான தொகுப்பாகவும் வெளியீட்டைப் பெற வந்தவர்களையும் நாலு வார்த்தை பேசவைத்து அவையீர்ப்புடன் நிகழ்வை நடாத்தினார் ஜஸ்ரின். தமது பேரர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு குடும்ப பாரம்பரிய நினைவுகளுடன் பேரர்களும் பேத்திகளும் ஒளித்தட்டைப் பெற்றுச் சென்றது வித்தியாசமாகவிருந்தது. புலம்பெயர் தேசமொன்றில் தமது பரம்பரை மூலத்தை நினைவுற வைத்த இந்நிகழ்வு அவையின் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிகழ்வில் பொண்டியில் இருந்து வருகை தந்து சிறப்பித்தவர் கெயிட்டி வழிவந்து பிரான்சில் வதியும் பியர் என்ற மானிட நேசிப்பாளர், பிரஞ்சு மொழியில் இவர் ஆற்றிய சிறு உரை அவையைக் கிறங்கலுற வைத்தது. தான் பிரெஞ்சு பெண்ணை மணம் புரிந்து வாழ்வதாகக் குறிப்பிட்ட இவர், இங்கு நாம் கட்டாயமாக நம் மூலமொழியை நம் சந்ததியினருக்கு வழங்கியே ஆகவேண்டும் என்பதை அழகாகப் பதிவு செய்திருக்கிறது பேரன் பேத்தி சபையினரின் கரவொலியுடன் தெரிவித்தார்.

நிகழ்வின் அச்சாக இருந்து பொறுமையுடன் செம்மைப்படுத்திய நம் கலைஞன் பரா அவர்களின் மென்மையான நன்றிகூறலுடன் நிறைவுற்றது இன்றைய சங்கமம்.

மூலம் - புதினம்

சம்பந்தப்பட்டோருக்கு வாழ்த்துக்கள்..

:)

பிரான்சில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் யாரவது இந்தக் குறுந்தட்டை பெற்றீர்களா?

எப்படி இருக்கிறது என்று அறியத்தான்..

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.