Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை தாண்டும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்!' - எச்சரிக்கும் இலங்கைக் கடற்படை

Featured Replies

'இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்' என இலங்கைக் கடற்படை அதிகாரி எச்சரிக்கை. இதனால், மீனவர்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
கச்சத்தீவு இலங்கை வசம் கொடுக்கப்பட்டது முதல் இந்திய மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.


அதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து சர்வதேச கடல் எல்லையின் தூரம் மிகக் குறைவாக இருப்பதுதான். ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தூரத்திற்கு உள்ளாகவே இலங்கைக் கடல் எல்லை வந்து விடுகிறது. இதில், முதல் கடல் மைல்களுக்குள் விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கூடாது. அடுத்து வரும் 3 கடல் மைல்கள் பாறைகள் நிறைந்த கடல் பகுதியாக உள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால்தான் மீன்பிடிக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

ஆனால் இலங்கை அரசோ, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக  மீனவர்களைச் சிறைபிடிப்பது, அவர்களது படகுகளை அரசுடைமையாக்குவது, பல லட்ச ரூபாய் அபராதம் விதிப்பது என நாளுக்கு ஒரு சட்டம் போட்டு அச்சுறுத்திவருகிறது. இதனிடையே, 62 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படை நேற்று சிறை பிடித்துச்சென்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை காரணமாகக் கூறி, எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கைக் கடற்படையின் செய்தித்தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக் கடற்படையின் செய்தித்தொடர்பாளரான லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரிய பண்டார, ''இலங்கையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டின் கடல் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, தமிழகக் கடல் பகுதிகளான வங்கக்கடல், பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே, எல்லை தாண்டி வரும் மீனவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இலங்கைக் கடல்பகுதிகளில் மீன்பிடிக்க ஏதுவாக, இலங்கை அரசு மற்றும் அந்நாட்டு மீனவர்களுடன் இந்திய அரசு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், எல்லை தாண்டும் மீனவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கடற்படையினரால் எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் செயல் மீனவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/160618-fishermen-those-cross-borders-will-be-jailed-warns-sl-navy.html?artfrm=home_breaking_news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.