Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி

Published : 24 May 2019 17:55 IST
Updated : 24 May 2019 17:55 IST
 
DOCTOR-Krishnaswamyjpg

கோப்புப் படம்

 

தன் முயற்சியில் சற்றும் மன தளராதவராக தொடர் தோல்விக்குப் பின்னரும் 6-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திமுக அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து எம்.எல்.ஏவாக இருந்தவர். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த அவர், பின்னர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 1996-ல் மிகப்பெரிய அதிமுக எதிர்ப்பலையிலேயே ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுயேட்சையாக வென்றார்.

 

திமுக, அதிமுக கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்த டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் எம்.பி.ஆகிவிட வேண்டும் என்பதற்காக கட்சி மாறி பல தேர்தல்களில் நின்றுள்ளார். இதில் பலமுறை தனித்து நின்றுள்ளார். அவர் கூட்டணியில் நிற்கும் நேரம் அந்தக் கூட்டணிக்கு எதிராக அலை அடிக்கும். இதனால் அவர் தோற்றுள்ளார்.

தென்காசி தொகுதியில் எப்படியும் எம்.பி.யாகிவிட வேண்டும் என தொடர்ந்து போட்டியிட்டு தொடர்ந்து ஆறுமுறை தோற்றுள்ளார். 21 ஆண்டுகள் 6 முறை முயற்சி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளார். முதன்முதலாக 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

பின்னர் மீண்டும் 1999-ம் ஆண்டு நடந்த 13-வது மக்களவைத் தேர்தலில் 3-வது அணி சார்பாக தென்காசியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2004-ம் ஆண்டு 14-வது மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி சார்பாக மீண்டும் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் வென்றார்.

இடையில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தார். 2014-ம் ஆண்டு 16-வது மக்களவைத் தேர்தலில் நாடெங்கும் மோடி அலை அடிக்க மோடி அல்ல இந்த லேடி என ஜெயலலிதா தனித்து நிற்க தென்காசி மக்களவைத் தொகுதியில் 5-ம் முறையாக நின்றார்.

அதிமுக அலையில் திமுக கூட்டணி தோல்வி அடைந்தது. 5-ம் முறையாக கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாஜக ஆதரவு கருத்துகளைப் பேசி வந்தார் கிருஷ்ணசாமி. இந்நிலையில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய தமிழகமும் கூட்டணியில் இணைந்தது. மீண்டும் அவருக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. 6-வது முறையாக மனம் தளராமல் போட்டியிட்டார். ஆனால் இம்முறையும் தோல்வி அடைந்து 6-வது முறையாக ஒரே தொகுதியில் தொடர் தோல்வியைச் சந்தித்த தலைவராகிறார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ்குமாரின் தந்தை தனுஷ்கோடி புதிய தமிழகம் கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து பின்னர் விலகி திமுகவில் இணைந்தார். அவரது மகன் தனுஷ் குமார் கிருஷ்ணசாமியைத் தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

https://tamil.thehindu.com/tamilnadu/article27236875.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.