Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்த தேரர்களுடன் இணைவது தமிழர்களின் இராஜவியூகம்?

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தர முயர்த்துமாறு தமிழ் மக்கள் அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேவேளை கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கூடாது என முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்குத் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கல்முனைக்குச் சென்றுள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, போராட்டம் நடத்தும் தமிழ் மக்களுடன் அவர் இணைந்து கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது. இதேவேளை தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஞானசார தேரரும் சுமணரத்ன தேரரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில், பெளத்த தேரர்கள் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை இதுவே முதற் தடவையாகும். பெளத்த தேரர்களின் இத்தகைய ஆதரவு என்பது காலத்தின் அசைவில் ஏற்பட்ட ஒரு பெரும் மாற்றம் எனலாம். அதாவது தமிழ் மக்களே இந்த நாட்டில் தமக்கு எதிரானவர்கள் என இதுகாறும் நினைத்திருந்த பெளத்த பிக்குகளும் சிங்களத் தரப்பினரும் இப்போது தமிழ் மக்களின் போராட்டத்தில் இருக்கக்கூடிய நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆம், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தற் கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து, பெளத்த தேரர்களும் சிங்களத் தரப்பும் தமிழ் மக்களின் கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தையும் ஆயுதப் போராட்டத்தை முன் னெடுத்த விடுதலைப் புலிகளிடம் இருந்த யுத்த தர்மத்தையும் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

இத்தகையதோர் சூழ்நிலையில்தான் சிங்கள - தமிழ் உறவு பலப்பட வேண்டுமென்ற நேர் முனைக் கருத்தை பெளத்த தேரர்கள் முன்வைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர், சுமண ரத்ன தேரர் ஆகியோர் சிங்கள - தமிழ் உறவை வலுப்படுத்துவது அவசியம் என்ற கருத்தில் மிக வேகமாக இருக்கின்றனர்.

இந்தச் சாதகமான சூழலைத் தமிழ்த் தரப்பு தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இதை நாம் கூறும்போது பெளத்த தேரர்களை நம்ப முடியுமா? அவர்கள் எங்களுக்குச் செய்ததை மறக்க முடியுமா? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால் இத்தகைய கேள்விகளுக்கான ஆற்றுப்படுத்தலைவிட, தமிழினத்தை எதிர்க்கத் தயாராகி இருக்கின்றவர்கள் தொடர்பிலும் நாம் சிந்திப்போமாக இருந்தால்,
ஒரு உடன்படிக்கையோடு பெளத்த தேரர்களை எமக்கு ஆதரவாக்கிக் கொள்வது சம காலத்தில் தமிழினம் எடுக்கக்கூடிய உன்ன தமான இராஜவியூகமாக இருக்கும்.  

 
http://valampurii.lk/valampurii/content.php?id=18829&ctype=news

  • தொடங்கியவர்

இலங்கை வாழ் பௌத்தர்கள், சிங்களவர்கள். மொழியால், மதத்தால் வேறுபட்டவர்கள். 

இலங்கை வாழ் முஸ்லிம்கள், தமிழ்பேசும் இஸ்லாமியர்கள். அவர்களது அடையாளம் மதம்,  மொழியல்ல. 

9-11 க்குப் பிறகு "நல்ல பயங்கரவாதிகள்"  மற்றும் "கெட்ட பயங்கரவாதிகள்"  என்ற பேதம் மறைந்து போனது.

21-4 ஒரு புதிய அரசியல் நிலையை இலங்கையில் உருவாக்கி வருகின்றது. 

இந்த நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.