Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்: பிரதமர் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்: பிரதமர் அறிவிப்பு!

98.jpg

அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.

அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழா மற்றும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (மார்ச் 6) பிற்பகல் சென்னை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கத்தில் விழா நடக்கும் இடத்திற்குச் சென்ற பிரதமர் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் சிலையையும் அவர் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்குச் சென்ற மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்திய பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி விநாயகர் சிலையையும், பன்னீர்செல்வம் நடராஜர் சிலையையும் நினைவுப் பரிசாக அளித்தனர். கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பிரதமருக்கு செங்கோலும் பரிசளிக்கப்பட்டது.

தலைவர்கள் பேசி முடித்த பிறகு, இறுதியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “காஞ்சி மண்ணுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காசியின் மக்களவை உறுப்பினரான நான் காஞ்சிக்கு வந்துள்ளேன். தமிழ் மொழி அழகானதோடு மட்டுமல்லாமல், செம்மொழிகளில் முதன்மையானதாகவும் திகழ்கிறது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்றப் பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர்

தொடங்கிவைத்த திட்டங்கள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், “தற்போது நான் இந்த மண்ணின் மைந்தன் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்துவைத்திருக்கிறேன். பாரத ரத்னா எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மனங்களிலும் கோலோச்சியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரால் இனி அழைக்கப்படும். மேலும், தமிழகத்திலிருந்து புறப்படும் விமானங்கள், தமிழகத்திற்கு வந்துசேரும் விமானங்களுக்கான அறிவிப்பினை தமிழ் மொழியில் செய்வதாக முடிவெடுத்திருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்றபோது, எம்.ஜி.ஆர் பிறந்த இடத்திற்கும் சென்று வந்தேன்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 14ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மத்திய அரசு ஓடிச் சென்று உதவுகிறது. இலங்கை சிறைகளிலிருந்து 1,900 தமிழ் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறார்கள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களைக் கூட இலங்கை அரசிடம் பேசி இங்கு அழைத்து வந்திருக்கிறோம்” என்று கூறினார்.

திமுக-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி

தொடர்ந்து, “நாட்டின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடைபிடிக்கும் அலட்சியப்போக்கை நாம் அறிவோம். அவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் வலிமையான இந்தியாவையும் வலிமையான ராணுவத்தையும் விரும்பவில்லை” என்று விமர்சித்த பிரதமர்,

வலிமை மிக்க தலைவர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியால் காமராஜர் எவ்வாறு அவமானப்படுத்தப்பட்டார் என்பது நீங்கள் அறிவீர்கள். அவர் செய்த குற்றம் என்ன? அவர் மக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுத்தார். டெல்லியில் இருந்த ஊழல், சர்வாதிகாரம், ஒரு குடும்பத்தின் ஆட்சியினை அவர் எதிர்த்ததால் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியை நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது. அரசியல் கருத்து வேறுபாட்டிற்காக ஆட்சியை டிஸ்மிஸ் செய்கிற வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் அரசு சட்டப்பிரிவு 356 ஐ 100 முறைக்கு மேல் பயன்படுத்தி இருக்கிறது. அதில் 50 சதவிகிதத்தை இந்திரா காந்தி பயன்படுத்தினார். ஏன் திமுக அரசைக் கூட காங்கிரஸ் டிஸ்மிஸ் செய்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு திமுகவுக்குக் கொள்கைகளைவிட அரசியல் சந்தர்ப்பவாதம் முக்கியமாக போய்விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

மீண்டும் வாய்ப்பு தாருங்கள்

இறுதியாக, “மோடி வெறுப்பு என்பது எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. அவர்களுக்குள் யார் மோடியை வசைபாட வேண்டும் என்பதில் போட்டியே இருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் அதிகமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மக்கள் ஆசிர்வாதத்தோடு இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறோம். எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள், உங்களுடைய கனவுகளை பூர்த்தி செய்கிறோம். நாளை நமதே, நாற்பதும் நமதே” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

 

https://minnambalam.com/k/2019/03/06/98

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.