Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரத்தில் போராடி மகுடம்: திருமாவின் வெற்றி ஏன் கொண்டாடப்படுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க.சே.ரமணி பிரபா தேவி

 

 
Thirumajpg
 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். மோடி ஆழிப் பேரலையைத் திடமாக எதிர்த்து நின்ற திமுக அலையும் அதிமுக எதிர்ப்பலையும் மட்டுமே இதற்குக் காரணமல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, சாதியம் வளர்க்காமல், சமூக நீதிக்கு ஆதரவாக நிற்கும் திருமாவளவன் என்ற பிம்பமும் இதற்கு முக்கியக் காரணம்.

சிதம்பரம் தொகுதியில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்களின் ஓட்டுகள் மட்டுமல்லாமல், மற்ற சாதியினரின் ஓட்டுகளையும் பெற்று 43.38 % வாக்குகளோடு 3,219 வாக்கு வித்தியாசத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் திருமா.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்த திருமா, சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்துப் போட்டியிட்டார். நேற்று (மே 23) நடந்த வாக்கு எண்ணிக்கையில் மாறி மாறி இருவரும் முன்னிலை வகித்தனர். வாக்குகளை எண்ணி முடித்தபிறகும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இழுபறி நீடித்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் உருவானது. நீண்ட நேர இழுபறியை அடுத்து நள்ளிரவு 11.45 மணி வாக்கில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஏன் திருமாவின் வெற்றி கொண்டாடப்படுகிறது?

மற்ற வேட்பாளர்களை விட்டுவிட்டு, திருமாவளவனின் வெற்றியை மட்டும் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழக் கூடும்.

தனிச்சின்னம்

திமுக கூட்டணியில் இருந்த மதிமுக கூட, உதய சூரியன் சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்டது. வெற்றியை உறுதி செய்ய உதயசூரியனில் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலினும் வலியுறுத்திக் கேட்டார். ஆனால் தனிச்சின்னத்தில் நிற்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் திருமா. அவர் கேட்ட மோதிரம், விவசாயி உள்ளிட்ட சின்னங்களைத் தேர்தல் ஆணையம் தரமறுத்தது. புதிய சின்னமாக பானையை அளித்தது. அசராத திருமா, சூரியன் இல்லைன்னா ரெட்டை இலை என்றே பழக்கப்பட்ட மக்களிடத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பானை சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

ஈழத் தமிழர்களுக்காக பதவியைத் தூக்கி எறிந்தவர்

தலித்துகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகத் திருமா தொடர்ந்து குரல் கொடுப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தீவிர அரசியலுக்கு வருவதற்காக அவர் தனது அரசுப் பணியைத் துறந்தது பெரும்பாலானோருக்குத் தெரியாது. 90-ல் விடுதலைச் சிறுத்தைகளைத் தொடங்கியவர், 1999-ல் தேர்தல் அரசியலுக்காக அரசு வேலையை ராஜினாமா செய்தார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2001-ல் திமுகவுடன் கைகோர்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர், ஈழப் பிரச்சினை தொடர்பாக திமுகவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் 2004-ல் சிதம்பரம் தொகுதியில் அவருக்குத் தோல்வி கிடைத்தது. 2009-ல் அதே தொகுதியில் வெற்றிமுகம் கண்டு முதல்முறையாக எம்.பி. ஆனார். அதே சிதம்பரம் தொகுதி திருமாவுக்கு 2014-ல் தோல்வியைப் பரிசளித்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டவர், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

சிறந்த பேச்சாளர்

தமிழக அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்த பேச்சாளர் திருமா. அம்பேத்கரையும் பெரியாரையும் ஒருசேரப் பின்தொடர்பவர். 2009-ல் அவர் மக்களவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம், காவிரி நீர் உள்ளிட்ட தமிழர் பிரச்சினைகளுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர். தமிழால் பேசி மக்களவையையே அழகுபடுத்தியவர்.

எந்தப் பின்புலமும் இல்லாதவர்

சினிமாத் துறை, விளையாட்டுத் துறை, அரசியல் வாரிசு, பணபலம் என எந்தப் பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியலில் கால் பதித்த திருமாவளவன், சாதியத் தலைவர் என்ற அடையாளத்தால் பலமுறை புறக்கணிக்கப்பட்டார். ஆனால் ஒடுக்கப்பட்டோருக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் குரல்கொடுப்பவராக தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது தடவையாக இம்முறை நீண்ட இழுபறிக்குப் பிறகு நள்ளிரவில் வெற்றிவாகை சூடியுள்ளார் டாக்டர் திருமாவளவன்.

 

https://tamil.thehindu.com/tamilnadu/article27234803.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.