Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயாரென்றும் கடிதம் எழுதினேன்: முன்னணி போட்ட முட்டுக்கட்டைகளை அம்பலப்படுத்தினார் விக்கி!"

Featured Replies

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பதை புட்டுபுட்டு அம்பலப்படுத்தியுள்ளார், முன்னாள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன்.

அவர் இன்று அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயங்கள் அம்பலப்பட்டுள்ளன. சைக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறியும், முன்னணி தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையின்றி கட்சி அரசியலை முன்னிலைப்படுத்த முயன்றதை விக்னேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார்.

அவரது அறிக்கையில்,

“தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். அதனால்த்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து வெற்றிகரமாக “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்றுபட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.

வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ்,முஸ்லிம், சிங்கள கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை. எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றது.

மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது. இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தேன். அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப் போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே நான் எதிர்பார்க்கும் இந்தகொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல் யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக்கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று விரும்பினேன்.

இந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். ஆனால், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் EPRLFக்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிரான பிரதான சவால்களாக இருந்து வருகின்றன. அத்துடன் எமது தமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக கூறி இருந்தது. இது முற்றிலும் தவறு. எனது அரசியலில் இதை செய், இதை செய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோ கிடையாது. எது சரி என்று நினைப்பதையே நான் இன்று வரை செய்து வந்துளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கியமானவை அல்ல. அதனால்த்தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத்தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அந்தரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இதில் பல விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒரு கொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன். தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டிருந்தேன்.

இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன் வர வேண்டும்? ஆனால் இன்று வரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நான் அனுப்பிய கடிதம் பற்றிக் குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் கூறியிருந்ததை பார்த்தேன். பின்னர் கொழும் புதமிழ் சங்கத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார். தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக் கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல வேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.

இந்தநிலையில் தான், பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டு வருவதற்குத்தான் அனுசரணை வழங்குவதாகக் கூறி எனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப் பேசித்தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அவர் முயற்சித்தார். இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே இது அமையவிருந்ததால் எந்த முன்நிபந்தனைகளும் எமக்கு இடையே இருக்கவில்லை.

ஆனால், EPRLF கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்தபோது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கியபோது நடக்க ஏற்பாடாகி இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

இந்த விடயத்தில் நான் யாரையும் குறைகூறவிரும்பவில்லை.

நல்ல ஒருநோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்து விலகி எமது கொள்கைகளை ஏற்றுசெயற்பட விரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம். இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமது மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டுதான் கட்சிகள் செயற்பட வேண்டும். அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்கமான ஒழுக்க விதிகளுடன் தான் நாம் செயற்பட வேண்டும். இந்த முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.pagetamil.com/64230/

  • தொடங்கியவர்

முன்னைய செய்தி!

இம்மாதம் உருவாகிறது விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி: கஜேந்திரகுமாரின் இறுதி முடிவு இந்தவாரம்!

மாற்று அணியென கூறிக்கொண்டு, மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணையுமா என்பது இந்த வாரத்தில் தெரிய வந்து விடும்.

இரண்டு தரப்பையும் இணைய வைக்கும் இறுதிக்கட்ட முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருகின்றன. 24 கரட் தூய அரசியல் செய்வதாக கூறிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வளைத்துப்பிடித்து, மாற்று அணிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சூழலில் குறிப்பிடத்தக்க புத்திஜீவிகள் சிலர் இறங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று அணியென கூறிக்கொண்டு தனி வழியில சென்ற தரப்புக்கள் எல்லாமே இதுவரை தனித்தனி சிறு குழுக்களாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அணிகளை இணைக்கும் முயற்சிகள் பலமுறை, பல தரப்பினால் முன்னெடுக்கப்பட்டன.
விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் புதிய கூட்டணி உருவாகுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தாலும், அது தாமதமடைந்து வருகிறது.

என்னதான் மாற்று அணியென கூறினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லையென குற்றச்சாட்டுக்கள் சுமத்தினாலும், மாற்று அணி தலைவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு குட்டி சம்பந்தன் இருக்கிறார். இதனால் மாற்று அணிகள் இணைய முடியாமல் இருக்கின்றன.

முக்கியமாக, மாற்று அணிகள் இணைந்தால் விக்னேஸ்வரனின் பின் யார் தலைவர், விகிதாசார அடிப்படையில் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்தால் யார் அதை பெறுவது போன்ற தீவிர கவலைகளும் மாற்று அணி முயற்சிகளை தாமதப்படுத்தி வருவதில், வெளித் தெரியாத முக்கிய காரணங்கள்.

விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் புதிய கூட்டணி உருவாகுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தாலும், அது தாமதமடைந்து வருகிறது.

விக்னேஸ்வரன் தரப்பும், கஜேந்திரகுமார் தரப்பும் இணைவது சாத்தியமேயில்லையென்றுதான் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனி விக்னேஸ்வரன் மட்டும் தமது கட்சியில் இணைந்து கொள்ளலாமென்ற நிலைப்பாட்டில் முன்னணி உறுதியாக உள்ளது. எனினும், ஏனைய தரப்புக்களை தவிர்த்து, முன்னணியுடன் விக்னேஸ்வரன் இணைய வாய்ப்பேயில்லை.

இந்தநிலையில், விரைவில் தனது கூட்டணிக்கான அறிவிப்பை தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் விக்னேஸ்வரன் அறிவிக்கவுள்ளார். அனேகமாக இந்த மாத நடுப்பகுதிக்குள் புதிய கூட்டணி அறிவிப்பு, எழுத்துமூல உடன்படிக்கை கைச்சாத்தாகுமென தகவல் அறிந்த மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் அறிந்தது.

http://www.pagetamil.com/62963/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.