Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றாண்டு பழமையான சென்னை மாநிலக் கல்லூரியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றாண்டு பழமையான சென்னை மாநிலக் கல்லூரியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'நூற்றாண்டு பழமையான சென்னை கல்லூரியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு'

சென்னை மாநிலக் கல்லூரிபடத்தின் காப்புரிமைTHE NEW INDIAN EXPRESS

சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரு ரகசிய குகை இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இந்தக் கல்லூரியின் கட்டட பணிகள் 1867ஆம் ஆண்டு தொடங்கி 1870ஆம் ஆண்டு முடிவடைந்தன. இந்த குகைக்கான வழி பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. முதலில் இதனை பாதாள சாக்கடைக்கான வழி என நினைத்து திறக்காமல் இருந்திருக்கிறார்கள்.

இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வர் ஆர் ராவணன், "இப்போதே இது குறித்து விரிவாக பேச முடியாது. ஏராளமான அடைப்புகள் உள்ளன. அதனையெல்லாம் நீக்கி அதனுள்ளே சென்ற பிறகுதான் அதுகுறித்து விரிவாக பேச முடியும்" என்றார்.

எப்போது அந்த குகை மூடப்பட்டது, எந்த காரணத்திற்காக கட்டப்பட்டது, எங்கு போய் சேர்கிறது? என்பது குறித்த எந்த குறிப்புகளும் இல்லை என்கிறார்.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி தமிழ் மொழி மற்றும் கலாசாரத் துரை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார் கல்ல்லூரி முதல்வர் என்கிறது அந்நாளிதழ் செய்தி.


இந்து தமிழ்: "நிர்மலாதேவி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா?"

நிர்மலாதேவிபடத்தின் காப்புரிமைFACEBOOK

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவிக்கு நீதிமன்றமே தாமாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் கிடைக்காமல் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இது பிப்ரவரி 27-ல் விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை மார்ச் 18-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை முன் கூட்டியே விசாரணைக்கு எடுக்க அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், கருப்பசாமி சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் வாதிடும்போது, 'இந்த சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தர், வேந்தரின் செயலர் மற்றும் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி இயக்குநர் ஆகியோருக் கும் தொடர்புள்ளது. இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தவில்லை. முதல் தகவல் அறிக்கையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக மட்டும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எந்த உயர் அதிகாரியிடமும் விசாரிக்கவில்லை' என்றனர்.

அப்போது நீதிபதிகள், 'ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? அவ்வாறு ஜாமீன் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதா?' எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், 'நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தில்லை. தனி நீதிபதி உத்தரவின்பேரில்தான் அவருக்குக் கீழமை நீதிமன்றம் தொடர்ந்து ஜாமீன் மறுத்து வருகிறது. நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை' என்றார்.

இதையடுத்து, சிபிசிஐடி எஸ்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, மார்ச் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி: 'முகிலன் மாயமான விவகாரம்: 148 பேரிடம் விசாரணை'

முகிலன்படத்தின் காப்புரிமைFACEBOOK/MUGILAN SWAMIYATHAL

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம் தொடர்பாக இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"சென்னை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் சென்றுள்ளார்.

அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரை காணவில்லை. மேலும் ஒலக்கூர் ரயில் நிலையம் வரை தொடர்பு எல்லைக்குள் இருந்த அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சுதா ராமலிங்கம், சிபிசிஐடி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின் போது வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகளைக் கேட்டுள்ளார். இதே போல ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் நாராயணன், முகிலன் எங்கே என்ற முகநூல் பதிவுக்கு சமாதி என பதிவிட்டுள்ளதாகக் கூறி வாதிட்டார். அப்போது நீதிபதிகள் போலீஸாரின் புலன் விசாரணயில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தனர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் அய்யப்பராஜ், இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு

மாற்றப்பட்ட அடுத்தநாள் முதல் விசாரணை தொடங்கி விட்டனர். முகிலனின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்."

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


பா.ம.க PMKபடத்தின் காப்புரிமைஇந்து தமிழ்

தினத்தந்தி: 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? - வைகோ பதில்'

வைகோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுமா? என்ற கேள்விக்கு வைகோ பதில் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"இந்தியாவில் மதசார்பற்ற தன்மை தான் நாட்டின் ஒருமைப்பாடு, மக்களை பாதுகாக்கின்ற காவல் அரணாகும். அதை தகர்க்க பா.ஜ.க. இந்துத்துவா சக்திகளும் வெறியுடன் செயல்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. திண்டுக்கல்லில் ம.தி.மு.க. நடத்தும் நிகழ்ச்சி நடக்கும் ஓட்டல் உடைத்து நொறுக்கப்படும் என்று பா.ஜ.க. மிரட்டி உள்ளது.

என்னை தாக்குவதாக கூறினால் வெளியே சொல்ல மாட்டேன். என் வாழ்க்கையில் எல்லா கட்சிகளையும் விமர்சித்து பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னிடம் அன்பாக தான் பழகி உள்ளனர். பா.ஜ.க. மிரட்டல் பற்றி கேள்விப்பட்டதும் கூட்டணி கட்சியினர் பாதுகாப்பாக வந்திருந்தனர்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் கவனத்தை தங்களுடைய பக்கம் திருப்பவும், வெறுப்பில் இருந்து மக்களை திசை திருப்பவும் எந்த எல்லைக்கும் மோடி செல்வார்.

எந்த முயற்சி செய்தாலும் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமையாது. மாநில கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்." என்று சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறினார் என்கிறது அந்நாளிதழ்,

உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடப்போவதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, வைகோ, "பேச்சுவார்த்தை சுமுகமாக நல்ல முறையில் நடந்திருக்கிறது. எல்லாம் முடிந்தபின்னர் இதற்கான பதில் அப்போது கிடைக்கும். இப்போது எதுவும் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார் என்கிறது அந்நாளிதழ்.

https://www.bbc.com/tamil/india-47450986

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.