Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்றிலும் முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது.

இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பும் பாஜகவின் அறிக்கையில் இல்லை.

அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்த எந்த ஒரு அம்சத்தையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முன்வைத்திருந்தன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அது இடம் பெற்றுள்ளதா?

கோரிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அறிவிப்பு இல்லை நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
     
மாநிலப் பட்டியலில் கல்வி அறிவிப்பு இல்லை மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டுவரப்படும்
     
மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் அறிவிப்பு இல்லை அறிவிப்பு இல்லை
     
பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை அறிவிப்பு இல்லை அறிவிப்பு இல்லை

பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : ஓர் ஒப்பீடு

வேலைவாய்ப்பு

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
தொழில்நுட்பம், சுற்றுலா, தொலைதொடர்பு என 22 துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்க இதற்காக தனியே தொழில், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைக்கப்படும்.
   
தொழில் முனைவோருக்கு 50 லட்சம் வரை பிணை இல்லாத கடன் வழங்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். கல்வி மற்றும் சுகாதார துறைகளை விரிவுப்படுத்தி, அதன் மூலமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
   
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும் சில ஆண்டுகள் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்த ஆண் மற்றும் பெண்களுக்கு குறைந்த திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இலங்கை

விவசாயம்

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
   
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கடன் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் எடுக்க அனுமதிக்கப்படாது.
   
விவசாயத்துறையின் உற்பத்தியை பெருக்க 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். விவசாயத்துறையின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில், தனியே விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
   
வட்டி இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் வரை குறைந்த கால விவசாய கடன்கள் வழங்கப்படும். விவசாய மேம்பாடு மற்றும் திட்டமிடுதலுக்கு தனியே தேசிய ஆணையம் அமைக்கப்படும். இதில் விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்கள் இடம் பெறுவார்கள்.
இலங்கை

கல்வி

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
கல்வி கற்றல் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும். உயர்கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும்.
   
2024ஆம் ஆண்டிற்குள் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் திறக்கப்படும். முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்படும்.
   
மத்திய கல்வி நிறுவனங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 50 சதவீத இடங்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வி நிறுவனங்களிலும் இதனை செய்ய ஊக்குவிக்கப்படும். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று கூறும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இதற்கு பதிலாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.
இலங்கை

மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். படைப்பாற்றலின் சதந்திரத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்படும்.
   
சமஸ்கிருத மொழியை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்படுவது உறுதி செய்யப்படும். கலைத்துறையினரின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். தணிக்கை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அதனை தடுக்க நினைக்கும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
   
அழியும் நிலையில் இருக்கும் மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிப்புரிமை சட்டம் வலிமையாக்கப்படும்.
   
சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம்.  
இலங்கை

தேசிய பாதுகாப்பு

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
எந்த வகையிலும் தீவிரவாதம் பொறுத்துக் கொள்ளப்படாது. பாதுகாப்பு துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும்.
   
பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முப்படைகளின் தாக்குதல் திறனை வலிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
   
இடதுசாரி பயங்கரவாத்த்தை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தரவுகள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு, தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் வணிக வழிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த தேவையான கொள்கைகள் வகுக்கப்படும்.
இலங்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலம்

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்து அவ்வாறே நீடிக்கும். எந்த மாற்றமும் அதில் ஏற்படுத்தப்படாது.
   
அரசமைப்பு சட்டத்தின் 35A பிரிவு, காஷ்மீரில் நிரந்தரமாக குடியிருப்போர் அல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பாரபட்சமாக இருப்பதால் அதை நீக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த சட்டப் பிரிவு தடையாக உள்ளது என்று நம்புகிறோம். காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம். மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர், சம்ப் பகுதிகளில் இருந்து அகதிகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக நிதியுதவி வழங்குவோம் காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களில் துன்புறுத்தப்படுவது தொடர்பான வழக்குகள் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

https://www.bbc.com/tamil/india-47856168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.