Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு

நாட்டில் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக இந்த முது­கெ­லும்பு விவ­காரம் மாறி­யுள்­ளது. அது என்ன முது­கெ­லும்பு விவ­காரம் என  எண்ணத் தோன்­றலாம்.

malcom.gif

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையே இந்த முது­கெ­லும்பு விவ­கா­ரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்­பமாக வெடிக்க வைத்­திருக்கிறார். இதனால் தெற்கு அர­சி­யலில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ள­தோடு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் பேரி­டி­யாக இந்த விவ­காரம் மாறி­யுள்­ளது.

அப்­பாவி மக்கள் சிறிதும் எதிர்­பார்த்­தி­ராத மிகக் கொடிய துயரச்சம்­பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதி­வா­கியது. இந்த சம்­ப­வத்தில் 263 உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இன்னும் பலர் ஆறா­வ­டுக்­க­ளு­டனும் ஊனத்­துடன் மனதில் வலி­களை சுமந்து, கண்ணீர் வடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இந்தத் துர்ப்­பாக்­கிய சம்­பவம் நடை­பெற்று 3 மாதங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் கடந்த 21 ஆம் திகதி பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண் டகை தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் அர­சியல் வட்­டா­ரத்தில் பல­ருக்கு அதிர்ச்­சி­யா­கவும் சில­ருக்கு விருந்­தா­கவும் மாறி­யிருக்கிறது.

சிம்ம சொப்­பனம்

பயங்­க­ர­வாத குண்­டுத்­தாக்­கு­தலில் அதிக உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்ட, நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்டி  புனித செபஸ்­தியார் தேவா­ல­யத்தின் மீள்­நிர்­மாண பணிகள் நிறை­வ­டைந்து, 3 மாதங்­களின் பின்னர் கடந்த ஞாயிற்­றுக்­ கி­ழமை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­ அதனைத் திறந்து வைத்தார்.

அங்கு இடம்­பெற்ற சிறப்பு ஆரா­த­னையின் போது, பேராயர் மெல்கம் ரஞ்சித் நிகழ்த்­தியி­ருந்த மறையுரை­யா­னது, கேட்ட­வர்­களைச் சற்று கண்­பு­ரு­வத்தை உயர்த்­த வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.  

006.jpg

அவ­ரு­டைய உரையில், நாட்டின் அர­சியல் தலை­வர்கள் மற்றும் ஆளும் கட்­சியில் உள்­ள­வர்­களை நாட்டில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்தை வைத்து கடு­மை­யாக சாடி­யி­ருந்தார்.

ஓர் ஆன்­மீகத் தலை­வ­ராக இருக்கும் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் இவ்­வாறு ஓர் உரை  நிகழ்த்­துவார் என அர­சியல் தலை­வர்கள் எவரும் எதிர்­பார்­த்தி­ருக்க மாட்­டார்கள்.

கடந்த காலங்­களில் ஆன்­மீக ரீதி­யி­லேயே பரப்­பு­ரை­களை ஆற்றிவந்த பேராயர் கர்­தினால், திடீ­ரென கொந்­த­ளித்­த­மை­யா­னது, ஆட்­சியில் உள்ள அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு  சிம்ம சொப்­ப­ன­மா­கவே இருந்­தி­ருக்கும். 

முது­கெ­லும்பு இல்­லாத அர­சியல் தலை­வர்கள்

கட்­டு­வாப்­பிட்டி ஆல­யத்தில் இடம்­பெற்ற சிறப்பு ஆரா­த­னையில் உரை­யாற்­றிய கர்­தி னால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஆட்­சியில் உள்ள அர­சியல் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக அதி­ரடி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்தார். அதா­வது நாட்டை நிர்­வ­கிக்க முடி­யாத முது­கெ­லும்பு இல்­லாத அர­சியல் தலை­வர்­களே இன்று ஆட்சியில் இருப்­ப­தா­கவும் அவர்கள் வீட்­டுக்குச் செல்ல தயா­ராக வேண்டும் எனவும் ஆண்டகை கூறி­யி­ருந்தார்.

001.jpg

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அர­சியல் சுய­­லா­பத்­துக்­காக தடுத்து நிறுத்­த­ப்படவில்லை எனவும்  அப்­பாவி மக்­களின் உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­ட­மைக்கு இந்த முட்­டாள்­களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் காட்­ட­மாக கூறி­யி­ருந்தார்.

வனாத்­து­வில்லு பகு­தியில் அடிப்­ப­டை­ வா­திகள் கண்­டுபி­டிக்­கப்­பட்டபோது, அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் தலை­வர்கள் இவற்றை மூடி­ம­றைத்துவிட்­டனர். இதனால் 300 பேரின் உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டன எனவும் குறிப்­பிட ஆண்டகை தவறவில்லை. 

நன்றாக நடந்து திரிந்­த­வர்கள் இன்று சக்­கர நாற்­கா­லியில் அமர்ந்திருக்கிறார்கள்

தேசிய கொள்­கைகள் இல்­லாத அர­சியல் தலை­வர்­க­ளால்  நிர்­வா­கத்தை முறை­யாக முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது.முடி­வு­களை எடுக்க முடி­யாத முது­கெ­லும்­பற்ற தலை­வர்கள், ஆட்சிப் பொறுப்பை நன்கு நிர்வாகிக்கக் கூடி­ய­வர்­க­ளிடம் கைய­ளித்­து­விட்டு,வீடு செல்ல வேண்டும் எனவும் ஆண்டகை கூறினார்.

 அரசின் பொறுப்­பற்றதன்­மையால் தான் நாட்டில் அசம்­பா­விதம் நடந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. உலக நாடு­களின்  பாரிய சதி­களில் எமது நாடு சிக்கிக் கொண்­டது. பலம் வாய்ந்த புல­னாய்வு  பிரிவு,  அர­சியல் தேவை­க­ளுக்­கா­கவும், புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்­கா­கவும்  தொடர்ந்து பல­வீ­னப்­ ப­டுத்­தப்­பட்­டது.இதன் கார­ண­மா­கவே  சர்­வ­தேச  தீவி­ர­வாதம் மிக இல­கு­வாக  தமது மிலேச்­சத்­த­ன­மான  தாக்­கு­தலை முன்­னெ­டுத்து தமது  கொடூர நோக்­கத்தை நிறைவேற்றிக் கொண் டது எனவும் ஆண்டகை தெரி­வித்­தி­ருந்தார்.

005.jpg

தாக்­குல்­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக, இந்­திய தூத­ர­கம் நாட்டில் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெ­றப் போவதை முன்கூட்டியே அறிவித்திருந்தது. அந்தத் தக­வல்­க­ள் மூலம், தாக்­கு­தல்­களை தடுத்து நிறுத்­தி­யி­ருக்க முடியும்; தடுத்திருக்க வேண்டும். ஆயினும் துர­தி­­ஷ்­ட­வ­ச­மாக, நாட்டில் நிலவும் அர­சியல் அதி­காரப் போட்­டியால் இந்த குண்டுத்தாக்­கு­தல்­களைத் தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்கமுடியாமல் போனது. 

தற்­போது ஒவ்­வொ­ரு­வரும் வெவ்­வேறு ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து அவர்­க­ளுக்கு ஏற்­ற­வாறு அறிக்­கை­களை தயா­ரித்துக் கொள்­கி­றார்கள் என்றும் கூறி­யி­ருந்தார் ஆண்டகை.

கட்­சி­க­ளுக்கும், கட்சித் தலை­வர்­க­ளுக்கும் ஏற்­ற­வ­கையில் அறிக்­கைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. எனவே இவை அனைத்தும் தேர்­தல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட செயற்­பா­டு­க­ள் என்பதை மறுப்பதற்கில்லை. 

குண்டுத்தாக்குதல் சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிக்­க­வென நிய­மி­க்கப்­பட்ட ஆணைக்­ கு­ழுக்­களின் இறுதி அறிக்­கைகள் விரைவில் சமர்ப்­பிக்­கப்­படும் எனக்கூறப்படுகின்றது.  ஆனால் அந்த அறிக்­கை­களில் என்னென்ன குறிப்­பி­டப்­படும்  என்­பது தொடர்பில்  எந்த தக­வல்­களும் இதுவரை எமக்குத் தெரி­யாது என அதி­ர­டி­யாக கர்தினால் தெரி­வித்­தி­ருந் தார்.பேராயரின் ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டும் கார­சா­ர­மா­கவே அமைந்­தி­ருந்­தது. இந்­த நி­லையில் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு, ஜனா­தி­பதி மறுநாள் பதில் வழங்­கி­யி­ருந்தார்.

பதி­லடி கொடுத்த ஜனா­தி­பதி 

”உயிர்த்த ஞாயிறுதின தாக்­கு­தலின் பின்னர் தேவை­யான நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் எம்மை முது­கெ­லும்பில்­லாதவர்கள் என்றும் எம்மை வீடு செல்­லு­மாறும் சிலர் தெரி­வித்­துள்­ளனர். நாங்கள் வீடு செல்­லத்தான் போகின்றோம். நிரந்­த­ர­மாக தங்­கு­வ­தற்கு நாங்கள் வர­வில்லை. உத்­தி­யோ­கபூர்வ காலம் முடிந்­ததும் நாம் வீடு சென்றுவிடுவோம். தேவை­யெனின் மீண்டும் தேர்­த­லுக்கு முகம்­கொ­டுப்போம். அதனை யாரும் சொல்­ல­வேண்­டிய அவ­சி­ய­மில்லை” என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆயரின் கருத்­துக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

003.jpg

 ”எமக்குச் சிறந்த முது­கெலும்பு உள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி எனக்கு முது­கெ­லும்பு உள்­ளது என்­ப­தனை காட்­டினேன். அதன் பின்னர் பத­வியில் இருந்த பிர­த­மரை நீக்கி முன்னாள் ஜனா­தி­ப­தியை பிர­த­ம­ராக்கி எனக்கு முது­கெ­லும்பு உள்­ளது என்­ப­தை நிரூபித்திருந்தேன்” எனவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 ஏற்­றுக்­கொள்ள முடி­யாது

 ”நான் செல்­வந்த குடும்­பத்­தி­லி­ருந்து வந்­தி­ருந்தால் எனக்கு முது­கெ­லும்பு இல்லை என்று கூற­மாட்­டார்கள். நான் வறிய குடும்­பத்­தி­லி­ருந்து வந்தவன் என்­பதால் விரட்டிவிரட்டி அடிக்­கின்­றனர். முன்னர் இருந்த ஜனா­தி­பதிகளுக்கு  இவ்­வாறு கூறி­யி­ருந்தால், அவர்களின் இருப் பிடமே இல்­லாமல் போயி­ருக்கும்” என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால கவலை வெளியிட்­டி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.  ஜனா­தி­பதி மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­படும்போதுதான், தான் அமை­தி­யான நபர், வறுமை குடும்­பத்தை சேர்ந்தவர், சர்­வ­தி­காரி இல்லை, அனை­வரும் தன்­மீது சர­மா­ரி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர் எனக்கூறி தனக்கு அனு­தா­பத்தைத் தேடிக்­கொள்ளும் கருத்­துக்­களை ஜனா­தி­பதி, இன்று நேற்றல்ல,  கடந்த காலங்­களிலும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு நாட்டின் அர­சியல் தலைவர் என்­ற­ வ­கை யில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­படும் போது அதற்குத் தைரி­ய­மாக முகம்­கொ­டுக்க வேண்­டுமே தவிர அனு­தாபம் தேடும் வார்த்­தை­களை கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்ள பேராயரின் கருத்து

பேரா­யரின் குற்­றச்­சாட்­டு ஒவ்­வொன்றும் பார­தூ­ர­மா­ன­து. நாட்டில் பதி­வான தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் பல கோணங்­களில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. உயர் நீதி­மன்ற விசா­ர­ணைக்குள் இந்த விவ­காரம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

004.jpg

இவ்­வா­றான பின்­ன­ணியில் ஓர் ஆன்மீகத் தலை­வ­ராக இருக்கும் பேராயர் திடீ­ரென இவ்­வாறு ஆளும் தரப்பு மீது அதி­ரடி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருப்­பது, 

இதற்கு மஹிந்த தரப்பு ஆத­ரவு காட்டு­வதும் மக்கள் மத்­தியில் சற்று சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.விரைவில் ஜனா­தி­பதி தேர்தல் அல்­லது பாரா­ளு­மன்ற தேர்­தல் போன்­றவை இடம்­பெற வாய்ப்­புகள் இருக்­கின்­றன. இந்த தேர்­தல்­களை அண்­மித்த இந்த காலப்­ப­கு­தியில் பேராயர் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்­கள் சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துக் கொண்டிருக்கின்றன. 

நியா­ய­மான கருத்­துக்கள்

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறிய கருத்­துக்­ளை எவராலும் ஏற்காமலிருக்க முடி­யாது. அனைத்தும் யதார்த்­த­மா­னவை. நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்­புக்­களும் அதன் பின்னர் இந்த மூன்றுமாத  காலப்­ப­கு­தி­க்குள் நடந்து முடிந்த விசா­ரணை கோணங்­க­ளையும் பார்க்கும்போது, பாதிக்­கப்­பட்ட தரப்பு என்ற வகையில் ஆயரின் கருத்­துக்­களும் அவரின் குற்­றச்­சாட்­டுக்­களும் நியா­ய­மா­ன­வையே.

அர­சியல் இலாபம் தேடாதீர்!

பாதிக்­கப்­பட்ட சமூகம் என்ற வகையில் பேராயர் உணர்ச்சிபொங்க தனது கருத்­துக்­களை வெளியிட்­டுள்ளார். இவற்றில் உண்­மைகள் பல இருக்­கின்ற போதும் இதை வைத்து அர­சியல் இலாபம் தேட சிலர் எத்­த­னிக்­கின்­றனர்.நாட்டு மக்­களின் மனதில் இருக்­கின்ற விட­யங்­க­ளையே கர்­தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை கூறியி­ருக்­கின்றார் எனவும் தற்­போ­தைய ஆட்சி தொடர்பில் நம்­பிக்­கை­யற்ற தன்மை  அனைவர் மத்­தி­யிலும் ஏற்­பட்­டுள்­ள­மையை கர்­தினால் சிறப்­பாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் என்றும் கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்றக் குழுத்தலைவரும் மஹிந்த அணியின் எம்.பி.யுமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டு மக்கள் ஓரளவு நடந்து முடிந்த சம்ப வங்களை மறந்து சுமுகமான வாழ்க்கை ஓட்டத்துக்குள் செல்ல தினம் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் நாட்டு மக்களின் எண்ணத்தைக் கர்தினால் ஆண்டகை வெளிப்படுத்தியிருக்கின்றார் என தினேஷ் குணவர்தன எம்.பி. கூறுவதையும் ஏற்றுக்கொள்ள  முடியாது.

அப்பாவியின் முதுகெலும்பே உடைந்துள்ளது

யாருக்கு முதுகெலும்பு உள்ளது அல்லது இல்லை என்ற விமர்சனங்களும் விவாதங்களும் நடத்துவதற்கு இது தருணமல்ல. கடன், வரி, பொருளாதாரம், பொருட்களின் விலை, குண்டு வெடிப்பு பாதிப்புக்கள் என்பவற்றுக்கு மத்தியில்  இனவாதம் போன்ற  சுமையால் அப்பாவி பொதுமக்களின் முதுகெலும்பே இன்று உடைந்து கிடக்கின்றது.  ஒவ்வொரு வரும் கௌவரமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் ஜனநாயகத்துடன் கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பை நாட்டுத் தலைவர்கள் உருவாக்க வேண்டும். இதனைவிடுத்து பொதுமக்கள் மீது சுமத்தி விட்டு தனக்கு முதுகெலும்பு இருக்கின்றது என்று கூறுவதால் எவ்வித பயனும் இல்லை.  

- எம்.டி.லூசியஸ்

 

https://www.virakesari.lk/article/61180

"மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அர­சியல் சுய­­லா­பத்­துக்­காக தடுத்து நிறுத்­த­ப்படவில்லை எனவும்  அப்­பாவி மக்­களின் உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­ட­மைக்கு இந்த முட்­டாள்­களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் காட்­ட­மாக கூறி­யி­ருந்தார்."

தமிழின அழிப்பு நடந்த காலத்தில், ஆண்டகை அவர்களும் கூட இந்த முதுகெலும்பு இல்லாதவர்களுடன் இணைந்து இருந்தார். இன்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியார் மற்றும் மக்களுக்காக இவர் குரல் கொடுப்பதில்லை. சக பாதிரியார்களுடன் இணைந்து செயல்பட்டதில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.